04/08/2026
எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்..
தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா,அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.கருத்து வேறுபாடுகளையும்,அரசியல் விமர்சனங்களையும் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய அரசு,கைது நடவடிக்கைகளை கையில் எடுப்பது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி அல்ல.
நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில்,அதற்கு முன்பாகவே அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்திருப்பது,சட்டப்பேரவையில் எழுப்பப்படவிருந்த கேள்விகளுக்கும்,அரசின் மீது முன்வைக்கப்படவிருந்த விமர்சனங்களுக்கும் பதிலளிக்க முடியாத அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.
அநாகரிகமான பேச்சுகளுக்கு கைது செய்வதுதான் தீர்வு என்ற கொள்கையை இந்த அரசு பின்பற்றுவதாக இருந்தால்,கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் தரக்குறைவான மற்றும் நாகரிகமற்ற கருத்துகளை வெளியிட்ட ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த பல பொறுப்பாளர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டுமே தவிர,எதிர்க்கட்சியினருக்கு மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறக் கூடாது.
எதிர்க்கட்சிகளை மிரட்டி அமைதிப்படுத்தலாம் என்று அரசு நினைத்தால் அது மிகப்பெரிய தவறான கணிப்பாகும்.ஜனநாயகத்தின் குரலை அடக்க முயலும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களிடையே ஆட்சியின் மீது அதிருப்தியை அதிகரிக்கும்.
இத்தகைய சர்வாதிகாரப் போக்கை விஜய் அரசு உடனடியாக கைவிட்டு,ஜனநாயக மாண்புகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும். இல்லையெனில்,ஜனநாயக விரோத செயல்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்து,இந்த சர்வாதிகார ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும் நாள் வெகுதூரத்தில் இருக்காது.
A.முஹம்மது ஷிப்லி
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..
ிரிவு