அல் அக்ஸா பள்ளிவாசல் பெரியகுளம்

  • Home
  • India
  • Periyakulam
  • அல் அக்ஸா பள்ளிவாசல் பெரியகுளம்

அல் அக்ஸா பள்ளிவாசல் பெரியகுளம் மறுமை சிந்தனை

தேவதானப்பட்டி ஜும்ஆ புதிய பள்ளிவாசலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பார்வையிட்டார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி ஜும்...
26/05/2026

தேவதானப்பட்டி ஜும்ஆ புதிய பள்ளிவாசலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பார்வையிட்டார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி ஜும்ஆ பள்ளிவாசல் நேற்று திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று மக்ரிப் தொழுகை பிறகு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் பள்ளிவாசல் வருகை தந்து பள்ளியை பார்வையிட்டார்.

உடன் தேவதானப்பட்டி ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் அண்ணன் நிஜாம் அவர்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முபாரக் மற்றும் சகோதரர்கள்..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத் மாவட்ட செயலாளர் முபாரக் அலி மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஹீம் இன்ஜினியர் சமீர் யாசிக் சகோதரர் உமர் பாருக் மற்றும் நிர்வாகிகள் சகோதரர்கள் உடன் இருந்தனர்..

ிரிவு

பெரியகுளம் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மாநில தலைவர் உரையாற்றுகிறார். தேனி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெரியகுள...
25/05/2026

பெரியகுளம் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மாநில தலைவர் உரையாற்றுகிறார்.

தேனி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெரியகுளத்தில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அல்லாஹ் 28.05.2026 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் உரையாற்ற உள்ளார்.

ிரிவு

24/05/2026

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பொருளாளர் சிட்டி சாகுல் ஹமீது அவர்கள் அண்ணன் அக்கிம் அவர்கள் சற்று முன் வபாத்தாகி விட்டார்.

கோவை மருத்துவனையில் இருந்து தேனி மாவட்டம் தேவதானப்பட்டிக்கு ஜனாஸா கொண்டு வரப்படுகிறது.

அவர் மறுமை வாழ்விற்காக அதிகம் அதிகம் துவா செய்யுங்கள்..

மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் ஹஜ் பெருநாள் அன்று மாடு அறுக்க தடை விதித்தது அராஜகத்தின் உச்சம்.. மாட்டை வைத்து அரசியல்...
23/05/2026

மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் ஹஜ் பெருநாள் அன்று மாடு அறுக்க தடை விதித்தது அராஜகத்தின் உச்சம்..

மாட்டை வைத்து அரசியல் செய்து வரும் பாசிசத்தை கரப்பான் பூட்சி மிரட்டி வருகிறது,பாஜக அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ ஆரம்பித்து விட்டனர் உங்கள் அராஜகம் வீழும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் கடுமையான கண்டனம்.

முஸ்லிம்களின் மிக பெரிய பெருநாள் என்பது ஹஜ் பெருநாள் ஆகும் இதில் ஆடு மாடு ஒட்டகம் போன்றவை குர்பானி கொடுப்பது இந்தியாவில் மட்டும் இல்லை உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த நடைமுறை என்பது தொடர்ந்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் பாஜக ஒன்றிய அரசு வந்ததில் இருந்து மாட்டை வைத்து அரசியல் செய்வது அதிகரித்து வருகிறது இதனால் பாஜக பாசிச இந்துத்துவா அயோக்கியர்களால் பல உயிர்கள் பறிபோகி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஹஜ் பெருநாள் நெருங்கி வரும் சூழ்நிலையில் திடீரென்று மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் மாடு அறுக்க தடை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது.

அதன் காரணமாக பசு மற்றும் கன்று ஒட்டகம் அறுக்க தடை என்கிற மாயை தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் மாடு அறுக்க கூடாது என்கிற செய்தியை தான் பாஜக பாசிச அரசுகள் சொல்ல முனைகிறது.

இது அராஜகமான அயோக்கியதனமான காட்டுமிராண்டி அறிவிப்பு.

இன்றைக்கு இந்த தடை உத்தரவால் பெரும்பாலான இந்துக்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன் படுத்தி விட்டு ஒரு அளவுக்கு மேல் உள்ள மாடுகளை விற்பனை செய்வது தான் இயற்கை நியதி, ஆனால் அந்த இயற்கை நியதியை தாண்டி விவசாயிகள் வயிற்றிலும் , வாழ்விலும் அடிப்பது போல பாஜக அரசுகளின் உத்தரவு உள்ளது..

இந்த உத்தரவுக்கு எதிராக விவசாயிகள் இன்று போராடி வருகிறார்கள்..

இஸ்லாமியர்கள் ( பசு) பெண் மாடுகளை மற்றும் கன்று குட்டியை ஒரு போதும் குர்பானி கொடுக்க போவதில்லை அப்படி ஒரு மடைமாற்ற செயலை செய்து முஸ்லிம்கள் மீது அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற சூழ்ச்சியை பாஜக செய்வது.

வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது..

மாட்டை வைத்து அரசியல் செய்யும் பாசிச பாஜகவின் அரசியலை , இன்று கரப்பான் பூட்சி மிரட்டி வருகிறது.

வட மாநிலங்களில் பாசிச பாஜக பாசிச அராஜகத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து விட்டனர் உங்கள் அராஜகம் வீழும் காலம் வெகு தொலைவில் இல்லை..

இப்படிக்கு.
A. முஹம்மது சித்திக்
மாநில தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
23.05.2026

ிரிவு

தமிழ்நாட்டில் கடந்த கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தமிழ...
19/05/2026

தமிழ்நாட்டில் கடந்த கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு,தற்போது சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதற்கு தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களே சாட்சியாக உள்ளன.

விஜய் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாடு முழுவதும் தினமும் கொலை,கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், கொலை முயற்சி என்று குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் மீது அவரது வீட்டின் வாசலில் வைத்தே கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.அந்த காட்சிகளை பார்க்கும்போது,இந்த ஆட்சியில் குற்றவாளிகள் எந்த பயமும் இன்றி செயல்படுகிறார்கள் என்ற எண்ணமே உருவாகிறது.

படுகாயமடைந்துள்ள பத்திரிக்கையாளர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய்,சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இந்த அரசு செயலற்ற நிலையில் இருப்பது கவலைக்குரியது.

முஹம்மது ஷிப்லி
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

ிரிவு #முத்துப்பேட்டை

19/05/2026

பெரியகுளம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் மதுபான பார் கடையில் நேற்று பிரச்சினை செய்த நபர்களை காவல் துறை கைது செய்து உள்ளது.

தினமும் ஒரு பிரச்சினை வரும் அந்த தனியார் மதுபான பார் கடையை Chief Minister of Tamil Nadu தமிழ் நாடு முதல்வர் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்..

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் மதுபான பார் கடையால் தினமும் எதாவது ஒரு பிரச்சினை அரங்கேறி வருகிறது இந்த கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில்.

நேற்று 18.05.2026 திங்கள் கிழமை இரவு இரண்டு நபர்கள் பெரியகுளம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மதுபான பார் கடையில் பத்து மணிக்கு மேல் மது கேட்டு மிக பெரிய ரகளை செய்து உள்ளார்கள் அந்த பகுதியில் உள்ளவர்கள் உடன் பிரச்சனை செய்து உள்ளார்கள்.

உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல் துறை வந்து அந்த நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்க முயற்சி செய்தும் இரண்டு நபர்கள் காவல் துறை இடத்தில் பிரச்சினை செய்து உள்ளனர் உடனடியாக காவல் துறை அதிகாரிகள் அந்த நபர்களை கைது செய்து அழைத்துச் செல்ல முயற்சி செய்த போது மிக பெரிய ரகளை செய்து உள்ளார்கள்.

மிக பெரிய ரகளை பின் காவல் துறை சம்பந்தப்பட்ட நபர்களை காவல் துறை கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

இந்த தனியார் மதுபான பார் கடையால் அந்த பகுதியில் தினமும் ஒரு பிரச்சினை நடந்து வருகிறது உடனடியாக அந்த மதுபான பார் கடையை மூட தமிழ் நாடு முதல்வர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

#பெரியகுளம்

பெரியகுளத்தில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய தவ்ஹ...
18/05/2026

பெரியகுளத்தில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத் அறிக்கை குறித்து.

தின ஓசை
தின தமிழகம்
மக்கள் வெளிச்சம்
தந்தி பார்வை
தின அதிகாரம்

நாளிதழ்களில் வெளியான செய்தி.

ிரிவு #தேனி

காயல் பட்டினம் தாஃவா சென்ட்ரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.இன்று 17.05.2026 காயல்பட்டினம...
17/05/2026

காயல் பட்டினம் தாஃவா சென்ட்ரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

இன்று 17.05.2026 காயல்பட்டினம் தாவா சென்டர் 28 ம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தாஃவா பணியில் உள்ளவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது..

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டத்திற்கு தாஃவா பணிக்காக நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் கேடயத்தை பெற்று கொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

துல் ஹஜ் பிறை குறித்த அறிவிப்பு..துல்ஹஜ் பிறையை பார்க்க வேண்டிய இன்று 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகை பிறகு தம...
17/05/2026

துல் ஹஜ் பிறை குறித்த அறிவிப்பு..

துல்ஹஜ் பிறையை பார்க்க வேண்டிய இன்று 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகை பிறகு தமிழ் நாட்டில் பிறை எங்கும் தென்படாத காரணமாக

துல்ஃகதா மாதத்தை நபி வழி அடிப்படையில் 30 ஆக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்..

இன்ஷா அல்லாஹ் : 28.05.2026 வியாழன் கிழமை தமிழ் நாட்டில் ஹஜ் பெருநாள் ஆகும்.

27.05.2026 புதன் கிழமை அரஃபா நோன்பு நோற்க வேண்டும்.

குர்பானி கொடுப்பவர்கள் கவனத்திற்கு..

“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி); ஆதாரம்: நஸயீ (4361)

அரஃபா நோன்பு.

அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல் : முஸ்லிம்

இப்படிக்கு.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்..

ிரிவு

பெரியகுளத்தில் புதிய பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தனியார் மதுபான பார் கடையை மூட தமிழ் நாடு முதல்வ...
17/05/2026

பெரியகுளத்தில் புதிய பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தனியார் மதுபான பார் கடையை மூட தமிழ் நாடு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மக்கள் போராட்டத்தை புறம் தள்ளி இன்னும் காலதாமதம் ஆனால்...

மாவட்ட முழுவதும் மக்களை திரட்டி மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் கடையால் அந்த பகுதியில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை இருக்கிறது இந்த மதுபான பார் கடை மூலம் தினமும் ஒவ்வொரு பிரச்சினை அந்த பகுதியில் ஏற்பட்டு வருகிறது.

மூன்று வருடங்களாக இந்த தனியார் மதுபான பார் கடையை மூட வலியுறுத்தி பெரியகுளம் மக்கள் போராடி வருகிறார்கள்.

தமிழ் நாடு முதல்வர் அவர்கள் பெரியகுளம் பொது மக்கள் போராட்டத்தை மதித்து உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையை மூட வேண்டும்.

தொடர்ந்து மக்கள் போராட்டத்தை அலட்சியமாக அரசு எடுத்து கொண்டால் மாவட்ட முழுவதும் மக்களை திரட்டி தனியார் மதுபான பார் கடையை காலவரையற்ற முறையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்..

இப்படிக்கு.
A.யாசர் அராபத்
மாநில செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

Chief Minister of Tamil Nadu

ிரிவு #தேனி

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் திராவிடர் கழகம் சார்பில் நேற்ற...
17/05/2026

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் திராவிடர் கழகம் சார்பில் நேற்று 16.05.2026 சனிக்கிழமை மாலை ஆக்கி திடலில் நீட் தேர்வை உடனடியாக ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அஜ்மீர் காஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் பல்வேறு ஜனநாயகக் சக்திகள் கலந்து கொண்டனர்.

ிரிவு

Address

AL AQSA MASJID, QUAID-E-MILLAT NAGAR, VADAKARAI PERIYAKULAM
Periyakulam
625601

Opening Hours

Monday 5am - 9:30pm
Tuesday 5am - 9:30pm
Wednesday 5am - 9:30pm
Thursday 5am - 9:30pm
Friday 5am - 9:30pm
Saturday 5am - 9:30pm
Sunday 5am - 9:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அல் அக்ஸா பள்ளிவாசல் பெரியகுளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category