SRI Sakthi Akkumariyamman Temple

SRI Sakthi Akkumariyamman Temple ஸ்ரீ சக்தி அக்கு மாரியம்மன் ஆலயம், இர?

அனைவரும் வருக...
17/08/2024

அனைவரும் வருக...

26/05/2024

*சங்கடஹர சதுர்த்தி விரதம் *

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும்.

இந்நாளில் விரதம் அனுஷ்டித்து வந்தால் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

மிகவும் சக்தி நிறைந்த வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகப் பெருமானைத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் எல்லா வளமும் இல்லம் தேடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சதுர்த்தி திதி மே 26ம் தேதியான இன்று மாலை 06:20 மணிக்குத் தொடங்கி மே 27 ஆம் தேதியான நாளை திங்கட்கிழமை மாலை 04:50 மணிக்கு முடிவடையும், வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் தனித்துவமானது சிறப்புமிக்கது. இன்று விரதம் இருந்தால் நல்லது. அதிலும் இன்று சந்திரனையும், விநாயகரையும் வழிபடுவது மிகவும் மங்களகரமானது என்பது ஐதீகம்.

சந்திர தரிசனம் காணப்படாவிட்டால் சங்கடஹர சதுர்த்தி விரதம் முழுமையடையாது. இம்முறை சந்திரன் இரவு 09.20 மணிக்கு உதயமாகும், சந்திரனை தரிசனம் செய்த பிறகே விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒரு வருடத்தில் சுமார் 13 சங்கடஹர சதுர்த்தி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ஒவ்வொரு சதுர்த்திக்கும் உருவாகும் யோகமும் பலன்களும் வேறுபட்டது.

இந்த ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தியில், விநாயகருக்கு அபிஷேக பொருட்கள் வழங்குங்கள். அருகம்புல் மற்றும் வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி அவள் பாயாசம் நைவேத்தியம் செய்து அருகில் உள்ளவர்களுக்கு வழங்குங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான்.

விரதம் இருக்கும் முறை :

சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அருகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

பூஜை செய்யும் முறை :

பின்னர் விநாயகருக்கு விளக்கேற்றி, கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்கு சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.

பிரசாதம் :

பிரசாதத்திற்கு லட்டு அல்லது மோதகம் மிகவும் நல்லது. இவை இரண்டும் விநாயகருக்கு பிடிக்கும். மேலும் கடவுளுக்கு நெய் தீபமேற்றி, கணேஷ் ஸ்துதி சொல்லி, ஆரத்தி செய்யவும். மேலும், இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து இரவில் சந்திர தரிசனம் செய்து உணவு உண்ண வேண்டும். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

26/05/2024

*பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள வித்தியாசம்...

பிச்சைக்கும், பிக்ஷைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

"பிச்சை"
என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும்.

ஆனால்,
"பிக்ஷை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும்.

விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது “பிச்சை”.

சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டு எடுப்பது “பிக்ஷை”.

பிச்சை இடுவது என்பது கருணை,
ஆனால் பிக்ஷை நமது #கடமையாகும்.:

பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும்,
பாவம் ஒன்றும் இல்லை,

ஆனால் பிக்ஷை #இடாது_போனால், பாவம் #பின்தொடரும்.

ஏனென்றால், பிக்ஷை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை,
கூடவே சேர்ந்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பார்கள்.

இப்படி
பிச்சைக்கும், பிக்ஷைக்கும் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொள்ளவேண்டும்.

பிச்சை இடுங்கள் ,:
பிக்ஷை கொடுங்கள்...
🙏🙏🙏

26/05/2024

சங்கடஹரசதுர்த்தி - சிறப்புகள்

வணங்குவதற்கு எளியவராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப் பெருமான்.

விநாயகர் என்ற சொல்லுக்கு "தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்" என்று பொருள்.

விநாயகரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும், சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம் ஆகும். அப்படியான சங்கடஹர சதுர்த்தி விரதத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..

கணபதி மந்திரம்

ஓம் கணபதி; ஐயும் கணபதி; கிளியும் கணபதி; ஸவ்வும் கணபதி; வா, வா; சகல ஜனங்களும்;
போகங்களும்; சகல லோக சித்தியும், உமக்கு வசியமானது போல் எனக்கு வசியமாகவும். சுவாஹா.

சதுர்த்தி என்றால் என்ன...

சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் ஒரு நாளைக் குறிக்கும்.

இந்த நாட்கள் பொதுவாக "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும்.

சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு "சங்கட"மாக மருவி, உருமாற்றம் பெற்றுவிட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாக கடைபிடிக்கப்படுகிறது.

நமக்கு வரும் துன்பங்கள், தடைகள், கஷ்டங்கள் ஆகியவற்றை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்புமிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்தபோது, அவர்கள் விநாயகரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.

சங்கடஹர சதுர்த்தியன்று வழிபடும் முறையும்.. விரதமும்

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் பொதுவாக விரதம் இருக்கும் நாளில் செய்வது போல, காலை எழுந்ததும் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

பின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விநாயகரை வணங்கி 11 முறை வலம்வர வேண்டும்.

விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் அவசியம்.

நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.

மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும்.

விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.

பலன்கள்

இந்த சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து பூஜை மற்றும் வழிபாடு செய்தால் ஒரு வருடம் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருமணத்திற்காக காத்திருப்போர் இந்த விரதம் இருந்தால் திருமணம் நடக்கும்.

இந்த நாளில் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நன்றி 🙏

29/03/2024

🔯சகல தெய்வங்களின் அனுகூலத்தையும் ஒன்றாக பெற இன்று (29.3.24) போல் ஒரு நாள் இனி கிடைக்காது. மறக்காமல் இந்த வழிபாட்டை செய்து சகல சௌபாக்கியத்துடன் செல்வ வளமாக வாழுங்கள்.

🔯நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள், திதி, நட்சத்திரம் என தனித்தனியாக பிரித்து அதை ஒவ்வொரு தெய்வங்களுக்காக வகுத்து வைத்திருக்கிறோம்.

🔯 அந்தந்த நாட்களில் அவர்களை வணங்கும் போது நமக்கான வேண்டுதல் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🔯அப்படி இருக்கையில் ஒரே நாளில் சகல தெய்வங்களின் அனுகிரகத்தையும் பெற முடியும் என்றால் அது அற்புதமான நாள் தானே. அந்த வகையில் இன்றைய தினம் இப்படி ஒரு அற்புதமான நாளாக நமக்கு அமைந்திருக்கிறது.

🔯 வெள்ளிக்கிழமை,சதுர்த்தி திதி, விசாக நட்சத்திரம், பஞ்சமி திதி என அனைத்தும் ஒரு சேர வந்தருக்கிறது.

🔯இது நம்முடைய வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றிக் கொள்ள நமக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம்.

🔯 அந்த நாளில் நாம் எந்தெந்த தெய்வங்களை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

🔯சகல தெய்வங்களின் அனுகிரகத்தையும் பெற

🔯இன்றைய தினம் சதுர்த்தி திதி இருப்பதால் விநாயகருக்கு உகந்த வழிபாட்டை முதலில் செய்யலாம்.

🔯 இதற்கு உங்கள் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று அருகம்புல் வைத்து வழிபடுங்கள்.

🔯அதே போல் உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அல்லது சிலை இருந்தால் அவற்றிற்கு அருகம்புல் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

🔯இன்றைய தினம் மகாலட்சுமி தாயார் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள் அன்னைக்கு வாசம் மிக்க மல்லிகை மலரை சூட்டி நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

🔯இது உங்களுடைய செல்வ வளத்தை அதிகரித்துக் கொடுக்கும். அத்துடன் இன்றைய தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்ய முடிந்தவர்கள் செய்யுங்கள்.

🔯 இது உங்கள் குடும்பத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.

🔯அதே போல் இன்றைய தினத்தில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சிகப்பு நிறத்திலான மலர்களை வாங்கிக் கொடுங்கள். இது உங்களுடைய எண்ணங்களை ஈடேற்றி கொடுக்கும்.

🔯இன்று யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் கொடுங்கள் இது உங்கள் வறுமை இல்லாத வாழ்க்கை உதவி புரியும்.

🔯அதே போல் இன்றைய தினத்தில் காலை அல்லது மாலை ஏதேனும் ஒரு வேளையாவது வீட்டில் சாம்பிராணி தூபம் போடுங்கள் இது வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்கும்.

🔯 இன்று மாலையில் பஞ்சமி திதி துவங்குவதால் வாராகி அன்னைக்கு கிழங்கு வகைகளை வைத்து வழிபாடு செய்யுங்கள். இது உங்கள் வீட்டில் நோய் நொடி இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வடிவமைக்கும்.

🔯அதே போல் இன்றைய தினத்தில் வீட்டில் நிலை வாசலுக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து நிலை வாசல் பூஜை செய்யுங்கள். இதுவும் உங்கள் குடும்பம் சுபிட்சமாக வாழ வழிவகுக்கும்.

🔯இவற்றுடன் இன்று மாலை வேளையில் சஷ்டி கவசம் கேளுங்கள் அல்லது தெரிந்தால் சொல்லுங்கள். இது உங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் தேடித் தரும் வழிபாடாக அமையும்.

🔯இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த இன்று தவிர விடாமல் இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது செய்து உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

28/03/2024

இன்றைய குபேர சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் விநாயகருக்கு எளிமையான இந்த பொருளை மட்டும் வழிபட்டால் போதும். உங்கள் வீடு செல்வ செழிப்பாக மாறி விடும் என்பதில் சந்தேகமே இல்லை

இந்த சதுர்த்தி திதி என்பது விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். அதிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்பது அதன் பெயரிலே உள்ளது போல் நம்முடைய சங்கடங்களை முழுவதுமாக தீர்க்கக் கூடியது. அப்படியான சங்கடஹர சதுர்த்தி வரக் கூடிய நாட்களைப் பொறுத்து அதன் சிறப்பு மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் இன்றைய தினம் வியாழக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வந்திருப்பது குபேர சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது.

இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை எளிமையான முறையில் வீட்டிலே நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய சங்கடங்களான துன்பம், துயரம் கடன், பண பிரச்சனை அனைத்தும் தீரும். இத்துடன் சேர்ந்து நல்லதொரு வளமான வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பண வரவை தரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

இன்றைய (28.3.24) தினம் மாலை 5:30 மணிக்கு மேல் துவங்கி வெள்ளிக்கிழமை(29.3.23) மாலை 6 மணி வரை உள்ளது. சதுர்த்தி வழிபாடு என்பது மாலை 6 மணிக்கு மேல் செய்யக் கூடியது. ஆகையால் இந்த வழிபாட்டை நாளைய தினம் வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு மேல் செய்வதே சிறந்தது.

இந்த வழிபாடு செய்வதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் படத்தை துடைத்து மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து விட்டு மலர்களை சூட்டி விடுங்கள். விநாயகருக்கு உகந்த அருகம் புல்லை கொஞ்சம் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.
அடுத்து நெய்வேதியமாக ஏதேனும் செய்ய முடிந்தால் செய்யுங்கள் அல்லது ஒரே ஒரு வெல்ல கட்டியை மட்டுமாவது வைத்து விடுங்கள். இப்போது விநாயகருக்கு முன்பாக இரண்டு ஏலக்காய் வைத்து உங்களுடைய பண பிரச்சனை கடன் தொல்லை அனைத்து சங்கடங்களும் தீர வேண்டும் என்று மனதார விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள்.

அந்த வேளையில் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். யார் ஒருவர் தினமும் இந்த விநாயகர் அகவலை தொடர்ந்து படிக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் சங்கடம் என்ற வார்த்தைக்கு வழியில்லை என்று சொல்லப்படுகிறது. அப்படியான இந்த அகவலை நாளைய தினத்தில் சதுர்த்தி வழிபாட்டின் போது சொன்னால் மிகப் பெரிய பலனை பெறலாம். இந்த வழிபாடு முடிந்த பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அது உங்கள் வழிபாட்டை மேலும் பயனுள்ளதாக மாற்றும்.

விநாயகருக்கு வைத்து படைத்து இந்த ஏலக்காவை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். அது நல்ல பண வரவு ஈர்த்துக் கொடுக்கும். இந்த வழிபாட்டை நாளைய தினம் தொடங்கி 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 48 நாட்களும் இரண்டு ஏலக்காவை தினந்தோறும் வைக்க வேண்டும். அதை சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படியே சாப்பிடவும் செய்யலாம். இப்படி ஒவ்வொரு நாளும் ஏலக்காய் ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்திக் கொண்டே வாருங்கள்.

உங்களுடைய தடைகள் பண பிரச்சனை மனப்பிரச்சனை குழப்பம் அனைத்தும் தீரும் என்று சொல்லப்படுகிறது.விநாயகரை இப்படி எளிமையான வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் நாளைய தினம் இந்த வழிபாட்டை தவறாமல் செய்து விடுங்கள். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் அனைத்து செல்வ நலன்களையும் பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

02/09/2023

🙏 *நமஸ்காரம்* 🙏

இராம கொண்ட அள்ளி, ஸ்ரீ சக்தி அக்கு மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சங்கட ஹர கணபதி ஆலயத்தில்🔔,

*நாளை* 03.09.2023, மாலை 5 மணி முதல், 9 மணி வரை
*மஹா சங்கடஹர சதுர்த்தி பூஜை* 🎊
நடைபெற உள்ளது.

ஆண்டிற்கு ஒருமுறை வரும், இந்த மகா சங்கடஹர சதுர்த்தி பூஜைக்காக, சிறப்பான *யாக பூஜை மற்றும் அபிஷேக பூஜைகள்* நடைபெறு உள்ளது.

இந்த பூஜையில் கலந்து கொள்வதன் மூலம், *ஒரு தனி மனிதரின் வாழ்க்கையில் பரிபூரண நல்வாழ்வு, ஆரோக்கியம், வெற்றி, மற்றும் செல்வ வளம்* பெருகும்.

*இந்த பூஜையில், குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன் பெருக..!*

வாருங்கள்!🙏
கணபதியின்யின் அருளில் திளைத்திடுங்கள் !!📣

விபரங்களுக்கு :📜

9442855314.
(G pay, Phone pay)

🙏🙏நன்றி🙏🙏

19/05/2022

*இன்று சங்கடஹர_சதுர்த்தி விநாயகரின் பெருமை பற்றி அறிவோம்*

சங்கடம் என்றால் ’கஷ்டம்’. ’ஹர’ என்றால் கரிந்து (எரிந்து) போதல். ’சதுர்’ என்றால் ’நான்கு’. அதாவது சங்கடத்தை போக்கும் நான்காம் நாள் என்பதால் இப்பெயர் வந்தது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி செவ்வாய ன்று வருமானால் அதை விட சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்க சிறந்த நாள் வேறில்லை.

அந்த நாள் அமையாவிட்டால், ஆவணி தேய் பிறை சதுர்த்தியன்று விரதம் தொடங்கலாம். இந்த ஆண்டு இன்று செப்.17 (ஆவணி 31) செவ்வாய் கிழமை சேர்ந்து வருகிறது. இந்நாளில் விரத மிருந்து இரவில் கோயிலில் நடக்கும் சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். மறுநாள் நீராடியதும் விநாயகரை வழிபட்டு விரதம் முடிக்க வேண்டும். இதை எந்த தமிழ் மாதத்தி ல் துவங்குகிறோமோ, அதே மாதத்தில் முடிக்க வேண்டும். வளர்பிறை சதுர்த்தி விரதத்தை மட்டுமே ஒருவர் ஆயுள் முழுவதும் அனுஷ்டிக் கலாம். நவக்கிரகங்களில் கேதுவின் அதிபதி விநாயகர். கேது திசை, கேது புத்தியால் சிரம ப்படுபவர்கள் செவ்வாயன்று இவரை வழிபடு வது நல்லது. சனிக்கிழமையில் வன்னி இலை களால் அர்ச்சித்தால் ஏழரைச்சனி, அஷ்டமத்து ச்சனி பாதிப்பு குறையும். ஞாயிறன்று எருக்கம்பூ மாலை அணிவிக்க சூரிய தோஷம் விலகும்.

#சங்கடஹர சதுர்த்தியின் மகிமை....

''பிடித்து வைத்தால் பிள்ளையார்'' என்று சொல்வதற்கேற்ப வடிவமைக்கவும், வணங்க வும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும் கீர்த்தியைக் கொண்ட முழுமுதற் கடவுள் இவர். இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். 'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்க ப்படவிருக்கிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப் படுகிறது.

விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பின் தான் கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொது வான நியதி.

அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.

''ஸ்ரீகிருஷ்ணர், பிரம்மா, புருசுண்டி முனிவர், செவ்வாய் ஆகியோர் இந்தச் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு வரம் பெற்றார்கள்’ என்கின்றன ஞான நூல்கள்.

ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். 11 சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து சதுர்த்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்கு செல்ல வேண்டும் பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்ச னை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொ ண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயக ரை வணங்க வேண்டும்.

கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்கு கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.

வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழு க்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயக ருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களை தரும். அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமா னவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாய கரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

மரத்தடி, குளக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் இருக்கும் கணபதி விசேஷமான வர். வெட்டவெளியில் வீற்றிருக்கும் கணபதி யை நீராட்டி வணங்குவது நமது தொன்று தொட்ட வழிபாடாக இருந்து வந்திருக்கிறது. 'நீராட்டி, பூச்சூட்டி, தூப தீபமிட்டு தெருப் பிள்ளையாரை வணங்கினால் தீராத வினை யெல்லாம் தீரும்’ என்பார்கள்.

ஒருமுறை பிரம்மனால் தொழுநோய் பெற்ற நவகிரகங்கள், கணபதியை பூஜித்து குணம் பெற்றார்கள். மனிதர்கள் மட்டுமன்றி சகல தேவர்களுக்கும் அருளியவர் கணபதிப் பெருமான்.

விநாயகர் வடிவத்துக்குள் பிரபஞ்சமே வியா பித்து நிற்பதைக் காட்டும்விதமாக, அரிசி மாவுக்குள் தேங்காயும் வெல்லமும் கலந்த இனிப்பான பூரணத்தை வைத்து, முதன்முத லில் விநாயகருக்குப் படைத்து அவரின் அருளைப் பெற்றார் ரிஷிபத்தினி அருந்ததி.

அனலாசுரனை விழுங்கியதால், கணபதிக்கு ஏற்பட்ட வயிற்றுத் தீயின் உஷ்ணத்தைக் குறைப்பதற்காக சப்த ரிஷிகளால் விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பிக்கப்பட்டது. அதையே நாம் இன்றும் கடைப்பிடிக்கிறோம்.

தன்னை மதிக்காமல் சென்ற பிரம்ம தேவரின் கர்வத்தை அடக்க நினைத்த விநாயகர், அவரு க்குத் தன் சுயரூபத்தைக் காட்டி அனுக்கிரகம் செய்தார். தன் கர்வம் அடங்கிய பிரம்மதேவர், நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு வணங்கினார். அதுவே இன்றும் தொடர்கிறது.

தோப்புக்கரணம் போடுவதென்பது சிறந்த யோகப் பயிற்சி. ஒருமுறை விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை விழுங்கிவிட்டார் விநாயகர். விநாயகரைச் சிரிக்க வைத்தால் தான் சுதர்சன சக்கரத்தைத் திரும்பப் பெற முடியும். எனவே, விஷ்ணு தோப்புக்கரணம் போட்டு விநாயகரைச் சிரிக்கவைத்து தன்னு டைய சுதர்சன சக்கரத்தைத் திரும்ப பெற்றார்.

பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான் கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் எல்லாக் குழந்தைகளுக்கும் கணபதி அருளுகிறார்.

19/05/2022

இன்று சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி !ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.

"அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!..
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்!."

அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும்.

சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி
(தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.

சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்க தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.

பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சதுர்த்தியின் மகிமை:

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

பார்வதி இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.

முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும்.

ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.

இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச் சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.

இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.

29/03/2022

*❤இன்றைய சிந்தனை.*
*…………………………………*

*"பிறப்பும்,இறப்பும்..’’*
*.....................................*

பிறப்பும்,இறப்பும் இந்த இரண்டு நிகழ்வுகள் இடையே மனிதன் எத்தனை மாறுபட்ட காலங்களைச் சந்திக்கிறான் . அதிலிருந்து பல அனுபவங்களைக் கற்றுக் கொள்கிறான் .

காலங்கள் ஓட, ஓட மனிதனின் வயதும் ஏறுகிறது.பால்யம் , இளமை , முதுமை என்று மூன்று விதமாக மனிதனின் வாழக்கை வகுக்கப்படுகிறது..

ஒரு மனிதனின் வாழ்க்கை தான் அந்த மனிதனின் தன்மையை எடுத்துக் காட்டுகிறது .

மனிதன் இறந்த பின்பு, அவனுடைய நல்ல குணங்கள், அவன் செய்த நல்ல செயல்கள் என்றும் நம்மோடு நிலைத்து நிற்கின்றன . இவை தான் ஒரு மனிதனின் வாழக்கையை வரலாறாக மாற்றுகிறது .

ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார். துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.

எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.......
ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டு இருந்தார், சர்வசாதாரணமாக..

துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,

''குருவே,நீங்களே இப்படிச் செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும் போது, நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டு இருக்கிறீர்களே?'

ஞானி சொன்னார்,

'பிறப்பில் சிரிக்கவோ, இறப்பில் அழுவதற்கோ
என்ன இருக்கிறது..?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.

என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை. பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய் விட்டன.

இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தம் அடைவதற்கு என்ன இருக்கிறது?''.. என்றார்..

*ஆம்,தோழர்களே.,*

*பிறப்பு ஒன்று இருந்தால் அதனுடன் இறப்பு ஒன்றும் இருக்கிறது . பிறப்பும், இறப்பும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள்.*

*பிறப்பு எப்படி இன்றியமையாததோ, அது போல் தான் இறப்பும்.*

*பிறப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது..இறப்பு துக்கத்தைக் கொடுக்கிறது..*

*மனிதன் எத்தனை காலங்கள் வாழ்ந்தான் என்பது முக்கியம் இல்லை .*

*அவன் எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம்..✍🏼🌹*

*சனி மஹாப்பிரதோஷத்தின் சிறப்புகள் பற்றிய பதிவு :*சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் ச...
15/01/2022

*சனி மஹாப்பிரதோஷத்தின் சிறப்புகள் பற்றிய பதிவு :*

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

*சனி பிரதோஷத்தின் சிறப்பு :*

சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

பிரதோஷ நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

சிவாலயங்களில் சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.

நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
*வீட்டில் எப்படி வழிபாடு செய்வது?*

வீடு, வாசலை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

நாள் முழுவதும் விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து மாலையில் சிவனை தரிசனம் செய்யுங்கள்.

கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே சிவனை மனதார நினைத்து தரிசனம் செய்யுங்கள்.

வீட்டில் சிவன்-பார்வதி, சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் வைத்து விளக்கேற்றி வழிபடலாம்.

பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதோடு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து சிவனை தரிசிக்கலாம்.

இன்று நாள் முழுவதும் ஓம் நமசிவாய நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி சிவனின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

WhatsApp Group Invite

10/10/2021

_*வாக்ய பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*புரட்டாசி - 24*
*அக்டோபர் - 10 - ( 2021 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*ப்லவ*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*கன்யா*
*ஸுக்ல*
*சதுர்த்தி ( 7.43 ) ( 09:05sm )*
&
*பஞ்சமி*
*பானு*
*அனுஷம் ( 33.41 ) ( 07:28pm )*
&
*கேட்டை*
*ஆயுஷ்மான் யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி - பஞ்சமி*

_*சந்திராஷ்டமம் - மேஷ ராசி*_

_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._

_*மேஷ ராசி* க்கு அக்டோபர் 09 ந்தேதி மாலை 03:30 மணி முதல் அக்டோபர் 11 ந்தேதி மாலை 05:52 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் - 06:07am*_

_*சூர்ய அஸ்தமனம் - 05:59pm*_

_*ராகு காலம் - 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் - 12:00noon to 01:30pm*_

_*குளிகன் - 03:00pm to 04:30pm*_

_*வார சூலை - மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் - வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:55am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_
*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் மரண யோகம்*_
*English-:Paambu>Vakya~🐍PANCHANGAM*
*OCT 10-10-2021*
*🐍 பாம்பு பஞ்சாங்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு*

*தின விசேஷங்கள்~|* *துர்க்கா"ஸ்னானம், துர்க்கா"கேசோதனம், பாதூர்"கருடசேவை🦅,*
*⚪ChaandraMaanam*
*☸️TTD Panchangam☸️*
*Plava"Naama"Samvatshare,*
*Dakshinaayane,*
*SharadhRutu,*
*AashwayujaMaasam,*
*🔘Shudda(Shukla)*
*S-:Tithi=(Aashwayuja"Shudda"ShuklaPaksha~Panchami]*
☀ *Sowram*
*Soorya-Udayam(06:05)*
*Astamanam(05:47)*
*Purattasi(24)*
*PLAVA"Naama"Samvatshare,*
*Dakshinaayane,*
*VarshaRutu,*
*KanyaMaasam,*
*ShuklaPaksham,*
*Chaturthi(07.44)09.06.AM.&" Panchami,*
*BhaanuVasaram,*
*Nakshatram~Anuradha✨(33.41)07.28. PM.&" Jyeshta✨,*
*AayushmaanYogam(35.23)08.08.PM.&" SowbhagyaYogam,*
*BhadraKaranam(07.44)09.06.AM.&" BhavaKaranam,*
*[S-:Tithi=(Kanya"ShuklaPaksha)~Panchami]*
*RA.04.30.06.00.PM,*
*YM.12.00.01.30.PM,*
*KU.03.00.04.30.PM,*
*MaranaYogam,*
*C🌙Ashtamam(Ashwini+Bharani)*

*{🚩SRI RAMAJAYAM🚩}*
*🙏🏻SarveJanaSukhinoBhavantu🚩LokaSamastaSukhinoBhavanvantu🙏🏻*

Address

Ramakondahalli
Pennagaram
636810

Telephone

9442855314

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Sakthi Akkumariyamman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to SRI Sakthi Akkumariyamman Temple:

Share

Category