19/05/2022
*இன்று சங்கடஹர_சதுர்த்தி விநாயகரின் பெருமை பற்றி அறிவோம்*
சங்கடம் என்றால் ’கஷ்டம்’. ’ஹர’ என்றால் கரிந்து (எரிந்து) போதல். ’சதுர்’ என்றால் ’நான்கு’. அதாவது சங்கடத்தை போக்கும் நான்காம் நாள் என்பதால் இப்பெயர் வந்தது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி செவ்வாய ன்று வருமானால் அதை விட சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்க சிறந்த நாள் வேறில்லை.
அந்த நாள் அமையாவிட்டால், ஆவணி தேய் பிறை சதுர்த்தியன்று விரதம் தொடங்கலாம். இந்த ஆண்டு இன்று செப்.17 (ஆவணி 31) செவ்வாய் கிழமை சேர்ந்து வருகிறது. இந்நாளில் விரத மிருந்து இரவில் கோயிலில் நடக்கும் சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். மறுநாள் நீராடியதும் விநாயகரை வழிபட்டு விரதம் முடிக்க வேண்டும். இதை எந்த தமிழ் மாதத்தி ல் துவங்குகிறோமோ, அதே மாதத்தில் முடிக்க வேண்டும். வளர்பிறை சதுர்த்தி விரதத்தை மட்டுமே ஒருவர் ஆயுள் முழுவதும் அனுஷ்டிக் கலாம். நவக்கிரகங்களில் கேதுவின் அதிபதி விநாயகர். கேது திசை, கேது புத்தியால் சிரம ப்படுபவர்கள் செவ்வாயன்று இவரை வழிபடு வது நல்லது. சனிக்கிழமையில் வன்னி இலை களால் அர்ச்சித்தால் ஏழரைச்சனி, அஷ்டமத்து ச்சனி பாதிப்பு குறையும். ஞாயிறன்று எருக்கம்பூ மாலை அணிவிக்க சூரிய தோஷம் விலகும்.
#சங்கடஹர சதுர்த்தியின் மகிமை....
''பிடித்து வைத்தால் பிள்ளையார்'' என்று சொல்வதற்கேற்ப வடிவமைக்கவும், வணங்க வும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும் கீர்த்தியைக் கொண்ட முழுமுதற் கடவுள் இவர். இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். 'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்க ப்படவிருக்கிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப் படுகிறது.
விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பின் தான் கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொது வான நியதி.
அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.
''ஸ்ரீகிருஷ்ணர், பிரம்மா, புருசுண்டி முனிவர், செவ்வாய் ஆகியோர் இந்தச் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு வரம் பெற்றார்கள்’ என்கின்றன ஞான நூல்கள்.
ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். 11 சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து சதுர்த்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்கு செல்ல வேண்டும் பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்ச னை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொ ண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயக ரை வணங்க வேண்டும்.
கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்கு கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.
வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழு க்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயக ருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களை தரும். அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமா னவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாய கரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
மரத்தடி, குளக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் இருக்கும் கணபதி விசேஷமான வர். வெட்டவெளியில் வீற்றிருக்கும் கணபதி யை நீராட்டி வணங்குவது நமது தொன்று தொட்ட வழிபாடாக இருந்து வந்திருக்கிறது. 'நீராட்டி, பூச்சூட்டி, தூப தீபமிட்டு தெருப் பிள்ளையாரை வணங்கினால் தீராத வினை யெல்லாம் தீரும்’ என்பார்கள்.
ஒருமுறை பிரம்மனால் தொழுநோய் பெற்ற நவகிரகங்கள், கணபதியை பூஜித்து குணம் பெற்றார்கள். மனிதர்கள் மட்டுமன்றி சகல தேவர்களுக்கும் அருளியவர் கணபதிப் பெருமான்.
விநாயகர் வடிவத்துக்குள் பிரபஞ்சமே வியா பித்து நிற்பதைக் காட்டும்விதமாக, அரிசி மாவுக்குள் தேங்காயும் வெல்லமும் கலந்த இனிப்பான பூரணத்தை வைத்து, முதன்முத லில் விநாயகருக்குப் படைத்து அவரின் அருளைப் பெற்றார் ரிஷிபத்தினி அருந்ததி.
அனலாசுரனை விழுங்கியதால், கணபதிக்கு ஏற்பட்ட வயிற்றுத் தீயின் உஷ்ணத்தைக் குறைப்பதற்காக சப்த ரிஷிகளால் விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பிக்கப்பட்டது. அதையே நாம் இன்றும் கடைப்பிடிக்கிறோம்.
தன்னை மதிக்காமல் சென்ற பிரம்ம தேவரின் கர்வத்தை அடக்க நினைத்த விநாயகர், அவரு க்குத் தன் சுயரூபத்தைக் காட்டி அனுக்கிரகம் செய்தார். தன் கர்வம் அடங்கிய பிரம்மதேவர், நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு வணங்கினார். அதுவே இன்றும் தொடர்கிறது.
தோப்புக்கரணம் போடுவதென்பது சிறந்த யோகப் பயிற்சி. ஒருமுறை விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை விழுங்கிவிட்டார் விநாயகர். விநாயகரைச் சிரிக்க வைத்தால் தான் சுதர்சன சக்கரத்தைத் திரும்பப் பெற முடியும். எனவே, விஷ்ணு தோப்புக்கரணம் போட்டு விநாயகரைச் சிரிக்கவைத்து தன்னு டைய சுதர்சன சக்கரத்தைத் திரும்ப பெற்றார்.
பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான் கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் எல்லாக் குழந்தைகளுக்கும் கணபதி அருளுகிறார்.