St John Of The Cross Church Siluvaipuram

St John Of The Cross Church Siluvaipuram Siluvaipuram parish comes under kuzhithurai diocese. It has around 650 families.The patron saint of our church is "ST.JOHN OF THE CROSS" J.

�பெயர் : புனித சிலுவை அருளப்பர் ஆலயம்

�இடம் : சிலுவைபுரம், கொல்லங்கோடு

�மாவட்டம் : கன்னியாகுமரி
�மறை மாவட்டம் : குழித்துறை

�நிலை : பங்குதளம்
�கிளை : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், சந்தனபுரம்

�பங்குத்தந்தை : அருட்பணி. அஜின்

�குடும்பங்கள் : 650
�அன்பியங்கள் : 16

�ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு

�வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை

�திங்கள், வியாழ

ன், சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு திருப்பலி

�திருவிழா : டிசம்பர் மாத இறுதியில்

சிலுவைபுரம் ஆலய வரலாறு :
**********************

�அமைவிடம் :

�கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையான கேரளக் கரையோரமாய் சிலுவைபுரம் என்ற ஊரில் புனித சிலுவை அருளப்பர் ஆலயம் அமைந்துள்ளது.

�நூற்றாண்டுகளுக்கு முன் வெளிநாட்டினர் பலர் இந்தியாவில் மறை பரப்புப் பணியை மேற்கொண்டனர். அதில் போர்ச்சுகீசிய மிஷனும் ஒன்று. சுமார் கி.பி 17- ம் நூற்றாண்டில் வாராபுழை மறை மாவட்டம் கடலோரம் மற்றும் அதனுடன் இணைந்த மக்களுக்கு சேவை செய்து வந்தனர்.

�வறுமை, அறியாமை, கொடிய நோய்களிலும் சிக்கிக் கொண்டு வாழும் மக்களைக் கண்ட மிஷனரீஸ், அவர்களுடன் நெருங்கி இரண்டற பழகினர். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நோய்களுக்கு மருந்தும், அறியாமையைப் போக்க அறிவையும் கல்வியையும் இவற்றுடன் இறைவனைப் பற்றிய போதனைகளுமாய் நம் மறையை பரப்பி வந்தனர்.

�கி.பி 19- ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்ச்சுகீசிய மிஷனரீஸ் வல்லுவ பொற்றை -யை மையமாகக் கொண்டு இவ்வூர் மக்களிடம் இறைவனைப் பற்றிய போதனைகளை மேற்கண்டவாறு போதிக்க தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து வந்த கார்மலீத் சபையினர் (கார்மெல்) இங்கு ஆலயம் கட்டியது முதல் இவ்வூர் வரலாறு துவங்கியது.

பெயர்க்காரணம் :

�வெளிநாட்டினர் ஆலயங்களை உயரமான இடங்களில் அமைப்பது வழக்கம். அவ்வகையில் இவ்வூரில் வல்லுவ பொற்றையை தேர்வு செய்து, ஆலயம் கட்டும் பணியை கார்மலீத் சபையை சார்ந்தவர்கள் செய்தனர். அவர்கள் கார்மலீத் சபையில் குருவாக பணி செய்த புனித சிலுவை அருளப்பரை பாதுகாவலாகக் கொண்டு ஒரு சிறிய ஓலைக் கோயிலை கட்டினார்கள்.

�பின்னர் அருட்பணி. இன்னசென்ட் (பெல்ஜியம்) அவர்கள், ஆலயத்தை சார்ந்த இப்பகுதிக்கு சிலுவைபுரம் எனப் பெயரிட்டார்.

ஆலயம் வளர்ந்த வரலாறு :

துவக்க காலத்தில் சிறு ஓலைக் குடில் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள். அக்காலத்தில் சுமார் 30 குடும்பங்கள் இப் பங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நிலையான ஆலயத்தின் தேவையை உணர்ந்து இக் குடும்பத்தினரின் உதவியுடனும், வெளி நாட்டினரின் நிதி உதவியுடனும் ஓட்டுக் கூரையாலான ஆலயம் கட்டப்பட்டு அருட்பணி. லாரன்ஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அப்போது மங்குழி, சூழால், பிராகோடு, போராங்கோடு, சந்தனபுரம், காக்கவிளை, பின்குளம் ஆகிய பகுதிக்குட்பட்ட இடம் இப்பங்கின் எல்லைகளாக இருந்தது.
பின்னர் அருட்பணி. லூக்காஸ் அவர்கள் பணிக்காலத்தில் பொதுநிலையினரின் பங்கேற்பு அதிகமானதால், அனைவரும் ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து திருப்பலியில் பங்கேற்க முடியாததால் ஆலயத்தின் முன் பக்கம் இரண்டு வாயில்கள் கூடுதலாக அமைத்து வெளியில் நின்று கொண்டும் திருப்பலியில் பங்கேற்க வழிவகை செய்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த அருட்பணி. ஜஸ்டஸ் அவர்கள் அன்றைய பங்குப்பேரவையின் ஒத்துழைப்புடன், அழகிய வடிவில் கான்கிரீட்டால் ஆலய இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்டு இட நெருக்கடியை குறைத்தார்.
தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி. சதீஷ்குமார் ஜாய் அவர்களின் பணிக்காலத்தில், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகள், பங்குத்தந்தையின் வழி நடத்துதலில் சிறப்பாக நிறைவு பெற்று 28-12-2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கொடிமரம் :

திருவிழா காலத்தில் ஆலயத்தில் திருக்கொடியேற்றும் நிறைவேற்றப் படுவது வழக்கம். அதன் அடிப்படையில் ஆரம்ப காலத்தில் கமுகு மரம் (பாக்கு மரம்) வெட்டி, நட்டு வைத்து திருக்கொடியேற்றினர்.
பின்னர் அருட்தந்தை இராபர்ட் அவர்கள் காலத்தில் இரும்பு குழாயாலான 60 அடி உயர கொடிமரம் நாட்டப்பட்டது.
மழை, காற்று போன்றவற்றால் இக்கொடிமரம் பாதிப்படைந்ததால் கான்கிரீட்டாலான கொடிமரம் திரு குருசுமுத்து அவர்களின் நன்கொடையில் உருவாக்கப்பட்டு அருட்பணி லூக்காஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தற்போதைய, கல்லால் ஆன கொடிமரம் அருட்பணி சதீஷ்குமார் ஜாய் அவர்களால் நிறுவப்பட்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் 28-12-2014 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

கிணறு :
ஓலைக் கோயில் இருக்கையிலேயே இவ்வாலய வளாகத்தில் அமையப் பெற்றிருக்கும் கிணறு வெட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் :

1962-ம் ஆண்டிலிருந்து அருட்பணி வலேரி மெலாட் அவர்கள் ஆலயத்திற்கு மின்சாரத்தை பெற்றுத் தந்தார்கள்.

பலிபீடம் :

அக்காலத்தில் இலத்தீன் மரபுப்படி பின்னோக்கி இருந்த பீடம், இரண்டாம் வத்திக்கான் சங்க முறைப்படி அருட்தந்தை ஏசுதாசன் தாமஸ் அவர்கள் காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டு பொது நிலையினரை நோக்கி திரும்ப, திருப்பலி நிறைவேற்றும் வழக்கம் நடைமுறைப்படுத்தப் பட்டது.
ஓட்டுக்கூரையாலான ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்ட போது அருட்பணி. ஜஸ்டஸ் அவர்கள் புதிய பீடத்தை நிறுவினார்.
தற்போதைய அழகிய பலிபீடம் விவிலிய சிந்தையில் அருட்பணி. சதீஷ்குமார் ஜாய் அவர்கள் நிறுவினார்.

புனித சூசையப்பர் குருசடி:

மக்களின் நம்பிக்கையை பறைசாற்றும் விதமாக பழமையான சூசையப்பர் குருசடி சிலுவைபுரம் சாலையோரம் அமைந்துள்ளது. பல இடங்களுக்கு பயணம் செய்வோர் இக்குருசடியில் வேண்டி காணிக்கை செலுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மாதா குருசடி:

சிலுவைபுரம் சந்திப்பில் பங்கு மக்களின் ஜெப தேவைக்காக, ஒரு அழகிய புனித ஆரோக்கிய அன்னை குருசடி திரு. அப்புமணி அவர்கள் குடும்பத்தார் சார்பாக நன்கொடையாக கட்டித்தரப்பட்டு ஆலயத்தின் பெயரில் பதிவு செய்து 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அர்ச்சிக்கப்பட்டது.

கன்னியர் இல்லம் :

இவ்வூருக்கு திருத்துவபுரத்திலிருந்து கன்னியர்கள் நடந்து வந்து சேவை புரிந்தனர். அவர்களின் சேவையின் சிறப்பையும், தேவையையும் உணர்ந்து அருட்பணி. போர்ஜியோ அவர்கள் 1947 -ல் ஒரு சிறு கட்டிடத்தை அமைத்து அவர்களை இங்கேயே தங்கி பணிபுரிய செய்தார். தற்போதைய கட்டிடம் 1978 ம் ஆண்டு அருட்பணி அலெக்ஸாண்டர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1982- ம் ஆண்டு அருட்பணி. லூக்காஸ் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்டு அப்போதைய ஆயர் மேதகு ஆரோக்கியசாமி ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது. C சமூக நலக்கூடம் :

J. C சமூக நலக்கூடமானது 04-01-1998 அன்று அருட்பணி அகஸ்டின் அவர்களது முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டது. பின்னர் அருட்பணி. பிரைட் சிம்சராஜ் அவர்களின் முயற்சியால் முதல் தளம் கான்கிரீட் செய்யப்பட்டது.
தொடர்ந்து அருட்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ் அவர்களின் முயற்சியால் வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்று 03-01-2010 ல் திறப்பு விழா கண்டு, இன்று உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகின்றது.

மாலை நேரக் கல்வி :

மாலைநேரக் கல்வியானது அருட்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ் காலத்தில் துவக்கப் பட்டது. மாலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஏராளமான மாணவர்கள் இதில் பயின்று பயன் பெற்று வருகின்றனர்.

பள்ளிக்கூடம் :

1950 -ம் ஆண்டு அருட்பணி பிரான்சிஸ் போர்ஜியோ பீட்டர் அவர்களால் பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது.
1953 - ம் ஆண்டில் அருட்பணி. ஜோசப் அடிகளாரால் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெறப்பட்டது.
இடைநிலைப் பள்ளியாக செயல்பட்டுக் கொண்டிருந்ததை அருட்பணி லூக்காஸ் அவர்களின் முயற்சியால் 1980 ல் நடுநிலைப் பள்ளியாக மாற்றப் பட்டது.
அருட்பணி. ஜஸ்டஸ் அவர்களின் முயற்சியால் புதிய கட்டிடமும் கட்டப்பட்டு, உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து விளங்குகின்றது.

மறைக்கல்வி :

பங்கின் தொடக்க காலம் முதலே மறையைக் குறித்த அறிவை வளர்க்க மறைக்கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. தொடக்க காலத்தில் அருட்சகோதரிகள் இப்பணியை செய்தனர். மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் பொருட்டு மூன்று மாதத்திற்கொரு முறை மறைக்கல்வி மன்ற கூட்டம் நடத்தப்பட்டு, மாணவர்கள் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

சபைகள், சங்கங்கள், இயக்கங்கள் :

சிலுவைபுரம் பங்கில் அனைத்து பங்கேற்பு அமைப்புகளும், தங்களுக்கான நோக்கங்களுடன் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இன்றைய நிலை :

ஒரு காலத்தில் கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் குன்றியிருந்த இப்பங்கானது தற்போது சிறந்த கல்வியாளர்களையும், வல்லுநர்களையும், பல்வேறு துறைகளிலும் சிறந்து வளர்ந்து உயர்ந்து நிற்கின்றது.
மேலும் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. அஜின் அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி, சிலுவைபுரம் தலத்திருச்சபையை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்.

நூற்றாண்டு விழா :

சிலுவைபுரம் பங்கானது 19.09.1919 முதல் 19.09.2019 முடிய நூற்றாண்டை நிறைவு செய்து "நன்றியோடு நூற்றாண்டு" என்ற மையசிந்தனையோடு அருட்பணி. விக்டர் குரூஸ் பணிக்காலத்தில் 19.09.2019 முதல் 29.09.2019 முடிய 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடியது. நூற்றாண்டு நினைவாக பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 07.09.2019 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. நூற்றாண்டு விழா முதல் நாள் 100 மாணவிகளின் வரவேற்பு நடனம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. தொடர்ந்து ஆடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அனைத்து சபை மற்றும் மதத்தை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பங்கின் பெருமைகளை எடுத்துரைத்தனர். தொடர்ந்து பங்கின் முதியவர்கள் கவுரவிக்கப்பட்னர். அன்றைய தினம் "சிலுவைபுரத்தினிலே" என்ற இசை குறுந்தகடு வெளியிடப்பட்டது. நூற்றாண்டு விழா பவனி சிறப்பாக இருந்ததாக பிற பகுதி மற்றும் சபையை சார்ந்த மக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் அனைத்து நாட்களும் அன்புவிருந்து மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நூற்றாண்டு விழாவை உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்பணி. மா. பா ஏசுதாஸ் (தாகம் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்க பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டவர்)
2. அருட்பணி. அமல் ராஜ் (வாரனாசி மறைமாவட்டம்)
3. அருட்சகோதரி. லீமாறோஸ்

கோட்டார் மறைமாவட்டம் உதயமான பிறகு பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள்:
Fr. ஜெரோட்
Fr. ஸ்டீபன் நாசரேத்
Fr. ஆம்ப்ரோஸ் பட்டன்
Fr. டொம்னிக்
Fr. பெஞ்சமின் விளாஸ்
Fr. பிரான்சிஸ் போர்ஜியோ பீட்டர்
Fr. ஜோசப்
Fr. சூசை மரியன்
Fr. ஸ்டென்லியஸ்
Fr. அந்தோணி முத்து
Fr. வல்லேரி மெல்லத்
Fr. ஜே.ஜி. யேசுதாஸ்
Fr. லெசிலின் .எஸ். அலெக்சாண்டர்
Fr. த.யேசுதாசன்
Fr. வி.ராபர்ட்
Fr. பெனடிக்ட். ஜே.ஆர். அலெக்சாண்டர்
Fr. லூகாஸ் .ஜே
Fr. ஜஸ்டஸ்
Fr. மரியா கிளாட்ஸ்டன்
Fr. அகஸ்டின்
Fr. ஜூலியஸ்
Fr. மைக்கேல் ராஜ்
Fr. பிரைட் சிம்ச ராஜ்
Fr. பெர்க்மான்ஸ்
Fr. கிறிஸ்து ராஜா மணி
Fr. காட்வின் செல்வ ஜஸ்டஸ்
Fr. சதீஷ் குமார் ஜாய்

தற்பொழுது குழித்துறை மறைமாவட்டம் உதயமான பிறகு

Fr. விக்டர் குரூஸ்
Fr. அஜின்....

வழித்தடம் :

�கொல்லங்கோடு செல்கிற பேருந்தில் பயணித்து சிலுவைபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இவ்வாலயம் செல்லலாம்.

�Bus : 382, 82A, 82B, 82D, 82F, 82G, 82M,
PCG

*அன்பு அருள்பணியாளர்களே, அருள்சகோதரிகளே, இறைமக்களே!**நம் குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு ஆயர் ஜெறோம்தாஸ் வற...
24/03/2026

*அன்பு அருள்பணியாளர்களே, அருள்சகோதரிகளே, இறைமக்களே!*

*நம் குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு ஆயர் ஜெறோம்தாஸ் வறுவேல் SDB, (வயது 74)அவர்கள் இன்று அதிகாலை(மார்ச் 24, 2026) 12.10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*

*அன்னாருடைய நல்லடக்க திருப்பலியானது நாளை (25-03-2026) புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மூவொரு இறைவன் பேராலயம், திரித்துவபுரத்தில் வைத்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.*

அனைவரையும் இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள அழைக்கிறேன். ஆயர் ஜெறோம்தாஸ் வறுவேல் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இணைந்து இறைவேண்டல் செய்வோம்.

கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தின் திருவிழா அழைப்பிதழ்
21/11/2025

கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தின் திருவிழா அழைப்பிதழ்

04/12/2024
14/11/2024

Christ king church vettucad festival

இரண்டாவது திருவழிபாடு ஆண்டுபொதுக்காலம் 24வது வாரம் செவ்வாய்க்கிழமை2024-09-17முதல் வாசகம்நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொ...
17/09/2024

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் செவ்வாய்க்கிழமை
2024-09-17

முதல் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14. 27-31

சகோதரர் சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்ல செயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்
திருப்பாடல் 100: 1-2. 3. 4. 5

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17

அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ``அழாதீர்'' என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், ``இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு'' என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, ``நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்'' என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை

நான் யார் ?

‘நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்வி இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிறித்தவர்கள், இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களே, அவரைப் பல்வேறு பார்வைகளில் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சம் வியப்பூட்டும் செய்திதான். சிலர் இயேசுவை அற்புதங்களும், அருங்குறிகளும் செய்பவராகப் பார்க்கிறார்கள். பெந்தகோஸ்தே சபைகளுக்குச் செல்பவர்கள், அருங்கொடை ஆர்வலர்கள் போன்றோர் இதில் அடங்குவர். இன்னும் சிலர் அவரை சடங்குகளிலும், வழிபாடுகளிலும் சிறைபட்டவராகப் பார்க்கின்றனர். பெரும்பாலான மரபுக் கிறித்தவர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருசிலர் இயேசுவைத் தீவிர சமூகப் போராளியாகப் பார்க்கின்றனர். மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் இப்பிரிவில் உள்ளனர்.

இத்தகைய பார்வைகள் அனைத்துமே உண்மையைக் கொண்டுள்ளவை, ஆனால் குறைவானவை, முழுமையற்றவை என்பதை நாம் உணரவேண்டும். விவிலியம் காட்டும் இயேசு பன்முகத் தன்மை கொண்டவர். அவர் கடவுளின் மகனாகிய மெசியா, ஆனால் மனித இயல்பில் பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போன்றவர். நோயாளர்கள்மீது பரிவு கொண்டு, குணமாக்கியவர். ஆனால், தீமைகளைக் கண்டு சினந்து, சாட்டை எடுத்தவர். இத்தகைய முழுமையான, பன்முகத் தன்மை கொண்ட இயேசுவை நம் ஆண்டவராகவும், வழிகாட்டியாகவும், மீட்பராகவும் அறிக்கை இட்டு போற்றுவோம்.

மன்றாட்டு:

இயேசுவே, நீரே எங்கள் ஆண்டவர், நீரே இறைமகன், நீரே எங்கள் மீட்பர், நீரே வாழும் கடவுளின் மகன். உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும், சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுபவர்களாகவும் வாழ எங்களுக்கு அருள்தாரும்;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

இன்றைய புனிதர்2024-09-17ஆயர் இராபர்ட் பெல்லார்மின், மறைவல்லுநர் St. Robert Bellarmineபிறப்பு1542,தஸ்கனி(Tuscany), மோந்தே...
17/09/2024

இன்றைய புனிதர்

2024-09-17

ஆயர் இராபர்ட் பெல்லார்மின், மறைவல்லுநர் St. Robert Bellarmine

பிறப்பு
1542,
தஸ்கனி(Tuscany), மோந்தே புல்சியானோ(Monte Pulciano)



இறப்பு
17 செப்டம்பர் 1621,
உரோம் முத்திபேறுபட்டம்: 1923

புனிதர்பட்டம்: 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் தமது 18 ஆம் வயதில் உரோம் நகரிலிருந்த இயேசு சபையில் சேர்ந்தார். 1559 ஆம் ஆண்டு பெல்ஜிய நாட்டிற்கு கல்லூரி படிப்பிற்காக அனுப்பப்பட்டார். சிறந்த முறையில் கல்வி கற்றபின் மீண்டும் உரோம் திரும்பினார். அங்கிருந்த இயேசு சபையில் பணியாற்றி குருப்பட்டம் பெற்று, சிறந்த மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க திருச்சபையை பாதுகாக்கும் பொருட்டு, புகழ் பெற்ற விவாதங்களை நடத்தினார். பிறகு உரோமன் கல்லூரிகளில் இறையியல் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பல நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் இன்று ஏராளமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பின்னர் இவர் இயேசு சபையில் பல உயர்பதவிகளைப் பெற்று, அனைத்தையும் சிறப்பாக ஆற்றினார். திருத்தந்தை 8 ஆம் கிளமெண்ட் அவர்கள், இராபர்ட் பெல்லார்மினை கர்தினாலாக உயர்த்தினார். இவர் காப்புவா என்ற மறைமாவட்டத்தில் ஆயர் பொறுப்பையும் ஏற்றார். பிறகு 11 ஆம் சிங்கராயர் அவர்களால் உரோம் நகருக்கு சிறந்த ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றது. நாம் அதை முழுமையாக கடவுளின் மேன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்பதை இவர் அடிக்கடி கூறுவார். நீதியோடும், நேர்மையோடும் தன்னிடம் ஒப்படைத்த பணியை செய்தார். அக்காலத்தில் எழுந்த பல ஐயப்பாடுகளையும், தெளிவுப்படுத்தி, திருச்சபையின் வளர்ச்சிக்கு துணை நின்றார். திருச்சபையில் இருந்த மறைநூல் வல்லுநர்களில், இவரும் ஓர் சிறந்த மறைவல்லுநர் என்ற பெயரையும் பெற்றார்.

செபம்:

வரங்களை வாரி வழங்குபவரே எம் கடவுளே! திருச்சபையின் நம்பிக்கையை பாதுகாக்க புனித இராபர்ட் பெல்லார்மினை ஏற்படுத்தினீர். உமது வியத்தகு அறிவாற்றலையும், நீதியையும், நேர்மையையும் அவருக்குத் தந்தீர். அவருக்கு நீர் அளித்த கொடைகளை எமக்கும் அளித்து, எம் வழியாக உமது திருச்சபையை வளரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

• ஆயர் பாடூராட் Badurad

பிறப்பு:780, சாட்சன், Sachsen, Germanyஇறப்பு:862, பாடர்போன் Paderborn, ஜெர்மனி

• காம்போரோசா நகர் துறவி பிரான்ஸ் Franz von Camporosso

பிறப்பு:27 டிசம்பர் 1804, காம்போரோசா, இத்தாலிஇறப்பு:17 செப்டம்பர் 1866, ஜெனுவா Genua, இத்தாலிமுத்திபேறுபட்டம்:1929புனிதர்பட்டம்:1962, திருத்தந்தை 23 ஆம் ஜான்

• பிங்கன் துறவி ஹில்டகார்டு Hildegard von Bingen

பிறப்பு:1098, பெர்மர்ஸ்ஹைம் Bermersheim, ரைன்லாண்ட் ஃபால்ஸ், ஜெர்மனிஇறப்பு:17 செப்டம்பர் 1179, பிங்கன்பாதுகாவல்:இயற்கை வளம், புதிய மொழி கற்பவர்களுக்கு

• மறைசாட்சி ரெகின்பிரீட் Reginfried

பிறப்பு:7 ஆம் நூற்றாண்டு, பிரான்சுஇறப்பு:17 செப்டம்பர் 710, குரோயிக்ஸ் Croix, பிரான்சு

• மிஷினரி & பேராயர் உன்னி Unni

பிறப்பு:9 ஆம் நூற்றாண்டுஇறப்பு:17 செப்டம்பர் 936, பிர்கா Birka, சுவீடன்

Daily Saints. - September 2024September 17: വിശുദ്ധ റോബർട്ട് ബെല്ലാർമിൻഅസ്സീസ്സിയിലെ പൊവറെല്ലോയുടെ ഓര്‍മ്മ തിരുന്നാൾ ദിന...
17/09/2024

Daily Saints. - September 2024

September 17: വിശുദ്ധ റോബർട്ട് ബെല്ലാർമിൻ

അസ്സീസ്സിയിലെ പൊവറെല്ലോയുടെ ഓര്‍മ്മ തിരുന്നാൾ ദിനമായ ഒക്ടോബർ 4-നാണ്‌ ഈ വിശുദ്ധൻ ജനിച്ചത്. ഇക്കാരണത്താല്‍ തന്നെ ഇദ്ദേഹം വിശുദ്ധ പൊവറെല്ലോയോട് ഒരു പ്രത്യേക ഭക്തി എന്നും പുലർത്തിയിരുന്നു. 1560-ലാണ്‌ റോബർട്ട് ബെല്ലാർമിൻ Society of Jesus എന്ന സഭയില്‍ ചേർന്നത്. ഈ സഭാ വിഭാഗത്തിലെ മഹാന്മാരിൽ ഒരാളായും, പാണ്ഡിത്യത്തിലും, ഭക്തിയിലും, എളിമയിലും, ലാളിത്തത്തിലും പ്രഗല്‍ഭനായിട്ടുമാണ്‌ ഇദ്ദേഹം കണക്കാക്കപ്പെട്ടിരുന്നത്. ഇദ്ദേഹത്തിന്റെ നീണ്ട ജീവിതകാലത്തെ വിവിധ പ്രവർത്തനങ്ങളും നേട്ടങ്ങളും, ഒരൊറ്റ വാചകത്തിൽ ചുരുക്കി പറയാൻ സാധ്യമല്ല.

യുവാക്കളായിരുന്ന അലോഷ്യസിന്റേയും ജോൺ ബർക്ക്മാൻസിന്റേയും കുമ്പസാര പിതാവായി ഇദ്ദേഹം പ്രവർത്തിച്ചു. ഇദ്ദേഹത്തെ വാഴ്ത്തപ്പെട്ടവനായും വിശുദ്ധനായും പ്രഖ്യാപിക്കുന്നതിന്‌ എന്തിനാണ്‌ 300 വർഷം എടുത്തതെന്ന് ചോദിച്ചേക്കാം. ഇതിനുത്തരം നേരത്തെ തന്നെ ബിഷപ്പ് ഹെഫെലെ നൽകിയിട്ടുണ്ട്.

"വിശുദ്ധനാക്കപ്പെട്ടില്ലങ്കിലും, കത്തോലിക്കരുടെ അത്യുന്നത ബഹുമാനത്തിന് ബല്ലാർമിൻ അർഹനായിട്ടുണ്ട്. ഇദ്ദേഹത്തെ കളങ്കപ്പെടുത്തുവാൻ ശ്രമിച്ചവർ, ഒരു സ്മാരക സ്തൂപം പണിതുയർത്തി സ്വയം അപഹാസ്യരായിത്തീരുകയാണുണ്ടായത്". 1923-ൽ ഇദ്ദേഹം വാഴ്ത്തപ്പെട്ടവനാക്കപ്പെട്ടു; 1930-ൽ വിശുദ്ധനായി പ്രഖ്യാപിക്കപ്പെടുകയും ചെയ്തു. 1931 സെപ്റ്റംബർ 17-ന്‌ പോപ്പ് പിയൂസ് പതിനൊന്നാമൻ ഇദ്ദേഹത്തിന്‌ 'Doctor of the church' എന്ന ബഹുമതി നൽകി.

ഇതര വിശുദ്ധര്‍

1.ഫ്രീജിയന്‍ രാജകുമാരന്‍റെ അടിമയായിരുന്ന അരിയാഡ്നെ.

2. കോര്‍ഡോവായിലെ കൊളുമ്പ

3. റോമായിലെ നാര്‍സിസ്റ്റൂസും ക്രെഷന്‍സിയോയും

4. ഔട്ടൂണില്‍ വച്ചു വധിക്കപ്പെട്ട ഫ്ലോച്ചെല്ലൂസ്

5. വലെരിയനും മാക്രിനൂസും ഗോര്‍ഡിയാനും

6. ജര്‍മ്മനിയിലെ ജസ്റ്റിന്

Address

Siluvaipuram, Kollamcode
Parassala
629160

Opening Hours

Monday 6am - 6pm
Tuesday 6am - 6pm
Wednesday 6am - 6pm
Thursday 6am - 6pm
Friday 6am - 6pm
Saturday 6am - 6pm
Sunday 6am - 6pm

Telephone

+919947514574

Website

Alerts

Be the first to know and let us send you an email when St John Of The Cross Church Siluvaipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St John Of The Cross Church Siluvaipuram:

Share