ஸ்ரீ கல்கி சேவா அறக்கட்டளை, பரமக்குடி

  • Home
  • India
  • Paramakudi
  • ஸ்ரீ கல்கி சேவா அறக்கட்டளை, பரமக்குடி

ஸ்ரீ கல்கி சேவா அறக்கட்டளை, பரமக்குடி தத்வமஸி -அது நீயாகின்றாய்
என்றும் இற?

02/04/2021
27/04/2018
30/01/2018

ஸ்ரீகல்கி சேவா அறக்கட்டளையின் தை மாத பௌர்ணமி வழிபாடு இன்று (30 1.2018) இரவு நடைபெறுகிறது அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு: ஸ்ரீகல்கி பெளர்ணமி வழிபாட்டு குழு மற்றும் ஸ்ரீகல்கி சேவா அறக்கட்டளை இடம்: ஸ்ரீ சக்தி குமரன் செந்தில் ஆலயம், முத்தாலம்மன் கோவில் படித்துறை,பரமக்குடி

30/01/2018

ஸ்ரீகல்கி சேவா அறக்கட்டளையின் தை மாத பௌர்ணமி வழிபாடு இன்று (30 1.2018) இரவு நடைபெறுகிறது அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இபப்படிக்கு: ஸ்ரீகல்கி பெளர்ணமி வழிபாட்டு குழு மற்றும் ஸ்ரீகல்கி சேவா அறக்கட்டளை

ஸ்ரீ க்ராத சாஸ்தா அஷ்டோத்ர ஸத நாமாவளி :1) ஓம் கிராதாத்மனே நமஹ2) ஓம் ஸிவாய நமஹ3) ஓம் ஸாந்தாய நமஹ4) ஓம் ஸிவாத்மனே நமஹ5) ஓம...
25/01/2018

ஸ்ரீ க்ராத சாஸ்தா அஷ்டோத்ர ஸத நாமாவளி :

1) ஓம் கிராதாத்மனே நமஹ

2) ஓம் ஸிவாய நமஹ

3) ஓம் ஸாந்தாய நமஹ

4) ஓம் ஸிவாத்மனே நமஹ

5) ஓம் ஸிவானந்தனாய நமஹ

6) ஓம் புராண புருஷாய நமஹ

7) ஓம் தன்வினே நமஹ

8) ஓம் புருஹூதஸஹாயக்ருதே நமஹ

9) ஓம் நீலாம்பராய நமஹ

10) ஓம் மஹாபாஹவே நமஹ

11) ஓம் வீர்யவதே நமஹ

12) ஓம் விஜயப்ரதாய நமஹ

13) ஓம் விதுமௌலயே நமஹ

14) ஓம் விராடாத்மனே நமஹ

15) ஓம் வீர்யமோஹனாய நமஹ

16) ஓம் விஸ்வாத்மனே நமஹ

17) ஓம் வரதாய நமஹ

18) ஓம் வாமதேவாய நமஹ

19) ஓம் வாஸுதேவ ப்ரியாய நமஹ

20) ஓம் விபவே நமஹ

21) ஓம் கேயூரவதே நமஹ

22) ஓம் பிஞ்சமௌலயே நமஹ

23) ஓம் பிங்கலாக்ஷாய நமஹ

24) ஓம் க்ருபாணவதே நமஹ

25) ஓம் ஸாஸ்வதாய நமஹ

26) ஓம் ஸர கோதண்டினே நமஹ

27) ஓம் ஸரணாகத வத்ஸலாய நமஹ

28) ஓம் ஸ்யாமாலங்காய நமஹ

29) ஓம் ஸரதீமதே நமஹ

30) ஓம் ஸரதிந்து நிபாநனாய நமஹ

31) ஓம் பீன கண்டாய நமஹ

32) ஓம் வ்ரூபாக்ஷாய நமஹ

33) ஓம் க்ஷூத்ரக்னே நமஹ

34) ஓம் க்ஷுரிகாயுதாய நமஹ

35) ஓம் தராதரவபுக்ஷே நமஹ

36) ஓம் தீமதே நமஹ

37) ஓம் ஸத்ய ஸந்தாய நமஹ

38) ஓம் ப்ரதாபவதே நமஹ

39) ஓம் கைராதபதயே நமஹ

40) ஓம் ஆகேட ப்ரியாய நமஹ

41) ஓம் ப்ரீதி ப்ரியாய நமஹ

42) ஓம் ப்ரபவே நமஹ

43) ஓம் ரேணுகாத்மஜ ஸ்ரீ ராம சித்த பத்மாலயாய நமஹ

44) ஓம் பலினே நமஹ

45) ஓம் வ்யாத ரூபதராய நமஹ

46) ஓம் வ்யாதி நாஸனாய நமஹ

47) ஓம் கால ஸாஸநாய நமஹ

48) ஓம் காமதேவ ஸமாய நமஹ

49) ஓம் தேவாய நமஹ

50) ஓம் காமிதார்த்தஃபல ப்ரதாய நமஹ

51) ஓம் அப்ருதாய நமஹ

52) ஓம் ஸ்வப்ருதாய நமஹ

53) ஓம் தீராய நமஹ

54) ஓம் ஸாராய நமஹ

55) ஓம் ஸாத்விக ஸத்தமாய நமஹ

56) ஓம் ஸாமவேத ப்ரியாய நமஹ

57) ஓம் வேதஸே நமஹ

58) ஓம் வேதாய நமஹ

59) ஓம் வேத விதாம்வராய நமஹ

60) ஓம் த்ர்யக்ஷராத்மநே நமஹ

61) ஓம் த்ரிலோகேஸாய நமஹ

62) ஓம் த்ரிஸ்வராத்மனே நமஹ

63) ஓம் த்ரிலோசனாய நமஹ

64) ஓம் த்ரிகுணாத்மனே நமஹ

65) ஓம் த்ரிகாலஜ்ஞாய நமஹ

66) ஓம் த்ரிமூர்த்யாத்மனே நமஹ

67) ஓம் த்ரிவர்கதாய நமஹ

68) ஓம் பார்வதீ நந்தனாய நமஹ

69) ஓம் ஸ்ரீமதே நமஹ

70) ஓம் பாவநாய நமஹ

71) ஓம் பாபநாஸாய நமஹ

72) ஓம் பாராவாரக பீராத்மனே நமஹ

73) ஓம் பரமாத்மனே நமஹ

74) ஓம் பராத்பராய நமஹ

75) ஓம் கீத ப்ரியாய நமஹ

76) ஓம் கீத கீர்த்தயே நமஹ

77) ஓம் கார்த்திஹேய ஸோதராய நமஹ

78) ஓம் காருண்ய ஸாகராய நமஹ

79) ஓம் ஹம்ஸாய நமஹ

80) ஓம் ஸித்தாய நமஹ

81) ஓம் ஸிம்ஹ பராக்ரமாய நமஹ

82) ஓம் ஸுஸ்லோகாய நமஹ

83) ஓம் ஸுமுகாய நமஹ

84) ஓம் வீராய நமஹ

85) ஓம் ஸுந்தராய நமஹ

86) ஓம் ஸுவந்திதாய நமஹ

87) ஓம் ஸுரவைரி குலத்வம்ஸிநே நமஹ

88) ஓம் ஸ்தூலச்மச்ருவே நமஹ

89) ஓம் அமித்ரக்நே நமஹ

90) ஓம் அம்ருதாய நமஹ

91) ஓம் ஸர்வகாய நமஹ

92) ஓம் ஸூக்ஷ்மாய நமஹ

93) ஓம் ஸ்தூலாய நமஹ

94) ஓம் துரஹ வாஹனாய நமஹ

95) ஓம் அமலாய நமஹ

96) ஓம் விமலாய நமஹ

97) ஓம் தக்ஷாய நமஹ

98) ஓம் வஸுமதே நமஹ

99) ஓம் வனகாய நமஹ

100) ஓம் குரவே நமஹ

101) ஓம் ஸர்வ ப்ரியாய நமஹ

102) ஓம் ஸர்வ ஸாக்ஷிணே நமஹ

103) ஓம் ஸர்வ யோகீஸ்வரேஸ்வராய நமஹ

104) ஓம் தாரக ப்ரஹ்ம ரூபிணே நமஹ

105) ஓம் ஸந்த்ரகாவி ஸதஸ்மிதாய நமஹ

106) ஓம் கிராதவபுஷே நமஹ

107) ஓம் ஆரண்ய ஸஞ்சாரிணே நமஹ

108) ஓம் பரமேஸ்வராய நமஹ

- இதி கிராதசாஸ்த்ரு அஷ்டோத்ர ஸதநாமாவளி ஸம்பூர்ணம் -

வேட்டைக்கொரு மகனே சரணம் ஐயப்பா

Mayakalki photography in புகைப்படவிருந்து பாலமேடு ஜல்லிக்கட்டு
17/01/2018

Mayakalki photography in புகைப்படவிருந்து பாலமேடு ஜல்லிக்கட்டு

ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி?பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண...
14/01/2018

ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி?

பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத்

துர்நிமித்தங்கள் பல தோன்றின.புழுதிக் காற்று உலகை யே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது.விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந் தன. சூரியன் ஒளிக் குன்றியவனாய்த் தெரிந்தான். எங்கும் குழப்பமும், அச்ச முமாய் இருந்தது.ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட விருஷ்ணிகளின் வீழ்ச்சி நெருங்கி விட்டது.

ஒரு சமயம் விஸ்வாமித்திரரும்,கண்வரும்,நாரதரும் துவாரகைக்கு வந்தனர். விருந்தினராக வந்த அந்த முனிவர்களைப் பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித் திருக்க வேண்டும்.ஆனால் ஆணவம் தலைக்கேறிய விருஷ்ணிகள் அலட்சிய மாக அம்முனிவர்களிடம் நடந்துக் கொண்டனர்.கேலியும், கிண்டலுமாய் அவர் களிடம் பேசினர்.ஓர் ஆடவனுக்கு அழகிய வேடமிட்டு, அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்று ‘இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?’ எனக் கேட்டு நகைத்தனர்.

கந்தல் துணிகளையும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்து மூட்டையாக வயிற் றில் கட்டிக் கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி அளித்த ஆடவனைக் கண்ட அவர்க ள் சினம் கொண்டனர்.’இவன் ஒரு இரும்பு உலக்கையைப் பெற்றெடுப்பான். அந் த உலக்கையால் கண்ணனும், பலராமனும் தவிர விருஷ்ணி குலம் முழுதும் நாசம் அடையும்’ எனச் சாபம் இட்டனர்.முனிவர்களின் சாபத்தைக் கேட்ட விருஷ்ணிகள் பயந்து ஓடோடிச் சென்று பலராமனிடமும், கண்ணனிடமும் நடந்ததை கூறினர்.

இரும்புத்துண்டை நன்றாகத் தூள் தூளாக்கிக் கடலில் போடுமாறு பலராமன் அவர்களுக்கு ஆலோசனைக் கூறினார்.விருஷ்ணி இளைஞர்களும் அப்படியேச் செய்தனர்.தங்களுக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியதாக நினைத்தனர்.ஆனால் கண்ணனின் மனநிலை வேறாக இருந்தது.முன்னொரு சமயம் மக்களை பறி கொடுத்த காந்தாரி தமக்கு இட்ட சாபத்தை நினைத்தார்.’நீ நினைத்திருந்தால் குருகுல நாசத்தைத் தடுத்திருக்கலாம்.ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. எனவே குருவம்சம் அழிந்தது போல உன் விருஷ்ணி வம்சமும் அழியட்டும்’ என்று அவள் இட்ட சாபத்தை எண்ணி தமது விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.

கண்ணன் வர இருக்கும் ஆபத்தை மாற்ற விரும்பவில்லை.காலத்தின் இயல்பு அது.விருஷ்ணிகளின் ஒழுக்கக்கேடு வரம்பு மீறிச் சென்றது. ஆணவமும், ஆட ம்பரமும் அளவு கடந்து சென்றன.பலராமனையும், கண்ணனையும் தவிர மற்ற எல்லாரையும் அவர்கள் அவமானப் படுத்தினர்.ஐம்புல இன்பங்களில் எல்லை மீறிச் சென்றனர்.குறிப்பாகக் காமக் களியாட்டத்தில் பெரிதும் ஈடுபட்டனர். கண வன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்தனர்.

சாபம் பலிக்கும் காலம் வந்து விட்டது.கடலுக்குள் போடப்பட்ட இரும்புத் தூள்க ள் கரையோரத்தில் ஒதுங்கி நாணல்களாக வளர்ந்திருந்தன.குடித்து விட்டுக் கேளிக்கைகளில் ஈடுபட்ட விருஷ்ணிகள் அக்குடிவெறியில் ஒருவரோடு ஒரு வர் சர்ச்சையில் ஈடுபட்டனர்.ஒருவரை ஒருவர் அடிக்கத் தொடங்கினர். கடற் கரையில் வளர்ந்திருந்த நாணல்கள் அனைத்தும் முனிவர்கள் இட்ட சாபத்தால் உலக்கைகளாக மாறியிருந்தன.விருஷ்ணிகள் உலக்கையால் ஒருவரை ஒரு வர் அடித்துக் கொண்டனர்.தந்தையென்றும்,மகன் என்றும் உறவு என்றும் பாரா து கடுமையாக இரும்பு உலக்கையால் அடித்துக் கொண்டு மாண்டனர்.

காலத்தின் போக்கை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணன். மண் ணுலகில் தன் வேலை முடிந்து விட்டது என எண்ணினார். பலராமன் தன் உடலை ஒழித்து விட்டுப் பரத்தில் ஐக்கியமானார். கண்ணனும் தன் உடலை மாய்க்கக் கருதினார்.காந்தாரி முன்னர் இட்ட சாபத்தை நினைத்துப் பார்த்தார். இப்போது தமது உத்தம உலகை அடையும் நேரம் வந்துவிட்டது என உணர் ந்தார்.கண்ணன் ஐம்புலன்களையும் அடக்கி யோக நித்திரையில் ஆழ்ந்தார். அதனை உணராது ஏதோ விலங்கு என எண்ணி ஜரன் என்னும் வீரன் அம்பை எய்தினான்.கூரிய முனையை உடைய அந்த அம்பு கண்ணனின் இகலோக வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது.முனிவர்கள் தொழ..ஜோதி உலகு எங்கும் பரவி ஆகாயம் நோக்கிச் செல்ல தம் உலகை அடைந்தார் கண்ணன். அவரை அங்கு இந்திரனும்,அஸ்வினி தேவர்களும், ருத்ரர்களும், வசுக்களும், சித்தர்களும்,முனிவர்களும் தாழ்ந்து பணிந்து வரவேற்றனர்.

தாருகன் அஸ்தினாபுரம் சென்று விருஷ்ணிகளும், போஜர்களும், அந்தகர்க ளும் மாண்ட செய்தியை தெரிவித்தான்.உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித் துக் கொண்டு இறந்தனர் என்ற செய்தி அறிந்து அஸ்தினாபுரம் திடுக்கிட்டது. கண்ணனைக் காணலாம் என்று வந்த அர்ச்சுனன் ஏமாற்றம் அடைந்தான். அவன் அங்கு வரும் முன் பரமாத்மா தனது உலகமான பரலோகத்தை அடைந்து விட்டார்.துவாரகை மயான பூமியாய் காட்சி அளித்தது.

கண்ணன் இல்லாத துவாரகையையும், கணவனை இழந்து துடிக்கும் பெண்க ளையும் கண்ட அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான்.பார்த்தனைப் பார்த்த ருக்மணி யும் சத்யபாமாவும் ‘ஓ’வென கதறி அழுதனர்.மயங்கி வீழ்ந்தவன் மயக்கம் தெளிந்ததும் யாவரும் ஒன்றும் பேசாது மௌனமாக நின்றனர்.அவர்கள் அனை வருக்கும் ஆறுதல் கூறிய அர்ச்சுனன் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்.பலராமர்,கண்ணன் ஆகியோர் சடலங் களைக் கண்டெடுத்து எரியூட்டி ஈமச் சடங்குகளை முறையாக செய்து முடித்தான்.

திரு ரோஸ் பீட்டர் என்பவர் மதுரைக்கு 1812 முதல் 1828 வரை கலெக்டராக இருந்தார். மக்கள் மீனாட்சியை வழிபடுவது கண்டு அவருக்கு ...
10/01/2018

திரு ரோஸ் பீட்டர் என்பவர் மதுரைக்கு 1812 முதல் 1828 வரை கலெக்டராக இருந்தார். மக்கள் மீனாட்சியை வழிபடுவது கண்டு அவருக்கு ஆச்சரியம். ஆனால் அவருக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.
இருந்தாலும் அவருக்கு அம்பிகை மீனாக்ஷி மீது அளவு கடந்த மரியாதை. இவ்வளவு மக்கள் வழிபடும் அந்த மீனாக்ஷி பற்றி சிந்தனை அதிகம். ஒரு சமயம் பெரும் மழை இடி எடுத்துக்கொண்டிருக்கும் போது இரவு வேளையில் அந்த கலெக்டர் தன் "கலெக்டர் மாளிகை" (தற்போதும் உள்ளது) விட்டு தனியே தூக்கத்தில் வெளியே சென்றார்.
காவலர்களுக்கு கலக்கம். ஆனால் எதிர்பாராத படி அவர் இருந்த அறை மீது பெரும் இடி விழுந்து சேதமாகிவிட்டது. அப்போதுதான் கலெக்டருக்கு சுய நினைவு வந்தது. ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல் விழித்துக் கொண்டிருந்த அவரிடம் அவர் உதவியாளர்கள் கேட்டபோது,
ஒரு இளம் பெண் -- நான் கனவில் பார்த்துக் கொண்டிருந்த அந்த மீனாட்சிபோல், நகைகள் போட்டுக்கொண்டு, என்னை முன்னே அழைத்துச்செல்ல நானும் அந்த தெய்வ உருவத்தின் பின் சென்றேன் என்றார். அது தான் மனசால் வணங்கிய அம்பிகை மீனாட்சிதான் என்று உணர்ந்தார்.
தன்னை காப்பாத்திய அந்த அம்பிகைக்கு ஏதாவது ஒரு காணிக்கை செய்ய விரும்பி, கோவில் நிர்வாகத்தினரிடம், அம்பிகைக்கு இல்லாத ஒரு ஆபரணம் சொல்லுங்கள் அதை நான் காணிக்கையாக தர விரும்புகிறேன் என்றார். அவர்களும், அம்பிகைக்கு ஒரு காலணி தாருங்கள் என்றனர்.
கலெக்டர் தங்கத்தால் இரண்டு காலனி செய்து, அதில் 412 பவளங்களும், 72 மரகதக் கற்கள் - 80 வைரக்கற்கள் பொருத்தி - அதில் ""பீட்டர்"" என்று பதித்து காணிக்கையாக கொடுத்தார். இந்த காலனி இன்றும் ""சித்திரைத்திருவிழா"" காலத்தில் அணிவிக்கிறார்கள்.

மார்கழி அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால், அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவத...
09/01/2018

மார்கழி அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால், அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்....

Waiting for this day
24/12/2017

Waiting for this day

Address

முத்தாலம்மன் கோவில் தெரு
Paramakudi
623707

Telephone

8883377221

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ கல்கி சேவா அறக்கட்டளை, பரமக்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ கல்கி சேவா அறக்கட்டளை, பரமக்குடி:

Share