17/05/2026
நமது வாழையடி தூய திரித்துவ ஆலயத்தின் 38வது அசன பண்டிகை சிறப்பாக நடைபெற துணைநின்ற தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.
“தேவகிருபை நினைவு” ஆலய பணியாளர் இல்லத் திறப்புவிழாவும், அசன வைபவமும் சிறப்பாக நடைபெறவும், காலநிலை சாதகமாக அமையவும் நாம் ஜெபித்திருந்தோம்.
நாம் நினைத்ததைவிட பலமடங்கு ஆசீர்வாதமாகவும் எழுச்சியுடனும் அனைத்தையும் நடத்தித் தந்த எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமையும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக.
இந்த வருடம் அசன விழா நடைபெறக் கூடாது என பல தடைகளும் சவால்களும் ஏற்பட்டபோதிலும், தேவனுடைய கிருபையால் அனைத்தையும் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிக்கச் செய்தார். அதற்காக தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.
இந்த விழாவிற்காக அதிகமாக ஜெபித்து, உழைத்து, நன்கொடைகள் வழங்கி, பல்வேறு வழிகளில் உதவி செய்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த அசன பண்டிகை சிறப்பாக நடைபெற முக்கிய காரணமாக இருந்த
சேகர தலைவர் Rev. ஏசுவடியான் துரைசாமி ஐயா அவர்களுக்கும்,
அசன கமிட்டி நிர்வாகிகளுக்கும்,
முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய சபையார்களுக்கும்
எங்கள் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் மிகுதியாக ஆசீர்வதிப்பாராக.