அழகியகவுணடம்பாளையம் ஸ்ரீமாரியம்மன்கோவில்

  • Home
  • India
  • Namakkal
  • அழகியகவுணடம்பாளையம் ஸ்ரீமாரியம்மன்கோவில்

அழகியகவுணடம்பாளையம் ஸ்ரீமாரியம்மன்கோவில் அழகியகவுணடம்பாளையம் ஸ்ரீமாரியம்மன்

பௌர்ணமி பூஜை அன்று
26/09/2021

பௌர்ணமி பூஜை அன்று

15/06/2018
08/02/2016

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்.

உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.

இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.

அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.

ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.

னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.

அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.

இனிமேல், இடி இடித்தால் அர்ஜுனா கோஷம், இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்! சரியா!

08/02/2016

எப்பொழுதும் நம் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் பொழுது பரவசத்துடன் செல்கிறோம். ஆனாலும் சில நெருடல்களும் உண்டாகுகின்றன. நாம் விரும்பி பூசாரிகளுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகளை வழங்குவது போய் இன்று அது கட்டாயம் என்ற அளவில் உள்ளது பல அர்ச்சனைகளுக்கு, பூஜைகளுக்கு. அதுவும் பேரம் பேசுகின்ற சூழல் மிகவும் துரதிர்சடவசமானது.

08/02/2016

கொங்கு நாடு : ”குலங்கள்” வரலாறு.. புராணம்:
வீராட்சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் அவர்கள் வேளாளபுராணம் என்னும் நூலை மிகவும் அழகிய கவிதைகளால் பெருங்காவியமாகப் பாடினார். அதில் வேளாளர் தோற்றம் பற்றி புராண ஜதீகங்களுடன் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அந்நூலை அழகிய உரைநடை வடிவில் கோவை விளாங்குறிச்சி நா. மருதாசலக் கவுண்டர் அவர்கள் ஆக்கியளித்துள்ளார்கள். அதில் கீழ்வருமாறு வேளாளர் தோற்றம் கூறப்படுகிறது. கைலாசத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும்போது நான் முகன் உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட வசதிகளை மக்௧ள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வில்லையே என்று முறையிட்டார். சிவபெருமான் நான் முகனிடம் திருமாலைச் சென்று பார்க்குமாறு பணித்தார். திருமாலிடம் நான்முகன் முறையிடும்போது போதாயன முனிவர் வந்தார். போதாயன முனிவரை அறிமுகப்படுத்தி அவரையே வேண்டிய ஏற்பாடு செய்யுமாறு திருமால் வேண்டினார். உண்ணத் தெரியாமல், உணவைப் படைக்கத் தெரியாமல் இருந்த உலகுக்குக் கங்கைத்தாயின் அருகேயுள்ள திருவேணி சங்கமத்திலிருந்து ஒரு மரபாளனை உற்பத்தி செய்து அவனுக்குச் சகல செய்திகளையும் கற்பிக்குமாறு போதாயனருக்குத் திருமால் ஆணையிட்டார். கங்கா தேவியின் சன்னிதானத்தில் மரபாளனைப் பெற்றுத் தன்னோடு இந்திரலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று போதாயன முனிவர் வேண்டினார். தான் பெற்ற மரபாளனை இரு கைகளாலும் பரிந்து எடுத்து உச்சிமோந்து ஆனந்த முத்தங்கள் தந்து பொன்னுலகு சென்று சிறப்பெல்லாம் பெற்றுப் போதாயனருடன் மண்ணுலகு செல்க மகனே என்று கங்காதேவி அனுப்பி வைத்தாள். இந்திரன் எல்லா இன்பங்களையும் குறைவறப் பெற்றிடுக என வாழ்த்தினான். இந்திரன் மரபாளனைச் சரியாசனத்தில் இருக்கச் செய்து பார் முழுதும் ஏர் முனையைத்தான் நம்பியுள்ளது.சகல பிணிகளிலும் தலையான பசிப்பிணியை தீர்க்க ௨ழவுவைத்தியத்தைத் தவிர வேறு உண்டோ? உழவுத் தொழில் இல்லாமல் உலகில் என்னதான் நடக்கும் இதற்கு இணையான தொழில் ஏதுமில்லை என்றான். இந்திரன், குபேரன் இவர்கள் பெண்மக்களை மணந்த மரபாளன் (வேளாளன்) பூமிக்கு வந்து பயிர்த்தொழில் செய்ய முற்பட்டான். கங்கையின் அருளால் தோன்றியமையால் வேளாளர் கங்கா குலத்தினர் என அழைக்கப்பட்டனர்.
பட்டயம்:
அவ்வாறு தோன்றிய வேளாளர்கள் தொண்டை நாட்டிலிருந்து சோழநாடு வழியாகக் கொங்கு நாட்டில் குடியேறினார்கள் என்பதைப் பட்டயங்கள் பல கூறுகின்றன. பெரிய குலத்துத் தலைவர்கள் வேணாடுடையார் பட்டயம் கீழ்வருமாறு கூறுகிறது. பகிறிச் சோழன் ராசாவின் மகள் தனக்குச் சீதனம் கொடுத்த படியினாலேயே சேரமான் பெருமான் கொங்கு மண்டலத்துக்கு கொங்கு வேளாளார் என்று பெயரும் கொடுத்துப் பிடாரன் வேணுடையானுக்குப் பட்டாபிஷேகமும் சூட்டி எண்ணாயிரம் கோத்திரத்துக்குப் பெரிய கோத்திரம் எண்ணாயிரம் வீட்டுக்கும் பெரிய வீடு என்று கொங்கு மண்டலத்துக்கு அழைத்து வந்ததன் பேரில் இருளுறைந்த காண்டாவனம் எல்லாம் வெட்டிக் கிராமம் உண்டுபண்ணினான் என்பது பட்டயப்பகுதியாகும்.
1. அந்துவன்
2. அஷரியன்
3. அக்கினி
4. அனகன்
5. அழகன்
6. ஆதி
7. ஆடை
8. ஆவன்
9. ஆந்தை
10. ஆதினை
11. ஆதித்தேயன்
12. இந்திரன்
13. உவணன்
14. உழுவர்
15. உறுகலன்
16. எண்ணெடுய்
17. ஒழுக்கன்
18. ஒதியன்
19. கண்ணந்தை
20. கருங்கண்ணன்
21. காளன்
22. கவுரி
23. கம்பன்
24. கரிஞ்சி
25. கட்செவியன்
26. கிள்ளியன்
27. கும்பன்
28. கொண்புரங்கி
29. கோதர்
30. குழாயர்
31. கோரவந்தல்
32. காரி
33. கணவாளன்
34. கோரக்சன்
35. குண்டரி
36. குணக்கர்
37. குணியன்
38. குண்டாலி
39. கூரை
40. கீரை
41. குயிலர்
42. குங்கரி
43. கூறுபன்
44. கோதனு
45. சங்கர்
46. செங்பூத்தான்
47. சாத்தந்தை
48. செம்பூபொன்
49. செங்கன்னி50. சேகர்
51. சேரன்
52. சிலம்பன்
53. செல்வன்
54. சேடன்
55. சேரலன்
56. சூரியன்
57. சூலன்
58. சோதி
59. சன்
60. சவுறியன்
61. சோமன்
62. கூறுபன்
63. செவழன்
64. சாத்துவராயன்
65. சனகன்
66. தூரன்
67. தேவேந்திரன்
68. தோடை
69. தழிஞ்சி
70. தேமான்
71. தனவந்தன்
72. தக்கவ
73. நாரை
74. நச்சந்விழ
75. நிலன்
76. நந்தர்
77. நிருகை
78. பூசர்
79. பருகுவி
80. புத்தன்
81. பொடியன்
82. பூச்சந்தை
83. பதரி
84. பவமன்
85. பிறழாந்தை
86. பனையன்
87. பூந்தாரன்
88. பாண்டியர்
89. பயிரன்
90. பரமன்
91. பங்சமன்
92. பூதியன்
93. பிரமன்
94. பாலியன்
95. பாம்பன்
96. பொன்னர்
97. பாவலர்
98. பண்ணை99. பெருங்குடி
100. மாயவா
101. மாடை
102. மணியன்
103. முத்தன்
104. மூலன்
105. மாதங்கன்
106. மொய்மன்
107. முழுக்காதன்
108. முவர்
109. வாச்சர்
110. வேந்தன்
111. விளியன்
112. வெளையன்
113. வாணவர்
114. பிரவுளன்
115. விரதன்
116. விலோசணன்
117. வீரன்
118. வொளம்பர்
119. காடர்
120. கோவர்
121. பொருர்விழ
122. செங்கண்ணன்
123. வண்ணக்கன்
124. வில்லி
125. விவிழி
126. மேதி
127. நேரியன்
128. மீனவன்
129. வெண்டுவன்
130. மாதுரி
131. பைகரி
132. பழஅழகர்
133. துந்துமன்
134. கர்டன்
135. கொட்டாரம்
136. பனங்காடை
137. புண்ணை
138. சுரபி
139. வேணியன்
140. நெஸ்தலி
141. முனையன்
142. நெய்தல்
கொங்குவேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 142 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ஆம் நுற்றாண்டுக்குரியது. இதில் 142 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம்.

08/02/2016

பண்டைய காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

08/02/2016

தியானத்தின் நன்மைகள்
விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். உடளவில் ஏற்படும் நன்மைகள் :.. 1) தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்பு குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2) (Blood pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3) எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
4) உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்து பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5) உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6) ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகின்றன.
இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:
1) மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.
2) மூலையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.
3) "As a man thinketh, so he becomes it," "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்த வெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.
4) விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave -க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
நன்றி : வேதாத்திரி மகரிஷி

08/02/2016

வாழ்க்கை சிக்கல்களை போக்க மனவளக்கலை
வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்த மனப்போராட்டம்.சமுதாய கூட்டமைப்பில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களிலும் வேறு பலரும் பின்னப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஒருவன் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்து விட்டாலும் அவனோடு பின்னபட்டிருந்தவர்களிடம் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும்....
சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது . அப்படி அமைத்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக் கொண்டு தவிக்கும் வரையிலேந்த மனிதனும் சும்மாயிருக்க மாட்டான். தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதி விலக்கு .
சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். இதையெல்லாம் நம் மனந்தான் செய்தாக வேண்டும்.
தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனத்தின் தரத்தையும் , மனத்தின் திறத்தையும் - அதாவது மனத்தின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.அதற்கு மனவளக்கலை பயிற்சி அளிக்கின்றது .
தன்னிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம் , கடமை, ஈகை என்கின்ற அறநெறி காத்துவாழும் ஒரு தேர்ந்த மனவளக்கலைஞனுக்கு -குண்டலினியோகிக்கு சிக்கல்களை தானாகவே தீர்த்துக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். சிக்கல்கள் வரவே வராது.

08/02/2016

நமது வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும்
நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவும் கெட்டதாகவும் அமைகிறது. நமது மனதில் நல்ல எண்ணங்களும் உண்டாகும். சில சமயங்களில் கெட்ட எண்ணங்களும் உண்டாகும்.
இந்த இரண்டு எண்ணங்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ நாம்தான் காரணகர்த்தாவாகிறோம். நாம் வெளிப்படையாகச் சொல்லும் ஆசைகள் நல்லெண்ணங்களாக உருவெடுக்கிறது. நாம் ரகசியமாக மனதில் வைத்துக்கொள்ளும் கெட்ட ஆசைகள் தீய எண்ணங்களாக வடிவெடுக்கின்றன. இரவு வந்துவிட்டால் நாம் இருட்டிவிட்டதே என்று கவலைப்படுவதில்லை. ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் போதும் இருள் தானாகவே அகன்று விடும். அதேபோன்று நல்லெண்ணங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்துப் பழகினால் தீயவை தானாகவே மறைந்து விடும்.
எது நல்லது? எது கெட்டது? தாம் அதன் மூலமாக பெறுகின்ற உணர்ச்சியைப் பொறுத்து தான் அது அமைகிறது. என்னிடம் தோன்றும் எண்ணம் என்னைப் பற்றிய தற்பெருமையை, பிறரிடம் பொறாமையை, என்னுடைய சுயநலத்தைத் தூண்டி விட்டால் அவை கெட்டவை. என்னிடம் ஏற்படும் எண்ணங்கள் பிறருடைய நன்மைக்காகச் சேவை செய்யும்படி, என்னை எளியவனாக நினைக்க உதவும்படி, என்னுடைய செயலினால் எவருக்கும் கெடுதல் ஏற்படாதபடி அமையுமானால் அவை நல்லவையாகும்.
இறை அருளினால் நல்ல எண்ணங்களை முடிந்தவரை வளர்த்து கொள்வோமாக.

Address

Namakkal
637212

Telephone

8015743239

Website

Alerts

Be the first to know and let us send you an email when அழகியகவுணடம்பாளையம் ஸ்ரீமாரியம்மன்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அழகியகவுணடம்பாளையம் ஸ்ரீமாரியம்மன்கோவில்:

Share

Category