பூந்துறை நாடு,பெரியகாண்டிஅம்மன், சேலம்பூசாரியார்

  • Home
  • India
  • Namakkal
  • பூந்துறை நாடு,பெரியகாண்டிஅம்மன், சேலம்பூசாரியார்

பூந்துறை நாடு,பெரியகாண்டிஅம்மன், சேலம்பூசாரியார் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பூந்துறை நாடு,பெரியகாண்டிஅம்மன், சேலம்பூசாரியார், Hindu temple, Thiruvalluvar Colony, Namakkal.

This Temple is a Hindu place of worship located in Avalpoondurai, Erode
Dedicated to Goddess Periyakandi Amman, it holds regional religious and cultural importance as a local guardian deity temple known for its vibrant festivals and community gatherings.

🖼️✨ உங்கள் வீடு, அலுவலகம், கடை, பூஜை அறைக்கு அழகான🌸 தெய்வ பட பிரேம்கள் இப்போது சிறப்பு விலையில்! 🌸🙏 அனைத்து கடவுள் புகைப...
22/05/2026

🖼️✨ உங்கள் வீடு, அலுவலகம், கடை, பூஜை அறைக்கு அழகான
🌸 தெய்வ பட பிரேம்கள் இப்போது சிறப்பு விலையில்! 🌸

🙏 அனைத்து கடவுள் புகைப்பட பிரேம்களும் கிடைக்கும்
✅ Premium Quality Frames
✅ Custom Size Available
✅ Home Delivery Support
✅ Gift & Temple Orders Accepted
✅ Bulk Orders Welcome

🎨 ARUNAI GROUP OF COMPANIES
DESIGNING - PRINTING - ADVERTISING
One Brand • Multiple Trusted Services

📞 Call / WhatsApp:
9787117170 | 7373556099

📧 [[email protected]](mailto:[email protected])

🌐 [www.arunaidesigns.com](http://www.arunaidesigns.com)

📍 No.119-1, Bothupatty, Tiruvannamalai

31/03/2025
30/04/2022
பெரிய காண்டி அம்மன் கோவில் பூஜை இன்று......
18/11/2021

பெரிய காண்டி அம்மன் கோவில் பூஜை இன்று......

14/04/2021

முற்கள் குத்தி விட்டதே என முள்ளை குறை கூறாமல், காலை தவறான இடத்தில் வைத்து விட்டோமே என, பாதை மாற்றும் புத்திசாலியாக உங்கள் பயணத்தை தொடருங்கள்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 💐💐💐🙏🏼

02/08/2020

(02/08/2020) ஆடிப்பெருக்கு;
விருத்தி, லாபம், முன்னேற்றம்□

ஆடிப்பெருக்கு நாளில், தொட்டதெல்லாம் துலங்கும். புதிதாக தொழில் தொடங்கினால் விருத்தியாகும். அளப்பரிய லாபம் பெறலாம். புதிய கலையையோ, கல்வியையோ கற்கத் தொடங்கினால், கல்வியிலும் கலைகளிலும் சிறந்துவிளங்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடிப்பெருக்கு என்பது அற்புதமான, உன்னதமான நாள். இந்தநாளில், மனதாரவேண்டிக்கொண்டு செய்யும் எந்தக்காரியமும் மிகப்பெரிய லாபத்தைத் தரும். இரட்டிப்புப் பலன்களைத் தரும்.

இந்தநாளில், நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன் தொகை வழங்கலாம். பூமிபூஜை போடலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். விதை இடுவதற்கு அருமையான நாளும் கூட...

வீட்டில் உள்ள வெள்ளிக்காசுகள் அல்லது சாதாரண காசுகளை சுவாமி படத்துக்கு முன்னே வைத்துக்கொண்டு, தூபதீப ஆராதனை செலுத்தி, அதை பீரோவில் மீண்டும் வைத்துவிடுங்கள். உங்கள் சம்பாத்தியம் பெருகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

காவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடுவார்கள்; நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைபட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடிப்பெருக்கு நாளில், நற்காரியங்களைச் செய்யுங்கள். சத்தான விஷயங்களைச் செய்யுங்கள். முன்னேற்றப்பாதையில் வெகு விரைவில் செல்வீர்கள் என்பது உறுதி....

20/07/2020

#அற்புதங்கள் #நிறைந்த #ஆடி #அமாவாசை (20-7-20) திங்கட்கிழமை
-
🍀ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.🍀
-
🍀விரதம் சரி... அது என்ன கதை? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, "உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்" என்று கூறியது. 🍀அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, "உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்' என்ற குரல் கேட்டது.🍀
-
🍀இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். 🍀அப்போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்து போன இளவரசனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.🍀

-
🍀அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும் வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்து விட்டானென்ற உண்மை தெரியவந்தது. 🍀அழுதாள்... அரற்றினாள்... தவித்தாள்... தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்து கிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.🍀
-
🍀இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், "இருண்டு போன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள். 🍀மகிழ்ந்த அம்பிகை, "ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்' என சொல்லி மறைந்தாள்.🍀
-
🍀ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் என்பது நம்பிக்கை. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்தநொடியே அக்னி தேவன் அலறினான். 🍀சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக்கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. எனவே அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. "அக்னி நீராடிய கடலில் நீராடுவோரின் பாவங்கள் தீரும்' என ஆசியளித்தாள் சீதாதேவி.🍀
-

-
🍀இன்றும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்னுள்ள கடல் நீரில் அலையே இருக்காது. 🍀சீதாதேவிபோல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.🍀
-
🍀இராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோவிலுக்குள் உள்ளன. "ராமேஸ்வரம் சென்றும் குளிக்காததுபோல' என்றொரு சொல்வழக்கு உண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், 🍀இங்கு புனித நீராடுவது அவசியமென்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இங்கு ஆடி மாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாகவும் இது விளங்குகிறது.🍀
-
🍀தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். முன்னோர் வழிபாட்டை ஆடி அமாவாசையன்று காலையே துவங்கிவிட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்துவரவேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு திருவிளக்கேற்ற வேண்டும். 🍀ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்கவேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்தபிறகு, காகத்திற்கு உணவிடவேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிடவேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்தால் முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.🍀
-
-
🍀அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய ஒரு சம்பவத்தைக் காண்போமா.. குருக்ஷேத்ர யுத்தத்திற்குமுன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக சகாதேவனிடம் ஜோதிடம் கேட்கச் சென்றான் துரியோதனன். 🍀"போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்கவேண்டும்?' எனக் கேட்டான்.🍀
-
🍀துரியோதனன் தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், "பூரண அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி" என்றான். துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென அமாவாசைக்கு முதல் நாளே ஒரு குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்தார். 🍀இதைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு வந்தனர். "நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேரும் நாள் தானே அமாவாசை! ஆனால் நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா?' என்றனர்.🍀
-
🍀அதற்கு கிருஷ்ணன், "இப்போது நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே இன்று தான் அமாவாசை..." என சமயோசிதமாக பதில் சொல்லிவிட்டார். சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; 🍀ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.🍀
-

-
🍀ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல; தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள செதலபதி எனப்படும் திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. 🍀இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்துகொள்ளலாம்.🍀
-
🍀ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கிலோமீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, 🍀அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில் சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்று வரலாம்.🍀
-
🍀அறம் வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். 🍀மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.🍀
-
-
🍀இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலை நாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். 🍀"ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா" என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம்.🍀
-
🍀சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால் சந்திரன் படிப்படியாகத் தேய்ந்து ஒரு கலையோடு காட்சிதரும் நிலையில் இருப்பான். 🍀அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் "அமை" என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.🍀
-
🍀அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன் முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒரு சமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்" என்று ரிஷிகள் கூறினார்கள். 🍀ஆனால் கவுசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்" என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம் புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார்.🍀
-

-
🍀முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், 🍀பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.🍀
-
🍀ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், 🍀நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.🍀
-
🍀அற்புதங்கள் நடந்த ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய பிதுர் பூஜை மட்டுமின்றி, இறைவழிபாட்டிலும் ஈடுபட்டு தங்களால் இயன்ற தான தர்மங்கள் செய்தால் என்றும் வாழ்வில் வசந்தம் காணலாம்.🍀
-
🍀"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"🍀
-

-
#நன்றியுடன் #

-
🍀தென்னாடுடைய சிவனே போற்றி!🍀
🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🍀🍀
-
🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!🍀
🍀கயிலை மலையானே போற்றி! போற்றி!🍀🍀
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

நன்றிகளும்
பிரியங்களும்.

16/07/2020

ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா?
ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். பார்வதிதேவி ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது....

சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.

🌀 பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

🌀 அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

🌀 அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள்.

🌀 ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்.

🌀 ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை.

* #ஆடி_மாத_சிறப்புகள்

🌀 ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும்.

🌀 ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

🌀 ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்...

ஓம் சக்தி பராசத்தி! !!!!

நன்றிகளும்
பிரியங்களும்.

12/07/2020

குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்க

உங்களுடைய வாழ்க்கை இப்பிறவி முழுவதும் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் இரண்டு காரியங்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.நம்முடைய முன்னோர்களாகிய சித்தர் பெருமக்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது இதை மட்டுமே!!!

காசிக்கு போய் தினமும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தாலும் அதற்குரிய புண்ணியம் நேரடியாக நம்மை வந்து சேராது. நமது குலதெய்வம் மூலமாக நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு அம்மாவாசை திதி அன்றும் மற்றும் ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதி அன்றும் குலதெய்வம் நமக்கு வரம் தரும்.

பூமிக்கு தென்கிழக்கு திசையில் வெகுதொலைவில் உள்ள பித்ருக்கள் உலகத்திலிருந்து நம்முடைய முன்னோர்களாகிய பித்ருக்கள் இந்த இரண்டு திதி நாட்களிலும் நம்முடைய குல தெய்வம் கோவிலுக்கு வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஏதாவது ஒரு நாளில் மட்டும் நம்முடைய குலதெய்வம் கோயிலுக்கு சென்று 90 நிமிடங்கள் வரை அமைதி காக்க வேண்டும்.

அந்த நாளில் குலதெய்வம் கோயிலில் உள்ள ஒவ்வொரு சன்னதியின் முன்பாகவும் படையல் வைக்க வேண்டும். போனை அணைத்து வைக்க வேண்டும்.அந்த 90 நிமிடங்கள் முழுவதும் நமக்கு என்னென்ன தேவை என்பதை வேண்டும் வேண்டும் என்று குல தெய்வத்திடம் மன்றாடி வேண்டிக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு நேராக நமது வீட்டுக்கு செல்ல வேண்டும்.குலதெய்வத்திடம் வேண்டிக் கேட்டுக் கொள்ளும் போது பிறர் இதுவரை நமக்கு செய்த தீங்குகள் ஞாபகம் வரும் தீமைகள் ஞாபகம் வரும். அதற்காக அவர்களை நிந்திக்க கூடாது.

நமக்கு தீமைகள் செய்தவர்களை விட நானும், என் குடும்பமும் வலிமையாக இருக்க வேண்டும் !என் குடும்பத்திற்கு ஒவ்வொரு வினாடியும் உன்னுடைய ஆசிர்வாதம் வேண்டும் !! உன்னுடைய பாதுகாப்பு வேண்டும்!!! என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்.

மாதம் ஒரு அம்மாவாசை வீதம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை இவ்வாறு குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவதன் மூலமாக இரவு முழுவதும் இந்தப் பிறவி முழுவதும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

நமக்கும்

நம் தொழிலுக்கும்/வேலைக்கும்

நம் குடும்பத்துக்கும்

நம் சொத்துக்கும் கிடைக்கும்.

தொடர்ந்து 36 அம்மாவாசை களுக்கு இவ்வாறு குலதெய்வம் கோயிலில் படையல் வைத்து 90 நிமிடங்கள் பிரார்த்தனை செய்துகொண்டு வந்தால் ஒரு வருடத்திற்கு பிறகு குலதெய்வம் கோயிலில் நாம் இட்ட படையல் ஏதாவது ஒரு சன்னதி முன்பாக சன்னதியில் இருந்து திடீரென காணாமல் போகும்!

அதை நாம் நம் கண்களால் பார்க்கும் பெரும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்!!

அப்படி நடைபெற்ற பிறகு ,அந்த சம்பவத்தை எவ்வளவு ரகசியமாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய குலதெய்வத்திற்கு மகிழ்ச்சி பெருகும்!!! குலதெய்வத்தை மகிழ்ச்சி படுத்துவது மிகவும் கடினம்.

ஒவ்வொரு வருடமும் வரும் ஆடி அமாவாசை அல்லது புரட்டாசி அமாவாசை அல்லது தை அமாவாசை போன்ற நாட்களில் ஏதாவது ஒரு அமாவாசையில் மட்டுமாவது நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் (நீத்தார் கடன்) செய்துவரவேண்டும்.

புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் கடந்த 12 ஆண்டுகளாக செய்யாமல் கைவிட்ட தற் பணத்திற்கான பலன் நமக்கு கிடைக்கும்.

தை மாதம் முதல் தேதி அன்று தர்ப்பணம் செய்தால் கடந்த 40 ஆண்டுகளாக தர்ப்பணம் செய்யாமல் இருந்ததற்கான கடமை நிறைவேறிவிடும். தை அமாவாசை அன்றும் தர்ப்பணம் செய்யலாம்.

குலதெய்வம் தெரியாதவர்கள் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர வெள்ளிக்கிழமை அன்று நாட்டு பசுவுக்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை தானம் செய்ய வேண்டும். நாட்டுப்பசு வாழைப்பழம் அல்லது அகத்திக் கீரையை சாப்பிடும் தருணத்தில் மனதுக்குள் பின்வருமாறு நினைத்துக் கொள்ள வேண்டும்:-"எங்கேயோ இருக்கும் என் குல தெய்வமே நீ எங்கே இருக்கிறாய் என்று எனக்கு காட்டு"

இவ்வாறு தொடர்ந்து செய்து வரும்போது ஒரு சில வருடங்களுக்கு பிறகு நம்முடைய குல தெய்வத்தை நாம் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும்.

*சூரிய கிரகணம் ஸ்பெஷல்**தர்ப்பை புல்லின் மகிமை:*              💗💗💗💗💗💎தர்ப்பை புல் ஆதியிலிருந்து கிரியை மார்க்கங்களில் இறை...
21/06/2020

*சூரிய கிரகணம் ஸ்பெஷல்*

*தர்ப்பை புல்லின் மகிமை:*
💗💗💗💗💗
💎தர்ப்பை புல் ஆதியிலிருந்து கிரியை மார்க்கங்களில் இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது.

💎தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும் , நுனியில் ருத்ரனும் இருப்பதால் பரமபவித்ரமாகிய சுத்த சக்தியயன்று அறிக.
💎
தர்ப்பபை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது. *இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது.* நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.

💎 *தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.*

💎 *அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தர்பை.*

💎 *ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.*

💎 *இறைவழிபாடு ஜெபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில் கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது. விஷேட காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தரப்பை புல்லை போடுவார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது பிரபஞ்ச சக்தி விரல் மூலம் மூளைக்கு செல்கிறது உடலில் பரவும்.*

💎 *கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.*

💎 *தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும்.*

💎 *தர்பை உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்தில் மின்சார சக்தியை கடத்தும் சக்தியை போல் தர்பையிலும் உண்டு.*

💎 *தங்கம், வெள்ளி கம்பிகளின் இடத்தில் பிரபஞ்சத்திலுள்ள சக்திகளை ஆகர்­ணம் செய்யும். எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும்.*

💎 *அசுப காரியங்கள் ஒரு தர்பையாலும், சுப காரியங்களுக் இரண்டு தர்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்பைகளாலும் ( பவித்ரம் ) தர்பை மோதிரம் முடியவேண்டும்.*

💎 *தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார் . அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார்.*

💎 *கொடி மரத்தின் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிற போது கொடி மரத்தில் சுற்றி இருக்கும் தரப்பை புல் பிரபஞ்ச சக்தி ஈர்த்து வைத்திருக்கும், அது வீழ்ந்து வாங்கும் பக்தர்களின் முதுகெலும்பு வழியாக உடலில் பரவும்.

Address

Thiruvalluvar Colony
Namakkal
637001

Telephone

+919787117170

Website

Alerts

Be the first to know and let us send you an email when பூந்துறை நாடு,பெரியகாண்டிஅம்மன், சேலம்பூசாரியார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category