C.S.I Church,Arulpuram

C.S.I Church,Arulpuram Our Church works under:
A.N kudy pastorate and Kaliyankadu District.

10000 Reasons
11/08/2023

10000 Reasons

Chapters:0:00 10000 Reasons2:33 Our God is GreaterThank God..!! Here's our latest cover '10000 Reasons - Our God is Greater'.The MEANDERERS is a musical gro...

11/08/2023

33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
யோவான் 3:33

34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்: தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
யோவான் 3:34

35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
யோவான் 3:35

36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
யோவான் 3:36

17/02/2022
11/05/2021
16/08/2020

2 அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக்கடந்தோடுகிறவன் வாசிக்கும்படி பலகைகளிலே தீர்க்கமாக வரை.
ஆபகூக் 2:2

3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
ஆபகூக் 2:3

4 இதோ,அகங்காரியாயிருக்கிறானே,அவனுடைய ஆத்துமா அவனுக்குள்; செம்மையானதல்ல. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
ஆபகூக் 2:4

16/08/2020

17 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும்,
ஆபகூக் 3:17

18 நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
ஆபகூக் 3:18

19 ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன். அவர் என் கால்களை மான் கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
ஆபகூக் 3:19

22/04/2020

19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
ரோமர் 12:19

20 அன்றியும், உன் சத்துருபசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு, நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
ரோமர் 12:20

21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
ரோமர் 12:21

11/04/2020

*நாம் சகோதரர்!*

" *எனக்கும் உனக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்" (ஆதி. 13:8).*

*எங்கே வாக்குவாதம் உள்ளதோ அங்கே சகோதரத்துவ அன்பு நீங்கிப் போய் விடுகிறது. அதைப் போலவே எங்கே சகோதர அன்பு உள்ளதோ அங்கே வாக்குவாதம் இல்லாமல் போய் விடுகிறது. நீங்கள் அன்பினால் உறவுகள் கட்டப்பட வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், சிநேகிதர்களையும், சகோதரர்களையும் சம்பாதிக்க வேண்டுமென்று நினைத்தால், வாக்குவாதத்தை உங்களைவிட்டு அகற்றுங்கள். வாக்குவாதம் பிரிவினையையே உண்டுபண்ணும்.*

*ஒரு முறை ஒரு சகோதரன் வீட்டுக்கு ஒரு ஊழியர் ஜெபிக்க வந்தார். அவர் ஜெபிக்கும்போது, "ஆண்டவரே நாங்கள் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்திருந்தாலும் உம்முடைய கல்வாரியின் இரத்தம் எங்களை இனிமையான சகோதரர்களாய் மாற்றியதே" என்று சொல்லி ஜெபித்தார். இந்த வார்த்தைகள் அந்த சகோதரனின் இருதயத்தில் ஆழமாய்ப் பதிந்தது. அதுமுதல் அந்த ஊழியர்மேல் அந்த சகோதரனுக்கு ஒரு அளவில்லாத சகோதர பாசம் உண்டானது. அவருக்கு வேண்டிய உதவியையும் செய்யும்படி அவருடைய உள்ளம் ஆசை கொண்டது.*

*யார் யார் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டார்களோ அவர்கள் தேவனை ஒரே பிதாவாய் கொண்டிருக்கிறார்கள். மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் சகோதரராயும் இருக்கிறார்கள். யார் யார் முழு இருதயத்தோடு, ‘பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே’ என்று சொல்லி பிதாவைத் தொழுதுகொள்ளுகிறார்களோ, அவர்களெல்லாரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாய் இருக்கிறார்கள். யார்யார் அவரை ‘அப்பா பிதாவே’ என்று அழைக்கிறார்களோ அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாய் இருக்கிறார்கள் (ரோமர் 8:15).*

*நீங்கள் சகோதரர்களாய் இருக்கும்படி இயேசு இன்னொரு நிபந்தனையையும் கொடுத்திருக்கிறார். "என்னுடைய சகோதரர் யார்?" என்று அவர் சொல்லிவிட்டு, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எனக்கு சகோதரனும் சகோதரியுமாய் இருக்கிறான் என்றார் (மத். 12:48-50).*

*தேவபிள்ளைகளே, நீங்கள் ஒரே ஆவியினால் தாகந்தீர்க்கப்பட்டு சகோதரர்களாய் இருக்கிற அதே வேளையில்தானே நீங்கள் பரலோக தேவனுடைய சித்தத்தை செய்ய வேண்டுமென்பதை மறந்துபோய் விடக்கூடாது. நீங்கள் சுய சித்தத்தை யோசியாமல், கர்த்தருடைய பரிபூரண சித்தத்தை நிறைவேற்றும்போது கர்த்தர் உங்களை தேவனுடைய எல்லா பிள்ளைகளோடும் அன்பான சகோதரராய் இணைத்துவிடுவார். நீங்கள் பூமியில் இருக்கிற கர்த்தருடைய எல்லா பிள்ளைகளோடும் சகோதரர்களாய் இருக்கிறது மாத்திரமல்ல, கிறிஸ்துவோடுகூடவும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். உங்களை அவர் சகோதரர் என்று அழைக்க வெட்கப்படவில்லை.*

*சகோதர அன்பும், பாசமும், உறவும் மிகவும் விசேஷமானது! எத்தனைதான் நண்பர்கள் இருந்தாலும், இரத்தப் பாசம், இரத்தத் துடிப்பு ஆகியவை சகோதரரிடத்தில்தான் கிடைக்கும். சில சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவுதான் மனக்கசப்பு இருந்தாலும், பொதுவான ஒரு எதிராளி வந்துவிட்டால் உடனே எல்லா பகைமையையும் மறந்து ஒன்றாய் இணைந்துவிடுவார்கள். தேவபிள்ளைகளே, சகோதர சிநேகம் உங்களில் நிலைத்திருக்கக்கடவது.*

*நினைவிற்கு:- "நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்" (மத். 23:8).*

Address

Karavilai, Ananthanadar Kudy(PO)
Nagercoil
629201

Telephone

+916382305230

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.S.I Church,Arulpuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to C.S.I Church,Arulpuram:

Share

Category