15/09/2018
ஞானஸ்நான வகுப்புகள்
வகுப்பு 1
1. சுவிசேஷம் என்றால் என்ன? - அறிமுக வகுப்பு
1. உலகம் முடிவுக்கு வர சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும்.
--மத்தேயு 24.14
2. சுவிசேஷம் சாட்சியாக பிரசின்கிக்க பட வேண்டும்.
-- மத்தேயு 24.14
3. சுவிசேஷம் பிரசங்கித்தால் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவோம். பகைக்கிறவர்களுக்கும் நற்செய்தியை சொல்ல, சுவிசேஷத்தை சாட்சியாக கடைபிடிக்கிறவர்கலாலேயே கூடும்.
---மத்தேயு 24.9
4. இராஜ்யத்தின் சுவிசேஷம் = கிறிஸ்துவின் சுவிசேஷம்
--- ரோமர் 1.16,17
5. கிறிஸ்துவின் சுவிசேஷம் இரட்சிப்பை உண்டாக்குகிறது
--- ரோமர் 1.16
6. இரட்சிப்பு எதிலிருந்து வேண்டும்? - பாவத்திலிருந்து
---மத்தேயு 1.21
எனவே பாவத்திலிருந்து இரட்சிப்படைய கிறிஸ்துவின் ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் உதவுகிறது.
7. தேவன் சுவிசேஷத்தினாலே, இரட்சிப்புக்கு, அவருடைய மகிமையை அடையும் பொருட்டாக நம்மை அழைத்தார்
--- II தெசலோனிக்கேயர் 2.14
8. ஆகவே, பாவத்திலிருந்து இரட்சிப்படைய, பரலோகத்தினால் தரப்படும் சுவிசேஷமானது, நம்மை தேவனுடைய மகிமையை அடையவே வழிகாட்டுகிறது. எனவே நாம் தேவ மகிமையை அடைவதே ரட்சிப்பின் வாழ்க்கை.
எனவே, தேவ மகிமை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுவது அவசியமாகிறது.
மோசே, தேவனிடத்தில் அவருடைய மகிமையை காண்பிக்க வேண்டும் போது, தேவன் அவருடைய குணத்தினை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய மகிமை என்பது, அவருடைய தயை, நாமம், கிருபை, இரக்கம் என்பவைகளே.
---- யாத்திராகமம் 33.18
9. அவருடைய நாமம் அவருடைய 10 கட்டளைகளே
--- யாத்திராகமம் 34.5,6
தேவ மகிமை = அவருடைய நாமம் = அவரது 10 கட்டளைகள்
முடிவு என்னவென்றால், ரட்சிப்பின் வாழ்க்கை என்பது, தேவனுடைய 10 கட்டளைகளை கைக்கொண்டுவாழும் நியாபிரமாணத்தினை மீறாமல் வாழும் வாழ்க்கையே!!
நியாயப்பிரமாணத்தினை மீறுவதே பாவம்
--- ரோமர் 6.23
அப்படிப்பட்ட பாவமில்லாத வாழ்வை வாழும் கிறிஸ்துவர்கள் சாட்சியாக தங்களது வாழ்வாகிய சுவிசேஷத்தினை நடக்கைகளின் மூலமாக தங்களை கொலையும் செய்ய தேடும் சகல ஜாதிகளுக்கும், நாடுகளுக்கும் பிரசிங்கிக்கும் போது தேவன் இரண்டாம் முறையாக வருவார். அவர்கள் சீயோன் பர்வதத்தின் மீது கிறிஸ்துவின் ராஜ்யத்தின் பங்காளிகளாக நிற்பார்கள்
--- ஒபதியா 21
அவர்கள் தேவனுடைய இரட்சிப்பாகிய, அவருடைய மகிமையாகிய, அவருடைய நாமத்தினை தங்களின் நெற்றியில் தரித்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்.
வெளிப்படுத்தின விசேஷம் 14.3
அந்த அனுபமுள்ளவர்கள் எப்பொழுது வருவார்கள் ? தேவன் எப்பொழுது வருவார் ? என ஏங்கிக் கொண்டிருக்காமல், நாமே அந்த அனுபவத்தினை பெற்று, தேவனுடைய வருகையை துரிதமாக்குவோம்
Yabesh M Kumar
SDA CHURCH, NAVALKADU