Dargah - e - Tamil Nadu

Dargah - e - Tamil Nadu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dargah - e - Tamil Nadu, Religious organisation, Nagapattinam.

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா?ஆன்மீக வழிகாட்டி என்பவர் தன்னிடம் பைஅத் செய்துள்ள மாணவனுக்கு தேவையான அறிவுரைகள், வழிக்கட்டல்கள...
27/06/2023

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா?

ஆன்மீக வழிகாட்டி என்பவர் தன்னிடம் பைஅத் செய்துள்ள மாணவனுக்கு தேவையான அறிவுரைகள், வழிக்கட்டல்களின் மூலம் அவனை நேர்வழிக்கு கொண்டு சென்று மாணவனின் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக வழிகாட்டுபவர்.

​​இந்த ஆன்மீக ஆசிரியரை "முர்ஷித்" அல்லது "ஷெய்க்" (SPIRITUAL MASTER) என்று அழைக்கப்படும். மாணவனுக்கு "முரீத்" என்று சொல்லப்படும்.



அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது:



அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட நாடி விட்டானோ அவர்களுக்கு வழிகாட்டும் வலிமார்களை (வலியன் முர்ஷிதா) அல்லாஹ் காட்டித் தருவதில்லை. (அல் குர்ஆன் 18:17)



உங்களுக்கு ஒரு ஆன்மீக வழிகாட்டி தேவை என்றால் முதலில் தனக்கு ஒரு காமிலான ஷெய்க் (ஆத்மீக வழிகாட்டி) தரும்படி அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள். ஒரு காமிலான ஷெய்க் கிடைக்கும் வரை மறைந்த ஒரு இறைநேசரை ஆன்மீக வழிகாட்டியாக உள்ளத்தில் நினைத்துக்கொண்டு அவர்களின் பெயரில் பாத்திஹா ஓதி வாருங்கள்.

அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பை நாம் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள். இஸ்லாமிய வரலாற்றில் இமாம் அவர்களின் நூல்களை வாசிக்காத குத்புமார்களையும், இறைநேசர்களையும் காண முடியாது.

அந்த மாபெரும் அறிவுக்கடல் மீது பாத்திஹா ஓதி வாருங்கள். மேலும் அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் இறைஞானத்தை கேட்டு வாருங்கள். இன்ஷா அல்லாஹ் நீங்கள் அறியா புறத்தில் இருந்து இல்ஹாம் என்னும் உதிப்புக்கள் வருவதை நீங்கள் உணர்வீர்கள்.

இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:

இறைவனிடம் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வஸீலாவாக கொண்டு கேட்கப்படும் துஆ நிறைவேறும்.

பாத்திஹா ஓதும் முறை: ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் முதலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது பாத்திஹா ஓதுங்கள். பின்பு இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது பாத்திஹா ஓதுங்கள். பின்பு இறைவனிடம் ஒரு நல்ல ஆன்மீக வழிகாட்டியை தந்து உதவும் படி துஆ கேளுங்கள்.

இன்ஷா அல்லாஹ்! உங்களுக்கு ஒரு நல்ல ஆன்மீக வழிகாட்டி ஒருவரை அல்லாஹ் தருவான்.

ராமநாதபுரத்தில் இன்று உள்ளூர் விடுமுறை
13/06/2023

ராமநாதபுரத்தில் இன்று உள்ளூர் விடுமுறை

ஹஜ்றத் பீர் ஸா ரஹ்மத்துலில்லாஹி அவர்களின் வருடாந்திர உரூஸ் சிறப்புடன் நடைபெற்று கொண்டு இருக்கின்றது  #இராஜகிரியில்...
02/06/2023

ஹஜ்றத் பீர் ஸா ரஹ்மத்துலில்லாஹி அவர்களின் வருடாந்திர உரூஸ் சிறப்புடன் நடைபெற்று கொண்டு இருக்கின்றது #இராஜகிரியில்...

01/06/2023
 #நாகூர்_தர்காவில் தவறவிட்ட உயர்தர செல் போன் கண்டெடுப்பு - உரிய நபரிடம் ஒப்படைப்புநாகூர் தர்காவிற்க்கு விஜயம் செய்த தமிழ...
01/06/2023

#நாகூர்_தர்காவில் தவறவிட்ட உயர்தர செல் போன் கண்டெடுப்பு - உரிய நபரிடம் ஒப்படைப்பு

நாகூர் தர்காவிற்க்கு விஜயம் செய்த தமிழகத்தை (வேலூர்) சார்ந்த நாகூர் ஆண்டகையின் பக்தர்களுள் ஒருவரான ஜனாப் கரீம் பாசா தனது குடும்பத்துடன் நாகூர் தர்கா வருகை புரிந்து இருந்தார். தவறுதலாக தனது தொலைப்பேசியை தர்கா குழுந்த மண்டபம் அருகே தொலைபேசியை தவற விட்டுவிட்டார். அங்கு பணியில் இருந்த தர்கா காவலாளி லாரண்ஸ் தவறவிட்ட தொலைப்பேசியை கண்டெடுத்து உரிய நபரை தொடர்பு கொள்ள முயன்றார். தனது பணி நேரம் முடிவடிந்த நிலையில் அடுத்த ஷிப்ட் தர்கா காவலாளிகள் சம்பந்தபட்ட நபரை தொடர் முயற்சியில் தொடர்பு கொண்டு நாகூர் தர்கா உள்துறை துணை நிர்வாகி சேக் தாவுத் முன்னிலையில் அடுத்த ஷிப்ட் தர்கா காவலாளிகளான ஷாகுல் மற்றும் அய்யப்பன் இதனை ஒப்படைத்தார்கள். சுமார் காலை 7 மணிக்கு தர்காவில் கண்டெடுக்கப்பட்ட மொபைல் போன் இரவு 10 மணியளவில் உரிய நபரிடம் அன்னாரின் பொருளை பெற்று கொண்டமைக்கான ரெஜிஸ்டரில் கையொப்பம் வாங்கி கொண்டு ஒப்படைக்கப்பட்டது.

தனது செல்போன் என உறுதி படுத்தி கொண்ட நாகூர் ஆண்டகை பக்தர் மனமகிழ்ச்சியுடன் உதவிய காவலாளிகளுக்கும் நாகூர் தர்கா நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்தார். அந்த செல்போனின் மதிப்பு சுமார் ரூபாய் 19,000 ஆகும்.

செய்திகுறிப்பு எண் :நா/த/மே/2023/21 நாள் 31/5/2023

தகவல் : நாகூர் தர்கா அலுவலகம்

Dargah - e - Tamil Nadu

Roza E Mubarak Hazrath Sultan Syedna Baba E Nathar Sarmasth Thable Aalam Baadshah Dhowl Samandar Qalandar Hussaini Sohor...
31/05/2023

Roza E Mubarak

Hazrath Sultan Syedna Baba E Nathar Sarmasth Thable Aalam Baadshah Dhowl Samandar Qalandar Hussaini Sohorwardi Q.A.S

Hazrath Syedna Baba Shams Goya Qalandar Hussaini Sohorwardi Q.A.S

Hazrath Khalifa Syed Shah Baba Abdul Rehman Aale Noori Qalandar Hussaini Sohorwardi Q.A.S

Hazrath Syeda Sultan Un Nissa Amma Sahiba Qalandar Hussaini Sohorwardi Q.A.S

Hazrath Syeda Halima Sadiya Urf Mama Jigni Amma Sahiba Qalandar Hussaini Sohorwardi Q.A.S

Tiruchirapalli Trichy TAMIL NADU SOUTH INDIA

31/05/2023

Dargah - e - Tamil Nadu

ஏர்வாடி ஏந்தலின் வெற்றி தீன் கொடியேற்றத்தை ஆவளோடு எதிர்பார்த்த வண்ணமாக மக்கள் கூட்டம் ஏராளம், ஏராளம்....எப்போது மணி 06 ஆ...
31/05/2023

ஏர்வாடி ஏந்தலின் வெற்றி தீன் கொடியேற்றத்தை ஆவளோடு எதிர்பார்த்த வண்ணமாக மக்கள் கூட்டம் ஏராளம், ஏராளம்....

எப்போது மணி 06 ஆகும், எப்போது மணி 07 ஆகும் ஏர்வாடி குதுபுல் ஹமீத் வல்கொளதுல் மஜீத் சுல்தான் ஷைய்யது இப்ராஹீம் ஷஹீத் பாதுஷா நாயம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வெற்றி தீன் கொடியேற்றத்தை பார்க்கவேண்டுமே என்ற எண்ணம் ஒவ்வொரு மக்களின் உள்ளத்திலும் உயிரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

அல்லாஹ்வின் அருளால் ஒவ்வொரு மக்களும் தன் நாட்ட, தேட்டங்கள் நிறைவேறவேண்டுமென்ற பேராவலில் யா ஷஹீத் முறாது ஹாஸில், யாஷஹீத் முறாது ஹாஸில், யா ஷஹீத் முறாது ஹாஸில் என்ற கோஷம் போட்ட வண்ணமாக அலைக்கடலென மக்கள் கூட்டம்....

நேரில் செல்ல முடியவில்லையே எப்போது மணி 06,07 ஆகும் Live விலாவது ஏர்வாடி ஏந்தலின் வெற்றி தீன் கொடியேற்றத்தைப் பார்க்கவேண்டுமென்ற பேராசையில் பல்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் எதிர்பார்த்த வண்ணமாக மக்கள் கூட்டம்..

ஏர்வாடி ஏந்தலின் வெற்றி தீன் கொடியேற்றத்தின் பரக்கத்தால் நம் தீரா பிணிகளும், தீரா நோய்களும் நீங்கி பூரண சுகம் பெற அல்லாஹ் அருள்புரிவானாக...

யா ஷஹீத் முறாது ஹாஸில்
Dargah - e - Tamil Nadu

கப்ருகளை ஸியாரத்து செய்வது ஆண், பெண் இரு பாலாருக்கும் சுன்னத்தும், முஸ்தஹ்பும் ஆகும்.கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனி...
31/05/2023

கப்ருகளை ஸியாரத்து செய்வது ஆண், பெண் இரு பாலாருக்கும் சுன்னத்தும், முஸ்தஹ்பும் ஆகும்.

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இப்னு மாஜா - 1569, மிஷ்காத் - 154

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.

தபரானி 3 - 241

ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.

மிஷ்காத் – 154

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.

முஸ்லிம், மிஷ்காத் - 154

31/05/2023

அவுலியாக்களின் புகழும் ' தர்ஹாக்களும் கொடிகளும்..
Dargah - e - Tamil Nadu

Address

Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dargah - e - Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share