14/08/2020
காழியப்பநல்லூரில் இயங்கி வரும் தொன்போஸ்கோ பாலிடெக்னிக்கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் மற்றும், சில முன்னாள் மாணவர்களின் குடும்பங்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வருமானமின்றி தவிக்கும் சூழலில் நலிந்த குடும்பங்களுக்கு, தொன்போஸ்கோ கல்லூரி நிறுவனம் பல்வேறு விதமான நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. அதில் ஒரு பகுதியாக காழியப்ப நல்லூர் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக, ரூபாய் 15 ஆயிரம் நிதி மற்றும், முன்னாள் மாணவர்கள் முயற்சியினால் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி ரூபாய் 10 ஆயிரத்துடன் தொன் போஸ்கோ நிறுவனம் வழங்கிய 15 ஆயிரம் சேர்த்து மொத்தம் 40 ஆயிரம் நிதி இல்லத் தந்தை. அருட்தந்தை. டானியல் செபஸ்டின் அவர்களிடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 80 குடும்பங்களுக்கு தலா 500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. வழங்கப்பட்டது.