CSI சேகர ஆலயம் கடமலைகுன்று

CSI சேகர ஆலயம் கடமலைகுன்று Welcome to our church Facebook family! 🙏

இயேசுவைப் போல இன்று (25.05.2026)என் ஆண்டவர் பேசுவாரா? என்ற கேள்வி உனக்குள் அனேக நேரம் எழுவது உண்டு என்னுடைய பிரச்சனைகளுக...
24/05/2026

இயேசுவைப் போல இன்று (25.05.2026)

என் ஆண்டவர் பேசுவாரா? என்ற கேள்வி உனக்குள் அனேக நேரம் எழுவது உண்டு என்னுடைய பிரச்சனைகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும் எப்போதும் என்னோடு மனிதர்கள் உரையாடுவது போல் உரையாட வேண்டும் என்று விரும்புகிறாய்,இது சாத்தியமா? வேதத்தில் அநேக மனிதர்களோடு தேவன் பேசினார், உரையாடினார், சஞ்சரித்தார்,என்றெல்லாம் வாசிக்கிறேன் என்னோடு அப்படிப்பட்ட தொடர்பை வைப்பாரா? என்று உன் எண்ணத்தில் ஒரு கேள்வி என் அன்பு மகனே/ மகளே, நான் உன்னோடு பேச விரும்புகிறேன் நான் அனுதினம் உன்னோடு பேசுகிறேன் ஆனால் உன் காதுகள் என் சத்தத்திற்கு செவி சாய்க்க மறுக்கிறது, உன் இருதயத்தை நீ என் பக்கமாய் சாய்த்து உன் பாவங்களை நீ அறிக்கை செய்து உன்னை தாழ்த்தும்போது என்னுடைய குரல் உன் காதுகளில் கேட்க்கும், இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம், இன்று நீ அதை அனுபவிக்கலாம் இன்று ஒரு மணி நேரம் என்னோடு செலவு செய் பாவங்களை அறிக்கையை செய்து ஆண்டவரே என்னோடு பேசும் என்று உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபம் செய் அப்பொழுது என்னுடைய மெல்லிய சத்தத்தை நீ கேட்பாய், நான் பேசுவதற்கு உன்னிடம் தயாராக இருக்கிறேன் நீ கேட்பதற்கு ஆவலாய் இருக்கிறாயா? உன் முழங்கால்களை முடக்கு உண்மையான இருதயத்தோடு தேடு இதோ என் சத்தம் உன்னை நோக்கி வருகிறது...

இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
( யோவான் 18 : 37 )

இயேசுவைப் போல இன்று (24.05.2026) எத்தனை அழகான உலகம் இந்த இயற்கையை ஒரு நாளாவது நீ உன்னிப்பாக கவனித்து ரசித்ததுண்டா? போராட...
24/05/2026

இயேசுவைப் போல இன்று (24.05.2026)

எத்தனை அழகான உலகம் இந்த இயற்கையை ஒரு நாளாவது நீ உன்னிப்பாக கவனித்து ரசித்ததுண்டா? போராட்டம், பிரச்சினை, கடன், பாடுகள் என ஓடுவதை நிறுத்து, வானத்தை அண்ணார்ந்து பார் பரந்த வானம் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் காலகாலமாக அதன் வேலைகளை செய்துகொண்டே இருக்கிறது, இரவு பகல் குளிர்ச்சி வெப்பம் என்று நீ வாழும் சூழலுக்கு ஏற்ப தட்பவெட்பநிலை, பறவைகள் விலங்குகள் மலைகள் காடுகள் கடல் அருவி எவ்வளவு அழகான இயற்கை பார்த்தாயா! என் அன்பு மகனே/மகளே, இவை அனைத்தையும் நேர்த்தியாக அழகாய் படைத்த நான் உன்னை மட்டும் அலங்கோலமாய் படைத்திருப்பேனோ? இவைகளை விட நீ மேலானவன் இவைகளை உனக்காக நான் உண்டு பண்ணினேன் நீ இவைகளை ஆளுகை செய்யும்படி நான் படைத்தேன், சற்று நிதானித்து பார் என் படைப்புக்கள் எவ்வளவு ஆச்சரியமானவை ! அப்படியே உன்னையும் ஆராய்ந்து பார் இவைகளை விட பல மடங்கு ஆச்சிரியமாய் உன்னை படைத்திருக்கிறேன் நீ எவ்வளவு ஆச்சரியமானவனென்று எண்ணிப்பார், நீ என் சாயலில் உருவாக்கப்பட்டவன், கலங்கி சோர்ந்து போகாதே, நீ எனக்கு அருமையானவன் உனக்காக படைக்கப்பட்ட இவைகளை நான் பாதுகாக்கும் போது உன்னை பாதுகாக்காமல் இருப்பேனோ!!..

யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

இயேசுவைப் போல இன்று (23.05.2026)அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போத...
23/05/2026

இயேசுவைப் போல இன்று (23.05.2026)

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்,
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார் எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

எபிரெயர் : 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே

இயேசுவைப் போல இன்று (22.05.2026) இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் ? உன் நம்பிக்கையை உன் சரீரத்தின்மீ...
22/05/2026

இயேசுவைப் போல இன்று (22.05.2026)

இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் ? உன் நம்பிக்கையை உன் சரீரத்தின்மீதோ உன் திறமையின்மீதோ உன் தாலந்தின்மீதோ வைக்காதே! இவை யாவும் அழிந்து போகும், இந்த உலகத்தில் விலையேறப்பெற்றது எது தெரியுமா? மனிதன்! அதே போல் இந்த உலகத்தில் விலைமதிப்பில்லாதது எது தெரியுமா அதுவும் மனிதன் தான்! பாவ வாழ்க்கையை விட்டு பரிசுத்த ஆவியானவரை பெற்று என் அரவணைப்பில் வாழும் மனிதன் விலையேறப்பெற்றவன் அவன் மரித்தாலும் அவன் ஆத்மா பரலோகத்தில் நித்திய மகிழ்ச்சியை அனுபவிக்கும், ஆனால் நான் கொடுக்கும் வாய்ப்புகளை இழந்து உலகத்தின் பாவத்தில் புரளும் மனிதன் மரணத்திற்குப் பின் அவன் மேன்மை பாராட்டிய உடல் புழுக்களுக்கு இரை, அவன் பணம் புகழ் பதவி காற்றில் பறக்கும் சறுகு போல் பறந்து விடும், அவன் ஆத்துமா நித்திய அக்கினியிலே வேகாமல் துடிக்கும், என் அன்பு மகனே/மகளே, உனக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, இந்த கிருபையின் காலங்களை பிரயோஜனப்படுத்து, மனந்திரும்பி உன்னை ஒப்புக்கொடு,காலம் செல்லாது! இதோ வாசற்படியிலே நிற்கிறேன் அந்த பயங்கரமான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது ,மகனே/மகளே என் அண்டையில் வந்துவிடு..

அப்போஸ்தலர் 17:30
அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்

இயேசுவைப் போல இன்று (21.05.2026) என் அன்பு மகனே/மகளே, வேதம் என்னும் மிகப்பெரிய பொக்கிஷத்தை நான் உன் கையில் கொடுத்திருக்க...
21/05/2026

இயேசுவைப் போல இன்று (21.05.2026)

என் அன்பு மகனே/மகளே, வேதம் என்னும் மிகப்பெரிய பொக்கிஷத்தை நான் உன் கையில் கொடுத்திருக்கிறேன் ,உன்னுடைய வாழ்வின் எல்லா கேள்விகளுக்கும் விடை! எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு! நீ நடக்க வேண்டிய பாதை! அனைத்தும் அதில் உள்ளது, இரவும் பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் செழிப்பாயிருப்பான், ஆனால் நீ இன்னும் வேதத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை, இயேசு கிறிஸ்து உலகத்தில் இருக்கும் போது பழைய ஏற்பாட்டு நூல்களை வாசித்து தேவனுடைய திட்டங்களையும் தான் செய்யவேண்டிய காரியங்களையும் அறிந்து கொண்டார் என வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது, வேதத்தை வாசிப்பதில் தியானிப்பதில் உன் கவனத்தை செலுத்து, அதை நீ பற்றிக் கொள்ளும்போது உன் இருதயம் விடுதலையடையும், அது உன் கால்களுக்கு தீபமும் உன் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கும், தனிமையில் இருள் சூழ்ந்து இருக்கும் நேரங்களில் உனக்கு வெளிச்சத்தைக் கொண்டு வரும், உனக்கு பாதை காட்டும், இன்று ஓர் தீர்மானம் செய், ஆண்டவரே நான் வேதத்தை தியானிக்க கிரயமான நேரம் செலவு செய்வேன் அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ள உதவும் என்று வேண்டுகோள், நான் உனக்கு புது கிருபையையும், வெளிப்பாடுகளையும் தருவேன், வசனங்களை உன் இருதயத்தில் பதித்துவைக்க துவங்கு..

பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
( சங்கீதம் 119 : 29 )

இயேசுவைப் போல இன்று (20.05.2026) எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாதே! அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன், மற்றவ...
20/05/2026

இயேசுவைப் போல இன்று (20.05.2026)

எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாதே! அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன், மற்றவர்கள் வாழ்க்கையில் நடப்பதை அறிந்து கொள்ள ஆசைப்படாதே! தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதாக நினைத்து இணையத்தில் வரும் குப்பையான பொய்யான காரியங்களை உண்மை என நம்பி ஏமாறும் மக்கள் சமுதாயத்தில் இன்று அதிகம், அதில் நீயும் அடிக்கடி அடிமைப்படுகிறாய், சாதாரண தலைவலி வந்தால் அதன் காரணத்தை இணையத்தில் தேடி தனக்கு தலையில் ஏதோ பெரிய வியாதி வந்ததாக நினைத்து மனதில் பாரத்தை சுமந்து கோமாளிகளாய் அலையும் மனிதர்கள் அதிகம், தெளிந்த புத்தி உள்ளவனா௧யிரு, வேதத்தில் உன் கவனத்தை சொலுத்து, மனிதன் தன் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைத்திட முயற்சித்து தவறான வழிநடத்துததால் அதை விட பெரிய பிரச்சினைகளில் தன் மனதை சிக்க வைக்கிறான், கவனம்! என் அன்பு மகனே/ மகளே, உன் இதயத்தை சுத்தமாக வைத்துக் கொள், உன் வாழ்வுக்கு தேவையான எல்லாவற்றையும் நான் ஏற்கனவே ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறேன், நீ எதை எண்ணியும் கவலைகொள்ள வேண்டாம், கலங்காதே! பயப்படாதே! எதிர்கால பயமும் உனக்கு வேண்டாம், அப்படி ஆகி விடுமோ இப்படி ஆகிவிடுமோ என்று தவிக்காதே! எல்லா பாரங்களையும் என்னிடம் வைத்துவிட்டு நீ நிம்மதியாக சந்தோஷமாக வாழு..

பிரசங்கி :3 : 12
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்

இயேசுவைப் போல இன்று (19.05.2026)அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். ( சங் ...
19/05/2026

இயேசுவைப் போல இன்று (19.05.2026)

அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். ( சங் 147 : 9 )
இந்த வசனத்தை நீ வாசித்ததுண்டா? என் மகனே மகளே, ஐந்து அறிவுகொண்ட மிருக ஜீவன்கள் என்னை நோக்கி கூப்பிடும்போது அவைகளுக்கு நான் உணவு கொடுக்கிறேன். இந்த உலகில் எத்தனை கோடி மிருக ஜீவன்கள் உண்டு என்று உன்னால் எண்ணி சொல்ல முடியுமா? எந்த மனிதனாலும் அதை அறிந்து கொள்ள இயலாது, ஆனால் எண்ணக்கூடிய அளவு மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள் அப்படி இருக்க அவர்களை போஷிப்பது எனக்கு எம்மாத்திரம்! இதில் வேதனை அந்த மிருக ஜீவன்கள் என்னை நம்பும் அளவு கூட மனிதர்கள் என்னை நம்புவதில்லை, காக்கை குஞ்சு என்னை நோக்கி கூப்பிடுகிறது அதற்கு நான் ஆதாரம் கொடுக்கிறேன் நீயும் என்னை நோக்கி கூப்பிடுகிறாய் ஆனால் நான் உனக்கு ஆகாரம் தருவேன் என்ற நம்பிக்கை உனக்கில்லை, ஆகவே தான் உன்னால் எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை, நீ விசுவாசித்தால் பெரிய காரியங்களை காண்பாய் விசுவாசம் இல்லாமல் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது, இன்று உன் வாழ்க்கையில் ஒரு தீர்மானம் செய் ஆண்டவரே சாதாரண ஒரு காகத்துக்கு நீர் அதன் கூப்பிடுதலை கேட்டு போஷிப்பிரென்றால் என்னையும் நீர் நடத்த வல்லமை உள்ளவராய் இருக்கிறீர் நான் உன்னை முழுவதுமாக விசுவாசிக்கிறேன் என்று உன் விசுவாசத்தை அறிக்கை செய், அப்பொழுது நான் உன் வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்வேன்...

மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
( சங்கீதம் 66 : 19 )

இயேசுவைப் போல இன்று (18.05.2026) சற்று நில்! எங்கே வேகமாக ஓடுகிறாய்? எதற்காக இவ்வளவு  பிரயாசப்படுகிறாய்? சற்றும் ஓய்வில்...
18/05/2026

இயேசுவைப் போல இன்று (18.05.2026)

சற்று நில்! எங்கே வேகமாக ஓடுகிறாய்? எதற்காக இவ்வளவு பிரயாசப்படுகிறாய்? சற்றும் ஓய்வில்லாமல் மனதில் பாரத்தை சுமந்து பணம் தேடி அலைந்து நீ சாதித்தது என்ன? உன் கையின் பிரயாசத்தை உன்னால் சாப்பிட முடிகிறதா?
மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம் என்று (பிரசங்கி 3:13) திரு வசனம் சொல்கிறது நீ மகிழ்ச்சியாய் மன நிம்மதியுடன் நீ உழைப்பதை நீயும் உன் குடும்பமும் சாப்பிட்டு மீதத்தை உன்னால் முடிந்த அளவு பகிர்ந்து கொடுத்து வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சி, அதிக பணம் சம்பாதித்து சேர்த்து வைத்து பிரோஜனம் என்ன? உன் வாழ்வை நீ மகிழ்ச்சியாய் வாழாமல் சேர்த்து வைப்பதில் உன் வாழ்க்கை முழுவதையும் வீணடிக்கிறாய், கடைசியில் அதை யாரோ அனுபவிக்கிறார்கள், அழகான உன் வாழ்வை நீயே கெடுக்காதே! மனநிறைவுடன் வாழ கற்றுக்கொள், எதிலும் மனரம்மியமாய் மகிழ்ச்சியாக இருக்கவும் கற்றுக்கொள், சற்று நிதானித்து பார் உன் தாய் தகப்பனை மனைவியை பிள்ளைகளை கணவனை பராமரிக்க நேரமின்றி ஓடுகிறாய் என்ன பிரயோஜனம்? பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார் (பிரசங்கி 2:26) என்று சொல்கிறது உனக்கு போதுமான அளவு நான் தருகிறேன் அதை கொண்டு உன் வாழ்வை உன் குடும்பத்தோடு எனக்கு பயந்து மகிழ்ச்சியாய் வாழு, இதுவே இந்த பூமியில் பெற்றுக்கொள்ளும் சந்தோஷம் ..

சங்கீதம் 119:28
சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

🎉 188வது சபைநாள் விழா 🎉
17/05/2026

🎉 188வது சபைநாள் விழா 🎉

இயேசுவைப் போல இன்று (17.05.2026)ஒரு சில தோல்விகளை கூட உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, மன தைரியமின்றி என்னால் இவற்றை த...
17/05/2026

இயேசுவைப் போல இன்று (17.05.2026)

ஒரு சில தோல்விகளை கூட உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, மன தைரியமின்றி என்னால் இவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என்று கலங்குகிறாய்,
யோபுவை பார் ஒரே நாளில் தன் வாழ்வில் அனைத்தையும் இழந்தார் பிள்ளைகள் செல்வம் நொடிப்பொழுதில் ஒன்றும் இல்லாமல் போனது அதைக் கேள்விப்பட்ட யோபுவின் மனநிலையை பார் கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் என்று சொல்லும் மன தைரியம் எப்படி வந்தது தெரியுமா? யோபு தன்னுடைய ஆசீர்வாதங்கள் அனைத்தும் பெற்றுக் கொள்ளும் போது அது கர்த்தர் கொடுத்தது என்ற உணர்வு அவர் உள்ளத்தில் இருந்தது ஆகவே தான் எல்லாம் அழிந்தபோதும் கர்த்தரை முறுமுறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார், ஆனால் நீ உன் வாழ்வில் பெறும் நன்மைகளை உன்னுடைய பலத்தால் பெற்றுக் கொள்வதாக நினைக்கிறாய், தோல்விகள் வரும்போது நான் அதை தருவதாக எண்ணுகிறாய் ஆகவேதான் உனக்குள் கலக்கம், பயம், நடுக்கம், என் மகனே/மகளே, நன்மையோ தீமையோ உன் வாழ்வில் நடைபெறும் அனைத்தும் என் பார்வை படாமல் நடக்காது, தோல்வியோ,வெற்றியோ என் பாதத்தில் வைத்துவிடு வெற்றிப்பார்த்து பிரம்மிக்காதே! தோல்வியை பார்த்து சோர்ந்து போகாதே! இவை அனைத்தும் வாழ்க்கையில் தோன்றி மறையும் நீ என் கரத்திலிருப்பதால் எதற்காகவும் கலங்க வேண்டாம் கர்த்தர் சகலத்தையும் செய்து முடிப்பார் அவர் எனக்கு வெற்றியை தருவார் என்ற நம்பிக்கையில் வாழ ஆரம்பி உன் மன கவலைகளை வெளியே தூக்கி வீசு..

யோபு :4 :4
விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்

16/05/2026

Address

Kadamalaikuntu, Mekkamandapam
Mulagumoodu

Opening Hours

Monday 5am - 11pm
Tuesday 5am - 11pm
Wednesday 5am - 11pm
Thursday 5am - 11pm
Friday 5am - 11pm
Saturday 5am - 11pm
Sunday 5am - 11pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI சேகர ஆலயம் கடமலைகுன்று posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share