20/08/2026
🔸*அரபி மொழியை கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம்*🔸
- *அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி*
- *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக்*
- *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி*
📌 *அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி ஹஃபிதஹுல்லாஹ்:*
எவரொருவர் ஷரீ'அஹ்வை சரியான, துல்லியமான புரிதலோடு புரிந்து கொள்ள விரும்புவாரோ, அவர் மீது அரபி மொழியை புரிந்து கொள்வதும், மேலும் (அரபி) பேச்சை எதனைக் கொண்டு புரிந்து கொள்ள இயலுமோ (அத்தகைய) அரபி மொழி தொடர்பான அடிப்படைகளை அறிந்து கொள்வதும் அவர் மீது கடமையாகும்.
இதன் காரணமாகவே கல்வியைத் தேடும் மாணவர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரிடத்தில் தற்போது இருக்கக்கூடிய தவறுகளில் உள்ளதாவது அவர்கள் அரபி மொழியை, அது காரணங்களில் இருந்துள்ள ஒரு விடயம் (இலட்சியமோ, நோக்கமோ அல்ல) என்பதை ஆதாரம் காட்டி அதனை அலட்சியம் செய்கின்றனர்.
இன்னும் நாவானது எதைக் கொண்டு சீர்படுத்தப்படுமோ அந்த அளவிற்குக் கூட அரபி மொழியில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. இதனால் குர்ஆன் ஸுன்னாஹ்விலுள்ள, மேலும் மார்க்க அறிஞர்களின் பேச்சுகளுடைய விடயத்தில் அவர்களது புரிதல் கெட்டு விடுகிறது.
குர்ஆன் ஸுன்னாஹ்வில் உள்ளவற்றையும், மேலும் மார்க்க அறிஞர்களின் புத்தகங்களில் உள்ளவற்றையும் புரிந்து கொள்வதில் அரபி மொழிக்கென பெரும் தாக்கம் இருக்கின்றது.
ஆகையால் கல்வியைத் தேடும் மாணவர்களை (அரபி) மொழி கற்பதில் கவனம் செலுத்துவதற்கு நான் ஊக்குவிக்கின்றேன்; நான் நாடுவதாவது: (அதிலுள்ள) சொற்களையும், பொருள்களையும் புரிந்து கொள்ளும் அளவிற்கான (கற்றலாகும்). இது ஒரு கல்வியைத் தேடும் மாணவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். [1]
📌 *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக் ஹஃபிதஹுல்லாஹ்:*
(மார்க்கக்) கல்வியிலும், த’அவாவிலும் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய மன்ஹஜோடு (வழிமுறையோடு) தொடர்புள்ள ஒரு விடயம் இருக்கின்றது. அதானது அரபி மொழியில் கவனம் செலுத்துவதாகும்.
குர்ஆனானது தெளிவான அரபி மொழியில் தான் இறக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வாறு குர்ஆனை நாம் விளங்கிக் கொள்வோம்? அதனுடைய செய்திகளை விளங்கிக் கொள்வோம்? அதனுடைய ஏவல்கள், விலக்கல்கள், வரம்புகள், வாக்குறுதிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்வோம்?
அல்லாஹ் அதில் நமக்கு விவரித்தவற்றை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்வோம்?
இன்னும் எவ்வாறு அவற்றைக் கொண்டு உள்ளங்கள் அசைக்கப்படும்? அது அபி மொழியைக் கொண்டு மட்டுமே.
எனவேதான் ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் வாளுக்கும் ஈட்டிக்கும் முன்பாக, கல்வியையும் குர்ஆனையும் கொண்டு வென்றெடுத்த எந்தவொரு தேசத்திலும் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது, அவர்கள் முதன்முதலாக அரபு மொழியையே மக்களுக்குக் கற்றுக்கொடுப்பர். எனவேதான் அரபி மொழியும், அரபி மொழியின் புரிதலும் (அந்நாடுகளில்) பரவியது.
(எந்த அளவிற்கு அரபி மொழி பரவியது என்றால் அரபிகள் அல்லாத) மற்ற சமூகங்களில் பிறந்தவர்கள் கூட நமக்கு அரபி மொழியின் அடிப்படைகளை வகுத்துக் கொடுத்தனர். அதற்கு காரணமாவது அவர்கள் அதற்கு கொடுத்த அக்கறையும், அவர்கள் அதற்குக் காட்டிய அதீத முக்கியத்துவமும் ஆகும்.
இதன் காரணமாகவே பூமியின் கிழக்குப் பகுதியிலும், அதனுடைய மேற்குப் பகுதியிலும் உள்ள மார்க்க அறிஞர்களிலுள்ள ஸாலிஹீன்களை மக்களுக்கு அரபி மொழியை கற்பிப்பதில் ஆர்வத்துடன் முனைப்பு காட்டுவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.
ஏன்? அது அரபி இனத்தின் மொழி என்பதற்காக அல்ல, இல்லை. அது இஸ்லாத்துடைய மொழி, குர்ஆனுடைய மொழி, அல்லாஹ்வை - ஜல்ல வ அலா - பற்றியும், அவனது தூதரைப் பற்றியுமான மார்க்கப் புரிதலை பெறுவதற்கான மொழி என்பதற்காக ஆகும்.
இதன் காரணமாகவே அரபி மொழியை கற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதானது, இது ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய த’அவாவின் வழிமுறையிலுள்ள சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.
(அரபியல்லாத) சமூகங்களுடைய மொழிகளில் த’அவா செய்ய மாட்டார்கள், இன்னும் அவர்களை மார்க்க விளக்கம் பெறாதவர்களாக விட்டு விடமாட்டார்கள். (அவர்களிடம்) நீங்கள் வாருங்கள் எனக் கூறி, இஸ்லாத்தில் சில விடயங்களைக் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு, உங்களது மொழியைக் கொண்டு நீங்கள் த’அவாவை மேற்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர்களை விட்டு விடமாட்டார்கள். (மாறாக) அவர்களுக்கு அரபி மொழியைக் கொண்டே இயன்றவரை கற்றுக் கொடுப்பார்கள்.
*அரபி மொழியை அறியாத நிலையில் உள்ளவர் அவருடைய த’அவாவில் தெளிவான ஞானமுள்ள ஒரு தா’ஈயாக இருக்க முடியாது.* [2]
📌 *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ்:*
நானும் நீங்களும் அதன் பக்கம் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்; அதானது ஆழமான வேரூன்றலின் அவசியமாகும். மார்க்கக் கல்வியைத் தேடும் மாணவரே! அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளரே! அரபி மொழியின் கல்வியில் ஆழமான வேரூன்றலின் அவசியத்தின் பால் (நானும் நீங்களும் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்).
ஷரீ'அஹ்வுடைய கல்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்களில் ஒருவராக நீ இருக்க விரும்பினால், (அதனை) ஆதரவு வைத்து தேடுபவராக இருந்தால், அரபி மொழியின் கல்வியில் ஆழமாக வேரூன்றுவது கட்டாயமாகும். ஏனெனில் அதில் முக்கியமான அடித்தளமானது, அரபி மொழியின் அறிவியல்களில் நீ நன்கு தேர்ச்சி பெற்றவனாக இருப்பதாகும்.
*(கல்வியில்) வேரூன்றிய அறிஞர்களின் வரலாறுகளை எவ்வளவு நீ சிந்தித்துப் பார்த்தாலும், ஒரு வேரூன்றிய ஆலிமை உன்னால் காண இயலாது அவர் அரபுகளின் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவராக இருந்தே தவிர.*
குர்ஆனும் ஸுன்னாஹ்வும் தெளிவான அரபி மொழியில் இறங்கியுள்ளன, வந்தடைந்துள்ளன. எனவே அரபி மொழியில் நீ பலவீனமானவனாக இருந்தால், ஷரீ’அஹ்வை விளங்கிக் கொள்ள வேண்டிய விதத்தில் உன்னால் விளங்கிக் கொள்ள இயலாது, மேலும் மார்க்க அறிஞர்களின் பேச்சுக்களை உன்னால் சூழ்ந்தறிய முடியாது. எந்தளவிற்கு உன்னால் (அதில்) ஆழ்ந்து செல்ல இயலுமோ (அவ்வாறு செய்வாயாக), உன்னை (அதிலிருந்து) தடுத்துக் கொள்ளாதே, இன்னும் (அதில்) உன் மீது கருமித்தனம் காட்டாதே.
அரபி மொழியின் அறிவியல்களில் உனது படிப்பை அதிகப்படுத்துவாயாக; நஹ்வு மட்டுமல்ல, நஹ்வு படிப்படியாக, ஸர்ஃப் படிப்படியாக, மேலும் மொழியின் சொற்களஞ்சியம் பற்றிய கல்வியையும் படிப்பாயாக.
உதாரணத்திற்கு கைரோவில் உள்ள மஜ்மஉல் லுகத்தில் அரபியா தொகுத்த அல்முஃஜமுல் வஸீத் (என்ற அகராதியை) உன் அருகில் வைத்துக் கொள்; ஏனெனில் அது உனக்கு பயனளிக்கக்கூடிய ஒரு புத்தகமாகும்.
உன்னைக் கடந்து செல்லக்கூடிய எந்தவொரு சொல்லாயினும், நீ அதனுடைய பொருளை அறியவில்லையெனில் அல்லது அதனுடைய பொருளைக் குறித்து சந்தேகித்தாய் எனில், இந்த புத்தகத்தைத் திறந்து வாசிப்பாயாக. காலப்போக்கில் மொழியில் ஒரு நல்ல (சொல்)வளத்தை அடைந்தவனாக நீ இருப்பாய்.
இந்த புத்தகத்தை உன் அருகில் வைத்துக் கொள், அதில் பார்ப்பதை சுமையாகக் கருதாதே; அல்முஃஜமுல் வஸீத் அல்லது அல்மிஸ்பாஹுல் முனீர் (போன்ற அகராதிகளை உனது அருகில் வைத்துக் கொள்). முக்கியம் என்னவென்றால் இச்சுருக்கமான அகராதிகளில் (ஒன்றை) உன் அருகில் வைத்துக்கொள், மேலும் அதில் அதிகமாக வாசிப்பாயாக.
அதப் (இலக்கிய) புத்தகங்களையும் படியுங்கள், உங்களுடைய (மொழி)நடை கட்டாயமாக உயரவும் மேலோங்கவும் வேண்டும்.
இலக்கிய புத்தகங்களை வாசிப்பதன் மூலமே இது ஏற்படும்; அது பண்டைய கால இலக்கியவாதிகளின் புத்தகங்களாக இருந்தாலும் சரி அல்லது சமகால இலக்கியவாதிகளின் புத்தகங்களாக இருந்தாலும் சரி. அதாவது கடந்த ஹிஜ்ரி நூற்றாண்டில் இருந்த வர்கத்தினர். இலக்கியவாதிகளில் ஒரு கூட்டத்தினர் இருந்தனர், அவர்களுடைய மொழிநடையானது மிகவும் மேலோங்கியதாக இருக்கும். (அவற்றை வாசிப்பதானது) உனக்கு மொழிக் கருவூலத்தையும், நல்லதொரு இலக்கிய வளத்தையும் பெற்றுத்தரும்.
முக்கியம் என்னவென்றால் இயன்ற அளவிற்கு மொழியின் அறிவியல்களில் ஆழமாக கற்றுக் கொள், இயன்ற அளவுக்கு அரபி மொழியில் தேர்ச்சி பெறுவாயாக. இது குர்ஆனையும், ஸுன்னாஹ்வையும், மார்க்க அறிஞர்களின் பேச்சுகளையும் புரிந்து கொள்வதில் மிகப்பெரும் தாக்கத்தை உன்மீது ஏற்படுத்தும்.
அல்லாஹ்விடம் - அஸ்ஸ வஜல் - உங்களுக்கும் எனக்கும் வெற்றியையும், நேர்வழியையும், உதவியையும் கேட்கின்றேன், மேலும் தெளிவான ஆதாரத்தின் மீதிருந்து அல்லாஹ்வின் பக்கம் த’அவா பணி செய்யக்கூடிய, அமல் செய்யக்கூடிய உலமாக்களிலும் ஆக்கி வைப்பானாக என கேட்கின்றேன். [3]
[1] https://youtu.be/GwzqEwbfUmw?si=KtZmqHzJ3RyS9K5X
[2] https://youtu.be/67BIvuvZFuA?si=l2KHsc2aUfABLGF_
[3] https://youtu.be/llKmnAdJ7ew?si=PaC4LkTmXr-0uVfs
📜 அரபியுடன் வாசிக்க:
https://tinyurl.com/ufft94wu
🌐 வளைதளம்:
salafiyyah.in