15/05/2023
*ஸ்ரீ ஹரயே நம:*
*யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை*
நமஸ்காரங்கள் , நமது *ஸ்ரீ ப்ரேமிக ப்ருந்தாவனம் கோசாலை* திறந்து இன்றுடன் *15/05/2023* *ஒரு வருடம்* ஆகிவிட்டது...
இறைவன் அருளினாலும் , தங்களை போன்ற கோ-பாலகர்களின் ஆதரவினாலும் நமது பசுக்கள் அனைத்தும் நலமுடன் உள்ளன.. கோசாலையில் பசுக்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு உஷ்ணம் தனிய நன்கு குளிப்பாட்டுதல் , சிறந்த உணவுகள் , காய்கறிகள் , அகத்திக்கீரை போன்றதான ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கபட்டு வருகின்றன. கோபூஜையும் அன்பர்கள் விருப்பத்திற்கேற்ப நடைபெற்று வருகின்றன.
நம்முடைய குறிக்கோளானது வேதம் போற்றிடும் கோவினை இறைச்சிகூடங்களிற்கு செல்லாமல் பாதுகாத்தலும், பூஜித்தலும் அதன் மூலமாக நமது ஜாதகத்தில் ஏற்படுகின்ற பித்ரு தோஷம் முதலான அனைத்து தோஷங்களில் இருந்து விடுபடுதலும் , க்ராமத்தில் மக்களிற்கு சுயசார்பு வேலை வாய்புகளை கொடுப்பதுமாகும்..
உள்ளூர் அன்பர்கள் பலர் தாமாகவே முன்வந்து பசுக்களிற்கு அகத்திக்கீரை , புற்கள், தீவனங்கள் போன்ற உணவுகளை வழங்கி வழிபடுகின்றனர்...
*மேலும் மேலும் இத்தகைய தர்மத்தில் தாங்கள் ஈடு பட்டு* *தங்களுடைய பிறந்த நாள், திருமண நாள் , பெரியோர்களின்* *நினைவுநாள் போன்றதான முக்கிய நாட்களில் கோசேவா* *கைங்கர்யத்தில் ஈடுபட இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம்..*
*தங்களின் ஆதரவிற்கு எங்களுடைய வணக்கங்கள்*
*ஸ்ரீ ப்ரேமிக ப்ருந்தாவனம் கோசாலை*
*மேல அக்ரஹாரம்* , *மாதிரிமங்கலம்*,
*குத்தாலம் தாலுக்கா* , *மயிலாடுதுறை மாவட்டம்* , - *609 801*
*9445004000 / 9488016433*
*வந்தே கோ மாதரம்*