26/04/2021
#ஒரு_பாவாடையும்_ஆக்சிஜனும்
ஆக்சிஜனை கண்டுபிடித்த ஆங்கிலேயரான ஜோசப் பிரீஸ்ட்லி(Joseph Priestley) ஒரு வேதியியல் விஞ்ஞானி மட்டுமன்றி ஒரு கிறிஸ்தவ இறையியலாளரும்(Theologian & Bible Teacher), சபை போதகரும்(Church Pastor) கூட. இன்று பலருடைய உயிரை காக்க உதவும் கண்டுபிடிப்பை கொடுத்த ஜோசப் பிரீஸ்ட்லிக்கு நன்றிகள்.
இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டி இருக்கிறது? தங்களுடைய தவறை விமர்சிப்பவர்களை கிறிஸ்தவ பாவாடைகள் , இஸ்லாமிய கைக்கூலிகள், சீன கைக்கூலிகள் என கட்டத்துக்குள் அடைத்து தங்கள் தவறை உணராத,திருந்த மனமில்லாத காவிகளுக்கு அறிவு வருமா என்று தான்.
உங்களுடைய மத நம்பிக்கை அறிவியலுடன் ஒத்துப்போவதாக இருக்க வேண்டுமே தவிர அரைவேக்காடு கொட்டடிப்பதாக இருக்க கூடாது.
பிரீஸ்ட்லியின் விஞ்ஞானம் அவரது இறையியலுடன் ஒருங்கிணைந்ததாக இருந்தது, மேலும் தனது அறிவொளி பகுத்தறிவுவாதத்தை கிறிஸ்தவ தத்துவத்துடன் இணைக்க அவர் தொடர்ந்து முயன்றார். இயற்கை உலகத்தைப் பற்றிய சரியான புரிதல் மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் இறுதியில் கிறிஸ்தவ ஆயிரம் வருட இறையாட்சியையும் கொண்டுவரும் என்றும் அவர் நம்பினார்.
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தை கடுமையாக நம்பிய பிரீஸ்ட்லி, மத எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களை சகித்தல், அவர்களுக்கு சம உரிமைகள் கொடுப்பதை ஆதரித்தார். தொழிலாளர்களின் உரிமைக்கான பிரெஞ்சு புரட்சியை அவர் வெளிப்படையாக ஆதரித்ததால் பலத்த எதிர்ப்பை சந்தித்தார்.
இதனால் கலகக்காரர்களால் அவரது பர்மிங்காம் வீடு மற்றும் அவர் போதகராயிருந்த தேவாலயம் எரிக்கப்பட்தால் 1791 ஆம் ஆண்டில் அவர் முதலில் லண்டனுக்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இறை நம்பிக்கை கொண்ட பிரீஸ்ட்லி மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் தனது அறிவியல் பகுத்தறிவை சரியாக பயன்படுத்தினார்.
இந்தியாவில் மத நம்பிக்கை அதிகம் கொண்ட மதவாதிகளுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் பாவாடைகள் என நீங்கள் அழைக்கும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரால் தான் இன்று பலருடைய உயிரை காக்கும் ஆக்சிஜன் கண்டுபிடிக்கப்பட்டது.
நீங்களும் உங்கள் மத நம்பிக்கையை அறிவியலாக்க முயற்சிக்காமல் ஏதாவது ஒன்றை உருப்படியாக கண்டுபிடித்து மனிதத்தை காக்கவும்.
அறிவியலுக்கு மதமில்லை.
மதம் பிடித்தவர்கள் மனிதர்களுமில்லை.
மதத்தை விட மனிதம் உயர்ந்தது.