30/10/2014
10:57:15Thursday2013-12-26ராஜசேகர பாண்டியனும், கோப்பெருந்தேவியும் மணிகண்டனை சீராட்டி, பெரிதும்பாராட்டி வளர்த்து வந்தனர். கானகத்தில் புல் மஞ்சத்தில் தங்கள் பிள்ளையில்லாக் குறை தீர்க்க, தங்களுக்காகவென்றே தோன்றியதுபோல கிடைத்தவன்தான் மணிகண்டன். ஆனால், அவனது பன்னிரண்டாவது வயதில் கோப்பெருந்தேவிக்கும் ராஜசேகரனுக்கும் சொந்தமாக ஒரு வாரிசு உருவானபோதுதான் பிரச்னை ஆரம்பித்தது. ராணி, மணிகண்டனை வெறுக்கத் தொடங்கினாள். தன் உதிரத்தில் உதிக்காதவன் என்று உதாசீனப்படுத்தினாள். அதுமட்டுமல்லாமல், தன் கணவனுக்குப் பிறகான அரசப் பதவி தன் சொந்தக் குழந்தைக்குதான் கிட்டவேண்டும் என்ற வேட்கையில் மணிகண் டனைக் கொல்லவும் துணிந்தாள். இதற்குகெடுமதி படைத்த மந்திரியும் சதியாலோசனை சொல்ல, தனக்கு கடுமையான தலைவலி வந்தவள்போல நடித்தாள் ராணி. ஏற்கெனவே திட்டமிட்டபடி அரண்மனை வைத்தியரும் ராணியாரின் தலைவலி நீங்க புலிப்பால் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அதற்காக மணிகண்டன் புலிப்பாலைக் கொண்டுவர வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.மன்னன் எவ்வளவோ சொல்லி, மறுத்து, தடுத்துப் பார்த்தும், மணிகண்டன் புன்னகையுடன் கானகம் ஏகினான்.அங்கே பிரம்மனை நோக்கி அவன் தவம் செய்ய, இவனுடைய தேவையைப் புரிந்துகொண்ட பிரம்மன் தானேபெண் புலியாக வந்து ஒரு குவளையில் பால் சுரந்து கொடுத் தான். தேவர்களும் புலிகளாக மாறி சூழ்ந்திருக்க,மணிகண்டன், அந்தப் புலிப்பாலுடன் நகருக்குத் திரும்ப யத்தனித்தான். அவனைத்தடுத்தான் இந்திரன். ‘‘மணிகண்டா, நீ தனியே போகாதே, நானும் வருகிறேன்’’ என்றான். ‘‘எதற்காக?’’ என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் மணிகண்டன். புலியாக மாறியிருக்கும் இந்திரன் வருவதால் நாட்டில் ஏதேனும் குழப்பம் ஏற்ப ட்டுவிட்டால், மகாராணியாரின் கோபம் இன்னும்அதிகமாகிவிடுமே, அதனால் தனக்குத் தந்தையாரின் அன்பு முற்றிலும் கிட்டாமல் போய்விடுமே என்று பயந்தான் அவன். ஆனால் இந்திரனோ, ‘‘மணிகண்டா, உன்னைக் கொடுமைப்படுத்தி, எப்படியாவது நாட்டைவிட்டு உன்னைத் துரத்திவிடவேண்டும் என்பதுதான் உன் அன்னையாரின் விருப்பம். இப்போது நீ இந்தக் குவளையைக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்து, ‘‘இந்தாருங்கள், புலிப்பால்.உங்கள் தலைவலி தீர இதிலிருந்து மருந்து தயாரிக்கச் சொல்லுங்கள்’’ என்று நீ எவ்வளவுதான் பாசமாகச் சொன்னாலும், உன்மீதுஅவர்களுக்கு இரக்கம் ஏற்பட்டுவிடுமா என்ன? அதைவிட,‘‘இது புலிப்பால்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? நீ ஏமாற்றுகிறாய். நாங்கள் நம்பமாட்டோம். ஆகவே, இதை இங்கேவைத்துவிட்டு, மீண்டும் காட்டிற்குப் போய் சிங்கப் பால் கொண்டுவா அல்லது யானைப் பால் கொண்டுவா’’ என்று உன்னை மீண்டும் விரட்ட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே, நான் புலியாகவே வருகிறேன். நீ என் மீது ஏறிக்கொள். அரசவையில் நாம் நுழைந்தால் நீ கொண்டுவந்திருப்பது புலிப்பால்தான் என்பது ஊர்ஜிதமாகிவிடும். அவர்களும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள்’’ என்று பக்குவமாக யோசனை சொன்னான்.எல்லாம் தெரிந்திருந்தும், விளைவுகளை முன்கூட்டியே சிந்தித்திருந்தும் மணிகண்டன், மென்புன்னகையுடன் இந்திரப் புலி மீது அமர்ந்து அரண் மனை நோக்கிச் சென்றான்.