ஆலயம் அறிவோம்

ஆலயம் அறிவோம் Catholic Churches with details
(2)

நாளிதழின் வழியாக ஆலயம் அறிவோம் பதிவு...
14/06/2026

நாளிதழின் வழியாக ஆலயம் அறிவோம் பதிவு...

✝️ஆலயம் அறிவோம் வரிசையில் 1,076-வதாக இன்று "தூய தைநேசி மாதா திருத்தல ஆலயம், பார்வதிபுரம்" குறித்த தகவல்களை பதிவு செய்கின...
14/06/2026

✝️ஆலயம் அறிவோம் வரிசையில் 1,076-வதாக இன்று "தூய தைநேசி மாதா திருத்தல ஆலயம், பார்வதிபுரம்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.
🌽🍆🧅🍆🌽🍆🌽🍆🌽🍆🌽🍆🌽🍆🌽🍆🌽🍆

🛐பெயர்: தூய தைநேசி மாதா திருத்தல ஆலயம்
🍓இடம்: குருசடி தெரு, பார்வதிபுரம்,
நாகர்கோவில் -629003

🍇மாவட்டம்: கன்னியாகுமாரி
🍑மறைமாவட்டம்: மார்த்தாண்டம்
🍏மறைவட்டம்: நாகர்கோவில்

🌻நிலை: பங்குத்தளம்
💐பங்குதந்தை: Rev.Fr. அபின்சன் அலெக்ஸ்
👉Mob:+91 83008 30131

👪குடும்பங்கள்: 32
☂️அருள்வாழ்வியங்கள்: 5
💚புனித தோமையார் அருள்வாழ்வியம்
❤️புனித சவேரியார் அருள்வாழ்வியம்
💜புனித அந்தோனியார் அருள்வாழ்வியம்
💛புனித சூசையப்பர் அருள்வாழ்வியம்
💙புனித ஜார்ஜியார் அருள்வாழ்வியம்

ஆராதனை நேரங்கள்:
✝️ஞாயிறு காலை 9.00 மணி காலை ஜெபம், திருப்பலி

✝️புதன் மாலை 5.00 மணி மாலை ஜெபமாலை, திருப்பலி

✝️சனிக்கிழமை காலை 10.00 மணி ஜெபமாலை, 10:30 மணி நவநாள், 11.00 மணி திருப்பலி, 12:15 மணி நற்கருணை ஆராதனை, சாட்சியப் பகிர்வு,12:45 மணி நேர்ச்சை கஞ்சி.

🎉திருவிழா: ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையின் போது 5 நாட்கள் நடைபெறும்

👉வழித்தடம்: பார்வதிபுரம் மேம்பாலம் கீழ் பஸ் நிறுத்தத்திலிருந்து, இலந்தையடி செல்லும் சாலையில் 100 மீட்டர் தொலைவில் வலது புறமாக ஆலயம் அமைந்துள்ளது.

👉Map:
https://share.google/NPwi3Horh4MjqOJln

ஆலய வரலாறு:
# # # # # # # # # # # # # #
🪴மேற்குத் தொடர்ச்சி மலைகள் மேகங்களைத் தழுவி நிற்கும் கன்னியாகுமரி மண்ணில், இயற்கையின் பேரழகையும், இறையருளின் பேரொளியையும் தன்னகத்தே தாங்கி நிற்கும் புனிதத் தலமாக விளங்குகிறது பார்வதிபுரம் தூய தைநேசி மாதா திருத்தல ஆலயம். காலத்தின் சாட்சியாகவும், பக்தர்களின் நம்பிக்கையின் அடையாளமாகவும், அன்னையின் அன்பு நிறைந்த அரவணைப்பின் இல்லமாகவும் இந்தத் ஆலயம் திகழ்கிறது. இந்தப் புனித மண்ணை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு ஜெபமாகவும், இங்கு உயர்த்தப்படும் ஒவ்வொரு பார்வையும் ஒரு நம்பிக்கையாகவும், அன்னையின் சன்னிதியில் சிந்தப்படும் ஒவ்வொரு கண்ணீரும் ஒரு ஆறுதலாகவும் மாறுகிறது. இயற்கையின் அமைதியோடு இணைந்த இந்தத் திருத்தலம், மனித உள்ளங்களை இறைவனை நோக்கி உயர்த்தும் ஆன்மிகப் பாலமாக விளங்குகிறது.

🦋அத்தகைய அருள்நிறைந்த திருத்தலத்தின் பெருமை, வரலாறு, இயற்கை வளம், பக்தி அனுபவம் மற்றும் அன்னையின் அன்பின் ஆழம் ஆகியவற்றை கூறும் இந்த தொகுப்பு வெறும் சொற்களின் தொகுப்பல்ல; அன்னையின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் பக்தி மலர்களாகும். பசுமை மலையின் நிழலில், தென்றல் காற்றின் இசையில், மணியோசையின் இனிமையில், அன்னையின் அருள் கதைகளைப் பாடும் இந்த தொகுப்பு, வாசிக்கும் ஒவ்வொரு உள்ளத்திலும் நம்பிக்கையை விதைத்து, அன்பை வளர்த்து, இறைநெருக்கத்தை ஏற்படுத்தட்டும்.

🍊கிபி 1710 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டை சார்ந்த இயேசு சபை குருவானவர், கான்ஸ்டான்ஸோ ஜோசப் பெஸ்கி என்பவர் ( தைரியநாதர் என்னும் வீரமாமுனிவர்). இவர் மறைப்பரப்பு பணிக்காக தனது முப்பதாம் வயதில் கோவா வந்தடைந்தார். சிறிது காலம் கோவாவில் தங்கிய அவர் தமிழகம் வர எண்ணி கடல் மார்க்கமாக கேரளாவில் கொச்சி வந்தடைந்தார். பின்னர் கால்நடையாக அம்பலக்காடு வந்து சிறிது காலம் தங்கி விட்டு மதுரை நோக்கி பயணமானார். செல்லும் வழியில் பார்வதிபுரம் பகுதியில் குளத்தின் அருகில் குடிசை அமைத்து ஓய்வெடுப்பதற்காக சிறிது காலம் தங்கினார். அப்பொழுது, ஒரு கல்குருசை (கற்சிலுவை) நட்டுச் சென்றார் என்பது வரலாறு.

✝️பின் நாட்களில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை (இன்று புனித தேவ சகாயம்) மறைவிற்குப் பிறகு அவரின் நினைவாக வீரமாமுனிவர் கல்குருசின் அருகில் ஒரு சிறிய கல் குருசு நாட்டப்பட்டது என்பதும் வரலாறு.

🏵️சில காலங்களுக்கு பிறகு திருவிதாங்கோடு பகுதியை சார்ந்த, கிறிஸ்துவின் மீது அதிக விசுவாசம் கொண்ட சைனிக்கிரியா என்ற பெண் இந்த கல் குருசுகளால் ஈர்க்கப்பட்டு, தினமும் ஒரு மண் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு, சிலுவையின் கீழ் தீபமாக ஏற்றி வழிபட ஆரம்பித்தார். கி.பி 1885 முதல் கி.பி 1924 வரையிலான திருவிதாங்கூர் மன்னர் ஆறாம் ராஜவர்மா என்று அழைக்கப்பட்ட மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ ராஜ வர்மா VI அவரின் ஆட்சி காலத்தில், ஒரு நாள் தன்னுடைய குதிரையில் நகர் வலமாக இந்தப் பகுதிக்கு வந்தபோது அவரின் குதிரை அதிகமாக கனைத்து, மன்னரை குதிரையில் இருந்து கீழே தள்ளி அடம்பிடித்து அவ்விடத்தில் படுத்து கொண்டது. உடனே மன்னர் சேவகர்களை அழைத்து அருகில் கோவில்கள் ஏதாவது இருந்தால் விபூதி எடுத்து வர கூறினார். அவர்கள், திரும்பி வந்து கோவில்கள் எதுவும் இல்லை. ஆனால், ஒரு சிலுவையின் கீழ் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருப்பதாக கூறினர். உடனே, அவர் அவ்விடத்திற்கு சென்றார். அங்கு சிலுவையின் கீழ் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து எண்ணெய் எடுத்து குதிரையின் நெற்றியில் பூசினார். உடனே, குதிரை உற்சாகமாக எழுந்து நின்றது. அப்போது, மிக்க மகிழ்ச்சி அடைந்த மன்னர் அங்கிருந்த சைனிக்ரியா என்ற பெண்ணிடம் அந்த இடத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். பின்பு, அவர் அவரிடம் உமக்கு என்ன உதவி வேண்டும் என கேட்டுள்ளார். சைனிக்கிரியா அவரிடம் தனக்கு இந்த இடத்தை தானமாக தருமாறு வேண்டிக் கொண்டதால், மன்னர் சைனிக்கிரியாவிற்கு 18 சென்ட் நிலம் தானமாக வழங்கினார். அது மட்டுமல்லாமல், ஓலை குடிசையாக இருந்த அந்த ஆலயத்தை ஓடு வேய்ந்த ஆலயமாகவும் கட்டிக் கொடுத்தார்.

🌺கி.பி 1924 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில், ஒருமுறை கார்த்திகை மாதம் காலரா நோய் வந்து அந்தப் பகுதியில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இறந்தனர். அப்போது, சைனிக்கிரியா அந்த குருசின் கீழ் விளக்கேற்றி, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கஞ்சி காய்த்து இந்த பகுதி மக்களுக்கு தானம் செய்வேன் காலரா நோயை நீக்கி தாரும் என மன்றாடினார். அவரின், வேண்டுதல்படி காலரா நோய் அந்தப் பகுதியில் முற்றிலுமாக குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு சைனிக்கிரியா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் கஞ்சி காய்த்து இப்பகுதி மக்களுக்கு தானம் செய்ய ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து இதை அறிந்த மக்கள் இங்கு ஏராளமாக வந்து ஜெபிக்க ஆரம்பிக்க தொடங்கினர். அவ்விடம் “குருசடி” என அன்று முதல் அழைக்கபட்டது.

🌹சைனிக்கிரியா முதிர் வயதில் இந்த இடத்தை பராமரிக்க இயலாமல் அதன் பொறுப்பை தன் மகன் முத்தையாவிடம் ஒப்படைத்தார். முத்தையா தனது அக்கா மரியம்மாவோடு சேர்ந்து இந்த குருசடியை பராமரித்து வந்தனர். முத்தையா சில நாட்களுக்குப் பிறகு, வறுமையினால் அந்த இடத்தை சிறிது சிறிதாக விற்கத் தொடங்கினார். இதனால், முத்தையாவின் மகள் அந்தோணியம்மாள் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு, ஆலயத்தை பராமரிக்க ஆரம்பித்தார். தன் பாட்டி செய்தது போல தினமும் விளக்கேற்றி, ஒரு சிறிய மாதா சுரூபம் வைத்து ஜெபமாலை, மாலை நேர வழிபாட்டை ஆரம்பித்தார். தன் பாட்டியைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் நேர்ச்சை கஞ்சி வைத்து மக்களுக்கு வழங்கினார். தன் வறுமை நீங்க ஜெபிக்க ஆரம்பித்த அந்தோணியம்மாளின் வறுமை குறைய ஆரம்பித்தது. பின்னர் அவர் கஞ்சிக்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாசம் 9 ஆம் நாள் பாயாசம் வழங்க ஆரம்பித்தார்.

🍓குருசடியில் நடக்கும் அதிசயங்களை அறிந்த சுற்றுவட்டார மக்கள் இன்னும் ஏராளமானோர் வந்து தங்கள் வறுமை போக்கவும், நோய் பிணிகள் நீக்கவும் வேண்டி அங்கு தங்கி ஜெபிக்க ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் நாகம்மாள் என்ற பெண்மணி, தனது உடலில் ஒரு கட்டியோடு தனது குழந்தையையும் தாயையும் அழைத்து இங்கு வந்து தங்கி ஜெபிக்க ஆரம்பித்தார். அப்போது அங்கிருந்த மக்கள் அவரை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்திய போதிலும், அவர் அதிக விசுவாசத்துடன் அங்கேயே தங்கி ஜெபித்தார். அவர் தேங்காய் எண்ணெய் வாங்கி வந்து, அதை கல்குருசின் மீது பூசி அதை எடுத்து தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டு தினமும் ஜெபிப்பார். ஒரு நாள் அவர் ஜெபித்து விட்டு இரவு தூங்கும் போது கனவில் ஒரு காட்சியைக் கண்டார். அந்த கனவில் ஆலயத்தின் முன்பு ஒரு ரதம் வந்து நின்றது. அதிலிருந்து, ஒரு செல்வந்தர் இறங்கி ஆலயத்தின் உள் வந்து தூங்கிக் கொண்டிருந்த நாகம்மாள் நெத்தியில் சிலுவை வரைந்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் அவள் உடலில் இருந்த கட்டி உடைந்து விழுந்து இருக்கிறது. பின்னர், அவர் ஒரு புதிய துணியை வாங்கி அதை மூன்று துண்டாக கிழித்து, ஒரு பகுதியை ஆலயம் முன்பு போட்டு எரித்து சிலுவையில் இருந்து எண்ணெயை எடுத்து குழைத்து. புண்ணிற்கு மருந்தாக அதை தினமும் பூசிக்கொண்டு குணமானார். அதன் பிறகு நாகம்மாள் கிறிஸ்துவை இன்னும் அதிகமாக ஏற்றுக் கொண்டு அந்த ஆலயத்தை தன் சொந்த இடம் போல பராமரிக்க ஆரம்பித்தார். இந்நிகழ்வை கேள்விப்பட்ட பிறகு இன்னும் ஏராளமான மக்கள் வந்து மாலை நேர ஜெபமாலை வழிபாட்டில் கலந்துக்கொண்டு ஜெபிக்க ஆரம்பித்தனர்.

🌾அந்தப் பகுதியானது, விவசாயப் பகுதி என்பதால் விவசாய பொருட்களான நெல், வாழை, தேங்காய், போன்றவற்றை மக்கள் நேர்ச்சை காணிக்கையாக வைத்து வழிபட ஆரம்பித்தனர்.

🌽கி.பி 1987 ஆம் ஆண்டு பெதனி துறவற கன்னியர் இல்ல அருட்சகோதரி. மெல்கா அவர்களின் துணையோடு அன்றைய மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்ட மறைமாவட்ட மேதகு. ஆயர் லாரன்ஸ்-மார்-எப்ரேம் ஆண்டகை அவர்கள் இந்த இடத்தை திரு. முத்தையா அவர்களிடம் இருந்து முறையாக வாங்கினார்கள்.

🍇ஒரு சிறிய ஆலயம் கட்டி திருவிழா நடத்த அன்றைய பங்குத்தந்தை. மரிய அற்புதம் மற்றும் மேதகு. ஆயர். யூஹோனோன் -மார்-கிறிஸோஸ்டோம் ஆண்டகை ஆகியோரால் முடிவு செய்யப்பட்டு, ஜனவரி 15 நாள் விதையை குறித்து அன்னையின் விழா என்பதையும், தமிழர்களின் அறுவடை நாளாகிய பொங்கல் விழாவையும் ஒன்றித்து அன்னைக்கு விழா எடுக்கும் பொருட்டு அதிக விளைச்சலை கொடுத்து தை மாதத்தில் மக்களை அதிகமாக நேசித்து வரும் மாதாவிற்கு “தைநேசி மாதா” என பெயர் சூட்டி கிபி 1988 ஜனவரி மாதம் 15 ஆம் நாள் ஆலயத்தை அர்ப்பணம் செய்து முதல் திருவிழா நடத்தப்பட்டது.

💐கி.பி 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 நாள் திரு. வர்கீஸ் என்பவருக்கு முதல் திருமுழுக்கு பங்கு தந்தை மரிய அற்புதம் அவர்கள் வழங்கினார்கள். அன்றைய நாட்களில் சனிக்கிழமை மாலை ஜெபம் மற்றும் திருப்பலி மலங்கரை கத்தோலிக்க முறைப்படி சிறப்பாக நடைபெற்று வந்தது.

🍇கி.பி 1998க்கு பிறகு வந்த மேதகு. ஆயர். யூஹோனோன் -மார்-கிறிஸோஸ்டோம் ஆண்டகை அவர்கள், ஆலயத்தை விரிவுபடுத்த எண்ணி குருசடி அருகில் உள்ள முத்தாபரணம் என்பவரிடமிருந்து 3 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் வந்த பங்குத்தந்தையர்களின் முயற்சியில் கி.பி 2000 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.

🙏கி.பி 2006 ஆம் ஆண்டு தூய தைநேசி மாதாவின் பெயருக்கு ஏற்றார் போல் ஒரு சொரூபம் செய்ய வேண்டும் என்று அன்றைய பங்குத்தந்தை. ஜஸ்டின் அவர்கள் ஆயரின் அனுமதியுடன் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் பாரம்பரியத்தோடு கூடிய ஒரு மாதா சுரூபத்தை உருவாக்கி, 12-02-2007 (ஞாயிற்றுக்கிழமை) மேதகு. ஆயர். யூஹோனோன்-மார்-கிறிஸோஸ்டோம் ஆண்டகை அவர்களால் மிகவும் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டது.

🍑ஆலய முகப்பானது கி.பி 2010 ஆம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை. ஜாண் குமார் அவர்கள் ஆலயத்திற்கு கோபுரம் மிக அவசியம் என்பதை உணர்ந்து கோபுரத்திற்கான கட்டுமான பணிகளை துவங்கி 11-01-2011 மேதகு. ஆயர். வின்சென்ட்- மார்-பவுலோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

🌈ஆலய பலிபீடமானது, கி.பி 2015 ஆம் ஆண்டு பங்குத்தந்தை. அர்னால்டு டயஸ் அவர்களின் முயற்சியால் மறு சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன், ஜனவரி 14 இல் மேதகு. ஆயர். வின்சென்ட்- மார்-பவுலோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அன்றைய தினமே ஆலயத்தின் முன்புறம் புனித தேவசகாயம் குருசடி ஆசிர்வதிக்கப்பட்டு நிறுவப்பட்டது.

🌾அறுவடையின் நாயகியாகிய தைநேசி அன்னையின் திருநாள் விவசாயிகளின் அறுவடை நாளான தை திங்களில் (ஜனவரி 15) ஒவ்வொரு ஆண்டும் பொங்கலிட்டு, திருவிழாவாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்னையை நாடிவரும் மக்கள் தங்களின் குறைகளை மன்றாடி, வேண்டுதல் விண்ணப்பம் வைத்து, தங்கள் வேண்டுதல் நிறைவின் நன்றியாக அன்னைக்கு புடவை காணிக்கை செலுத்தி அன்னையின் பிள்ளைகளாக மாறி வருகிறார்கள்.

👪குழந்தை வரம், திருமண தடை, வேலை வாய்ப்பு, போன்ற வேண்டுதல்களுக்காக ஜெபித்து சாட்சிகளாகவும் மாறி வருகின்றார்கள். மேலும், கல் சிலுவையில் எண்ணெய் மொழுகி அதை எடுத்து செல்கின்றனர். பலி பீடத்தில் வைத்து புனித நீரும் எடுத்துச் செல்கின்றனர். ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து அன்னையை நாடி வந்து ஆசி பெற்று செல்பவர்கள் இங்கு ஏராளம்.

🍫காணிக்கையாக வரும் புடவைகள் மாதாவின் திரு நாட்களில் ஏலம் விடப்படும். அதைப் பெற்று செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து அதை புனித பொருளாக ஏலம் எடுத்து செல்கின்றனர். கடலோர மாவட்ட மக்கள் அன்னையின் திருக்கொடியை காணிக்கையாக பெற்று தங்களின் படகுகளில் அதை கட்டி, அன்னை தங்களோடு பயணிப்பதாக விசுவசித்து, ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்கின்றனர்.

🪴2023 ஜூன் மாதம் பொறுப்பேற்ற புதிய பங்குதந்தை. அபின்சன் அலெக்ஸ் அவர்களின் சீரிய முயற்சியில் ஆலயத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பான முறையில் நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டு, ஜாதி மத பேதமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்து நற்செய்தி பெருவிழா வாயிலாகவும் தைநேசி அன்னையின் பரிந்துரையாலும் நோய் பிணிகள் நீங்கி ஒவ்வொருவரும் சாட்சியம் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் பக்த இயக்கங்களுக்கு நல்ல உறுதுணையும் உற்சாகம் அளித்து மறைக்கல்வி தாய்மார் சங்கம் போன்றவை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது.

🦋பரிவார்ந்த புன்னகையோடு, மழலை இயேசுவை சுமந்து கொண்டு தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு எல்லா வளங்களையும் ஆசீரையும் வழங்குபவளுமாய் பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் அனுதினமும் மக்களை காத்து வழிநடத்தி வரும் தூய தைநேசி அன்னை நாடிவரும் அன்பர்களுக்கு எல்லாவித அருளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்
"மலைகள் காவல் காக்க,
தென்றல்கள் தாலாட்டு பாட,
தைநேசி அன்னையின் அருள் ஒளியில்
பார்வதிபுரம் என்றும் புனித பூமியாய்."

பங்கின் பங்கேற்புகள்:-
🌻மறைக்கல்வி
🏵️தாய்மார் சங்கம் (MCMF)
🌺MCYM
💐வின்சென்ட்-தே-பவுல்
🌹MCA

👉தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்தந்தை. அபின்சன் அலெக்ஸ் அவர்கள்.

✍️ஆலயம் அறிவோம் பதிவாளர்:
K Jose Mathapuram
Tholayavattam Post
Kanniyakumari District
Kuzhithurai Diocese
Email: [email protected]

இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க...🌺🌹🙏🌹🌺

அன்பர்களே.. தூய தைநேசி மாதாவின் பெயரில் விளங்கும் ஆலய வரலாற்றை, நமது ஆலயம் அறிவோம் வரிசையில் 1,076-வது பதிவாக, 14.06.202...
13/06/2026

அன்பர்களே.. தூய தைநேசி மாதாவின் பெயரில் விளங்கும் ஆலய வரலாற்றை, நமது ஆலயம் அறிவோம் வரிசையில் 1,076-வது பதிவாக, 14.06.2026 ஆகிய நாளையதினம் பதிவு செய்ய உள்ளோம் என்னும் தகவலை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

அன்புக்குரியவர்களே... இன்று கோடி அற்புதராம் புனித அந்தோனியாரின் பெருவிழா தினம். அனைவருக்கும் புனிதரின் விழா நல் வாழ்த்து...
13/06/2026

அன்புக்குரியவர்களே... இன்று கோடி அற்புதராம் புனித அந்தோனியாரின் பெருவிழா தினம். அனைவருக்கும் புனிதரின் விழா நல் வாழ்த்துகள் 💐💐

இந்த நாளில் நாளிதழின் வழியாக நமது ஆலயம் அறிவோம் பதிவு..

திருவிழா நல் வாழ்த்துகள் 💐
13/06/2026

திருவிழா நல் வாழ்த்துகள் 💐

✝️ஆலயம் அறிவோம் வரிசையில் 1,075-வதாக இன்று "புனித அந்தோனியார் ஆலயம், களியக்காவிளை" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.✝...
10/06/2026

✝️ஆலயம் அறிவோம் வரிசையில் 1,075-வதாக இன்று "புனித அந்தோனியார் ஆலயம், களியக்காவிளை" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.
✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐

"எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே."
1 தெசலோனிக்கர் 5: 16,17,18

⛪ஆலயத்தின் பெயர்: புனித அந்தோனியார் ஆலயம்
🍓இடம்: களியக்காவிளை

🥭மாவட்டம்: கன்னியாகுமரி
🍊மறைமாவட்டம்: குழித்துறை
🍇மறைவட்டம்: திரித்துவபுரம்

🪴நிலை: பங்குத்தளம்
💐பங்குதந்தை அருட்பணி. ஆரோக்கிய சிறில், OMD
👪குடும்பங்கள்: 416
❤️அன்பியங்கள்: 10

வழிபாட்டு நேரங்கள்:
✝️ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

✝️திங்கள், புதன் & வெள்ளி திருப்பலி காலை 06:30 மணி

✝️செவ்வாய் காலை 11:30 மணி புனித அந்தோனியார் சிறப்பு நவநாள், திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆசீர்வாதம். இறுதியில் அனைவருக்கும் புனித கஞ்சி வழங்கப்படும்.
✝️செவ்வாய் மாலை 05:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

✝️சனி மாலை 05:30 மணி திருப்பலி

✝️மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:00 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதம்

🎉திருவிழா: ஜூன் 13-ம் தேதியை மையமாகக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறும் வகையில் 10 நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:
🌹1. அருட்தந்தை. கிறிஸ்துராஜ்
🌹2. அருட்தந்தை. சுரேஷ்
🌹3. அருட்தந்தை. ஷைன்
🌹4. அருட்சகோதரி. மேரி ஸ்டெல்லா, SH
🌹5. அருட்சகோதரி. ஆன்றோ மரியா, DM

👉வழித்தடம்: களியக்காவிளை பேருந்து நிலையம்.

👉Church Map Location:
https://share.google/qLGOzYY5UI3HgKlF0

பங்கின் வரலாறு:
************************
அமைவிடம்:
🦋கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு அழகிய இடம் களியக்காவிளை ஆகும். இது தமிழக கேரள எல்கை ஆகும். பேருந்து நிலையம், சந்தை போன்றவை இதன் அடையாளங்களாக இருந்தாலும், உயர்ந்து நிற்கும் புனித அந்தோனியார் ஆலயம் களியக்காவிளையின் உயர்ந்த உன்னத அடையாளமாகவே உள்ளது.

பங்கின் எல்கை:
🌸கிழக்கே படந்தாலுமூடு, மேற்கே கேரளா (நெடுங்கோடு), தெற்கே கோழிவிளை, வடக்கே பனங்காலையும் எல்கையாக உள்ளது.

பங்கின் கத்தோலிக்க விசுவாசத்தின் தொடக்கம்:

🐟களியக்காவிளை மண்ணில் 16 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் நுழைந்துள்ளது. களியக்காவிளைக்கு அருகே நிறைய கடலோர கிராமங்கள் இருந்ததன் காரணமாக, இங்குள்ள மக்கள் அங்கு சென்று மீன்களை வாங்கி தலைச்சுமடாக (தலைச்சுமையாக) சுமந்து வந்து தொடுவெட்டி (மார்த்தாண்டம்), களியக்காவிளை, புத்தன்கடை உட்பட 15 இடங்களில் சந்தைகளில் மீன் வியாபாரம் செய்ததாக கூறப்படுகின்றது. தற்போது இருக்கும் ஆலயத்தின் முகப்பு இருக்கும் இடத்திற்கு அறியாத ஒரு மனிதர் வருகின்றார். அவர் ஒரு சிலுவையையும், அன்னை மரியாளின் படத்தையும், அந்தோணியாரின் படத்தையும் கொடுத்துவிட்டு செல்கின்றார். அந்த சிலுவையை ஊன்றி அந்த சிலுவையின் அருகிலே அமர்ந்து ஜெபிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள். அந்த சிலுவை அருகில் இவர்களின் நம்பிக்கை உருபெற்றதாக கூறப்படுகின்றது.

🍎ஆய்வாளர்களின் அறிக்கையிலிருந்து
கி.பி 18 ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி 1713 இல், களியக்காவிளையை உள்ளடக்கிய மொத்தம் 24 கத்தோலிக்க உள்நாட்டு மீனவ கிராமங்கள் இருந்ததாக பெரோலி என்ற ஆய்வாளரும், கி.பி 1765 இல் களியக்காவிளை உட்பட 27 கத்தோலிக்க உள்நாட்டு மீனவ கிராமங்கள் இருந்ததாக அருட்தந்தை. நர்சீசன் என்ற ஆய்வாளரும் கூறுகிறார்கள்.

கிளைபங்காக (1780-1906) வரை:

🌷கி.பி 1780-களில் கோட்டாரின் கிளைப்பங்குகளாக திருவிதாங்கோடும், வேங்கோடும் செயல்பட்டுள்ளன. வேங்கோட்டின் கீழ் களியக்காவிளை கத்தோலிக்க கிறஸ்தவர்கள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். இவ்வேளையில் களியக்காவிளை கத்தோலிக்கர்கள் தற்போதுள்ள ஆலயக் கொடிமரத்தின் அருகில் ஓலைவேய்ந்து, சிறிய ஆலயம் அமைத்து, அதில் சிலுவை நாட்டி வழிபட்டு வந்துள்ளனர்

🌿கிபி 1847-இல் கோட்டார் அதன் 87 கிளைபங்குகளுடனும், காரங்காடு அதன் 127 கிளைபங்குகளுடனும், வேங்கோடு அதன் 55 கிளைபங்குகளுடனும் இருந்ததாக கொல்லம் மறைமாவட்ட ஆவணங்களில் (பக். 9-18) கூறப்பட்டுள்ளது. இதில் களியக்காவிளை, வேங்கோட்டின் கிளையாகச் செயல்பட்டு வந்துள்ளது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

🍓கிபி 1886-ல் வேங்கோட்டின் கிளைபங்காக களியக்காவிளை உட்பட 17 கிளைபங்குகள் சிறப்பாக இறை நம்பிக்கையில் வேரூன்றி செயல்பட்டு வந்துள்ளது.

மறைவட்ட முதன்மை இடமான களியக்காவிளையும், மேதகு ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகரும் (1905-1931):
🍏கி.பி 1905-ல் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்கள் கொல்லம் மறைமாவட்ட ஆயராக பொறுப்பேற்றார். அவர் ஒவ்வொரு பங்கிலும் ஒரு ஆலயமும், ஒரு பள்ளியும், ஒரு மேடையும், ஒரு கல்லறை தோட்டமும் இருக்க வேண்டும் என்று முன் மொழிந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஆலயம்:
⛪முதலில் சிலுவை மட்டும், அதன்பின் ஓலை வேயப்பட்ட ஆலயமாக, பின் ஓடு வேயப்பட்டிருந்த களியக்காவிளை ஆலயம், ஏறக்குறைய 1906 –ல் இப்போது இருக்கும் கோத்திக் மாடலுடன் கூடிய கோபுரத்தை கொண்ட ஆலயமாக கட்டப்பட்டுள்ளது. இது இறைநம்பிக்கையை இப்பகுதியில் எடுத்துரைக்கும் அடையாளமாகவே மாறியது.

🍋1907 முதல் 1920 வரை ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகரின் உத்தரவின்படி, அவரின் சிறப்பு கட்டுமான மற்றும் உருவாக்க பணிகளை செய்ய அருட்தந்தை. இன்னோசென்ட், OCD அவர்களை களியக்காவிளையை வட்டார முதன்மை தளமாக கொண்டு, கோட்டாறு பகுதியை சார்ந்த 18 பங்குகளில் ஆலயமும், அதனருகில் பள்ளிகூடமும் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இக்காலகட்டத்தில் தான் மக்களின் கல்வி தரத்தை உயர்த்த, களியக்காவிளையில் தற்போது மண்டபம் இருக்கும் இடத்தில், ஓடு வேயப்பட்ட தொடக்கபள்ளியும் தொடங்கப்பட்டது. ஆயர் அலோசியாஸ் மரிய பென்சிகரின் பெயரை அடையாளப்படுத்த, ஆயரின் முதல் பெயராகிய புனித அலோசியஸின் பெயரிலேயே இப்பள்ளி புனித அலோசியஸ் பள்ளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

🍑1921-1926 வரை அருட்தந்தை. இன்னோசென்ட் புதுக்கடை பகுதியில் தங்கவேண்டிய சூழ்நிலை இருந்ததால், புதுக்கடை மறைமாவட்ட முதன்மை இடமாக மாற்றப்பட்டது. பின் 1926 –ல் திரித்துவபுரம் மறைவட்டமாக மாற்றப்பட்டு, அதன் கீழ் பங்காக களியக்காவிளை செயல்பட்டுள்ளது. பின் 1936 முதல் 1973 வரை களியக்காவிளை, சிலுவைபுரத்தின் கிளைபங்காக செயல்பட்டுள்ளது.

புதிய பங்காக மீண்டும் உதயம்:
🌳1930-ல் கோட்டாறு மறைமாவட்டம் உருவானது. அதன் பின் 1973 ஆம் ஆண்டு களியக்காவிளை புது பொலிவுடன் இறை நம்பிக்கையில் வேரூன்றி மீண்டும் புதிய பங்காக உயர்த்தப்பட்டது.

வளர்ச்சி பணிகள் செய்யபட்ட காலம்:

🌈அருட்தந்தை. இன்னோசென்ட், OCD (1906-1921) காலத்தில் தற்போதுள்ள அந்தோணியார் குருசடியின் தரைமட்டத்தில், சிறிதாக கட்டப்பட்டது. ஆலயத்தின் அருகே புனித அலோசியஸ் தொடக்கபள்ளியும் தொடங்கபட்டது.

🪴1973-1975 களில் அருட்தந்தை. அம்புரோஸ் காலத்தில் 7 ஆம் அன்பிய இடம் வாங்கி, 20 வீடுகள் கட்டப்பட்டு, ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக கொடுக்கபட்டது.

🍊1982-1984 களில் அருட்தந்தை. ஜோசப் பிடல்லிஸ் காலத்தில் 7 ஆம் அன்பியத்தில் 5 வீடுகள் கட்டப்பட்டு, ஏழைகளின் பயன்பாட்டிற்காக கொடுக்கபட்டது.

🌸1984-1986 களில் அருட்தந்தை. ஆன்றனி அல்காந்தர் காலத்தில் 2 ஆம் அன்பிய நிலம் வாங்கப்பட்டு ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக கொடுக்கபட்டது.

🌻1989-1991 களில் அருட்தந்தை. மரியதாசன் காலத்தில் 6 ஆம் அன்பிய நிலம் வாங்கப்பட்டு, மக்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கபட்டது. மேலும் அதனுடன் சார்ந்த இடம் பள்ளிக்கூடம் கட்டலாம் என்ற எண்ணத்தோடு வாங்கப்பட்டது.

🌷1992-1993 களில் அருட்தந்தை. ஜேசுதாஸ் காலத்தில் பங்கு அருட்பணி பேரவை துவங்கப்பட்டது. இக்காலத்தில் மண்டபம், அருட்தந்தை இல்லம், பள்ளி கட்ட திட்டமிடபட்டு, இப்பணிகளை செய்ய வெளிநாட்டு நிதி சேகரிக்கப்பட்டது.

🍇1995-2000 ஆம் ஆண்டுகளில் அருட்தந்தை. ஒனோரியஸ் காலத்தில் அருட்தந்தையர் இல்லம் கட்டப்பட்டு 25-01-1997 –ல் திறக்கப்பட்டது. மேலும் மண்டபம் கட்டும் பணியானது 03-04-1998 –ல் துவங்கி வைக்கப்பட்டது.

🌹2000-2002 களில் அருட்தந்தை. விமல்ராஜ் காலத்தில் ஆலய மேற்கூரை மாற்றப்பட்டு காங்கிரீட் அமைக்கபட்டது.

🍏2002-2008 களில் அருட்தந்தை. லாரன்ஸ் காலத்தில் மண்டபம் கட்டப்பட்டு 27-01-2004 ஆம் தேதி திறக்கபட்டது. கடைகளும் கட்டபட்டன.

🍑2008-2013 களில் அருட்தந்தை. ஜெரால்டு ஜஸ்டின் காலத்தில் ஆலயம் புனரமைக்கப்பட்டது. ஆலய உள்பக்கம் விரிவாக்கப்பட்டது.

🦋2014-2015 களில் அருட்தந்தை. ராபர்ட் பென்னி காலத்தில் மண்டபம் புனரமைக்கபட்டது.

🙏2017-2019களில் அருட்தந்தை. இன்னோசென்ட் காலத்தில் நற்கருணை சிற்றாலயம் கட்டபட்டது.

🍓2022-2026 அருட்தந்தை. சதீஸ் மகிழன், MSSCC காலத்தில் கல்லறை தோட்டத்தின் அருகில், வியாகுல அன்னை குருசடி கட்டபட்டது.

🍫தற்போது அருட்தந்தை. ஆரோக்கிய சிறில், OMD அவர்கள் இப்பங்கின் பங்குதந்தையாக இருந்து சிறப்பான விதத்தில் மக்களை ஆன்மீகத்திலும், சமூக வளர்ச்சி பாதையிலும் வழி நடத்துகின்றார். செவ்வாய்க் கிழமைகளில் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதத்தில் மக்களை பங்கெடுக்க செய்து, ஆன்மீக வழியில் வழி நடத்துகின்றார்.

மேதகு ஆயரின் நற்செய்திப் பணி:
❤️அருட்தந்தை. லெஸ்லின் அலெக்சாண்டர் அவர்கள் சிலுவைபுரம் பங்கின் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது, 1965-1966 காலகட்டத்தில் உதவி பங்குதந்தையாக பணிபுரிந்த, பின்னாளில் கோட்டாறு மறைமாவட்ட ஆயரான மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்கள், களியக்காவிளையில் ஏராளமான மக்களுக்கு திருமுழுக்கு வழங்கியுள்ளார் என்பதை, திருமுழுக்கு பதிவேட்டின் வழியாக அறியமுடிகிறது.

பங்கில் உள்ள நிறுவனங்கள்:
🖍️புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி
🌈SAC Hall

பங்கில் உள்ள அருட்சகோதரிகள் :
🛐திருக்குடும்ப அருட்சகோதரிகள்

பங்கின் சபைகள் இயக்கங்கள்:
# # # # # # # # # # # #
நிர்வாக அமைப்புகள்:
🍊1.பங்குப்பேரவை
🍋2.அன்பிய ஒருங்கிணையம்
🍎3.திருத்தூதுக்கழக ஒருங்கிணையம்.

திருத்தூதுக் கழகங்கள்
🌺1.மரியாயின் சேனை
🏵️2.திருக்குடும்ப சபை

இயக்கங்கள்:
🌻1.பாலர் சபை
🌷2.இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
🪴3.மறைக்கல்வி

சமூகச்சேவை பணிக்குழுக்கள்:
🐦1.அ.மு.ச
🐠2.உள்நாட்டு மீனவர் இயக்கம்

கெபி & குருசடி:
🛐நற்கருணை ஆலயம்
🛐புனித லூர்தன்னை கெபி
🛐புனித அந்தோணியார் குருசடி
🛐கல்லறை தோட்டத்தின் அருகில் - வியாகுல அன்னை சிற்றாலயமும் மிக்கேல் அதிதுதர் கெபியும்.
✝️எல்லா அன்பியங்களிலும் அன்பிய பெயர்களை தாங்கிய புனிதர்களின் குருசடி உள்ளது.

களியக்காவிளை இறைசமூகம் கிளைபங்காக இருந்த போது பணியாற்றி, நம்பிக்கையை ஊட்டிய அருட்தந்தையர்கள்:
🌹1. அருட்தந்தை. ஸ்டீபன் நாசரேத் (1931-1936)
🌹2. அருட்தந்தை. லூயிஸ் (1937-1939)
🌹3. அருட்தந்தை. கிரோனிமுஸ் (1940-1941)
🌹4. அருட்தந்தை. பெஞ்சமின் வாஸ் (1941-1944)
🌹5. அருட்தந்தை. போர்ஜியோ பீட்டர் (1944-1950)
🌹6. அருட்தந்தை. ஜோசப் (1950-1956)
🌹7. அருட்தந்தை. சூசை மரியான் (1956-1957)
🌹8. அருட்தந்தை. ஸ்தனிஸ்லாஸ் (1957-1958)
🌹9. அருட்தந்தை. அந்தோணி (1959-1960)
🌹10. அருட்தந்தை. மேலார்டு (1960-1962)
🌹11. அருட்தந்தை. பெர்ணான்டஸ் (1962-1965)
🌹12. அருட்தந்தை. லெஸ்லின் அலெக்ஸான்டர் (1965-1968)
🌹13. அருட்தந்தை. தாமஸ் (1968-1971)
🌹14. அருட்தந்தை. ஜார்ஜ் (1971-1972)
🌹15. அருட்தந்தை. வின்சென்ட் (Vic. Coop) (1972-1973)

1973-ல் களியக்காவிளை மீண்டும் பங்காக மாற்றப்பட்ட பின் பங்குதந்தையர்களாக பணியாற்றியவர்கள்:
☂️1. Fr. அம்புரோஸ் (1973-1975)
☂️2. Fr. பீட்டர் ஜாண் (1975-1977)
☂️3. Fr. ஜோன்ஸ் (1977-1982)
☂️4. Fr. ஜோசப் பிடல்லிஸ் (1982-1984)
☂️5. Fr. ஆன்றனி அல்காந்தர் (1984-1986)
☂️6. Fr. ஜூலியஸ் (1986-1988)
☂️7. Fr. அருள் ராஜ் (1988-1989)
☂️8. Fr. மரியதாசன் (1989-1991)
☂️9. Fr. மரிய ஆரோக்கியம் (1991-1992)
☂️10. Fr. ஜேசுதாஸ் (1992-1993)
☂️11. Fr. சேவியர் ராஜா (1993-1995)
☂️12. Fr. ஒனோரியுஸ் (1995-2000)
☂️13. Fr. விமல்ராஜ் (2000-2002)
☂️14. Fr. லாரன்ஸ் (2002-2008)
☂️15. Fr. ஜெரால்டு ஜஸ்டின் (2008-2013)
☂️16. Fr. பெனடிக்ட் அனலின் (2013-2014)
☂️17. Fr. ராபர்ட் பென்னி (2014-2015)
☂️18. Fr. சேவியர் சுந்தர் (2015-2015)
☂️19. Fr. தேசுஸ் மெர்லின், HGN (2015-2016)
☂️20. Fr. S. P. லாரன்ஸ் (2016-2017)
☂️21. Fr. இன்னோசென்ட் (2017-2019)
☂️22. Fr. சிறில் மெஸ்மின் (2019-2022)
☂️23. Fr. சதிஸ் மகிழன், MSSCC (2022-2026)
☂️24. Fr. ஆரோக்கிய சிறில், OMD (22.01.2026..

🌈எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.... என்னும் இறைவார்த்தையின்படி வாழ்கின்ற களியக்காவிளை இறைசமூகத்தினர், பங்குத்தந்தையின் வழிகாட்டலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🌈இவ்வரலாறு எழுதப்பட உழைத்து புள்ளிவிவரங்களைத் தேடி கண்டுபிடித்து எழுதிய, அருட்தந்தை. ஆரோக்கிய சிறில், OMD அவர்களுக்கும், அவரோடு உழைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்.

🎉இவ்வாண்டு; 5 ஜூன் 2026 முதல் 14 ஜூன் 2026 வரை விழா நடைபெறுகிறது. அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்.

👉தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:
பங்குதந்தை அருட்பணி. ஆரோக்கிய சிறில், OMD அவர்கள்.

✍️ஆலயம் அறிவோம் பதிவாளர்:
K Jose Mathapuram
Tholayavattam Post
Kanniyakumari District
Kuzhithurai Diocese
Email: [email protected]

இயேசுவுக்கே புகழ்.. இயேசுவுக்கே நன்றி..
🏵️🦋🙏🦋🏵️

ஆலயம் அறிவோம் வாசக அன்பர்களே... கோடி அற்புதர் புனித அந்தோனியார் பெயரில் விளங்கும், புதுமைகள் நிறைந்த ஆலயத்தை, ஆலயம் அறிவ...
09/06/2026

ஆலயம் அறிவோம் வாசக அன்பர்களே... கோடி அற்புதர் புனித அந்தோனியார் பெயரில் விளங்கும், புதுமைகள் நிறைந்த ஆலயத்தை, ஆலயம் அறிவோம் வரிசையில் 1,075-வது பதிவாக, 10.06.2026 அன்று பதிவு செய்ய உள்ளோம் என்னும் தகவலை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் 💐

திருவிழா சிறப்புப் பதிவாக கூடுதல் தகவல்களுடன் மீண்டும் ஒருமுறை...⛪ஆலயம் அறிவோம் வரிசையில் 443 -வதாக இன்று "புனித அந்தோணி...
09/06/2026

திருவிழா சிறப்புப் பதிவாக கூடுதல் தகவல்களுடன் மீண்டும் ஒருமுறை...

⛪ஆலயம் அறிவோம் வரிசையில் 443 -வதாக இன்று "புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கிறிஸ்துவிளாகம்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.
🍇🏵🍇🏵🍇🏵🍇🏵🍇🏵🍇🏵🍇🏵🍇

☂️பெயர் : புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்
🍄இடம் : கிறிஸ்துவிளாகம், மேல தெருக்கரை, கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் -1

🍇மாவட்டம் : கன்னியாகுமரி
🍊மறைமாவட்டம் : மார்த்தாண்டம்
🍉மறைவட்டம் : நாகர்கோவில்

🌳நிலை : பங்குத்தளம்
🌿கிளைப்பங்கு:
🍎1. அற்புத குழந்தை இயேசு ஆலயம், பீச்ரோடு.

💐பங்குத்தந்தை : அருட்தந்தை. சஜித் பிரான்சிஸ்.

🦋குடும்பங்கள் : 90
🕊அருள் வாழ்வியங்கள் (அன்பியம்) : 5

✝️ஞாயிறு காலை 06.15 மணி காலை ஜெபம், 06.45 மணி திருப்பலி.

✝️செவ்வாய் மாலை 06.00 மணி ஜெபமாலை, 06.30 மணி நவநாள் திருப்பலி.

✝️ புதன் _ சனி காலை 6.00 மணி திருப்பலி.

✝️ புதன் மாலை 6.00 ஜெபமாலை, துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் மாதா நவநாள்.

✝️ மாதத்தின் முதல் வியாழக்கிழமை மாலை 6.00 மணி சிறப்பு நற்கருணை ஆராதனை.

✝️வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருச்சிலுவைப் பாதை, இரக்கத்தின் ஜெபமாலை.

✝️மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குடும்பங்களை ஆண்டவரின் திருஇருதயத்திற்கு ஒப்புகொடுக்கும் சிறப்பு ஜெப வழிபாடு.

✝️ திங்கள் _ வெள்ளி பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி நற்கருணை ஆராதனை.

✝️ மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 9.00 மணி ஆயிரம் மணி ஜெபமாலை, நேர்ச்சை உணவு.

✝️2,3,4 சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி உபவாசஜெபம், நேர்ச்சை உணவு.

✝️ ஞாயிறு மாலை 6.00 மணி அருள்வாழ்வியம் கூட்டங்கள்.

🎉திருவிழா: ஜூன் மாதம் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள். 13_ம் தேதி மாலை 6.00 மணி முதல் அந்தோணியார் தேர் பவனி.

இறையழைத்தல்கள் :
🌹1. அருள்தந்தை. ஸ்டீபன் ஜாண்
🌹2. அருட்சகோதரி. மதர் அனிலா கிறிஸ்டி
🌹3. அருட்சகோதரி. மரிய கிரேசி

👉வழித்தடம் : நாகர்கோவில் -வெட்டூர்ணிமடம் -டவுண் இரயில் நிலையம். ( இரயில் நிலையத்தில் இருந்து ஜந்து நிமிடங்கள் நடந்து வந்தால் ஆலயம் வந்து சேரும்).

👉Church Map location:
https://maps.app.goo.gl/uHRo4BPW2MCSHL3p8?g_st=aw

வரலாறு :
**********
🍀நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், மேலத் தெருகரை இயற்கை வளம் சூழ்ந்த அழகிய பகுதியாகும். இப்பகுதியில் அமைந்துள்ள அருள் வரங்களை அள்ளித் தருகின்ற புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயத்தின் வரலாற்றைக் காண்போம்.

ஆலய தொடக்கம் :
🦋தொடக்க காலத்தில் நாஞ்சில் நாட்டுக்கு சொந்தமான இயற்கை சூழலும், நெல்விவசாயமும் இப்பகுதியில் காணப்பட்டதால், களியக்காவிளை அருகேயுள்ள கிராத்தூர், மரியகிரி போன்ற இடங்களில் இருந்து கிறிஸ்தவ குடும்பங்கள் மேலத் தெருகரை பகுதியில் குடியேறினர்.

🙏தொடக்கத்தில் (1978 ஆண்டுவாக்கில்) மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், திருப்பலி மலங்கரை கத்தோலிக்க குருக்களால் நடத்தப்பட்டு வந்தது.

⛪1979 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் புனித அந்தோனியாரை பாதுகாவலராகக் கொண்டு சிறு ஓலைக் குடில் ஆலயம் கட்டப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

🕯இவ்வாலய வளர்ச்சிக்கு முக்கிய காரரணமாக திகழ்ந்தவர் மறைந்த ஆயர் மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகை எனபது என்றென்றும் நினைவு கூறத் தக்கது.

🍇பின்னர் இரண்டாம் கட்டமாக ஓலைக்குடிசை ஆலயம் மாற்றப்பட, ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. பங்கின் வெள்ளிவிழாவை முன்னிட்டு அருட்தந்தை. வர்கீஸ் பணிக்காலத்தில் தற்போதைய ஆலயம் 2003 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

ஆலய வளர்ச்சி :
☂️ஆலய வளர்ச்சிக்கு இங்கு பணிபுரிந்த பங்குத்தந்தயர்களும், அருட்சகோதரிகளும் முக்கியப் பங்கு வகித்தனர்.

☂️1978 ஆம் ஆண்டில் பங்கை ஆரம்பித்த அருட்தந்தை. லாரன்ஸ் தோட்டம் (பின்னாளில் ஆயராக திருநிலைப் படுத்தப் பட்டவர்), அருட்தந்தை. கோசி வர்கீஸ் (தற்போதைய மாவேலிக்கரை ஆயர்), அருட்தந்தை. சேவியர் ஞாயப்பள்ளி கிராத்தூர் பங்கிலிருந்து வந்து திருப்பலி நிறைவேற்றினார்.

அடிப்படை வசதிகளை அமைத்தவர் அருட்தந்தை. மரிய அற்புதம் அவர்கள்.

🌷அருட்தந்தை. செலஸ்டின்
🌷அருட்தந்தை. வர்கீஸ்
🌷அருட்தந்தை. வர்கீஸ் நடுதலா
🌷அருட்தந்தை. பிலிப் தயானந்த்
🌷அருட்தந்தை. தாமஸ் ஊனம்பறக்கல்
🌷அருட்தந்தை. பீட்டர் பெனடிக்ட் ராஜன் ஆகியோர் ஆலய வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினர்.

🌸அருட்தந்தை. பீட்டர் பெனடிக்ட் ராஜன் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய கோபுரம், அன்னை மரியாள் குருசடியும் அமைக்கப் பட்டது. புனித அந்தோனியாரின் திருப்பண்டம் கொண்டு வர முயற்சி செய்து வெற்றி பெற்றார். இவ்வாறு அருட்தந்தையின் பணிக்காலத்தில் பங்கில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றதால், இவரது பணிக்காலம் கிறிஸ்துவிளாகம் பங்கின் பொற்காலம் எனப்படுகிறது.

🍇 அருள்தந்தை இராபர்ட் அவர்கள் பணிக்காலத்தில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய கல்லறை தோட்டத்தில் புதிய கல்லறை அறைகள் கட்டப்பட்டது. அருள்தந்தை மரிய ஜாண் அவர்கள் பங்கு தந்தையாக இருந்த போது திரு வழிபடு சாராத நிகழ்வுகளுக்காக மார் ஏப்ரேம் மெம்மோரியல் (MEM) ஹால் கட்டப்பட்டது. அந்தோணியார் தேர் மற்றும் மாதா சப்பரம்), அனைவரும் விளையாடி உடற்பயிற்சி செய்து ஆரரோக்கியத்தை மேம்பாடுத்த, மார் ஏப்ரேம் மைதானம் உருவாக்கப்பட்டது. அருள்தந்தை வில்பிரைட் மற்றும் அருள்தந்தை அஜிஷ் ஜோகன்‌ இவர்களை தொடர்ந்து அருள்தந்தை சஜித் பிரான்சிஸ் அவர்கள் பங்கை ஆன்மீகப் பாதையில் வழி நடத்துகிறார்.

🙌புனித அந்தோணியாரின் அழியாத தோல் :

✝️புனித அந்தோணியார் இறந்து 362 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கல்லறையை திறந்த போது, புனிதரின் நாக்கு மற்றும் உடலின் தோல் பகுதிகள் அழியாமல் இருந்தன. அவை பதுவா நகரில் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

✝️10.01.2012 அன்று பதுவா நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதரின் அழியாத தோல்பகுதி (திருப்பண்டம்), மார்த்தாண்டம் ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் நிரந்தரமாக அர்ச்சித்து ஆலயத்தில் வைக்கப்பட்டது.

✝️ஆலயத்தில் செவ்வாய் தோறும் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் நடைபெறுகிறது. மேலும் ஜூன் 13-ம் தேதி புனிதரின் திருப்பண்டம் தேரில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அனைவரும் வழிபடுவதற்கும், முத்தம் செய்து இறையாசீர் பெறுவதற்கும் அனுமதிக்கப் படுகிறது. இந்த புனித நிகழ்வில் குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் வந்து பங்கேற்று, புனிதரின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.

🙏வேண்டுதல் விண்ணப்பங்கள் :

🕊மக்கள் தங்களின் குறைகளையும், வேண்டுதல்களையும் ஆலயத்தின் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். இவர்களுக்காக செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் நவநாளில் ஜெபிக்கப் படுகிறது. தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நவநாள் ஜெபத்தில் கலந்து கொண்டு, ஏராளமான இறைமக்கள் புனிதரின் பரிந்துரையால் எண்ணற்ற ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

⛪ இறைமக்களின் அயராத உழைப்பாலும் ஒத்துழைப்பாலும் புது பலீபிடம் கட்டப்பட்டு, அருள்தந்தை சஜித் பிரான்சிஸ் அவர்கள் முன்னிலையில், மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களின் திருகரங்களால் 30/5/2026 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மலங்கரை வழிபாட்டு முறையில் நாம் காணும் இரு பக்க பலீபிடங்கள் இவ்வாலயத்தில் இருப்பது ஆலயத்தின் தனி சிறப்பு

✝️ நற்கருணை:
வந்தாரை வரவேற்று ஆசீர்வாதங்களை மழையாகப் பொழியும், "அழிவு காணா நற்கருணை ஆண்டவரின் பிரசன்னம்" இப்போது ஆலயத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கின்றது.

✝️ துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் மாதா நவநாள் :
புதிதாக அமைக்கப்பட்ட பக்க பலீபிடத்தில் அமைந்துள்ள துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் மாதா, நம்பிக்கையோடு அன்னையை தேடி வரும் பக்தர்களின் துன்ப முடிச்சுகளை அவிழ்கின்றாள்.

✝️ புதன்கிழமைகளில் மாலை 6.00 மணிக்கு துன்ப மூடிச்சிகளை அவிழ்க்கும் மாதா நவநாள்லில் அனேக மானோர் பங்கேற்று இறையசீர் பெற்று செல்கின்றனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
🪴மரியாயின் சேனை
🍓பாலர் சபை
🍇MCYM
🍑MCA
🍊தாய்மார் சங்கம்
🍎புனித வின்சென்ட் தே பவுல் சபை
🍒கோல்பிங் இயக்கம்
🍋மறைமாவட்ட சமூக சேவை குழுக்கள்
🥭பங்குப் பேரவை
🍏மறைக்கல்வி

பங்கின் குருசடிகள்:
🛐1.வேளாங்கண்ணி மாதா குருசடி, டவுண் இரயில் நிலையம் அருகில்
🛐2.வேளாங்கண்ணி மாதா குருசடி, ஆலய வளாகம்
🛐3.பழைய ஆலயம்: புனித அந்தோனியார் சுரூபம் நிறுவப்பட்டு மக்கள் ஜெபிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
💐1. Fr. லாரன்ஸ். ஜே. தோட்டம் (1978)
💐2. Fr. கோசி வர்கிஸ் (1979)
💐3. Fr. சேவியர் ஞாயப்பள்ளி (1980)
💐4. Fr. மரிய அற்புதம் (1982-1989)
💐5. Fr. ஜெலஸ்டின் (1990-1991)
💐6. Fr. G. வற்கீஸ் (1991-1993)
💐7. Fr. ஜெலஸ்டின் (1994-1995)
💐8. Fr. வற்கீஸ் நடுதலா (1996-1998)
💐9. Fr. பிலிப் தயானந்த் (14.9.1998 -11.5.2003)
💐10. Fr. G.வற்கீஸ் (11.5.2003 -1.8.2004)
💐11. Fr. தோமஸ் (1.8.2004 -16.5.2010)
💐12. Fr. பீட்டர் (16.5.2010 -29.5.2016)
💐13. Fr. ராபர்ட் (16.5.2016 -25.7.2021)
💐14. Fr. மரிய ஜான் (25.7.2021 -18.6.2023)
💐15. Fr. வில்பிரைட் (18.6.2023 -23.6.2024)
💐16. Fr. அஜீஸ் ஜோகன் (23.6.2024 -22.6.2025)
💐17. Fr. சஜித் பிரான்சிஸ் (22.6.2025....

🌷தகவல்கள்: பங்குதந்தை அருட்தந்தை. சஜித் பிரான்சிஸ் அவர்கள்.

👉 ஆலயம் அறிவோம் பதிவாளர்:
Jose Mathapuram
Tholayavattam Post
Kanniyakumari District
Kuzhithurai Diocese
Email: [email protected]

இறைவனுக்கு நன்றி..! 💐🌿🙏🌿💐

Address

Marthandam

Alerts

Be the first to know and let us send you an email when ஆலயம் அறிவோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஆலயம் அறிவோம்:

Share