Our Lady Of Assumption, Maruthoorkurichi.

Our Lady Of Assumption, Maruthoorkurichi. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Our Lady Of Assumption, Maruthoorkurichi., Religious organisation, Marthandam.

10/04/2026

10 ஏப்ரல் 2026, வெள்ளி
பாஸ்கா எண்கிழமை - வெள்ளி
பெருவிழா
முதல் வாசகம்

இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12

அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின்மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே மாலையாகி விட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.

மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ‘‘நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள்.

அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: ‘‘மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2,4. 22-24. 25-27a (பல்லவி: 22)
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
4
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. - பல்லவி

22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி

25
ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!
26
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27a
ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு சீடர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள் “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

05/04/2026

*புனித சனிக்கிழமை (Holy Saturday)*

*இயேசுவின் சிலுவை காலியாக நிற்கிறது*
*அமைதி சூழ்ந்த இவ்வுலகில்.*
*வேதனையும் அச்சமும் நிறைந்த நேரங்களுக்கு மத்தியில்;*
*நிசப்தத்தில், பூமி காத்திருக்கிறது*
*உயிர்த்தெழுதலுக்காக,*
*கிறிஸ்து மரித்தோரை எழுப்பக் கீழே இறங்கிச் செல்லும் வேளையில்.*

02/04/2026
24/04/2025
23/04/2025

திருத்தந்தையின் நல்லடக்கம் குறித்த ுதி ிருப்ப ஆவணம் வெளியீடு!

ஜூன் 29, 2022 தேதியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி விருப்ப ஆவணம் (spiritual testament) வெளியிடப்பட்டுள்ளது, இது புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் அவர் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான அவரது ிருப்பம் குறித்து விவரிக்கிறது.

தான் இறந்த பிறகு, தனது உடல் எங்கே எவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியன்று தனது விருப்பதைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி விருப்ப ஆவணத்தை (spiritual testament) வெளியிட்டுள்ளது வத்திக்கான்.

"மூவொரு கடவுளின் பெயரால்-ஆமென்" என்று தனது இறுதி விருப்ப ஆவணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இம்மண்ணக வாழ்வுக்குரிய எனது இறுதிநேரம் நெருங்கி வருவதை நான் உணரும் வேளை, நிலைவாழ்வில் உறுதியான நம்பிக்கை கொண்டவனாக, என் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடம் குறித்து மட்டுமே எனது இறுதி விருப்பங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

"என் வாழ்நாள் முழுவதும், ஓர் அருள்பணியாளராகவும், ஆயராகவும் எனது ஊழியத்தின் போது, ​​நான் எப்போதும் என்னை நம் ஆண்டவரின் அன்னையாம் தூய கன்னி மரியாவிடம் ஒப்படைத்து அவரில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வந்துள்ளேன்" என்றும், "இந்தக் காரணத்திற்காக, நான் உயிர்த்தெழும் அந்த நாளுக்காக எனது உடல் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் வேண்டுகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

“எனது மண்ணக வாழ்வின் இறுதிப் பயணம் பழம்பெருமை வாய்ந்த இந்த மரியன்னை பெருங்கோவிலில் முடிவடைய வேண்டுமென நான் விரும்புகின்றேன்” என்று மொழிந்துள்ள திருத்தந்தை, “எனது ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இறைவேண்டல் செய்ய நான் இங்கே வருகிறேன்” என்றும், “நம்பிக்கையுடன் எனது உள்ளத்தின் நோக்கங்களை தூய்மைமிகு அன்னை மரியாவிடம் ஒப்படைத்து அவருடைய இளகிய மற்றும் தாய்வழி கவனிப்புக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றும் உருக்கமாகக் கூறியுள்ளார்.

"இங்கே இணைக்கப்பட்ட திட்டத்தில் காட்டப்பட்டுள்ளபடி, பவுல் கோவில் (Chapel of the Salus Populi Romani) மற்றும் பெருங்கோவிலின் ஸ்ஃபோர்ஸா கோவிலுக்கு இடையே உள்ள பக்கவாட்டு இடைகழியில் உள்ள அடக்கம் செய்யும் இடத்தில் எனது கல்லறையைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் உரைத்துள்ளார்.

"எனது கல்லறை தரையில்தான் இருக்க வேண்டும் என்றும், அது குறிப்பிட்ட அலங்காரம் எதுவுமின்றி எளிமையாக இருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, "எனது கல்லறை பிரான்சிஸ்குஸ் (Franciscus) என்ற கல்வெட்டை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும்" என்றும் விண்ணப்பித்துள்ளார்.

"எனது உடலை நல்லடக்கம் செய்வதற்கான செலவு ஒரு நன்கொடையாளரால் வழங்கப்படும் தொகையால் ஈடுசெய்யப்படும்" என்றும், "அதை நான் புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் நிர்வாகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “இது தொடர்பாக தேவையான வழிமுறைகளை புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் இணைப்பேராயர் Rolandas Makrickas, அவர்களுக்கு நான் வழங்கியுள்ளேன்” என்றும் தனது விருப்ப ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “என்னை அன்புகூர்ந்தவர்களுக்கும், எனக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்தவர்களுக்கும் இறைவன் தகுந்த வெகுமதியை வழங்குவாராக” என்று மொழிந்துள்ள திருத்தந்தை, “என் வாழ்க்கையின் இறுதிப் பகுதியைக் குறிக்கும் துன்பத்தை, உலக அமைதிக்காகவும், மக்களிடையே உடன்பிறந்த உறவு ஏற்படுவதற்காகவும் நான் இறைவனிடம் அர்ப்பணிக்கிறேன்” என்று கூறி தனது இறுதி விருப்ப ஆவணத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை

23/04/2025
23/04/2025

தூய பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தையின் உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

22/04/2025
22/04/2025

👇👇👇 This is how the papal apartments were sealed.

22/04/2025

*ஒரு போப் இறந்தால் என்ன நடக்கும்
🙏💝🕯️💝🕯️💝🕯️💝🕯️💝🕯️💝🙏 என்பதற்கான முழுமையான படிப்படியான விளக்கம் - பாரம்பரியம் மற்றும் சடங்குகள்:*

*1. மரணத்தை உறுதிப்படுத்துதல்*

கேமர்லெங்கோ (புனித ரோமானிய திருச்சபையின் சேம்பர்லெய்ன்) போப்பின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறார்.
• பாரம்பரியமாக, அவர் போப்பின் ஞானஸ்நானப் பெயரை மூன்று முறை அழைத்து, பதிலுக்காகக் காத்திருக்கிறார்.
• பின்னர் அவர், "போப் உண்மையிலேயே இறந்துவிட்டார்" என்று அறிவிக்கிறார்.

*2. மோதிரத்தை அழித்தல்*
• போப் அதிகாரப்பூர்வ ஆவணங்களை முத்திரையிடப் பயன்படுத்திய மோதிரம், ( FISHERMAN'S RING) ஒரு சுத்தியலால் அழிக்கப்படுகிறது.
• போலியானவற்றைத் தடுக்க போப்பாண்டவர் முத்திரையும் அழிக்கப்படுகிறது.

*3. மணிகள்*

மணிகள், குறிப்பாக செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மணிகள், உலகிற்கு மரணத்தை அறிவிக்க ஒலிக்கின்றன.
• உலகளவில் உள்ள தேவாலயங்களும் துக்கத்தில் மணிகள் அடிக்கலாம்.

*4. வத்திக்கான் சீல் வைக்கப்பட்டுள்ளது*

போப்பாண்டவர் குடியிருப்புகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
• சுவிஸ் காவலர் போப்பின் வழக்கமான காவலில் இருந்து பின்வாங்குகிறார், இது இப்போது இருக்கை காலியாக உள்ளது என்பதைக் குறிக்கிறது.

*5. ஒன்பது நாட்கள் துக்கம்*
• ஒன்பது நாட்கள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
• போப்பின் உடல் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் பொதுமக்கள் பார்வைக்காகவும் பிரார்த்தனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.
• தினசரி இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

*6. இறுதிச் சடங்கு*
• போப்பின் இறுதிச் சடங்கு செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும்.
• அவர் வழக்கமாக செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் கீழே உள்ள மறைவிடத்தில் அடக்கம் செய்யப்படுவார், இருப்பினும் வேறு அடக்கம் செய்யும் இடத்தைக் கோரலாம்.

*7. சேட் வெக்கேன்ட் தொடங்குகிறது*

இதன் பொருள் "இருக்கை காலியாக உள்ளது".
• இந்த நேரத்தில், திருச்சபையால் எந்த முக்கிய முடிவுகளையும் மாற்றங்களையும் எடுக்க முடியாது.
• கேமர்லெங்கோ அன்றாட நடவடிக்கைகளை நடத்துகிறது.

*8. மாநாட்டு தயாரிப்பு*

80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் தேர்தலுக்குத் தயாராவதற்கு ரோமுக்கு வரவழைக்கப்படுகிறார்கள்.
• அவர்கள் சிஸ்டைன் சேப்பலில் கூடுகிறார்கள்.
• புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை யாரும் வெளியேறவோ அல்லது வெளி உலகத்தை தொடர்பு கொள்ளவோ முடியாது.

*9. போப்பாண்டவர் தேர்தல்*

கார்டினல்கள் ஒரு நாளைக்கு நான்கு முறை வரை ரகசிய வாக்குச்சீட்டில் வாக்களிக்கின்றனர்.
• ஒரு போப் தேர்ந்தெடுக்கப்படாதபோது, சிஸ்டைன் சேப்பலில் இருந்து கருப்பு புகை எழுகிறது.
• மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் ஒரு புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும்போது, வெள்ளை புகை எழுகிறது.
• இந்த முறை மணிகள் மகிழ்ச்சியுடன் ஒலிக்கின்றன - புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கின்றன.

*10. “ஹேபமுஸ் பாப்பம்”*
• செயின்ட் பீட்டர்ஸ் பால்கனியில் இருந்து ஒரு கார்டினல் அறிவிக்கிறார்:
“ஹேபமுஸ் பாப்பம்!” — “நமக்கு ஒரு போப் இருக்கிறார்!”
• புதிய போப் தோன்றி உலகிற்கு தனது முதல் ஆசீர்வாதத்தை அளிக்கிறார்..

Address

Marthandam
629158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady Of Assumption, Maruthoorkurichi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Our Lady Of Assumption, Maruthoorkurichi.:

Share