Children's of marthandam St.Francis Xavier

Children's of marthandam St.Francis Xavier "In this life, we find our greatest comfort living in the midst of danger, that is, if we confront them solely for the love of God."

– St Francis Xavier

Synopsis :

Saint Francis Xavier was born on April 7, 1506, in a castle near Sangüesa in Navarre (part of present-day Spain). With encouragement from his friend Ignatius of Loyola, Xavier devoted himself to religious service and became one of the founders of the Jesuit order. Much of his life was spent tending to missions in areas such as India and Japan. He was 46 when he died on China's Shangchu

an Island on December 3, 1552. Early Life

On April 7, 1506, Francis Xavier was born in Xavier Castle, located near Sangüesa, in the kingdom of Navarre (part of present-day Spain). He was a member of a noble family, and his childhood was one of privilege—however, it was disrupted by his father's death, as well as by outside efforts to take control of Navarre. Missionary Work

Impressed by the Jesuits, King John III of Portugal asked the order for missionaries to work in his empire. Though Loyola initially selected others for the task, Xavier stepped in when a fellow priest became ill. He left Rome on March 15, 1540. Xavier arrived in Goa, India, on May 6, 1542. He came to be admired in that country for his ability to live and work side by side with the poor. Seeking more converts, Xavier continued to travel; his stops included Ceylon, the Molucca Islands, the Banda Islands and the Malay Peninsula. On August 15, 1549, Xavier landed at Kagoshima, Japan. As he had at his other missions, Xavier adapted to local mores and arranged for the translation of religious texts. These steps helped him reach more converts in the year and a half he spent in Japan. Last Mission and Legacy

Xavier's next focus for missionary work was China. He traveled to Sancian (Shangchuan) Island, near Canton, but was not able to access the mainland because borders had been closed to foreigners. Before he could find a way inside the country, illness incapacitated Xavier. He died on the island on December 3, 1552, at the age of 46. His body was then taken to Goa. Though he passed away at a relatively young age, Xavier had accomplished much in his life. In addition to being a founding member of the Jesuit order—the Society of Jesus was officially recognized by Pope Paul III in 1540—he baptized an estimated 30,000 people. Xavier was beatified by Pope Paul V in 1619, and canonized by Pope Gregory XV in 1622. A famed missionary himself, he is now the patron saint of missionaries.

03/10/2025
30/04/2025
  died on Monday, April 21, 2025, at the age of 88 at his residence in the Vatican's Casa Santa Marta.Source: Vatican Ne...
21/04/2025

died on Monday, April 21, 2025, at the age of 88 at his residence in the Vatican's Casa Santa Marta.

Source: Vatican News

Let us pray;

O God, faithful rewarder of souls,
grant that your departed servant Pope Francis
whom you made successor of Peter
and shepherd of your Church,
may happily enjoy for ever in your presence in heaven
the mysteries of your grace and compassion,
which he faithfully ministered on earth.
Through Christ our Lord.
Amen.

10/05/2021
05/02/2021

தேவமாதா சர்வதேச வானொலி App-ஐ உங்கள் மொபையில் download செய்து பாடல்கள் கேட்க ஆரம்பித்து விட்டீர்களா? இப்போது உங்கள் வாகனம், ஹோம் தியேட்டர் மற்றும் ஆன்ட்ராய்ட் டி.வி.யிலும்!!!

நீங்கள் கார் அல்லது கனரக வாகனங்களில் பயணிப்பவரா? பயணிக்கும்போது நமது கத்தோலிக்க பாடல்களை கேட்கலாமே! நமது கத்தோலிக்க வானொலியை உங்கள் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் ப்ளூடூத் மூலமாக உங்கள் மொபைலை உங்கள் வாகனத்தின் ஆடியோ சிஸ்டம் உடன் இணைத்திடுங்கள். துல்லியமான HD+ தரத்துடன் கத்தோலிக்க பாடல்களை கேட்டுக்கொண்டே பாதுகாப்பாக ஆசீர்வாதமான பயணத்தை தொடங்குங்கள்.

வீட்டில் உள்ள ஹோம் தியேட்டர் மூலம் HD+ டிஜிட்டல் ஒலி தரத்தில் உங்கள் கணினி அல்லது லேப்டாப் மூலமாக நேரிடையாக கேட்கவும் முடியும்.

உங்கள் வீட்டில் இருப்பது ஆன்ட்ராய்ட் டிவியா? கத்தோலிக்க பாடல்களை தேவமாதா வானொலி மூலம் எப்போதும் கேட்கலாமே! Apps என்பதை தெரிவு செய்து Radio Catholic என்று தேடினால் வரும் நமது கத்தோலிக்க வானொலியை உங்கள் டிவியில் நிறுவிக்கொள்ளுங்கள். துல்லியமான HD தரத்துடன் கத்தோலிக்க பாடல்களை கேட்டுக்கொண்டே ஒவ்வொரு நாளையும் ஆசீர்வாதத்துடன் தொடங்குங்கள்.

அல்லது டிவியின் Browser'ல் https://www.radio.catholictamil.com என்று ரிமோட் மூலம் டைப் செய்து நேரடியாகவும் பாடல்களை கேட்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.dreams.onlineradio

மேலே உள்ள லிங்க்'ல் நமது கத்தோலிக்க வானொலியை உங்கள் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளவும் முடியும்.

நமது தேவமாதா HD+ வானொலியின் நிகழ்ச்சி நிரல்.

அதிகாலை 05.00-06.00 மணி - செபமாலை.
நண்பகல் 12.00-01.00 மணி - செபமாலை.
பிற்பகல் 03.00-03.30 மணி - இறை இரக்க செபமாலை.
இரவு 08.00-09.00 மணி - செபமாலை.
இரவு 10.00-12.00 மணி - காலத்தால் அழியாத பழைய பாடல்கள்.

மற்ற நேரங்களில் இனிமையான கத்தோலிக்கப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள். வானொலிக்கு மீண்டும் திரும்புவோம்.. கேட்கத்தவறாதீர்கள்!

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!

† இன்றைய புனிதர் †(டிசம்பர் 3)✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠(St. Francis Xavier)தூர கிழக்கு நாடுகளின் திருத்தூதர்:(Ap...
03/12/2020

† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 3)

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠
(St. Francis Xavier)

தூர கிழக்கு நாடுகளின் திருத்தூதர்:
(Apostle to the Far East)

பிறப்பு: ஏப்ரல் 7, 1506
ஜேவியர், நவார் அரசு, (தற்போதைய ஸ்பெயின்)
(Javier, Kingdom of Navarre (Present Spain)

இறப்பு: டிசம்பர் 3, 1552 (வயது 46)
'சாவோ ஜோவாஓ' தீவிலுள்ள போர்ச்சுகீசிய தீவு, (தற்போதைய சீனா)
(Portuguese Base at São João Island (now China)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரனிய திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

அருளாளர் பட்டம்: அக்டோபர் 25, 1619
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

புனிதர் பட்டம்: மார்ச் 12, 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

நினைவுத் திருவிழா : டிசம்பர் 3

சித்தரிக்கப்படும் வகை:
நண்டு, சிலுவை; லீலி மலர், நெருப்பு, போதகர்,
எரியும் இதயம்

பாதுகாவல்:
இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணிகள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியா லூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்; கென்யா; ஸ்பெயின்; நியுசிலாந்து; இந்தோனேசியா; மலாக்கா; மலேசியா; மங்கோலியா.

புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில், கி.பி. 1506ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 7ம் நாளன்று, புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தமது ஒன்பது வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பேனிஷ் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.

கல்வி :
கி.பி. 1525ம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, கி.பி. 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மீண்டும் கி.பி. 1534 முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்.

"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார், சவேரியாருக்கு எடுத்துரைக்க, சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.

குருத்துவமும் இந்திய வருகையும் :
சவேரியாரின் பயணங்கள் :
இதை தொடர்ந்து கி.பி. 1537ம் வருடம், ஜூன் மாதம், 24ம் நாள், குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

புனித சவேரியார் கி.பி. 1540ல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பன் சென்றார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு கி.பி. 1542 மே மாதம் 6ம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.

மறைப்பணி :
கி.பி. 1543ல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம்.

கி.பி. 1544ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமல் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விஜய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் பிடித்து வடுகர்ப்படைகளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார்.

புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஏதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.

“அவர்கள் என்னை மகாராஜா என்று அழைத்தார்கள், ஆனால் இனிமேல் அவர்கள் உம்மை எப்போதும் மகாதந்தை என்று அழைப்பார்கள்” (They called me great king, but hereafter for ever they will call you the Great Father) என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன் பாராட்டினார். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது.

ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.

மரணம்:
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ம் வருடம், டிசம்பர் மாதம், 3ம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

அழியா உடல்:
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து (ஃபெப்ரவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது கி.பி. 1553ம் வருடம், மார்ச் மாதம், 22ம் நாளன்று, மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்தபோது அது கெட்டுப் போகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி கி.பி. 1553ம் வருடம், டிசம்பர் மாதம், புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு:
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்தபோது, அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.

† அருளின் கனியே புனிதம் †† புனிதர் அனைவர் பெருவிழா †(நவம்பர் 1, 2020)† திருவெளிப்பாடு 7:2-4, 9-14 †† 1 யோவான் 3:1-3 †† ம...
01/11/2020

† அருளின் கனியே புனிதம் †

† புனிதர் அனைவர் பெருவிழா †
(நவம்பர் 1, 2020)

† திருவெளிப்பாடு 7:2-4, 9-14 †
† 1 யோவான் 3:1-3 †
† மத்தேயு 5:1-12 †

இன்று புனிதர் அனைவர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். பயணம் செய்யும் திருஅவை, மகிமை பெற்ற திருஅவை, துன்புறும் திருஅவை என்னும் நம் திருஅவையின் மூன்று நிலைகளில் இரண்டாம் நிலையின் திருநாள் இது. இவர்கள் தூய்மை அல்லது புனித நிலையை அடைந்தவர்கள்? 'நான் ஒருவரே தூயவர்' என்று கடவுள் சொல்ல, தூய்மை அல்லது புனிதம் என்பது கடவுளின் பண்பு என வரையறுக்கப்பட்டிருக்க, 'மனிதர்களாகிய' நாம் புனித நிலையை அடைய முடியுமா? அல்லது சிலர் சொல்வது போல, 'மனிதமே புனிதமா'?

மனிதப் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுளின் அருளுக்கு நாம் செய்யும் தொடர் பதிலிறுப்பு எனவும், அவரின் அருளைப் பெற்ற நாம் அவருக்குக் கொடுக்கும் கனிகள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒரு சிறிய உருவகத்தோடு தொடங்குவோம். பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள் வரும் நிகழ்வை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

(அ) சில குழந்தைகளை அவர்களுடைய அம்மா, அல்லது அப்பா, அல்லது ஆட்டோக்காரர் கொண்டு வந்து விடுவார்.

(ஆ) சில குழந்தைகள் வீட்டிலிருந்து நடந்து வருவார்கள்.

(இ) சில குழந்தைகள் அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஓட்டிக்கொண்டோ, அல்லது அப்பா தந்த பணத்தைக் கொண்டு பொதுப் போக்குவரத்திலோ வருவர்.

முதல் வகை குழந்தைகளுக்கு எல்லாமே அவர்களது பெற்றோரால் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அவர்களது வேலையெல்லாம் படிப்பதும், பெற்றோரின் எதிர்பார்ப்பின்படி நடப்பதும்தான். இதே போல, கடவுள் சிலருக்கு அவர்களது பிறப்பிலேயே புனிதத்தைக் கொடுத்துவிடுகிறார். புனிதம் என்பது இவர்களுக்குக் கடவுள் கொடுத்த கொடை. எடுத்துக்காட்டாக, அன்னை கன்னி மரியாள்.

இரண்டாம் வகைக் குழந்தைகள் தாங்களே நடந்து செல்ல வேண்டும். முதுகில் சுமை, வயிற்றில் பசி, பள்ளி மணி ஒலிக்கும் அவசரம் எனக் குழந்தைகள் நடந்து செல்ல வேண்டும். சில குழந்தைகள் பள்ளிவரை செல்லும், சில குழந்தைகள் வழியில் யாரிடமாவது லிஃப்ட் கேட்கும், சில குழந்தைகள் தங்களால் இயலாது என்று பாதி வழி நின்றுவிடும். இத்தகைய மனிதர்கள் புனிதத்தை அடையப் போராடுபவர்கள். ஏறக்குறைய புனித நிலையை அடைபவர்கள். இவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். இவர்கள்தாம் உத்தரிக்கிற நிலை ஆன்மாக்கள் அல்லது துன்புறும் திருஅவையின் உறுப்பினர்கள்.

மூன்றாவதாக உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோர் கொடுத்த அருள் என்னும் மிதிவண்டியைப் பயன்படுத்துவதுடன், தாங்களே மிதித்து பள்ளிக்கு வருவார்கள். இவ்வகை மனிதர்கள், கடவுளின் அருள் அல்லது அழைப்பைத் தங்கள் வாழ்வில் ஏற்று, அதற்கேற்ற பதிலிறுப்பு செய்து, தங்கள் வாழ்விலும் வாழ்வாலும் கனி தந்தவர்கள். இம்மூன்றாம் வகை மனிதர்களைத்தான், அவர்கள் அடைந்த புனித நிலையைத்தான், இன்றைய நாளில் 'புனிதர் அனைவர் பெருவிழாவில்' கொண்டாடி மகிழ்கிறோம். பள்ளிக்குள் வந்துவிட்டால் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றென ஆகிவிடுகிறார்கள். அது போல, இறைவனின் திருமுன்னிலையில் அனைத்துப் புனிதர்களும் ஒன்றென ஆகிவிடுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 7:2-4,9-14), திருவெளிப்பாடு நூல், கடவுளின் புனித மக்கள் பற்றிய வியத்தகு காட்சியை நம்முன் கொண்டுவருகிறது. கடவுளின் புனித மக்கள் இரு குழுவினர்களாக இருக்கின்றனர். முதல் காட்சியில், அல்லது முதல் குழுவில் உள்ளவர்கள் 'முத்திரையிடப்பட்டவர்கள்.' முத்திரை என்பது ஒருவருக்கு அது உடைமை என்பதையும், ஒருவர் அதன்மேல் உரிமை கொண்டாடுகிறார் என்பதையும் குறிக்கிறது. 144 ஆயிரம் மக்கள் அவ்வாறு முத்திரையிடப்பட்டுள்ளதாக யோவான் காண்கிறார். முத்திரையிடப்பட்ட இவர்கள் அனைவரும் கடவுளின் மக்கள். இங்கே, '144' என்பது ஓர் உருவக அல்லது அடையாள எண். இஸ்ரயேலின் 12 குலங்களும், அவற்றின் வழி மரபுகளாக 12 ஆயிரம் மக்களின் பெருக்கல் தொகையே 144 ஆயிரம் (காண். திவெ 7:5-8). இந்த முதல் குழு இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது. இந்த மக்களையே கடவுள் தன் சொந்த மக்களினமாகத் தெரிந்தெடுத்து, தனக்குப் பணி செய்யவும், தன் செய்தியை அனைத்துலக்குக்கும் அறிவிக்கவும் பணித்தார் (காண். விப 19:5-6).

இரண்டாம் குழுவினர் 'வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்.' இவர்கள், 'கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.' இவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், கிறிஸ்துவுக்காகத் துன்பம் ஏற்றவர்கள். அவர்களின் வெண்ணிற ஆடை தூய்மை மற்றும் வெற்றியைக் குறிக்கிறது. கிறிஸ்துவைப் போல அவர்கள் இருந்ததால் அவர்கள் செம்மறியின் விருந்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இப்போது அனுபவிக்கும் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுள் அவர்களுக்கு அளித்த கொடை. இஸ்ரயேல் மக்கள் கடவுளால் முத்திரையிடப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஸ்காச் செம்மறியின் இறப்பால் புனிதப்படுத்தப்படுகின்றனர்.

புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-3), கடவுளின் அன்பு மற்றும் அன்பின் விளைவுகள் பற்றிச் சிந்திக்கும் அழைப்போடு தொடங்குகிறது. யோவானின் குழுமத்தினர் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றதால் துன்புறுகின்றனர். ஆனால், அத்துன்பம் தற்காலிகமானது என்றும், நம்பிக்கையாளர்களின் நோக்கம் தூய்மையை அடைவது என்றும் அறிவுறுத்துகின்றார் யோவான்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:1-12), மத்தேயு நற்செய்தியில் காணும் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். எட்டு பேறுபெற்ற நிலைகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் நோக்கம் கடவுளின் ஆசீரை நமக்கு வழங்குவதும், அதன் வழியாக நம்மைப் புனிதத்துக்கு இட்டுச் செல்வதுமே.

முதல் நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளரைக் கடவுளோடும், இரண்டாவது நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளர்களை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றன. முதலில், 'ஆன்மீக ஏழ்மை அல்லது எளிமை' முன்வைக்கப்படுகிறது. இது ஒருவர் கடவுள்மேல் கொண்டுள்ள சார்புநிலையைக் குறிக்கிறது. இரண்டாவது, துயருறுவோர் பற்றியது. துயரம் கடவுள் தரும் மீட்பை முன்குறிக்கிறது. மூன்றாவது பேறுபெற்ற நிலை திபா 37:11இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கனிவுடையோர் நாட்டை உரிமையாக்கிக்கொள்கின்றனர். நாடு என்பது கடவுள் அளிக்கும் கொடை. நான்காவது, நீதிக்கான ஏக்கம் கொள்வோர் பெறும் நிறைவை எடுத்துச் சொல்கிறது. நீதி என்பது கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சரியான உறவுநிலையைக் குறிக்கிறது. ஐந்தாவது, இரக்கம் காட்டுபவர் இரக்கம் பெறுவார். இரக்கம் என்பது ஒருவர் மற்றவர்மேல் காட்டும் உடல் மற்றும் உள்ளம்சார் அன்பைக் குறிக்கிறது. ஆறாவதாக, தூய்மையான உள்ளம் என்பது ஒருவரின் நாணயத்தையும், நம்பகத்தன்மையையும் காட்டுகிறது. உறவுகளில் தூய்மையாக இருக்கும் இவர்கள் கடவுளின் திருமுன்னிலை நோக்கி ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில், கடவுள் தூயவராக இருக்கிறார். ஏழாவது, அமைதியை ஏற்படுத்துவது. அமைதி என்பது ஒருங்கிணைந்த இசைவு நிலை. அந்த இசைவு நிலையில் ஒருவர் இந்த உலகத்தோடு தான் கொண்டுள்ள இணைப்பைக் கண்டுணர்கிறார். எட்டாவது பேறுபெற்ற நிலை, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுபவர் பற்றிப் பேசுகிறது. இவர்கள் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதால், கடவுளின் அரசில் பங்கேற்கின்றனர்.

நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதி, 'மகிழ்ந்து அக்களியுங்கள்' என்ற வாழ்த்தோடு நிறைவுறுகிறது. இந்த வார்த்தைகளைக் கொண்டே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதம் பற்றிய திருத்தூது ஊக்கவுரையை (2018) எழுதுகின்றார்.

ஆக, முதல் வாசகத்தில், கடவுளின் அருளை அனுபவித்தவர்கள் அவருக்காக மறைசாட்சியம் ஏற்றதால் கனி தருகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், புனிதம் என்பது நாம் அடைய வேண்டிய இலக்காக வரையறுக்கப்படுகின்றது.

நற்செய்தி வாசகம், பேறுபெற்ற நிலைகளை முன்வைப்பதுடன், மகிழ்ச்சிக்கான இயேசுவின் அழைப்பே புனிதத்தின் தொடக்கம் என முன்வைக்கிறது.

பதிலுரைப் பாடல் ஆசிரியரும், இதையொட்டி, 'ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே' (காண். திபா 24) துள்ளிக் குதிக்கின்றார்.

இறுதியாக,
புனிதர்கள் வானத்திலிருந்து கீழே குதித்தவர்கள் அல்லர். மாறாக, நம்மைப் போல வாழ்ந்து, நமக்கு முன் கடந்து சென்றவர்கள். இங்கு செய்யப்பட்டு அங்கே ஏற்றுமதி செய்யப்படுபவர்கள் இவர்கள். தாங்கள் பெற்ற அருளுக்கு ஏற்ற கனிகள் தருபவர்கள் இவர்கள். இவர்கள் விழுந்தாலும் எழுபவர்கள். புனித மரிய வியான்னி சொல்வது போல, 'புனிதர்கள் சரியாகத் தொடங்கவில்லை என்றாலும், மிகச் சரியாக முடித்தார்கள்.' நாம் அனைவரும் சரியாக, நல்லதாக முடிக்க முடியும். புனிதம் என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய தெரிவு. அந்தத் தெரிவின்மேல் கொள்ள வேண்டிய மனவுறுதி.

மதிப்பற்றவை நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை. மதிப்பு மிக்கவை என்றும் நீடிக்கின்றன.

அன்றாட தெரிவுகள் தெளிவானால், புனிதம் என்பது உணர்வு அல்லது செயல் என்பது தெளிவானால், நாமும் புனிதர்களே.

† இன்றைய புனிதர் †(செப்டம்பர் 27)✠ புனிதர் வின்சென்ட் தே பவுல் ✠(St. Vincent de Paul)குரு, சபை நிறுவனர்:(Priest and foun...
27/09/2020

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 27)

✠ புனிதர் வின்சென்ட் தே பவுல் ✠
(St. Vincent de Paul)

குரு, சபை நிறுவனர்:
(Priest and founder)

பிறப்பு: ஏப்ரல் 24, 1581
குயேன், காஸ்கனி, ஃபிரான்ஸ் அரசு
(Guyenne and Gascony, Kingdom of France)

இறப்பு: செப்டம்பர் 27, 1660 (வயது 79)
பாரிஸ், ஃபிரான்ஸ் அரசு
(Paris, Kingdom of France)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

முக்திபேறு பட்டம்: ஆகஸ்ட் 13, 1729
திருத்தந்தை 13ம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

புனிதர் பட்டம்: ஜூன் 16, 1737
திருத்தந்தை 12ம் கிளமென்ட்
(Pope Clement XII)

முக்கிய திருத்தலங்கள்:
புனித வின்சென்ட் தெ பவுல் சிற்றாலயம்,
(St. Vincent de Paul Chapel)
95, ரியூ டி செவ்ரெஸ், பாரிஸ், ஃபிரான்ஸ்
(95, Rue de Sèvres, Paris, France)

நினைவுத் திருவிழா: செப்டம்பர் 27

பாதுகாவல்:
தொண்டு நிறுவனங்கள்; மருத்துவமனைகள்; குதிரைகள்; மருத்துவமனைகள்; தொழுநோய்; தொலைந்து போன பொருட்கள்; மடகாஸ்கர் (Madagascar); கைதிகள்; ரிச்மோன்ட் (Richmond); வர்ஜீனியா (Virginia); ஆன்மீக உதவி; புனித வின்சென்ட் தெ பவுல் சபைகள்; தன்னார்வலர்கள்; தூய இருதய பேராலய தயாரிப்பு (Sacred Heart Cathedral Preparatory); Vincentian Service Corps.

புனிதர் வின்சென்ட் தே பவுல், ஏழைகளுக்கு தொண்டு செய்வதற்காக தம்மையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க திருச்சபையின் குரு ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையிலும், ஆங்கிலிக்கன் ஒன்றியத்திலும் புனிதராக போற்றப்படுகிறார். இவருக்கு 1737ம் ஆண்டு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் தமது இரக்கம், மனத்தாழ்ச்சி, தாராள குணம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றவர் ஆவார். மேலும், இவர் “டிரம்பெட்” எனும் இசைக் கருவிகளின் பெரிய தூதர் (Great Apostle of Trumpets) என்றும் அழைக்கப்படுகிறார். ஐக்கிய அரசு நாடுகளில் (UK) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் நாள், தூய வின்சென்ட் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அனுசரிக்கின்றனர்.

வாழ்க்கை குறிப்பு :
புனித வின்சென்ட் ஃபிரான்ஸ் நாட்டில் காஸ்கனியின் பாவ்ய் பகுதியில், விவசாயக் குடும்பத்தில் 1581ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் “ஜீன்” (Jean) ஆகும். தாயாரின் பெயர், “பெட்ரான்ட்” (Bertrande de Moras de Paul) ஆகும். இவருக்கு “ஜீன்” (Jean), “பெர்னார்ட்” (Bernard), “கேயான்” (Gayon) என்று மூன்று சகோதரர்களும், “மேரி மற்றும் மேரி-கிளாடின்” (Marie and Marie-Claudine) என்று இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

ஃபிரான்சின், “டாக்சில்” (Dax) கலை, இலக்கியம் கற்ற இவர், 1597ம் ஆண்டு, “டௌலோஸ் பல்கலையில்” (University of Toulouse) இறையியல் படிப்பை தொடங்கினார். 1600ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் தேதி, தமது பத்தொன்பது வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அக்காலத்தில் குருத்துவ அருட்பொழிவு பெற குறைந்தபட்ச வயது இருபத்துநான்கு ஆகும். ஆனால், வின்சென்டின் பங்குத்தந்தை நியமனத்தை எதிர்த்து ரோம நீதிமன்றத்தில் (Court of Rome) வழக்கு தொடரப்பட்டது. வழக்கை எதிர்க்க விரும்பாத வின்சென்ட், பங்குத்தந்தை நியமன பதவி விலகினார். டௌலோஸிலேயே தங்கி தமது கல்வியை தொடர்ந்தார். இறையியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1605ம் ஆண்டு, மார்செய்ல் பகுதிக்கு திரும்பும் வழியில் “பார்பரி” (Barbary pirates) கடற்கொள்ளையரால் பிடித்துச்செல்லப்பட்டு, துனீசியா (Tunis) பகுதியில் அடிமையாக விற்கப்பட்டார்.

முதலில் ஒரு மீனவ எஜமானிடம் விற்கப்பட்ட வின்சென்ட், மீனவ பணிகள் இவருக்கு பொருந்தாமையால் மருத்துவர் ஒருவருக்கு விற்கப்பட்டார். ஒரு பயணத்தின்போது இவரது எஜமான் மரணமடைந்தார். பின்னர், மீண்டுமொருமுறை வின்சென்ட் விற்கப்பட்டார். இம்முறை இவரை வாங்கிய எஜமான் ஒரு முன்னாள் ஃபிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்த கத்தோலிக்க குரு ஆவார். ஃபிரான்ஸ் நாட்டின் “நைஸ்”( Nice) எனும் பிராந்தியத்தைச் சேர்ந்த இவரது பெயர், “கில்லாம் கௌடியர்” (Guillaume Gautier) ஆகும். முன்னர் ஒருமுறை இஸ்லாமியர்களிடம் அடிமையாக பிடிபட்டிருந்த இவர், அடிமைத் தளையிளிருந்து விடுபடுவதற்காக இஸ்லாம் மதத்தை தழுவினார். இவர் அங்கிருந்த மலைப் பகுதிகளில் தமது மூன்று மனைவியருடன் வசித்துவந்தார். கத்தோலிக்க விசுவாசம் பற்றின தகவல்களை வின்சென்ட் மூலம் அறிந்துகொண்ட அவரது இரண்டாம் மனைவி, அவரை மீண்டும் கிறிஸ்தவ மறையை தழுவ வற்புறுத்தினார். இதனால் மனம் மாறிய அவர்கள் அனைவரும் பத்து மாதங்கள் பொருத்திருந்தனர். பின்னர் சிறு படகு ஒன்றின் மூலம் அங்கிருந்து தப்பித்து, ஃபிரான்ஸ் நாட்டின் “ஐகேஸ் மோர்டேஸ்” (Aigues-Mortes) பகுதியில் 1607ம் ஆண்டு, ஜூன் மாதம், 28ம் தேதி இறங்கினார்கள்.

ஃபிரான்சுக்கு திரும்பியதும், ரோம் சென்ற வின்சென்ட், தனது படிப்பைத் தொடர்ந்தார். 1609ம் ஆண்டு, ஒரு பணி நிமித்தம் அரசர் 4ம் ஹென்றியிடம் ஃபிரான்ஸ் அனுப்பப்பட்டார். அங்கு அவர் மார்கரெட் டி வலோயிசின் குருவாக பணியாற்றினார். சிறிது காலம் க்ளிச்சியின் பங்கு குருவாக இருந்துவிட்டு, 1612ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற கான்டி குடும்பத்துக்கு குருவாக பணியாற்றினார். இவர் டி கான்டி சீமாட்டியின் ஒப்புரவாளராகவும், ஆன்ம இயக்குனராகவும் இருந்தார்; மேலும் அந்த சீமாட்டியின் உதவியோடு, பண்ணையில் பணிபுரிந்த விவசாயிகளுக்கு இயேசுவைப் பற்றி போதித்தார்.

1622ம் ஆண்டு, வின்சென்ட் தே பவுல் போர் கப்பலில் குருவாக நியமிக்கப்பட்டார்; அங்கு இவர் போர் கைதிகளுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

1625ம் ஆண்டு, வின்சென்ட் மறைப்பணி சபை என்ற துறவற சபையை நிறுவினர். மறைபரப்பு பணியை மேற்கொள்ளும் இச்சபையின் குருக்கள் பொதுவாக வின்சென்டியர்கள் அல்லது லாசரிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 1633ல் லூயிஸ் தே மரிலாக்கின் வழிகாட்டுதலோடு, பிறரன்பு புதல்விகள் என்ற பெண்களுக்கான துறவற சபையை இவர் நிறுவினார். இவர் ஜான்செனிச பேதகத்திற்கு எதிராகவும் போராடினார். (பேதகம் என்பதற்கு தவறான கிறிஸ்தவ போதனை என்பது பொருள்).

பிறரன்பு பணிகளில் அதிக ஆர்வம் காட்டிய வின்சென்ட் தே பவுல், 1660ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் தேதி மரணம் அடைந்தார். வின்சென்ட் தே பவுலின் கருணை, பணிவு, தாராள குணம் ஆகியவை அவருக்கு புகழைத் தேடித் தந்திருக்கின்றன.

† Saint of the Day †(September 8)✠ St. Adrian and Natalia of Nicomedia ✠Martyrs:Born: ----Died: March 4, 306NicomediaVen...
08/09/2020

† Saint of the Day †
(September 8)

✠ St. Adrian and Natalia of Nicomedia ✠

Martyrs:

Born: ----

Died: March 4, 306
Nicomedia

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Major Shrine:
Argyropolis near Constantinople; Geraardsbergen, Belgium; Church of Sant'Adriano al Foro, Rome

Feast: September 8

Patronage :
Plague, Epilepsy, Arms Dealers, Butchers, Guards, Soldiers

Saint Adrian (also known as Hadrian) or Adrian of Nicomedia was a Herculian Guard of the Roman Emperor Galerius Maximian. After becoming a convert to Christianity with his wife Natalia, Adrian was martyred at Nicomedia.

Adrian and Natalia lived in Nicomedia during the time of Emperor Maximian in the early fourth century. The twenty-eight-year-old Adrian was head of the praetorium.

Biographical selection:
St. Adrian lived in Nicomedia around the year 300 and was martyred at age 28.

During those times, Catholics were cruelly persecuted under the Roman Emperor Diocletian. Thirty-three Catholics in Nicomedia were denounced, and soldiers were sent to seize them. They were brought in iron chains before the tribunal of the Emperor.

“Can it be you have not heard what manner of torments awaits them who call themselves Christians?” asked the judge. They replied: “We know of them, but we cannot obey unjust orders. We do not fear the fury of Satan and his ministers, of whom you are one.”

Three men were ordered to savagely beat the Catholics with whips made of bull nerves. But while they were undergoing this treatment, the holy martyrs told the judge that whatever number of torments he might devise, he would but increase their crowns awaiting them in Heaven, while he would receive his due for his cruelty in Hell.

They were then brought before Galerius, the prepared successor of Diocletian, who ordered new torments. The soldiers took up stones and struck the martyrs about the mouth. The martyrs berated Galerius, telling him that an angel of God would punish and destroy all of his impious households. Enraged, he ordered that their tongues be cut out. In face of this new torment, they told the ruler: “Even if we are unable to speak, the protests of our hearts will rise to the throne of God proclaiming that we are suffering in innocence.”

Hearing this, Galerius was filled with hate and ordered that they should all be taken to prison to see if any of them would become fearful and apostatize. With this, he left. One of those present was a high dignitary named Adrian. Seeing the great honour of the Catholics, he rejected paganism and said to a functionary: “Write down my name among these admirable persons, for I too am now a Catholic and shall die for Christ God in their company!”

One of Adrian’s servants went to warn Natalie, his wife, about what had happened. She ran to the prison and, falling down at the feet of her husband, she said, “Blessed are you, my Adrian, for you have found a treasure. I ask Christ to give you strength, courage, and perseverance in the fight. The goods of this earth are nothing; God desires to give you eternal riches. Therefore, be not weak, but strong and generous like these saints who surround you.”

When Galerius heard this, he became further enraged, and ordered that Adrian be weighed down with iron chains and cast into prison with the other martyrs. They greeted him with great joy, and even those who could no longer walk because of the tortures dragged themselves to him to offer him the kiss of peace. Then Natalie cleaned and bandaged their wounded and bloody bodies.

Adrian was beaten and tortured, returned to the prison, and finally, his legs and arms were smitten off with an anvil.

Comments:
The first point that catches the attention is that these are polemic martyrs. They argued with the judge and threatened him with eternal damnation. They displayed nobility of spirit, telling him that the scourge was but a means for them to gain more pearls in their heavenly crown. Later, they also disputed with Galerius, the man who had been prepared to succeed Emperor Diocletian.

Second, you can imagine the shock these pagans felt upon receiving these challenges from the Christians. Every man by his nature knows that Heaven exists. The pagans said the contrary: No, it doesn’t exist. Even though they denied it, they had considerable internal insecurity. Then a pagan judge came and tortured the Christians, who showed an extraordinary assurance not only that Heaven exists but also that they would enter there by means of the very suffering he was causing them. You can imagine the doubt this generated.

Third, one sees the sudden action of the Holy Ghost in the soul of St. Adrian. Instead of being fearful of suffering the torments the martyrs were undergoing, he felt invited to share the honour of being one of such an extraordinary society. Through them, he saw Heaven, and he was moved to join them and die with them.

Fourth, there is the marvellous position of Natalie, who was probably a secret Catholic. When she received the news that her husband had also become a Catholic, she rushed to the prison to give him all the support she could. You can imagine the beautiful scene in the prison, their meeting, the joy of the martyrs who saw that their good example had caused a high imperial official to convert. Even with the tortures, all the wounds, and blood, a supernatural joy-filled all of them. They came to greet the new convert, even dragging themselves over the floor, to give him the kiss of peace. No natural joy is comparable to this supernatural happiness.

Fifth, from this description and the conversion of St. Adrian, a high dignitary of the Empire, you can realize the perplexity and despair of the Roman Emperors, who realized that Catholicism was invading and undermining their whole world. Taking energetic measures and using violence could not destroy Catholicism. On the contrary, it continued to grow. In a certain way, the violence of the persecutions that increased until Constantine was a consequence of this despair.

Let us ask St. Adrian to give us the same grace he received when he saw Heaven and victory in a situation of persecution, torture, and martyrdom. Today, in many ways we need a similar grace in our fight when the enemies of the Catholic Church persecute true Catholics. We need the grace to see the victory of the Reign of Mary, the restoration of Christendom, in such persecutions.

https://youtu.be/Au0GoanIApE
08/09/2020

https://youtu.be/Au0GoanIApE

Produced by Kaviri Communications, Trichy. Thanks to Rev. Fr. Albert Director, arungkodai illam Trichy-1 Cell- 97885 36940 Creative Head Rev. Fr. Deepan kula...

Address

St. Xavier Street
Marthandam
629165

Alerts

Be the first to know and let us send you an email when Children's of marthandam St.Francis Xavier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share