Mannargudi keelarajaveethi pallivasal

Mannargudi keelarajaveethi pallivasal In the name of allah....

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் சென்னையில்  இருந்து தனது சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு மன்னார்குடி...
11/08/2022

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு மன்னார்குடி வரை புகைவண்டி மார்க்கமாக அதன்பின் மகிழ்வுந்தில்
தான் செல்லும் வழியில் நமது கீழராஐவீதி பள்ளிவாசலில் காலை ஃபஜர் தொழுகையில் நமது ஐமாத்தார்களுடன் கலந்து கொள்ளவது வழக்கம்.

இன்று வியாழக்கிழமை
11-08-22 ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டு நமது பள்ளிவாசல் சொத்துகளிள் அதன் சந்து பகுதிகளில் ஆக்ரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஐமாத்தார்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டபோது.

நமது பள்ளிவாசல் வழக்கறிஞர் திரு. V. ரவிச்சந்திரன் Bsc., B.L அவர்களின் இல்லத் திருமண விழா                               -...
05/02/2022

நமது பள்ளிவாசல் வழக்கறிஞர்
திரு. V. ரவிச்சந்திரன் Bsc., B.L அவர்களின் இல்லத் திருமண விழா
----
மன்னார்குடி நகரம் நமது கீழராஜவீதி பள்ளிவாசல் வழக்கறிஞர் அருமை சகோதரர் திரு. ரவிச்சந்திரன் Bsc., B.L அவர்களின் புதல்வி R. கீர்த்தனா மற்றும் D. ஜெயந்தன் ஆகியோர்களின் திருமணம் நாளை 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 to 8 மணிக்கு மன்னார்குடி ஆசாத் தெரு T.R.G திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மணமக்கள் நீடூடி வாழ பள்ளிவாசல் நிர்வாகசபை மற்றும் ஜமாத்தார்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

மன்னார்குடி முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் மன்னார்குடி பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் ஜனாப். A சலாஹுதீன் அவர்...
02/02/2022

மன்னார்குடி முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் மன்னார்குடி பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் ஜனாப். A சலாஹுதீன் அவர்கள் இல்ல ( நிக்காஹ் ) திருமண விழா

இன்ஷா அல்லாஹ் இன்று 02-02-2022 புதன்கிழமை காலை 11:30 மணி அளவில் மன்னார்குடி நெடுவாக்கோட்டை P.P மஹாலில் நடைபெற உள்ள சலாஹுதீன் அவர்களின் மகள் சர்பு நிஷா சலாவுதீன்
ஆகியோர்களின் நிக்காஹ் ( திருமணம் ) இனிதே நடைபெற துஆவையும் செய்கிறோம்.

" பாரக்கல்லாஹு ல(க்) க வபாரக அலை (க்)கு வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர் "

பொருள் :-
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும் புறத்திலும் பரக்கத் செய்வானாக! இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக! ஆமீன்

கீழராஜவீதி பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாக சபை சார்பாக மணமக்கள் தீனியாத் உடன் நீடூடி வாழ வாழ்த்துகிறோம்.

வஸ்லாம்.

இறைவன் மிகப்பெரிய கிருபையால் நமது கீழராஜவீதி பள்ளிவாசலில் நமது இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு இ...
26/01/2022

இறைவன் மிகப்பெரிய கிருபையால் நமது கீழராஜவீதி பள்ளிவாசலில் நமது இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு இன்று காலை 8 மணியளவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

பள்ளிவாசல் தலைவர், ஹாஜி ஆர். அப்துல் கரீம், இம்மாம்கள் மற்றும் பிலால் ஆகியோர் கொடி ஏற்றிவைத்தனர் மதரசா குழந்தைகளும் ஜமாதார்களும் கலந்துகொண்டனர்கள்

வழக்கம் போல் நண்பர் ஆர். முரளி அவர்கள் இனிப்பு அனுப்பிவைத்து சிறப்பித்தார்.

இறைவனின் கருனையும் அன்பும் என்றென்றும் நம் அனைவரின் மீதும் நிலைத்திருக்க அருள் புரிவானக - அமீன்

14/01/2022

அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் பேரருளால் இன்று (14/01/22) வெள்ளி மாலை 4 மணி அளவில் MIT ன் (மன்னை இஸ்லாமிய தோழமைகள்) அலுவலக திறப்பு நிகழ்ச்சி சிறப்புடன் நடைற்றது

அல்ஹம்துலில்லாஹ்...
இந்நிகழ்ச்சிக்கு அவை தலைவர் ஹலிம் அவர்கள் தலமையேற்று அண்ணன் ஜபருல்லாஹ் அவர்கள் இக்கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அல்ஹம்துலில்லாஹ்...
அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரா....

இங்கனம்
MIT நிர்வாகம்
மன்னார்குடி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் பெரியகடைத் தெருவில்  கீழராஜவீதி  பள்ளிவாசலுக்கு சொந்தமான அல் அன்சார்  ஜும்மா பள்ளி...
15/12/2021

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் பெரியகடைத் தெருவில் கீழராஜவீதி பள்ளிவாசலுக்கு சொந்தமான அல் அன்சார் ஜும்மா பள்ளிவாசல், ஈத்ஹாத்திடல், கபரஸ்தான், வனிக வளாகம் ஆகியவை ஒருங்கே அமைந்து ள்ள இடத்தில் உள்ள அல்லாசாமி தைக்கால் என்று அழைக்க படுகின்ற தைக்காலில் 14 - 12 - 2021 நேற்று செவ்வாய் மாலை அசர் தொழுகைக்கு பின் சந்தனம் பூசப்பட்டது

திருவாரூர் மாவட்டம், நமது மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் வனஜா என்ற செவிலியர்.நேற்றைய முன் தினம் மன்னார்குட...
04/12/2021

திருவாரூர் மாவட்டம், நமது மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் வனஜா என்ற செவிலியர்.
நேற்றைய முன் தினம் மன்னார்குடி இலக்கனாம்பேட்டை அருகே தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது அங்கு நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவரின் நின்றுபோன இதயத்தை சிகிச்சை அளித்து மீண்டும் இயங்கச் செய்தார்.
அந்த இளைஞர் நல்ல நிலையில் உள்ளார்.

இந்த நிகழ்வை தொடர்ந்த்து மன்னார்குடி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் வனஜா அவர்களின் செய்யல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
மேலும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வர்கிறார்கள்

செவிலியர் வனஜா, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சம்பவம் அன்று தான் விடுப்பு எடுத்து இருந்த நிலையில், தனது குடும்பத்தாருடன் வெளியூர் காரில் சென்று வந்தார்.

இந்நிலையில், தனது கண்முன்னே நிகழ்ந்த விபத்தை கண்டும் காணாமல் வந்துவிடவில்லை.
மாறாக தனது செவிலியர் பணியை உணர்ந்து, தாயுள்ளத்தோடு சிகிச்சை அளித்து இளைஞரை தக்க சமயத்தில் காப்பாற்றியுள்ளார்.

சகோதரி அவர்களை நமது கீழராவீதி பள்ளிவாசல் மஹல்லா சார்பாக பாராட்டி மகிழ்வதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும் இறைவன் தந்தருள பிரார்த்தனை செய்வோமாக.

மன்னார்குடி பகுதி மக்களின்  மருத்துவராக விளங்கியவரும், தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரும, ஏழைகளுக்கு மக்களுக்கு இலவச மரு...
24/11/2021

மன்னார்குடி பகுதி மக்களின் மருத்துவராக விளங்கியவரும், தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரும, ஏழைகளுக்கு மக்களுக்கு இலவச மருத்துவ உதவி செய்துவந்த மருத்துவர் சி அசோக் குமார் MS அவர்கள் மாரடைப்பு காரணமாக
இயற்கை எய்தினார் என்பதை
வேதனையுடன் பதிவு செய்கிறோம்.

மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களிடையே மிகுந்த மதிப்பை பெற்றவர். ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக வழங்கி வந்தார்

அரிமா சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்
மன்னார்குடி நகர வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்கள் உறவினர்கள் மருத்துவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மன்னார்குடி கீழரா ஜவீதி பள்ளிவாசல் மஹல்லா ஜமாத் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பாக  11-11-2021 வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து...
13/11/2021

துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பாக 11-11-2021 வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நமது தமிழ் நாடு வக்ஃப்பு வாரிய தலைவர் ஜனாப். அப்துல் ரஹ்மான் Ex. MP அவர்களிடம் நமது கீழராஜவீதி பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் மீதுயும் வக்ஃப்பு வாரியத்தில் நட வடிக்கை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்டுதர கோரி நமது மஹல்லாவை சேர்ந்த சகோதரர் பிர்தவ்ஸ் பாட்சா அவர்கள் வழியாக கோரிக்கை மற்றும் நினைவூட்டல் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

வக்ஃப்பு வாரிய தலைவர் ஜனாப். அப்துல் ரஹ்மான் Ex. M.P அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.

தனது பல்வேறு பணி பளுவிற்க்கு இடையே நமது பள்ளிவாசல் மற்றும் ஜமாத்தின்மீதும் மிகுந்த பற்றுத்தல் கொண்டு அதன் நலன் கருதி அபுதாபியிலிருந்து துபாய்க்கு சென்று தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நமது ஜாமத்திற்க்காக பயன்படுத்தி நிர்வாகத்திடம் மின்னஞ்சலில் மனு அனுப்பி வைக்க கேட்டு பெற்று மனுவை கொடுத்த சகோதரர் பிர்தவ்ஸ் பாட்சா அவர்களுக்கு சலத்தையும் நன்றியையும் தெறிவித்து கொள்வோமாக

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழராஜவீதி பள்ளிவாசல் நிர்வாககமிட்டிஇன்று 30-10-2021  சனிக்கிழமை காலை 11மணி முதல் மத்திய...
30/10/2021

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழராஜவீதி பள்ளிவாசல் நிர்வாககமிட்டி

இன்று 30-10-2021 சனிக்கிழமை காலை 11மணி முதல் மத்திய வக்பு வாரிய ஜூம் ( இணையத்தளம் ) வழியிலான சந்திப்பு மற்றும் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது அதில் கலந்து கொண்டு நமது பள்ளிவாசல் சொத்துக்கள் தொடர்பக உள்ள ஆக்கிரமிப்பு, வாடகை உயர்வு மற்றும் பள்ளிவாசல் புதிய நிர்வாகசபை தேர்தல் முதலானவை கோரிக்கையா நமது பள்ளிவாசல் தலைவர் ஹாஜி ஆர் அப்துல் கரீம் வலியாக இந்த கூட்டதில் எடுத்துவைக்க பட்டுள்ளது.

அல்லாஹ் நம்முடைய நற்காரியங்கள் அனைதிற்க்கும் நல்லருள் புறிவானாக - ஆமீன்

இறைவனின் மாபெரும் கிருபையால் நமது இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ...
15/08/2021

இறைவனின் மாபெரும் கிருபையால் நமது இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழரா ஜவீதி பள்ளிவாசல் வளாகத்தில் இன்று காலை தேசிய கொடி ஏற்றப்பட்டது

தேசிய கொடியினை பள்ளிவாசல் , தலைவர் ஹாஜி அப்துல் கரீம் ( போஸ்ட் மாஸ்ட்டர் ஒய்வு ) அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்கள் இமாம் நூருல்லாஹ், பிலால் அமீர்ஜான் அவர்கள் நாட்டின் சுபிட்ச்சத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்

கலந்து கொண்ட அனைவரும் இனிப்பு வழங்கப்பட்டது.

*மன்னார்குடி புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி ஆலோசனை கூட்டம்.*ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையற...
12/07/2021

*மன்னார்குடி புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி ஆலோசனை கூட்டம்.*

ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க முயற்சிகள் தொடங்கியுள்ளது.

இதற்காக மன்னார்குடி காந்திசாலையில் உள்ள கோவிந்த் மஹாலில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை சங்கத்தினர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் 11.07.2021 அன்று நடைபெற்றது.

மன்னார்குடி நகரம் 155 ஆண்டுகால நகராட்சியை கொண்ட பழமையான நகரம். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திரப்போராட்ட வீரர்கள் பங்கேற்ற நகரம். தேசியம், திராவிடம், பொதுவுடமை, கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் இந்த பகுதியில் உருவாகி தமிழக அரசியலுக்கு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய சூழலில் மன்னார்குடி நகரத்தை மாவட்டத் தலைநகரமாக தரம் உயர்த்த வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளாக மன்னார்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை புதிய அரசு பரிசீலிக்க வேண்டும்.

*ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.*

*அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய, 10 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்கின்ற அடிப்படையில், குறைந்தபட்சம் இதனை 6 மாவட்டங்களாக தற்போது உருவாக்க முடியும். அதன்படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். 150 ஆண்டுகள் பழமைமிக்க கட்டமைப்புகளை கொண்ட மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.*

*அந்த மாவட்டத்தில் மன்னார்குடி நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் வருவாய் வட்டங்கள், அதுபோல் நிலுவையில் உள்ள முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தையும் இணைப்பதோடு, பட்டுக்கோட்டை வருவாய் வட்டத்திலுள்ள மதுக்கூர் நகரத்தையும், வட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி நகரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் வட்டங்களை உருவாக்கி, மேற்கண்ட வட்டங்களை இணைத்து, மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.*

*மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக தமிழக அரசை பல்வேறு வகையிலும் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*

*இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் நகர மன்ற தலைவர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், ஆகிய அரசியல் கட்சிகள் பல்வேறு தொழிற்சங்கங்கள், ரோட்டரி, லயன்ஸ், JCi உள்ளிட்ட சேவை அமைப்புகள், வர்த்தக சங்கம், கட்டிட பொறியாளர்கள் சங்கம், நுகர்வோர் சங்கம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் பங்கேற்றன.*

*இந்த தீர்மானம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முன்னதாக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா அவர்களிடம் இந்த கோரிக்கையை வென்றெடுப்பது தொடர்பாக அனைத்து சேவை சங்க நிர்வாகிகளையும் அழைத்து சென்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து நீடாமங்கலத்திலும், வடசேரி, மதுக்கூர், நகரங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.*

கூட்டத்திற்க்கு நேசகரம் அமைப்பு ஏற்
பாடு செய்து இருந்தது

நமது கீழராஜவீதி பள்ளிவாசல் சார்பாக தலைவர் ஹாஜி R. அப்துல் கரீம் கலந்து கொண்டார்கள்

Address

Keelaraja Veethi
Mannargudi
614001

Telephone

04367221786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannargudi keelarajaveethi pallivasal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mannargudi keelarajaveethi pallivasal:

Share