29/11/2015
திருவருகை காலம்: முதல் ஞாயிறு. சிந்தனை:
நமக்காக பிறந்த குழந்தையே பாலன் இயேசு. இவ்வுலகை ஆட்சி செய்பவர் அவரே... நமக்கு அமைதியை தருபவர்
வருகையும், காத்திருத்தலும் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வருகை மகிழ்ச்சியையும், காத்திருத்தல் நம்பிக்கையுடன் கூடிய சுகத்தையும் தருகிறது. நாம் பலரின் வருகைக்காக காத்திருக்கிறோம். பல செயல்களைச் செய்ய காத்திருக்கிறோம். இவை அனைத்துமே நொடிப்பொழு திலோ, மணித்துளியிலோ சந்தோசத்தை தந்து மறைந்துபோகும் மாயங்கள் ஆனால் திருவருகைக் காலம் என்பதோ கடவு ளின் வருகைக்காக காத்தி ருப்பது. அவர் நம்மிடையே வரவேண்டும். நம்மில் வரவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். நம் விருப்பம் நிறைவேற நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இயேசுவே நற்செய்தியில் விழிப்பாயிருங்கள் ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது... எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்; மானிட மகன் வருவார். (மத்தேயு 24„ 42, 44) என்று கூறியுள்ளார்.
அவரது வார்த்தை உயிருள்ளது, உண்மையானது என்றும் அழியாதது. எனவே நாம் அவரின் வருகைக்காக தம்மையே தயாரிக்க வேண்டும். அதற்காகத்தான்; தாய்த் திருச்சபையானது திருவருகைக் காலம் என நான்கு ஞாயிற்றுக்கிழமைகளை தந்து அதன் இறுதியிலே கிறிஸ்துமஸ் விழா கொண் டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுவது ஒவ்வொரு கிறிஸ்தவனின் தலையாய கடமையாகும்.
கடவுள் நம்மேல் கொண்டுள்ள அன்பு அளவிடற்கரியது, எல்லையில்லாதது, உண்மையானது. இறைவாக்கினர்கள் வாயிலாக பேசிய இறைவன் இறுதியிலே மனித உரு எடுத்து நமக்காக துன்பங்கள் பலபட்டு சிலுவையிலே பலியாக உயிரையும் தந்து நம்மை மீட்டார். அந்த இறைவன் நம்மிடம் கேட்பது என்ன? அன்பு மட்டும்தான் அதைத் தர நமது மனம் ஏன் மறுக்கிறது? இறையன்பும், பிறரன்பும்தானே நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள். என்னை அன்பு செய் இறையன்பு, உன்னை அன்பு செய்வதுபோல் உன் அய லானையும் அன்பு செய் பிறரன்பு இவைதானே இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள். இதனை கடைபிடிக்க நாம் தவறுவது ஏன்? காரணம் சுயநலம்.
அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் தெரு, தெருக்களாக அதிகரிக்கும்போது, எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகும்போது, கருவறையே கல்லறையாகும் போது, சிசுக்கொலையும், பாலியல் பலாத்கார மும், குழந்தை தொழி லாளர்களும் அதிகரிக்கும்போது, அநீதியின் கைகள் ஓங்கும்போது, ஜாதி, மதம், இனம் என்னும் பெயரில் இரத்த ஆறு ஓடும் போது, வரதட்சணையின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது, கலாச் சாரமும், பண்பாடும் அழியும்போது, சிகப்பு ஏரியாக்கள் எங்கும் மிளிரும்போது, அரசியலும், சினிமாவும்தான் வாழ்க்கை என்றாகும் போது, குடி, போதை, கஞ்சா, சீரியலுக்கு அடிமையாகும்போது, முதலாளித்துவம் தழைத்தோங்கும் போது இன்னும் பல போதுக்களோடு நாம் வாழும்போது இயேசுவின் பிறப்பு நம்மிலே எப்படி சாத்தியமாகும். இவர்களுக்காக குரல் கொடுக்கா விட்டா லும், உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இவற்றை செய்யாம லிருக்கும்போது இயேசு நம்மில் வருகிறார். இவற்றை எல்லாம்; தகர்த் தெரிந்து உடைக்கும்போது நாம் இயேசுவாகிறோம்.
இவ்வுலகை ஆட்சி செய்பவர் அவரே நமக்கு அமைதியை தருபவர். நாமும் பிறருக்கு அமைதியை அருளுவோம்.
இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந் தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள். (மத்தேயு 2„ 22-23)
நமது வாழ்விலே வேதனை, சோதனை, துன்பங்கள், தோல்விகள், நோய்கள், ஏமாற்றங்கள் எது வந்தாலும் கலங்கவேண்டாம், அஞ்சவும் வேண்டாம். ஏனெனில் நமது கடவுள் எந்நாளும் நம்மோடு இருக்கிறார்.
அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது. (லு}க்கா 1„ 33)
இயேசு கிறிஸ்துவே இவ்வுலகின் அரசர். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவரது ஆட்சிக்கு என்றென்றும் முடிவு இராது. ஏனெனில் அவர் நீதியுடனும், நேர்மையுடனும், அன்புடனும், கருணையுடனும் ஆளுகின்றார். எனவே அவர் நமது அரசராக என்றென்றும் உள்ளார்.
திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் இயேசுவின் பிறப்பின் முன்னறிவிப்பு பற்றிய மேற்கூறிய இறை வார்த்தைகளை படித்து, சிந்தித்து, தியானிப்போம்.