ஆலவாய்

ஆலவாய் ஆலவாய்
(3)

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  ஆவணி மூல திருவிழா பதினோராம் நாள் திருவிழா 2026பதினோராவது  நாள் :காலை : 9:45 ம...
26/08/2026

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பதினோராம் நாள் திருவிழா 2026

பதினோராவது நாள் :

காலை : 9:45 மணிக்கு

சட்டத்தேர்

வீதியுலா: ஆவணி மூல வீதிகளில்

இரவு : 7 மணிக்கு

சுவாமி அம்பாள் ஒரே சப்தவர்ண சப்பரத்தில் எழுந்தருளுளல்.

வீதியுலா: ஆவணி மூல வீதிகளில் .

அனைவரும் தவறாது கலந்து கொண்டு இறையருள் பெறுக.

மதுரை அருள்மிகு ஸ்ரீ மதுரவல்லி தாயார் உடனுறை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் பவித்ர உற்சவம் இரண்டாம் நாள் திவ்ய...
25/08/2026

மதுரை அருள்மிகு ஸ்ரீ மதுரவல்லி தாயார் உடனுறை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் பவித்ர உற்சவம் இரண்டாம் நாள் திவ்ய அலங்காரத்தில் சேவை சாதிக்கும் வியூக சுந்தரராஜ பெருமாள்.

#மதுரை #ஆலவாய் #கூடலழகர் #பெருமாள் #கோவில் #சுந்தரராஜப்பெருமாள் #பவித்ரஉற்சவம் #புறப்பாடு

25/08/2026
25/08/2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பத்தாம் நாள் இரவு சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி தங்க சப்பரத்தில் எழுந்தருளிய காட்சி.

மதுரை அருள்மிகு  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பத்தாம் நாள் இரவு சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனா...
25/08/2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பத்தாம் நாள் இரவு சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி தங்க சப்பரத்தில் எழுந்தருளிய காட்சி.

25/08/2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பத்தாம் நாள் விறகு விற்ற லீலை சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி தங்க சப்பரத்தில் எழுந்தருளிய காட்சி.

#மதுரை #ஆலவாய் #ஆலவாயண்ணல் #மீனாட்சி #சுந்தரேஸ்வரர் #திருக்கோயில் #ஆவணி #ஆவணிதிருவிழா #ஆவணிஉற்சவம் #ஆவணிமூலதிருவிழா #திருவிளையாடல்லீலை #பத்தாம்நாள் #விறகுவிற்றலீலை #சுவாமிசுந்தரேஸ்வரர் #அன்னைமீனாட்சி #தங்கசப்பரம்

மதுரை அருள்மிகு  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பத்தாம் நாள் விறகு விற்ற லீலை சுவாமி சுந்தரேஸ்வரர...
25/08/2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பத்தாம் நாள் விறகு விற்ற லீலை சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி தங்க சப்பரத்தில் எழுந்தருளிய காட்சி.

#மதுரை #ஆலவாய் #ஆலவாயண்ணல் #மீனாட்சி #சுந்தரேஸ்வரர் #திருக்கோயில் #ஆவணி #ஆவணிதிருவிழா #ஆவணிஉற்சவம் #ஆவணிமூலதிருவிழா #திருவிளையாடல்லீலை #பத்தாம்நாள் #விறகுவிற்றலீலை #சுவாமிசுந்தரேஸ்வரர் #அன்னைமீனாட்சி #தங்கசப்பரம்

திருஏடகம்ஆவணி பெளர்ணமி திருப்பாசுர ஏடு ஏதிரேறிய ஐதீகவிழாசோழவந்தான் திருவேடகம் ஏலவார் குழலியம்மன் ஏடகநாதர் சுவாமி திருக்க...
25/08/2026

திருஏடகம்
ஆவணி பெளர்ணமி
திருப்பாசுர ஏடு ஏதிரேறிய ஐதீகவிழா

சோழவந்தான் திருவேடகம் ஏலவார் குழலியம்மன் ஏடகநாதர் சுவாமி திருக்கோயிலில் வரும் வியாழக்கிழமை காலை ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுகிறது

புனல் வாதத்தின் போது எம்பிரான் திருஞானசம்பந்தர் எழுதிய
வாழ்க அந்தணர் என்ற திருப்பதிகம் எழுதிய ஓலை வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து கரையை அடைந்த தலம் திருஏடகம்

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே- திருப்பாசுரம்

திருச்சிற்றம்பலம்..

திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா.

திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பெளர்ணமி அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும். 7ம் நூற்றாண்டில் சங்க தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள் ஆதிக்கம் செலுத்த அந்த சமணர்கள் வசம் அப்போது மதுரை ஆண்ட கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாரபாண்டியனும் அந்த சமயத்தினை பின்பற்ற சைவ சமயம் மீண்டும் தலைத்தோங்குவதர்க்கும் தமிழ் நெறி வளரவும் பாண்டியனின் மனைவியான மங்கையற்கரசியார் எனும் தீவிர சிவ பக்தை சீர்காழியில் இருந்து தெய்வ குழந்தையான திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் மனதை மாற்றியும் வெப்பு நோயை தீர்த்து வைத்தும் சமணர்களை அனல் வாதத்தில் வென்று புனல் வாதத்தில் " வாழ்க அந்தணர் " என்னும் திருப்பாசுர ஏடு மதுரையிலிருந்து வைகை நீரை எதிர்த்து நீந்தி வந்து இத்தலமாகிய திருவேடகத்தில் வந்து நின்று வாதத்தில் வென்றது என்பது வரலாற்றுச்சான்றாகும். தமிழகத்திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் இத்திருவிழா ஒன்றுதான் வேறு எந்த திருக்கோயில்களிலும் இல்லாமல் இத்தலத்தில் மட்டுமே நடைபெறும் பெருமை படைத்தது. இக்கோயில் ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி எனும் மூன்றும் ஒரு சேரக்கொண்டதாகும். இத்திருத்தலத்தில் அந்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் நேற்று ஏடு எதிரேறிய திருவிழாவனது வரும் ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 10ம் தேதி 27.08.2026வியாழக்கிழமை பெளர்ணமி, அவிட்டம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், நடைபெறவுள்ளது. அவ்வமயம் மெய்யன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டுகளித்து ஏலவார் குலழி உடனுறை ஏடகநாதரை தரிசித்து திருவருள் பெற்றுய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

(சைவத்தின் மிகப்பெரிய விழாவான இந்த நிகழ்வை முன்னிட்டு அடியார் பெருமக்கள் தங்குவதற்கும் திருஅமுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)

இடம் : மீனாட்சி மஹால் திருவேடகம்

மேலும் தகவலுக்கு
Siva Visnu karthik
6369644628,
Siva Darmaraj
9940870325,
Siva Rajan
9751672034

#மதுரை #ஆலவாய் #திருவேடகம் #ஏடகநாதர் #திருக்கோயில் #ஆவணி #பெளர்ணமி #திருப்பாசுர #ஏடு #எதிரேறிய #ஐதீகவிழா

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  ஆவணி மூல திருவிழா பத்தாம் நாள் திருவிழா 2026திருவிளையாடல் லீலை:விறக...
25/08/2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பத்தாம் நாள் திருவிழா 2026

திருவிளையாடல் லீலை:

விறகு விற்ற லீலை

மாலை : 4:30 மணிக்கு

சுவாமி சுந்தரேஸ்வரர் : தங்க சப்பரம்
அன்னை மீனாட்சி: தங்க சப்பரம்

வீதியுலா: ஆவணிமூல வீதிகளில் .

இரவு : 8 மணிக்கு

சுவாமி சுந்தரேஸ்வரர் : தங்க சப்பரம்
அன்னை மீனாட்சி : தங்க சப்பரம்

வீதியுலா: ஆவணிமூல வீதிகளில் .

திருவிளையாடற் சுருக்கம் :

வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏகநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான். அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான். வரகுண பாண்டியனும் ஏகநாதனின் இசையைப் பராட்டி அவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன்னுடைய விருந்தினராக சிலநாட்கள் பாண்டிய நாட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டான். ஏகநாதனும், அவனைச் சார்ந்தவர்களும் தங்குவதற்கு அரச மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் ‘இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை’ என்ற ஆவண எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் வரகுணனிடம் “உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாட வல்லார்கள எவரும் உளரோ?” என்று கேட்டான். அதற்கு வரகுணன் “நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.” என்று கூறி அனுப்பினான். பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன் தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏகநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான். மன்னனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் “சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்றார்.” என்று கூறினார். ஏகநாதனின் சீடர்கள் மதுரைநகரத் தெருக்களில் யாழினை இசைத்து பாடி எல்லோரையும் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட பாணபத்திரர் ஏகநாதனின் சீடர்களே இவ்வளவு அழகாகப் பாடுகிறார்களே. நான் எப்படிதான் இசைவாதுவில் ஏகநாதனை வெல்லப் போகிறேனோ என்று கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். “இறைவா, நீங்கள்தான் இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று மனமுருக‌ வேண்டினார்.சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார். வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடையில் அழுக்காடையும், தலையில் இருக்கும் பிறைச்சந்திரனை அரிவாளாக மாற்றி இடையில் செருகியும் இருந்தார்.
பழைய யாழினை இடக்கையில் கொண்டும், தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார். விறகு வலை கேட்பவர்களிடம் அதிக விலை கூறி விறகினை விற்காது பொழுதினைப் போக்கினார். மாலை வேளையில் ஏகநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார். பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரிடம் வந்து “நீ யார்?” என்று கேட்டான். அதற்கு சொக்கநாதர் “நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை. என்றார். பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோது, வயது முதிர்ந்ததால் இசை கற்க தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார். அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன்” என்று கூறினார். ஏமநாதன் விறகாளான இறைவரிடம் “நீ முன்னர் பாடிய பாடலை இன்னொருதரம் இசையோடு பாடுக” என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி சாதாரிப் பண்ணினைப் பாடத் தொடங்கினார். அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலகஉயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில் இறைவனார் மறைந்தருளினார். பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் “இது நான் அறிந்த சாதாரிப் பண்ணே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால், பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ?” என்று கூறி கவலையில் ஆழ்ந்தான். “இனி நாம் பாணபத்திரனோடு இசைவாதுவில் வெற்றி பெற இயலாது. ஆதலால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும்” என்று கூறி தன்கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான். இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி “பாணபத்திரரே இன்று யாம் ஏகநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம். அஞ்சற்க.” என்று கூறினார். இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோவிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு “அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ?” என்று கூறிவழிபாடு நடத்தினார். காலையில் அரசவை கூடியதும் வரகுணன் “ஏமநானை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர்.
ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது “ஏமநாதன் நேற்றுவரை இங்கிருந்தான். நேற்று மாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரனின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான்.” என்று கூறினான். அதனைக் கேட்ட அவர்கள் வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும், இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப்பொருட்களை வழங்கினான்.
பாணபத்திரர் தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகளை தன்னுடைய சுற்றத்தாருக்கும் கொடுத்து இன்புற்று வாழ்ந்தார்.

Address

Madurai

Telephone

+919087067751

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆலவாய் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஆலவாய்:

Shortcuts

Share

Category