பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை

  • Home
  • India
  • Madurai
  • பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை

பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை Prepare for the Kingdom Of the Lord Jesus Christ,Secret Coming Holy New Jerusalem Bride church

இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 25/08/2026வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 344XVIII (6) “அவர்கள் பரிசுத்தவான...
25/08/2026

இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 25/08/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 344

XVIII (6) “அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டேன்." (வெளி 16:6)

அன்பான கர்த்தருடைய தேவ ஜனங்களே. இவ்வசனத்தின் மூலம் மூன்றாவது கோபக்கலசம் ஏன் ஊற்றப்பட்டது என்பதை தண்ணீர்களின் தூதன் இங்கே விளக்குகின்றார். இரத்தமாகிய தண்ணீரைக் குடிப்பவர்கள் யார்? தேவனுடைய பரிசுத்தவான்களையும், தீர்க்கதரிசிகளையும் துன்புறுத்தி இரத்தஞ்சிந்த வைத்து கொலைசெய்தவர்கள். தேவன் சொல்லுகிறார்: "மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்". (கலா 6:7) "சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன் சிறைப் பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும்." (வெளி 13:10) "பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்." (மத் 26:52) "மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது." (ஆதி 9:6)

“உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக் கொடுப்பேன்; மதுபானத்தால் வெறி கொள்வது போல் தங்களுடைய இரத்தத்தினால் வெறி கொள்வார்கள்". (ஏசா 49:26)

"அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம் பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப் போட்டார்கள்" (எஸ் 7:10) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்களின் முடிவு மிகவும் கேடுள்ளதாகவும் பரிதபிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதை நமக்குப் போதிக்கின்றது.

கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,

(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)

Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n

கடைசிக்கால தீர்க்கதரிசன நற்செய்தி கூட்டம் இடம் : தூத்துக்குடி நாள் : 27/08/2026 கிழமை : வியாழக்கிழமை இடம் : CSI அபிஷேகநா...
25/08/2026

கடைசிக்கால தீர்க்கதரிசன நற்செய்தி கூட்டம் இடம் : தூத்துக்குடி
நாள் : 27/08/2026
கிழமை : வியாழக்கிழமை
இடம் : CSI அபிஷேகநாதர் ஆலயம்
அனைவரும் கலந்து கொண்டு தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள அழைக்கிறோம்...

25/08/2026

இன்றைய வசனம் : 25/08/2026

Amen
25/08/2026

Amen

24/08/2026

தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. (கொலோசெயர் 3:10)

இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 24/08/2026வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 343XVIII (5) "அப்பொழுது தண்ணீர்கள...
24/08/2026

இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 24/08/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 343

XVIII (5) "அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்." (வெளி 16:5)

அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, வெளி 7:1-ம் வசனத்தில், "பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று. பூமியின் மேலாவது. சமுத்திரத்தின் மேலாவது. ஒரு மரத்தின் மேலாவது. காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்." (வெளி 7:1) என்று இந்த கர்த்தருடைய திருவசனத்தில் காற்றுகளின் தூதர்களைக் காண்கிறோம். வெளி 16:5ம் வசனத்தில் தண்ணீர்களின் தூதன் பேசுவதைப் பார்க்கிறோம். மூன்றாவது தேவ கோபக்கலசத்தை ஊற்றிய தூதன்தான் தண்ணீர்களின் தூதன் என்று சில வேத பண்டிதர்களின் கருத்தாக இருக்கிறது. தேவாதி தேவன் ஆறுகளின் தண்ணீரையும் நீருற்றுகளின் தண்ணீரையும் இரத்தமாக்கியது அவருடைய நீதியையே வெளிப்படுத்துகிறது. தேவனுடைய எல்லாக்கிரியைகளும் நீதியானவைகளே. பல சமயங்களில் தேவனுடைய கிரியைகளின் தன்மைகளையும் நோக்கங்களையும் சரியாய் அறிந்து கொள்ளாததினால் அதைக் குறித்த சந்தேகங்கள் சிலரிடம் உண்டாவதை அறிந்திருக்கிறோம். ஒரு கிரியை நீதியானது என்பதினால் தேவன் அதைச் செய்கிறார் என்பதல்ல. தேவன் செய்கிறார் என்பதினால் அது நீதியானதாகிறது.

எரேமியா தீர்க்கர் சொல்லுகிறார். "நமது நீதியாயிருக்கிற கர்த்தர்," என்பது அவருடைய திவ்ய நாமங்களில் ஒன்று. (எரே 23:6) "நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். (சங் 97:2) என்கிறார் சங்கீதக்காரன். "கர்த்தாவே நீர் நீதிபரர். உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள், நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்." (சங் 119:137.138) என்ற இக்கர்த்தருடைய திருவசனங்களில் வாசிக்கிறோம். “சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ." (ஆதி 18:25) என்கிறார் ஆதி பிதாவாகிய ஆபிரகாம். நம் அன்பின் இரட்சண்ய கன்மலையாகிய இயேசு மகாராஜா. ''நீதியுள்ள பிதாவே." (யோவா 17:25) என்கிறார். நம் அன்பின் பிதாவை "நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்.'' (ஏசா 28:17) என்கிறார் ஏசாயா தீர்க்கர். “உமது வலது கரம் நீதியால் நிறைந்திருக்கிறது." (சங் 48:10) “அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்." (சங் 33:5) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம் நம்முடைய தேவாதி தேவன் நீதியுள்ள தேவனாகிய பிதா என்பதை நமக்குப் போதிக்கின்றது.

கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,

(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)

Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n

24/08/2026

ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படாதவர்கள் அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள்! | வெளிப்படுத்தின விசேஷம் 20:15 | Sunday Sermon 23/08/2026

22/08/2026

பெரிய வெள்ளைச் சிங்காசனம்! அதின்மேல் வீற்றிருக்கிறவர் யார்? | வெளிப்படுத்தின விசேஷம் 20:11

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை:

Shortcuts

Share