25/08/2026
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 25/08/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 344
XVIII (6) “அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டேன்." (வெளி 16:6)
அன்பான கர்த்தருடைய தேவ ஜனங்களே. இவ்வசனத்தின் மூலம் மூன்றாவது கோபக்கலசம் ஏன் ஊற்றப்பட்டது என்பதை தண்ணீர்களின் தூதன் இங்கே விளக்குகின்றார். இரத்தமாகிய தண்ணீரைக் குடிப்பவர்கள் யார்? தேவனுடைய பரிசுத்தவான்களையும், தீர்க்கதரிசிகளையும் துன்புறுத்தி இரத்தஞ்சிந்த வைத்து கொலைசெய்தவர்கள். தேவன் சொல்லுகிறார்: "மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்". (கலா 6:7) "சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன் சிறைப் பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும்." (வெளி 13:10) "பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்." (மத் 26:52) "மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது." (ஆதி 9:6)
“உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக் கொடுப்பேன்; மதுபானத்தால் வெறி கொள்வது போல் தங்களுடைய இரத்தத்தினால் வெறி கொள்வார்கள்". (ஏசா 49:26)
"அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம் பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப் போட்டார்கள்" (எஸ் 7:10) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்களின் முடிவு மிகவும் கேடுள்ளதாகவும் பரிதபிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதை நமக்குப் போதிக்கின்றது.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n