28/10/2025
#ஷைகுஸ்_ஸஜ்ஜாதா_டாக்டர்_முஹம்மதுல்_ஃபாஸீ_நாயகம் வரலாற்று சொற்பொழிவு
~~~~~~~~~~~~~~~~
ஷைக் டாக்டர் முஹம்மத் அல் ஃபாஸி நாயகம் அவர்கள், ஷைக் முஹம்மத் இப்ராஹீம் அல் ஃபாஸி நாயகம் அவர்களின் இரண்டாவது புதல்வராக 1895ம் ஆண்டு புனித மக்கா நகரில் பிறந்தார்கள். #இரண்டாவது_ஷாதுலி என அழைக்கப்படும் குத்புல் உஜூத் இமாம் முஹம்மது அல் ஃபாஸி நாயகம் அவஅவர்கள் கொள்ளு பேரராவார்கள். இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சத்தில் #ஹஸனி_இத்ரீஸி வம்சத்தை சார்ந்த அஹ்லபைத் குடும்பம் ஆவார்கள். சிறுவயது முதலே தமது பாட்டணார்கள் வழியொற்றி இறையச்சத்துடனே வாழ்ந்தார்கள்.
மக்காவில் ஆரம்ப கல்வியை கற்ற ஷைக் அவர்கள் உயர்கல்விக்காக எகிப்து சென்றார்கள். #எகிப்தில் உள்ள ஷாசுலியா தரீகாவை அடிப்படையாக கொண்ட உலகப் புகழ் வாய்ந்த #அல்_அஜ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு #டாக்டர் (முனைவர் கலாநிதி) பட்டம் பெற்றார்கள். அல்-அஜ்ஹரில் படிக்கும் காலத்திலேயே ஷைக் நாயகம் அவர்களிடம் ஒரு சிறப்பான தன்மையை காண்பதாக அவர்களது ஆசிரியப் பெருந்தகைகள் கூறினார்கள்.
கல்வி பயின்று முடித்து மக்கா திரும்பிய ஷைக் நாயகம் அவர்கள், மக்காவில் புனித ஹரம் ஷரீஃப் வளாகத்திலேயே ஹதீஸ் கலை பாடம் நடத்தினார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த அறிஞர்கள் ஷைக் நாயகம் அவர்களுடைய ஹதீஸ் வகுப்புகளில் மாணவர்களாக இருந்தனர்.
சிறுவயது முதலே இறையச்ச தன்மையுடன் வாழ்ந்த ஷைக் நாயகம் அவர்கள் தனது தந்தை குத்புனா இப்ராஹீம் அல் ஃபாஸி நாயகம், சிறிய தந்தை அப்துல்லாஹ் அல் ஃபாஸி நாயகம் ஆகியோருடன் உலகின் பல நாடுகளுக்கும் இத் தரீகாவை போதிக்க பயணம் மேற்கொண்டார்கள்.
1964, 1966 ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து தம் தந்தையர்கள் இருவரும் வஃபாத் ஆகிவிடவே, உலகளாவிய அளவில் இத்தரீகாவை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பு ஷைக் டாக்டர் ஃபாஸி நாயகம் அவர்களுக்கு ஏற்பட்டது.
#ஷைகுஸ்_ஸஜ்ஜாதா வாக பொறுப்பேற்ற ஷைக் நாயகம் அவர்கள் தம் தந்தையர்களைப் போலவே உலகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இக்வான்களை நேர்வழிப்படுத்தினார்கள். எகிப்து, இந்தியா, இலங்கை, சிரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணித்த ஷைக் நாயகம் அவர்கள் அந்த ஊர் இக்வான்களுடன் இரண்டற கலந்து விடுவார்கள்.
1970க்கு முன்னர் தம் தந்தையர்களோடு பலமுறை இந்தியா வந்த ஷைக் நாயகம் அவர்கள் ஷைகுஸ் ஸஜ்ஜாதா வாக பொறுப்பேற்றனர் பின் 1974, 1991 ஆகிய இரண்டு முறை தமிழகம் வருகை தந்தார்கள். ஷைக் நாயகம் அவர்களின் தமிழக வருகை, தமிழகத்தில் ஒரு இஸ்லாமிய கல்வி புரட்சி ஏற்படுத்தியது எனலாம். காரணம் மிகச்சிறிய அளவிலேயே அறியப்பட்ட தமிழகத்து உலமாக்கள் ஷைக் நாயகம் அவர்களை சந்தித்த பின்னர் மார்க்க ஞானத்தில் மிகத்தேரிய நிலையை அடைந்தார்கள். ஷைகின் பார்வையால் சிலர் விலாயத்தையும் அடைந்தார்கள்.
#காயல்பட்டணம், #கடையநல்லூர், #திருநெல்வேலி_பேட்டை, #இனாம்குளத்தூர், #பொதக்குடி, #வீரசோழன், #கூத்தாநல்லூர், #நீடுர், #புத்தாநத்தம் ஆகிய ஊர்களிலுள்ள தமிழகத்தின் தலைசிறந்த மதரஸாக்கள் இன்றளவும் ஷாதுலியா தரீகா வை அடிப்படையாக கொண்டு சிறந்த ஆலிம்களை உருவாக்கி தமிழ் இஸ்லாமிய உலகம் முழுவதும் மார்க்க சேவையாற்றி வருகிறது என்றால் அதில் பெரும் பகுதி உழைப்பு ஷைக் டாக்டர் ஃபாஸி நாயகம் அவர்களுடையது தான் ஆகும்.
#வஹ்ஹாபிஸம் தமிழகத்தில் வீரியத்துடன் பரவிய காலத்திலும் இம்மதரஸாக்கள் அசைக்க முடியாமல் சத்தியபாதையில் உறுதியாக நின்றதற்கு காரணம், இம்மதரஸாக்களின் நிறுவனர்கள், பேராசிரியர்களுக்கு ஷைக் டாக்டர் முஹம்மத் அல் ஃபாஸி நாயகம் அவர்கள் வழங்கிய ஞானக்கல்வியும், நஸீஹத்துமே ஆகும்.
1991க்கு பிறகும், ஷைக் நாயகம் வஃபாத் வரை ஹஜ்/உம்ரா வுக்கு சென்ற தமிழக சுன்னத் ஜமாத் ஆலிம்கள், ஷாசுலியா தரீகா இக்வான்கள் ஷைக் நாயகம் அவர்களை மக்கா வில் உள்ள பைத் அல் ஃபாஸி இல்லத்தில் சந்தித்து வந்தார்கள்.
நம் பகுதி மீது அளப்பரிய நேசம் கொண்ட ஷைகுஸ் ஸஜ்ஜாதா குத்புனா டாக்டர் ஃபாஸி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் #ஜமாதுல்_அவ்வல்_பிறை_5 ஹிஜ்ரி #1418ம் ஆண்டு (07.09.1997 அன்று) தம் 102 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்த ஷைக் நாயகம் அவர்கள் பல ஆயிரம் ஆண்டு செய்யவேண்டிய மார்க்க சேவையை உலகம் முழுவதும் ஆற்றினார்கள். அவர்கள் நமக்காக பொழிந்த அருள் கராமாத்களும், கொடுத்து சென்ற ஞானமும், காட்டி சென்ற நேர்வழிப் பாதையும் தான் இன்றும் நம்மை வழிநடத்துகிறது. இன்ஷா அல்லாஹ் கியாமத் வரை தொடரும்.
இக்வான்கள் அவரவர்களால் இயன்ற அளவு #ஹலரா, #திலாவதுல்_குர்ஆன், #ஸலவாத், #மௌலீது மஜ்லிஸ்களையோ அல்லது குறைந்தபட்சம் #சூரா_யாஸீன் ஓதியோ, ஷைக் Dr. ஃபாஸி நாயகம் அவர்கள் பெயரில் ஹதியா செய்து அவர்களது வஸீலாவை துஆ ஆக்குவோமாக..
#யா_அல்லாஹ்... எங்களையும், எங்கள் சந்ததியினரையும் வழி தவறி விடாமல் இறுதிவரை பாதுகாத்து, ஷைக் ஃபாஸி நாயகம் எங்களுக்கு காட்டித் தந்த நேரான வழியிலேயே எங்களையும் எங்கள் சந்ததியினரையும் நடத்துவாய் ரஹ்மானே.. அவர்களின் ஃபைழ் எங்களுக்கு கிடைக்க செய்வாய் ரப்பே..
ஆமீன் ஆமீன் !!!
— Ikhwan Ash Shazuli
Fassiyatush Shazuliya Madurai