Sri ramana mandiram

Sri ramana mandiram பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் தன்னுடைய 16 ஆம் வயதில் ஞானோதயம் பெற்ற புனித இல்லம் It was quite sudden. I was sitting in a room on the first floor of my uncle’s house.

Death Experience
The turning point in Venkataraman’s life came spontaneously in mid-July 1896. One afternoon, the youth for no apparent reason was overwhelmed by a sudden, violent fear of death. Years later, he narrated this experience as follows:

It was about six weeks before I left Madura for good that a great change in my life took place . I seldom had any sickness and on that day there was no

thing wrong with my health, but a sudden, violent fear of death overtook me. There was nothing in my state of health to account for it; and I did not try to account for it or to find out whether there was any reason for the fear. I just felt, ‘I am going to die,’ and began thinking what to do about it. It did not occur to me to consult a doctor or my elders or friends. I felt that I had to solve the problem myself, then and there. The shock of the fear of death drove my mind inwards and I said to myself mentally, without actually framing the words: ‘Now death has come; what does it mean? What is it that is dying? This body dies.’ And I at once dramatized the occurrence of death. I lay with my limbs stretched out stiff as though rigor mortis had set in and imitated a co**se so as to give greater reality to the enquiry. I held my breath and kept my lips tightly closed so that no sound could escape, so that neither the word ‘I’ or any other word could be uttered, ‘Well then,’ I said to myself, ‘this body is dead. It will be carried stiff to the burning ground and there burnt and reduced to ashes. But with the death of this body am I dead? Is the body ‘I’? It is silent and inert but I feel the full force of my personality and even the voice of the ‘I’ within me, apart from it. So I am Spirit transcending the body. The body dies but the Spirit that transcends it cannot be touched by death. This means I am the deathless Spirit.’ All this was not dull thought; it flashed through me vividly as living truth which I perceived directly, almost without thought-process. ‘I’ was something very real, the only real thing about my present state, and all the conscious activity connected with my body was centred on that ‘I’. From that moment onwards the ‘I’ or Self focused attention on itself by a powerful fascination. Fear of death had vanished once and for all. Absorption in the Self continued unbroken from that time on. Other thoughts might come and go like the various notes of music, but the ‘I’ continued like the fundamental sruti note that underlies and blends with all the other notes. Whether the body was engaged in talking, reading, or anything else, I was still centred on ‘I’. Previous to that crisis I had no clear perception of my Self and was not consciously attracted to it. I felt no perceptible or direct interest in it, much less any inclination to dwell permanently in it. The effect of the death experience brought about a complete change in Venkataraman’s interests and outlook. He became meek and submissive without complaining or retaliating against unfair treatment. He later described his condition:

One of the features of my new state was my changed attitude to the Meenakshi Temple. Formerly I used to go there occasionally with friends to look at the images and put the sacred ash and vermillion on my brow and would return home almost unmoved. But after the awakening I went there almost every evening. I used to go alone and stand motionless for a long time before an image of Siva or Meenakshi or Nataraja and the sixty-three saints, and as I stood there waves of emotion overwhelmed me.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அவதரித்த புண்ணிய இல்லமான திருச்சுழி ஸ்ரீ சுந்தர மந்திரத்தில் இன்றைய தினம் மூன்றாவது ஞாயிறை  மு...
17/05/2026

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அவதரித்த புண்ணிய இல்லமான திருச்சுழி ஸ்ரீ சுந்தர மந்திரத்தில் இன்றைய தினம் மூன்றாவது ஞாயிறை முன்னிட்டு சத்சங்கம் காலை 10.00 மணிக்கு இனிதே துவங்கியது.

அருணாசல அக்ஷரமணமாலை , உபதேச உந்தியார் மற்றும் பக்தி பாடல்கள் பாராயணத்திற்குப் பிறகு ஸ்ரீ ரமண அஷ்டோத்ர பூஜை மற்றும் மங்கள ஆரத்தியுடன் சத்சங்கம் 11.00 மணியளவில் சிறப்பாக நிறைவுபெற்றது. கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அவதரித்த புண்ணிய இல்லமான திருச்சுழி ஸ்ரீ சுந்தர மந்திரத்தில் இன்று மூன்றாவது ஞாயிறு தினமானதை  ...
15/03/2026

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அவதரித்த புண்ணிய இல்லமான திருச்சுழி ஸ்ரீ சுந்தர மந்திரத்தில் இன்று மூன்றாவது ஞாயிறு தினமானதை முன்னிட்டு சத்சங்கம் காலை 10.00 மணிக்கு இனிதே துவங்கியது.

அருணாசல அக்ஷரமணமாலை , உபதேச உந்தியார் மற்றும் பக்தி பாடல்கள் பாராயணத்திற்குப் பிறகு ஸ்ரீ ரமண அஷ்டோத்ர பூஜை மற்றும் மங்கள ஆரத்தியுடன் சத்சங்கம் 11.00 மணியளவில் சிறப்பாக நிறைவுபெற்றது. கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சென்ற மாத சத்சங்கத்தில் கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகில் இருக்கும் ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் நாமாலயம் தபஸ்வி பொன்காமராஜ் மற்றும் குழுவினர் சத்சங்கத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்று (11/12/2025) நண்பகல் மதுரை ஸ்ரீ ரமண மந்திரத்திற்கு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருக்கும் ஸ்ரீ ரமண மகரிஷி தியான மைய...
11/12/2025

இன்று (11/12/2025) நண்பகல் மதுரை ஸ்ரீ ரமண மந்திரத்திற்கு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருக்கும் ஸ்ரீ ரமண மகரிஷி தியான மையத்தில் இருந்து (திரு.திலீப் சிங் ஜட்டேஜா) Dilipsinh Jadeja அவர்கள் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட ரமண பக்தர்கள் வருகை புரிந்தனர். சிறிது நேரம் தியானத்திற்கு
பிறகு அனைவரும் புறப்பட்டு பகவான் அவதரித்த திருச்சுழி ஸ்ரீ சுந்தர மந்திரம் விரைந்தனர்.

திருச்சுழியில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அவதரித்த ஸ்ரீ சுந்தர மந்திரம் மற்றும் தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமேனிநாதர் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.

01/12/2025
மறைந்துள்ள ஓர் அரிய ரத்னம் பகுதி - 2                            விஸ்வநாத ஸ்வாமிஒரு நாள் நடு இரவில் பகவான் கதவை தட்டிவிட்...
03/11/2025

மறைந்துள்ள ஓர் அரிய ரத்னம் பகுதி - 2
விஸ்வநாத ஸ்வாமி

ஒரு நாள் நடு இரவில் பகவான் கதவை தட்டிவிட்டு தன் அறைக்குள் வந்ததை ஒரு சமயம் என்னிடம் இவ்வாறு கூறினார். “பகவான் கூறினார், “வேகமாய் எழுந்திரு! பிறர் பார்க்கும் முன் நாம் பிரதக்ஷிணம் செல்வோம்!” இருவரும் (பகவானும், விஸ்வநாத ஸ்வாமியும்) சேர்ந்த பிரதக்ஷிணம் வந்தனர்; மலை வலம் வரும்வழி நெடிகிலும், பகவான் அவரது உபதேசத்தை விஸ்வநாத ஸ்வாமிக்கு அருள்பாலித்தார். விஸ்வநாத ஸ்வாமி இதை என்னிடம் இயம்பியபொழுது அவர் உள்ளத்து மகிழ்ச்சி அவரது முகத்தில், மிக அற்புதமாய் வெளிப்பட்டது. பொதுவாக, அவர் அதிகம் சிரிக்க மாட்டார்; ஆனால், அவர் சிரிக்கும்பொழுது, அவரது உள்ளத்து மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்லாது உடல் முழுதும் சிரிப்பின் மகிழ்ச்சியில் திளைக்கும்.

பகவானோடு தொடர்புடைய இடங்களை கண்டு பார்த்து அனுபவமாதலை விஸ்வநாத ஸ்வாமி ஊக்குவித்தார். மாமரக்குகை, பவளக்குன்று, பகவான் இரண்டாவது முறை மரணானுபவம் அடைந்த ஆமைப்பாறை போன்ற இடங்களை கண்டுகளித்தேனா என வினவினார்.

ஒரு சமயம், எனக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதால் நான் விஸ்வநாத ஸ்வாமியை இரண்டு நாட்கள் சந்திக்கவில்லை.நான் அது சமயம், சரஸ்வதி நிலையம் அருகில் சிறு குடிசையில் தங்கி இருந்தேன்.மாலை நான்கு மணி அளவில் என்னைத் தேடி வருபவரைக் கண்டு அதிர்ச்சியுற்று மனம் நெகிழ்ந்து போனேன் - வேறு யார்? விஸ்வநாத ஸ்வாமியே தான்! புன்சிரிப்போடும் கேளிக்கையோடும் அவர் கூறினார், “முகமது மலைக்கு வரவில்லை; எனவே, மலையே முகமதை நாடி வந்துள்ளது” அவர் கொணர்ந்திருந்த சௌவ்வனப்ராஸ்ஸில் எனக்கு கொஞ்சம் தந்தார்; அது “டானிக்”காக அமைந்தது. பிறகு, அவர் கூறினார், “நடைமுறைப் பயிற்சிக்குச் செல்லலாம் வா” எனக்கு வயிற்று கடுப்பு என நான் கூறினேன்; அது சரியாகிவிடுமெனக் கூறி என்னை வரும்படி கூறினார். நான் சரியாகிவிட்டேன் எனக் கூற அவசியமில்லை.சிறிது தூரம் சென்ற பின் எங்கு செல்கின்றோம் என நான் கேட்டேன்.“அது ஒரு ரகசியம், அதை நீ மிக விரும்புவாய்” எனக் கூறினார். நகரத்தைக் கடந்து நாங்கள் ஒரு சிறு கருவறைக் கோவிலுக்குச் சென்றடைந்தோம். இது குருமூர்த்தம்.பகவான் திருவண்ணாமலை வந்தடைந்த தொடக்கக் காலத்தில் தங்கியிருந்த இடங்களில் இதுவும் ஒன்று.பகவான் தவக் கோலத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த பதிவுகளை சுவற்றில் அவர் சுட்டிக்காட்டினார்.பகவானைப் பற்றியும் அவரது அருள்மொழிகளைப் பற்றியும் பேசுவதற்கு விஸ்வநாத ஸ்வாமி எப்பொழுதும் மிக ஆயத்தமாய் இருந்தார்.

ஒரு காலகட்டத்தில், நான் சோம்பலாகி ஆர்வமற்று இருந்தேன். ஆதலால், ஐதராபாத் சென்று அங்கு பிரபலமான புத்தமத தியான குருவான கோயன்ஜியுடன் சில காலம் இருந்துவிட முடிவு செய்தேன்.அவ்வாறு நான் தங்கியிருந்துவிட்டு திரும்பிவந்தபொழுது இங்கிருந்த பலர் நான் அவ்வாறு சென்றது குறித்து விமர்சித்தனர்.இது என் மனதை அல்லலுறச் செய்ததால் இதுபற்றி விஸ்வநாத ஸ்வாமியுடன் விளக்கமுற விரும்பினேன்.காலையில் நான் அவரை சந்திக்க நினைத்து காலையில் நான் ஆஸ்ரமம் சென்றேன்.ஆஸ்ரம புத்தக நிலையம் அருகே படிகளில் ஏறிச் செல்ல தொடங்கியபொழுது விஸ்வநாத ஸ்வாமி ஆஸ்ரம அலுவலகத்திலிருந்து வெளிவரும்பொழுது சந்தித்தேன்.என்னை உற்றுநோக்கி, புன்முறுவல் பூத்து தேநீர் (டீ) அருந்த செல்லலாமா என வினவினார்.அது கோடைக்காலத்தில் மிக அதிகமான வெயில் வீசும் காலம்; அதற்காக கையில் குடையும் வைத்திருந்தார். ஆஸ்ரமத்திலிருந்து வெளியில் செல்லும் பொழுது மணி அடிக்கத் தொடங்கியது. விஸ்வநாத ஸ்வாமி நவின்றார், “சப்தம் மௌனத்திலிருந்து வருகின்றது; சப்தம் மௌனத்தில் நிலைத்திருக்கின்றது; சப்தம் மௌனத்திற்கே திரும்பி வருகின்றது; மெளனமே யாவுமாய் இருக்கின்றது” நாங்கள் டீ அருந்தினோம்; இதுவே அவரோடு பேசுவதற்கு உரிய தருணம் என நான் நினைத்தேன்; எனின், பேசுவதற்கு வெட்கமுற்றேன். நாங்கள் அவருடைய அறைக்குத் திரும்பிச் சென்றோம்.அவர் கூறினார், “உள்ளே வா, அங்கு ஒரு கட்டுரை உள்ளது; த மவுண்டன் பாத் இதழுக்காக நீங்கள் பார்க்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்.பேசுவதற்கு எனக்கு சரியான வாய்ப்பை அவர் நல்கியுள்ளார்; எனினும் நான் பேச வெட்கமுற்றேன்.நான் அந்த கட்டுரையை படித்தவுடன் அக்கட்டுரையைப் பற்றி எனது கருத்தைக் கேட்டறிந்தார். பிறகு நான் வேறேதேனும் சொல்ல விரும்புகின்றேனா? எனக் கேட்டார்; நான் “இல்லை” என பதிலுரைத்தேன்.மாலை நான்கு மணிக்கு அறைக்கு வருமாறு அழைத்தார்.நான் செல்ல தொடங்கிய பொழுது என்னை அவர் அழைத்துக் கூறினார்; நான் அதிர்ச்சி ஆச்சரியத்தில் திகைத்துப் போனேன்.என் ஐயப்பாடுகளையும் கவலைகளையும் நீக்குவதற்கு பகவான் ஒவ்வொன்றையும் எவ்வாறு கனகச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்துகின்றார் என்பதை நினைந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். கோயென்கா முறையில் நான் தியானம் செய்தது பற்றியும், அது எவ்வாறு மனதில் மறைந்து பதிந்துள்ள மனப்போக்குகளை நீக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து உதவுகின்றது என்பதையும் அவரிடம் கூறினேன். அவர் என்னை மிக மென்மையாய் பார்த்துக் கொண்டே மெதுவாக படுக்கத் தொடங்கினார்.அவ்வாறு படுத்துக்கொண்டே அவர் கூறினார், “மனதைப் பற்றியோ அதன் தன்மைகளைப் பற்றியோ நான் எதையும் அறிந்திருக்கவில்லை.நான் அறிந்திருப்பதெல்லாம் உறங்குவதுதான்.அவர் முகம் நிறம் மாறி இருந்தது; வெளிறிப் போய் இருந்தது; அவர் குறட்டை விட்டு உறங்கத் தொடங்கினார்.நான் அங்கு அமர்ந்திருந்தேன். அப்பொழுது, ஆஸ்ரம பணியாளர் ஒருவர் விஸ்வநாத ஸ்வாமியைப் பார்க்க வந்தனர். விஸ்வநாத ஸ்வாமி உறங்கியதை கண்டார்.அவரும் அருகில் இருந்த பெஞ்சில் படுத்து குறட்டை விட்டு உறங்கத் தொடங்கினார்.நானும் விஸ்வநாத ஸ்வாமி படுக்கையில் படுத்துறங்க முடிவெடுத்து அவ்வாறே அமைதியாய் உறங்கினேன்.சிறிது நேரம் கழித்து அருகில் எழும் சப்தம் கேட்டு விழித்துப் பார்த்தேன்.விஸ்வநாத ஸ்வாமி படுக்கையிலிருந்து எழுந்து கொண்டே என்னைப் பார்த்தார்.அவர் குறிப்பிட்டு துல்லியமாகக் கூறினார், “உனக்குப் புரிகிறதா?” ஆஸ்ரம பணியாளர் இன்னும் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். விஸ்வநாத ஸ்வாமி சொன்னார், “அவர் இயங்குகிறார்.

இவற்றை நான் படித்தவுடன், பகவானின் தலையாய பக்தரான இவருடைய தன்மையை எழுத்துக்கள் எடுத்தியம்பாது என அறிந்துகொண்டேன்.அவர் பகவான் மீது கொண்டிருந்த பற்றும் நன்றி மறவாமையும் அவருடைய ஒவ்வொரு எண்ணிய எண்ணத்திலும், சொல்லிய சொல்லிலும், ஆற்றிய செயலிலும் மிளிர்ந்தன. விஸ்வநாத ஸ்வாமி பகவானை முதன்முதலில் சந்தித்ததைப் பற்றி நாம் ஒருபொழுதும் பேசுவதில்லை; ஆனால் ஒவ்வொன்றும் அவர் பகவான் மீது கொண்டிருந்த பற்றையும் பக்தியையும் வெளிப்படுத்தின. ஆஸ்ரமத்தின் பின் பகுதியில் அமைதியில் ஆழ்ந்து அமர்ந்திருக்கும் அவர் - விஸ்வநாத ஸ்வாமி மண்ணில் மறைந்திருக்கும் மதிப்பில்லா ரத்தினமே!

நன்றி : ரமண ஒளி 2025 அருண விஜய இதழ்
ஆங்கில மூலம் மரே ஃபெல்ட்மன்
தமிழில் முனைவர் மா. முருகேசன்

விஸ்வநாத ஸ்வாமி - மறைந்துள்ள ஓர் அரிய ரத்னம். (மரே ஃபெல்ட்மன், கனடா நாட்டில், வான்குவாரில் ஹோமியோபதி மருத்துவராயும், பயி...
02/11/2025

விஸ்வநாத ஸ்வாமி - மறைந்துள்ள ஓர் அரிய ரத்னம்.

(மரே ஃபெல்ட்மன், கனடா நாட்டில், வான்குவாரில் ஹோமியோபதி மருத்துவராயும், பயிற்றுநராயும் பணியாற்றியவர். பிப்ரவரி 1976 ல் அவர் ஸ்ரீ பகவானிடம் வந்தடைந்தார். ஆஸ்ரமத்தில் நான்கு நாட்களே தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்; ஆனால், நான்காண்டுகள் தங்கி இருந்தார். அதன்பிறகு, ஆண்டுதோறும் ஆஸ்ரமத்திற்கு வரும் அடியார்களுள் ஒருவரானார்.)

ஆழி சூழ் உலகில் அலைகடல் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் முத்துக்களைப் போல் ஆன்மீக உலகில் அடியார்களால் அதிகம் அறியப்படாத, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வெண்முகிலால் மறைத்துக் கொண்டிருக்கும் அரிய அற்புத ரத்தினங்களில் ஒன்றுதான் அருணாசல ரமணரின் அடியார் விஸ்வநாத ஸ்வாமி.

பதின்பருவம் நிறைவுறும் தனது பத்தொன்பதாவது வயதில், அருட்கடலான பகவான் ரமண மகரிஷியுடன் நிரந்தரமாய் தங்கிவிடுவதற்காக 1923-ல் அண்ணாமலை வந்தடைந்தவர் தான் விஸ்வநாத ஸ்வாமி. அவரது தந்தை ராமஸ்வாமி அய்யர் ஸ்ரீ பகவானின் தாய்வழி மாமா ஆவார். பகவானை தரிசிக்க முதன்முதலாக விஸ்வநாத ஸ்வாமி தனது 17வது வயதில் 1921-ல் திருவண்ணாமலை வந்தது குறித்து வேறொரு பகுதியில் தரப்பட்டுள்ளது. பகவானின் அருள்(ண்)மொழிகளை விஸ்வநாத ஸ்வாமி தன் ஒவ்வொரு சொல்லிலும், அசைவிலும் அற்புதமாய் பக்தியோடு வெளிப்படுத்தியுள்ளார் என்பது இங்கு தரப்பட்டுள்ளது.

பகவான் ரமண மகரிஷியின் மிகச் சிறந்த அடியார்களில் ஒருவரான விஸ்வநாத ஸ்வாமியை 1976 -ம் ஆண்டு சந்தித்தது முதல் நான் (மர்ரே ஃபெல்டுமேன்) அவர் தனது 75 வது வயதில் நவம்பர் 23, 1979 அன்று உடல்நலக் குறைவால் அருணாசல ரமணரோடு ஐக்கியமாகும் வரை அவரோடு நெருங்கிய உறவில் இருக்கும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

1976 - ல் முதன்முதலில் நான் ஆஸ்ரமம் வந்தடைந்தவுடன், பகவானைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவரது உபதேச அருள்மொழிகளை கேட்டறிந்து அவற்றின் நடைமுறை செயல்பாட்டு பயன்களை கலந்துரையாடவும் நான் திருமதி ஆஸ்பான் அம்மையாரை அனுகினேன். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத பகவானின் மூத்த பக்தரான விஸ்வநாத ஸ்வாமி எனும் பெயர் கொண்டவரை அனுக வேண்டும் என அறிவுறுத்தி அவரது இருப்பிடம் பற்றியும் எடுத்துரைத்தார். அவர் த மவுண்டன் பாத் காலாண்டு இதழ் வேலை நேரம் தவிர்த்த தருணங்களில் ஆஸ்ரம பழைய மருத்துவமனை பின்பகுதி பக்கவாட்டில் உள்ள அறையொன்றில் ஆழ்ந்த அமைதியில் வாழ்ந்து வந்தார். (1964 - ல் ஆஸ்ரமத்தில் தொடங்கப்பட்ட ஆங்கில காலாண்டு இதழுக்கு 1973 முதல் 1979 வரை அவர் ஆசிரியராக இருந்தார்).

நான் விஸ்வநாத ஸ்வாமியின் அறையை ஆஸ்ரம மருத்துவமனை அருகில் கண்டுபிடித்து மறுநாள் மாலை 6 மணியளவில் அவரை சந்திக்கச் சென்றேன். திறந்திருந்த அவர் அறையை நான் தயக்கத்துடன் அனுகியபொழுது வெண்தாடியுடன் கூடிய அவர் படுக்கையில் கால்களை தொங்கவிட்டு அமர்ந்து நேரடியாக உற்றுநோக்கி கொண்டிருப்பதைக் கண்டேன். அவர் விஸ்வநாத ஸ்வாமி தானா என அவரிடமே நான் கேட்டேன்.அவர் ஆம் என தலை அசைத்து அறைக்குள் வருமாறும் அவர் எதிரில் இருந்த பெஞ்சில் அமருமாறும் சைகை செய்தார்.

“நான் யார்?” என்பதை நடைமுறைபடுத்தும் வழி பற்றி நான் வினவினேன். அவர் என்னைப் பார்க்கவில்லை, ஆனால் பதில் மட்டும் அன்போடு தந்தார்: “பகவானின் அருள்மொழிகள் இதயத்தை சார்ந்தவை” அந்நொடியில், அவர் தம் கண்களை மூடினார்; அறையில் ஓர் அலாதியான அழகிய மிருதுவான அமைதி தவழ்ந்தது. என் கண்களை நானும் மூடிக்கொண்டேன்; நாங்கள் இத்தகைய அலாதியான அமைதியில் ஆழ்ந்திருந்தோம்.நேரம் விரைந்தோடியது; ஒரு மணி நேரம் கடந்த பின்னால் கண்களை திறந்து அவர் என்னை அறையிலிருந்து செல்லுமாறு சைகை செய்தார். நான் விரும்பினால் மறுநாள் அதே நேரம் அறைக்கு வருமாறு கூறினார். அது என் வாழ்நாளில் முதன்மையான அழகிய தருணங்களின் தொடக்கமாய் அமைந்தது. ஆஸ்ரமத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தங்குவதற்குத் திட்டமிட்டிருந்தேன்; எனின் அடுத்து தொடர்ந்த சில ஆண்டுகள் என்னை இவ்விடம் விட்டு எதுவுமே ஈர்க்கவுமில்லை; வெளியே இழுக்கவுமில்லை. ஸ்ரீ பகவானை உயிரோட்டமாய் விஸ்வநாத ஸ்வாமி எனக்கு நிதர்சனமாக்கினார் என்பதில் நான் உறுதியாய் இருக்கின்றேன். எங்கும் பகவான் நிறைந்திருப்பதை ஆஸ்ரமத்தில் உளமாற உணர முடிகின்றது என்பது உண்மையே; எனின், விஸ்வநாத ஸ்வாமி ஸ்ரீ பகவானை உயிரோட்டமாய் உருவத்தோடு குருவாய் எழுந்தருளச் செய்தார் என்பது உண்மையினும் உண்மை.

முதல் நாள் அலாதியான ஸ்ரீ ரமணானுபவ நிகழ்வுக்குப் பின், ஒவ்வொரு நாளும் நான் விஸ்வநாத ஸ்வாமியை சந்திக்கச் சென்றேன்.இரண்டு மாதங்களுக்கு என்னிடம் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஆனால், அதன்பிறகு அவர் ஸ்ரீ பகவான் பற்றி பல அனுபவங்களை எடுத்துரைத்தார்.அவர் ஸ்ரீ ரமணானுபவத்தை அவ்வளவு நேர்த்தியாய் அழகாய் உண்மையில் நிகழ்வுறச் செய்தார். ஸ்ரீ ரமணானுபவ சொரூபமாய் திகழ்ந்தார். ஸ்ரீ பகவான் மீதும் அவர் அருள்மொழிகள் மீதும் அவர் கொண்டிருந்த அன்பும் பற்றும் அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் வெளிப்பட்டது.ஸ்ரீ பகவான் மௌனத்தின் சொரூபமாய் அமைதியில் அழகாய் திகழ்ந்தார் என்பதை அவர் அடிக்கடி இயம்புவது அவரது இயல்பாய் இருந்தது.

இந்த இரண்டு மாதங்களில் எவ்வித முயற்சியுமின்றி அமைதி என் நிரந்தர உற்ற தோழனாய் உருவாகி இருந்தது; தினந்தோறும் விஸ்வநாத ஸ்வாமியின் அருகில் மற்றவர்களோடும் அமர்ந்து தியானிக்கும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது; ஆஸ்ரமத்தில் பணிபுரிவோர், மூத்த அடியார்கள் மற்றுமுள்ள பக்தர்கள் தங்களின் பிரச்சினைகளை அவரிடம் வந்து முறையிடுவதை கண்டேன். அவ்வாறு நாடி வந்தவர்களுக்கு அறிவுரைகளும், மருந்தும், பணமும், உணவும் மற்றும் அமைதியும் நல்கி வந்தார் விஸ்வநாத ஸ்வாமி.எப்பொழுதும் அவரிடம் அவரைச் சுற்றியும் இயம்ப இயலாத அமைதி குடிகொண்டிருந்தது.அவருடைய செயல்பாடும் அமைதியில் திளைத்தது.அவரிடம் மூன்று யோகங்களும் இயல்பாய் அமைந்திருப்பதை நான் உணரத் தொடங்கினேன்.அவரிடம் பகவானிடம் அளப்பரிய பக்தி, பரிபூரண ஞானம் மற்றும் இயல்பாய் அமைந்த தன்நலமற்ற செயல்பாடு மிக உயர்ந்த நிலையில் இருந்தன.எப்பொழுதும் எல்லோருக்கும் எவ்வித தயக்கமுமின்றி அன்போடு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவரோடு நீண்ட நேரம் உடனிருக்க என்னை அனுமதித்தார்.இருவரும் சேர்ந்த பிரதக்ஷிணம் செய்யத் தொடங்கினோம்.இத்தகைய தருணங்களில் பகவான் எங்களோடு உடனிருப்பதை நன்குணரச் செய்தார்.பகவான் பிரதக்ஷிணம் வரும்போது அவர் அமரும் இடங்களைச் சுட்டிக்காட்டி பகவானை உயிரோட்டமாய் எங்களை உணரச் செயதார். ஒரு சமயம், மலைவலம் வரும்பொழுது அவர் இவ்வாறு கூறினார்; “பார்வதி தேவி இங்கு வாழ்ந்து வந்ததாய் மக்கள் கூறுகின்றனர்; இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; ஆனால் ஸ்ரீ பகவான் இந்த இடத்தில் நடந்து வருவதை கண்டு உணர்ந்துள்ளேன் என்பதை நான் அறிந்துள்ளேன்.” அவருடைய குரலில் குடிகொண்டிருந்த, நெகிழ்ச்சி, அவர் பகவான் மீது கொண்டிருந்த பற்றினை அவர் சொற்களால் எடுத்தியம்ப இயலாதிருப்பதை வெளிப்படுத்தியது. விஸ்வநாதசுவாமி மலைவலம் வரும்பொழுது அமைதியாகவே இருப்பார்.வலது புறமோ இடது புறமோ பார்க்காமல் நேராக நிமிர்ந்து அமைதியாய் நடப்பார்.ஒரு சமயம், மழைக் காலத்தில் மலைவலம் வரும்பொழுது நாங்கள் முற்றிலும் மழையில் நனைந்துவிட்டோம்.மழை அதிவேகமாய் பெய்யத் தொடங்கியவுடன், பகவான் அருட்கொடையாய் மழையை நமக்கு தந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.தன் ஆழ்ந்த பக்தியை புலப்படுத்தினார்.இவ்வாறு, ஒவ்வான்றிலும், பகவானின் கருணையை காண்பதைக் கண்டு நாங்கள் மனம் நெகிழ்ந்து போனோம்.மிகத் தாமதமாக நாங்கள் ஆஸ்ரமம் வந்தடைந்தாலும், பாலு மிகச் சந்தோஷத்துடன் எங்களுக்கு உணவு பரிமாறினார்.பாலுவை பற்றியும், பகவானின் அடியார்களுக்கு அவர் எவ்வாறு அன்பொடு உணவு அளிக்கின்றார் என்பதையும் விஸ்வநாத ஸ்வாமி மிக உள்ளன்போடு எடுத்துரைத்தார்.

---- தொடரும்

நன்றி : ரமண ஒளி செப் 2025 அருண விஜய இதழ்

கட்டுரை ஆங்கில மூலம் :மரே ஃபெல்ட்மன்

தமிழில் முனைவர் மா. முருகேசன்.

Address

21/11 , சொக்கப்ப நாயக்கர் தெரு மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் எதிர் சந்து
Madurai
625001

Opening Hours

Monday 6am - 12pm
5pm - 9pm
Tuesday 6am - 12pm
5pm - 9pm
Wednesday 6am - 12pm
5pm - 9pm
Thursday 6am - 12pm
5pm - 9pm
Friday 6am - 12pm
5pm - 9pm
Saturday 6am - 12pm
5pm - 9pm
Sunday 6am - 12pm
5pm - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri ramana mandiram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri ramana mandiram:

Share

Category