03/05/2023
(அண்ணன்....தங்கச்சி....)
கண்ணன்:-
கௌரி!..
என்ன இது!..
சிறுபிள்ளத்தனமா நடந்துக்கற!...
..இந்த மாதிரி, நீ அழறத பாத்தா, ...என்னமோ இஷ்டமே இல்லாம கல்யாணம் பண்ணிண்டயோனு எல்லாரும் நெனைக்க மாட்டாளா?..
மொதல்ல கண்ணத் தொட காமாக்ஷி....
(அண்ணனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவன்
மேல் அங்கியிலேயே கண்ணைத் தொடைத்து, மூக்கையும் உறிஞ்சுகிறாள் மீனாட்சி...)
..என்ன செய்வதென்று புரியாமல், மகேசன் முகம் வெளிறிப்போய் நிற்கிறான்...
...எத்தன ஆசைஆசையா என்பின்னாடி ஓடி வந்தா இவ!..
இப்போ என்னடானா, அண்ணன் பக்கத்துல நின்னுண்டு, சின்னக் கொழந்த மாதிரி கண்ணக் கசக்கறாளே...
...ஏன்?.....என்ன ஆயிடுத்துனு இந்த ஆர்ப்பாட்டம் பண்றா இவ?..
...அம்மாடி...இந்தப் பொண்கள் விஷயத்துல எத நம்பறதுனு ஒன்னுமே புரியலயே..
(மனதுக்குள்ளேயே மகேசன் போராடுவதை, முகுந்தன் படித்து விடுகிறான்..)
மாப்ளே!..
...ஒன்னும் கவலப்படாதீங்கோ..
(அரைக் கண் அடித்து, குறும்பாய்ச் சிரிக்கிறான் கோவிந்தன்..)
...அங்கப் பாருங்கோ..
...இந்தக் கையால, என் அங்கியில கண்ணத் தொடச்சுண்டு,
...அந்தக் கையால ஒங்கள இறுக்கிப் பிடிச்சுண்டுருக்கா..
...எங்கயானும் அவ அழறத நீங்க நெஜம்னு நம்பி, விட்டுட்டுப் போயிடுவேளோனு அவ்ளோ பயம் அவளுக்கு!
...இந்த அழுகை எல்லாம் அண்ணன் தன்னத் தப்பா நெனச்சுக்கக் கூடாதேனு...
ஒரு....சம்ப்ரதாயத்துக்காகத்தான்!..
ஆனா அடிமனசுல,
தான் நெனச்ச புருஷன, நெனச்சபடி அடைஞ்ச ஆனந்தம்தான் கொப்பளிச்சுண்டு இருக்கு!...
நீங்க வேணா பாருங்கோ...
அண்ணன விட்டுட்டு கொஞ்சம் நகந்தா போறும்...
...இந்தக் கொளுத்தற கோடையில காஞ்சு போய் கெடக்கற இந்த வைகை கூட,
...நாளைக்குள்ளயே...
...இவ கண்ணுலேந்து பெருகப் போற ஆனந்தக் கண்ணீரால, ப்ரவாகமா ஓடப் போறது!...
...அதப் பாக்க இந்த ஏமாளி அண்ணன் வரத்தானே போறேன்...
...இல்லயா மீனாட்சி?...
(முகுந்தனின் கேலியில்,
மன பாரம் வெகுவாகக் குறைந்து,
கண்களிலிருந்து மீனாக்ஷிக்கு நிஜமாகவே ஆனந்த வெள்ளம் பெருக்கெடுக்க,
சுந்தரேசனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..)
..மேலே வானில் சட்டென்று மேகங்கள் சூழ்ந்தது...
..எங்கும் குளிர்காற்று ஊடுருவியது...
...படபடவென்று சிறுதூறலில் ஆரம்பித்து, பெருமழை பிடித்துக் கொண்ட போது,
..வைகை, தன்னை நோக்கி வருகின்ற பெருநீரை மடி ஏந்திக் கொள்ளத் தயாரானாள்.....