24/08/2026
🚩 கட்டவாக்கம் விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் – நவக்கிரக தோஷம் போக்கும் அற்புதத் தலம்! 🚩
காஞ்சீபுரம் அருகே உள்ள கட்டவாக்கம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு மிக அபூர்வமான தலமாகும்.
மூர்த்தியின் தனித்துவமான சிறப்புகள்:
16 அடி உயர விஸ்வரூபம்: பெருமாள் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் ஆகிய 5 பீடங்களின் மீது 16 அடி உயர பிரம்மாண்ட திருமேனியுடன் தாயாரை தன் மடியில் இருத்தி வீற்றிருக்கிறார்.
அவதாரங்களின் சங்கமம்: இவரது வடிவமைப்பு 6 அவதாரங்களையும், தாங்கியுள்ள ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் குறிக்கின்றன. கூர்ம பீடம் (கூர்மம்), வராக அவதாரம், வில்-அம்பு (பரசுராம & ராம அவதாரம்), சக்கரம் (கிருஷ்ண அவதாரம்) எனப் பல அவதார நன்மைகளை ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
மூன்றாவது கண்: இத்தல நரசிம்மருக்கு நெற்றியில் மூன்றாவது கண் (செவ்வாயின் அம்சம்) அமைந்திருப்பது மிக அரிதான ஒன்றாகும்.
நவக்கிரக பரிகாரத் தலம்:
பெருமாளின் திருமுக மண்டலத்திலேயே நவக்கிரகங்களும் ஐக்கியமாகியுள்ளனர்:
சூரியன் & சந்திரன்: வலது மற்றும் இடது கண்கள்
செவ்வாய்: நெற்றிக்கண் | சுக்கிரன்: நாசி (மூக்கு)
குரு & புதன்: மேல் மற்றும் கீழ் உதடுகள்
ராகு & கேது: இடது மற்றும் வலது காதுகள்
சனி பகவான்: நாக்கு
12 ராசிகள் & 27 நட்சத்திரங்கள்: நரசிம்மரின் 12 பற்கள் 12 ராசிகளைக் குறிக்கின்றன.
இங்கு வந்து வழிபடுவதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.
📍 அமைவிடம்: கட்டவாக்கம் (தென்னேரி அருகில்), காஞ்சீபுரம் மாவட்டம்.
🙏 வாருங்கள், 16 அடி விஸ்வரூப லட்சுமி நரசிம்மரை தரிசித்து நவக்கிரகங்களின் அருள் பெறுவோம்! 🙏