புனித லூர்து அன்னை தேவாலயம் - புன்னைநகர்

  • Home
  • India
  • Kanyakumari
  • புனித லூர்து அன்னை தேவாலயம் - புன்னைநகர்

புனித லூர்து அன்னை தேவாலயம் - புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலயம், புன்னைநகர், நாகர்கோவில். தொடங்கிய ஆண்டு 1953. ----- The Official Page -----

Happy Diwali Everyone!We would like to wish you all a Happy Diwali on behalf of everyone here at Parish of Church Of Our...
11/11/2015

Happy Diwali Everyone!
We would like to wish you all a Happy Diwali on behalf of everyone here at Parish of Church Of Our Lady Of Lourdes. May this festival bring you joy and prosperity for everyone.

புனித லூர்தன்னை ஆலயத்தின் இணையதளமானது புதுப்பிக்கப்பட்டு விட்டது.Web: http://stlourdespunnainagar.org/
04/11/2015

புனித லூர்தன்னை ஆலயத்தின் இணையதளமானது புதுப்பிக்கப்பட்டு விட்டது.

Web: http://stlourdespunnainagar.org/

Church Of Our Lady Of Lourdes at Punnai Nagar in Kottar Diocese. Established at 1953.

Church of Our Lady Of Lourdes Website Development is Currently Progress.......For any details contact : info@stlourdespu...
05/08/2015

Church of Our Lady Of Lourdes Website Development is Currently Progress.......

For any details contact : [email protected]
For parish priest contact : [email protected]
For website admin contact : [email protected]

Website : http://stlourdespunnainagar.org/index.php/en/

If you have any queries write to the email.......
If you have any document or photos published on church website send the details to this email......

Thanks,
Website Admin
Church Of Our Lady Of Lourdes, Punnai Nagar.

Church Of Our Lady Of Lourdes at Punnai Nagar in Kottar Diocese. Established at 1953.

கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு புனித லூர்தன்னை ஆலயத்தின் இணையதளமானது புதுப்பிக்கப்பட்டு வருகிறது........தடங்கலுக்கு ம...
17/12/2014

கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு புனித லூர்தன்னை ஆலயத்தின் இணையதளமானது புதுப்பிக்கப்பட்டு வருகிறது........

தடங்கலுக்கு மன்னிக்கவும்........

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 78-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் (17 டிசம்பர் 2014)
17/12/2014

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 78-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் (17 டிசம்பர் 2014)

இந்தியத் திருச்சபையின் புதிய இரண்டு புனிதர்கள்
13/12/2014

இந்தியத் திருச்சபையின் புதிய இரண்டு புனிதர்கள்

புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுள்ளது (நவம்பர் 22ம் தேதி முதல் சனவரி 4ம் தேதி வரை)...
13/12/2014

புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுள்ளது (நவம்பர் 22ம் தேதி முதல் சனவரி 4ம் தேதி வரை)

இந்தியாவின் கோவா உயர்மறைமாவட்டப் பேராலயத்தில், புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அழியாத உடல், நவம்பர் 22ம் தேதி முதல், புனிதப் பொருளாக மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த வணக்க முயற்சி, வருகிற ஆண்டு, சனவரி 4ம் தேதி முடிய மேற்கொள்ளப்படுகிறது.
1506ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் சேவியர் என்ற கோட்டையில் பிறந்த பிரான்சிஸ், 46 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவற்றில், 18 ஆண்டுகள் இயேசு சபை துறவியாக வாழ்ந்தார். தன் 36வது வயதில், கோவா கடற்கரையில் கால் பதித்த அருள் பணியாளர் பிரான்சிஸ், அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இயேசுவை அறிமுகம் செய்து, இலட்சக்கணக்கான மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார். சீனாவில் இயேசுவை அறிமுகப்படுத்த விழைந்த பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் நுழைவதற்காக சான்சியன் (Sancian) தீவில் காத்திருந்தபோது, நோயுற்று, 1552ம் ஆண்டு, டிசம்பர் 3ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
அருள் பணியாளர் பிரான்சிஸ் அவர்களை, சான்சியன் தீவுக்குக் கொணர்ந்த வர்த்தகர்கள், அவரது எலும்புகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், அவரது உடலை, சுண்ணாம்பு கற்களால் நிறைந்த ஒரு பெட்டியில் வைத்து புதைத்தனர். இருமாதங்கள் சென்று புதைத்தப் பெட்டியைத் திறந்தபோது, பிரான்சிஸ் அவர்கள் அணிந்திருந்த ஆடை உட்பட, அவரது உடலில் எவ்வித மாற்றமும் இல்லாததைக் கண்டு, அனைவரும் வியந்தனர்.
இந்தியாவுக்குச் செல்லும் வழியில், மலாக்காய் தீவிற்கு அவரது அழியாத உடல், மார்ச் மாதம் எடுத்துச் செல்லப்பட்டபோது, மக்கள் திரளாக வந்து அவ்வுடலுக்கு வணக்கம் செலுத்தினர். அப்பகுதியில் பரவியிருந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் குணமானதோடு, அந்நோயும் உடனே நீங்கியது. மீண்டும் ஒருமுறை அவரது உடல் மலாக்காய் தீவில் புதைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் கல்லறையை மீண்டும் திறந்தபோது, பிரான்சிஸ் அவர்களின் உடல் அழியாமல் இருந்தது. அங்கிருந்து மிகுந்த வணக்கத்துடன் கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், கோவாவில், 1554ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டது. அன்று முதல், கடந்த 460 ஆண்டுகள், புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் கோவா, Bom Jesus பசிலிக்காவில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.
புனித பிரான்சிஸ் சேவியர் அவர்கள், போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத 16ம் நூற்றாண்டில், 9000 மைல்களுக்கும் மேலாக நடைப்பயணமாகவே சென்று, இயேசுவைப் போதித்தார். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு திருமுழுக்கு வழங்கியுள்ளார். மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலர் என்று வணங்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருநாள், டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.

புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வு தூய்மையின் விழா, திருப்பீடம்முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான்...
03/04/2014

புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வு தூய்மையின் விழா, திருப்பீடம்

முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரும் ஏப்ரல் 27ம் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வுக்குத் தயாரிப்பாக உரோம் நகரில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள் குறித்து திருப்பீடம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் இளையோர் செப வழிபாடும், ஏப்ரல் 26 மாலை உரோம் நகரின் அனைத்துப் பங்கு ஆலயங்களிலும் செப வழிபாடும் இரு முக்கிய தயாரிப்பு நிகழ்வுகளாக அமையும் என இத்திங்களன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தது திருப்பீடம்.
இந்தப் புனிதர்பட்ட நிகழ்வு, விசுவாசத்தின் ஓர் உண்மையான விழா என்றும், இது தூய்மையின் விழா என்றும், கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் என ஏறக்குறைய ஆயிரம் பேர் கூட்டுத்திருப்பலி நிகழ்த்துவார்கள் என்றும், ஏறக்குறைய 700 அருள்பணியாளர்கள் திருநற்கருணை வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டது.
மேலும், உரோம் மறைமாவட்டம், இப்புனிதர்பட்ட நிகழ்வுக்கென புதிய இணையதளம், புதிய டுவிட்டர் பக்கம், முக நூல், யுடியூப் போன்றவைற்றையும் திறந்துள்ளது. புதிய இணையதளம் - http://www.2popesaints.org/
டுவிட்டர் - முக நூல் - 2popesaints
இப்புனிதர்பட்ட நிகழ்வுக்கென, பெர்கமோ மறைமாவட்டத்தின் 900 அருள்பணியாளர்கள் வேலையின்றி இருக்கும் மக்களுக்கு உதவுவதற்கென நன்கொடைகள் திரட்டவும் தொடங்கியுள்ளனர். முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் பெர்கமோ மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தேர்தலுக்கு முன்னர், செபம் மற்றும் உண்ணா நோன்பு, கர்தினால் கிரேசியஸ்நல்ல நிர்வாகம் செய்பவர்களையும், ஏழைகள் மற்ற...
03/04/2014

இந்தியத் தேர்தலுக்கு முன்னர், செபம் மற்றும் உண்ணா நோன்பு, கர்தினால் கிரேசியஸ்

நல்ல நிர்வாகம் செய்பவர்களையும், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டுள்ளவர்கள் மீது நீதியோடும் பரிவோடும் அக்கறை காட்டுபவர்களையும் இந்திய நாடு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக, செபம் மற்றும் உண்ணா நோன்பு நாள் ஒன்றை அறிவித்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இந்தியாவில் முதல் கட்டத் தேர்தல் இம்மாதம் 7ம் தேதி தொடங்கவுள்ளவேளை, நாட்டின் தேர்தல்கள் நல்ல முறையில் நடந்து, சனநாயகத்தைக் காக்கும் நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் செபிக்குமாறு கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இந்தியர்களைக் கேட்டுள்ளார்.
இம்மாதம் 4ம் தேதி வருகிற வெள்ளிக்கிழமையன்று, செபம் மற்றும் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்து நாட்டுக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் கர்தினால் கிரேசியஸ்.
இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சாவால்களைச் சந்திப்பதற்காக 81 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வருகிற பொதுத் தேர்தல்களில் ஓட்டளிக்கவுள்ளனர்.

முத்திப்பெறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் மறைந்த 9ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி கர்தினால் Dziwisz பேட்டிஇளையோர் மட...
03/04/2014

முத்திப்பெறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் மறைந்த 9ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி கர்தினால் Dziwisz பேட்டி

இளையோர் மட்டில் தனிப்பட்ட அக்கறை கொண்டிருந்தவரும், வெகு விரைவில் புனிதராக உயர்த்தப்படவிருப்பவருமான முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களுக்கு, 2016ம் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாள் அர்ப்பணிக்கப்படும் என்று அந்நாட்டின் கர்தினால் ஒருவர் கூறினார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, இறை இரக்க ஞாயிறுக்கு முந்திய நாள் இறையடி சேர்ந்த முத்திப்பெறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் மறைந்த 9ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி, வத்திகான் நாளிதழ் L'Osservarore Romanoவுக்கு அளித்த பேட்டியில் Krakow பேராயர், கர்தினால் Stanislaw Dziwisz அவர்கள் இவ்வாறு கூறினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், Krakow பேராயராக பணியாற்றியபோதும், பின்னர் அவர் திருஅவைத் தலைவராகப் பணியேற்றபோதும் அவரது செயலாராகப் பணியாற்றிய கர்தினால் Dziwisz அவர்கள், தன் அனுபவங்களை இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இளையோர் நாளை உருவாக்கக் காரணமாக இருந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் Dziwisz அவர்கள், இளையோரை இந்தப் புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் வழிநடத்த திருஅவைக்குக் கிடைத்த மாபெரும் கருவூலம் திருத்தந்தை 2ம் ஜான்பால் என்று சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையின் இறுதி நாட்கள் துன்பத்தில் தோய்ந்திருந்தாலும், உயிர்ப்பிலும், இறை இரக்கத்திலும் அவர் முழு நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர் அடைந்த துன்பங்கள் பொருளுள்ளதாக ஒளிர்ந்தன என்று கர்தினால் Dziwisz அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

கனடாவில், இனி ஒவ்வோர் ஆண்டும், "திருத்தந்தை 2ம் ஜான்பால் நாள்" கொண்டாடப்படும்முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால்...
03/04/2014

கனடாவில், இனி ஒவ்வோர் ஆண்டும், "திருத்தந்தை 2ம் ஜான்பால் நாள்" கொண்டாடப்படும்

முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் இறைவனடி சேர்ந்த ஏப்ரல் 2ம் தேதி, இனி ஒவ்வோர் ஆண்டும், "திருத்தந்தை 2ம் ஜான்பால் நாள்" என்று கொண்டாடப்படும் என்று கனடாவின் Ontario மாநிலம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்து, தற்போது கனடாவின் Ontario மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் Dipika Damerla அவர்களின் பரிந்துரையால், இந்த மாநில அவை 'திருத்தந்தை 2ம் ஜான்பால் நாளை' அறிவித்துள்ளது.
நாடுகளிடையே நல்லுறவை வளர்க்கவும், மனித உரிமைகளைக் காக்கவும், அமைதியை உலகில் வளர்க்கவும் அயராது உழைத்த ஓர் உலகத் தலைவர், திருத்தந்தை 2ம் ஜான்பால் என்று Ontario மாநில அவையின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
1948 மற்றும் 2002 ஆகிய இரு ஆண்டுகளில் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கனடா நாட்டுக்கு சென்றிருந்தபோது, Ontario மக்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டதையும் இத்தீர்மானம் நினைவுகூர்ந்துள்ளது.

வத்திக்கானில் “2ம் ஜான்பால் - மனிதர், திருத்தந்தை, புனிதர்” நூல் வெளியீடுஇம்மாதம் ஏப்ரல் 27ம் தேதி புனிதராக உயர்த்தப்படவ...
03/04/2014

வத்திக்கானில் “2ம் ஜான்பால் - மனிதர், திருத்தந்தை, புனிதர்” நூல் வெளியீடு

இம்மாதம் ஏப்ரல் 27ம் தேதி புனிதராக உயர்த்தப்படவிருக்கும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களைப் பற்றிய நூல் ஒன்று ஏப்ரல் 1, இச்செவ்வாயன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டது.
“2ம் ஜான்பால் - மனிதர், திருத்தந்தை, புனிதர்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலை, திருப்பீடக் காலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்கள் வெளியிட்டபோது, இந்நூலின் சிறப்பு அம்சங்களைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வாழ்வில் தொடர்புகொண்ட பலர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக, 235 பக்கங்கள் அடங்கிய இந்நூல் அமைந்துள்ளது.
20 மற்றும் 21 ஆகிய இரு நூற்றாண்டுகளுக்கு இடையே ஒரு பாலம்போல் அமைந்து, திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வாழ்வுச் சரிதையாக அமையாமல், இந்நூல், அப்பெரும் மனிதரின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் நூலாக அமைந்துள்ளது என்று கர்தினால் Ravasi அவர்கள் எடுத்துரைத்தார்.
கிறிஸ்து, மரியன்னை, துன்பம் என்ற மூன்று கோணங்களில் திருத்தந்தையின் வாழ்வை அலசும் பலரில், திருத்தந்தையின் துன்பம் மிகுந்த இறுதி ஆண்டுகளில் அவருடன் மிக நெருங்கிய வகையில் தொடர்புகொண்ட பேராயர் Piero Marini அவர்கள் திருத்தந்தை அடைந்த துன்பங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் என்று கர்தினால் Ravasi அவர்கள், சிறப்பான முறையில் சுட்டிக்காட்டினார்.

Address

Church Of Our Lady Of Lourdes, Punnai Nagar, Nagercoil, Kanyakumari District
Kanyakumari
629004

Alerts

Be the first to know and let us send you an email when புனித லூர்து அன்னை தேவாலயம் - புன்னைநகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to புனித லூர்து அன்னை தேவாலயம் - புன்னைநகர்:

Share