23/04/2026
கொஞ்சம் சிந்தியுங்களேன்?
ஒருவன் கார் வாங்குவதற்காக
இரவும் பகலும் உழைக்கிறான் என்று
வைத்துக் கொள்ளுங்கள்.
அவனுக்கு
உழைப்பு பிரியம் என்று சொல்வீர்களா?
கார் பிரியம் என்று
சொல்வீர்களா?
அப்படியே
ஆசீர்வாதங்களுக்காக
பரிசுத்தமாய் வாழ தீர்மானிப்பவனின்
வாழ்வில்;
அவனுக்கு
பரிசுத்தம் பிரியம் என்று
சொல்வீர்களா?
ஆசீர்வாதம் பிரியம் என்று
சொல்வீர்களா?
அன்புக்குரியவர்களே
இன்று பெரும்பான்மையான கிறிஸ்தவர்களுக்கு
பரிசுத்தம் என்பது பிரியமான பொருளே இல்லை!
அது ஒன்றைப் பெறுவதற்கான
கூலியாக மட்டுமே வைத்திருக்கிறார்கள்.
பரிசுத்தம் ஆசீர்வாதத்தை விட
முதலிடம் பெறாதவரை
நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை போலியே!