22/10/2024
கந்த வேலை வணங்கு – நம்
கவலையெல்லாம் போக்க – தினம்
கந்த வேலை வணங்கு – நம்
கவலையெல்லாம் போக்க
நாளும் பொழுதும் தீபம் ஏற்றி!
கந்த வேலை வணங்கு – நன்மை
யாவும் வீடு சேரும் பக்தியை நீ விரும்பு
பிறப்பு என்பது ஒருமுறை – அதில்
இறப்பு என்பது ஒருமுறை
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்
உண்மை அன்பு கொண்ட
நெஞ்சில் வாழுகின்ற தெய்வம்
உள்ளம் உருகி அழுபவர் – தமக்கு
துயரம் தீர்க்கும் தெய்வம்
கருணை பொங்கும் ஒருமுகம் – அது
கந்தன் குமரன் திருமுகம்
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்
பாதம் நோக பயணம் – போக
பழனியப்பன் வருவான்
விதியை மாற்றி வினைகள் – அகற்றி
புதிய வாழ்வு தருவான்
ஆறெழுத்து மந்திரம் – அதை
சொன்னால் சுகம் தரும்
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்..
ஸ்ரீ சிவன்மலை ஆண்டவருக்கு அரகரா அரகரா அரோகரா ..!!
Like -> சிவன்மலை ஆண்டவர் - 8973355333