ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் பாப்பினி

  • Home
  • India
  • Kangayam
  • ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் பாப்பினி

ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் பாப்பினி பாப்பினி ஸ்ரீ பேரூர் பெரியநாயகி அம்மன் கோயில் அதிகாரபூர்வமான முகநூல் பக்கம்

01/03/2026
*மாசி மக பொங்கல் திருவிழா அழைப்பிதழ்*
24/02/2026

*மாசி மக பொங்கல் திருவிழா அழைப்பிதழ்*

03/09/2025

#ஆவணிமாத_பௌர்ணமி_பூஜை

நமது குலம்காக்கும் பாப்பினி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி பூஜைகள் வருகின்ற ஆவணிமாத #22ஆம்_நாள்_ஞாயிற்றுக்கிழமை (07/09/2025) கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

பகல் 10.30மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் அருள்மிகு #செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெறும்.

நண்பகல் 12.00 மணி முதல் 01.30 மணிக்குள் அருள்மிகு #பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்கார தீபாராதனை நடைபெறும்.

அன்னதானம் காலை 08.00 மணி முதல் 02.30 மணி வரை பெரியநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறும்.

முக்கிய குறிப்பு

ஆவணி மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ( 07/09/2025 ) சந்திர கிரகணம் சம்பவிக்க உள்ளதால் அன்று பிற்பகல் 03.30 மணி முதல் மறுநாள் 23 ஆம் நாள் திங்கட்கிழமை ( 08/09/2025 ) அதி காலை 05.00 மணி வரை அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் நடை சாத்தப்படுகிறது.

இப்படிக்கு,
நிர்வாகம்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பாப்பினி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் வரும் திருவள்ளுவர் ஆண்டு 2056 விசுவாச ...
20/08/2025

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பாப்பினி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் வரும் திருவள்ளுவர் ஆண்டு 2056 விசுவாச வருடம் ஆவணி மாதம் 06'ஆம் நாள் (22/08/2025) வெள்ளிக்கிழமை " *ஆவணி அமாவாசை* "அன்று சிறப்பு பூஜைகள் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் அபிசேகம் மற்றும் அலங்கார பூசைகள் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நிறைவுற்ற பிறகு காலை 06.00 முதல் 07.00 மணிக்குள் அருள்மிகு செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம் செய்து பிறகு அலங்கார பூஜைகள் நடைபெறும்.காலை 07.00 மணி முதல் மதியம் 03.30மணி வரை சிறப்பாக அண்ணதானம் நடைபெறும்.
இராஜகோபுரம் வேலைகள் பூச்சு வேலைகள் முடிவுற்று உள்ளது.
கிழக்கு ,தெற்கு மற்றும் மேற்கு வாயில்களில் மூன்று நிலை செங்கல் கோபுர வேலைகள் முடிவுற்று பூச்சு வேலைகள் தொடங்க உள்ளது.
மடப்பள்ளி மற்றும் தேர்நிலை வேலைகள் முடிந்து மேலே சுற்றிலும் பல்லவர் கால சிற்ப வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது .
அருள்மிகு விநாயகர் கோயில் அருள்மிகு கன்னிமார் கோயில் அருள்மிகு முத்துக்கருப்பன்னசாமி அருள்மிகு உற்சவர் சன்னதி மற்றும் அருள்மிகு பேச்சியம்மன் கோயில் கற்கார கோபுர வேலைகள் முடிவுற்று *பண்டியல்* *கல்* (கோபுரம் கலசம் பொருத்தும் பகுதி)பொருத்தும் பணி நிறைவு பெற்று உள்ளது.
கோயில் திருமதில் வேலைகள் கிழக்கு கோபுரம் தொடங்கி தெற்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரம் வழியாக வடக்கு இராஜ கோபுரம் வரை 14'0" அடி உயரத்திற்கு சிறந்த வேலைப்பாடுகளுடன் முடிவடைந்து உள்ளது.
கிழக்கு கோபுரம் முதல் வடக்கு இராஜ கோபுரம் வரையிலான திருமதில் வேலைகள் வைகாசி மாத பௌர்ணமி முதல் தொடங்கி 4'0" உயரம் வரை முடிந்து மேலே வேலைகள் நடைபெற்று வருகிறது.
கோயில் உள்ளே அமைய உள்ள இரண்டு யானை வாகனங்கள் மற்றும் இரண்டு குதிரை வாகனங்கள் வைக்கும் இடத்தில் நிலமட்டம் வரை கட்டுமான பணி நிறைவடைந்து உள்ளது.ஓரு யானை வாகனத்திற்கு உண்டான கல் வரபெற்று உள்ளது.
மணிமண்டபம் மற்றும் யாகசாலை கட்டுமான பணிக்கான பவுண்டேசன் கல்கார கட்டுமான பணி முடிவடைந்து உள்ளது.
கோயில் வளாகத்தில் அமைய உள்ள கதவுகளுக்கு உண்டான அனைத்து வேங்கை மரங்களும் வரப்பெற்று கதவு மரவேலைகள் நடைபெற்று வருகிறது.
(தூபஸ்தம்பம்) கோயில் கொடி மரத்திற்கு உண்டான மரம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெம்மாரா ரேஞ்ச் மங்கலம் டேம் ஏரியாவில் பார்த்து முடிவு செய்யப்பட்டு கேரள வனத்துறையினரிடம் கடிதம் கொடுத்து உள்ளோம்.இன்னும் ஓரிரு வாரங்களில் திருக்கோயில் வளாகத்திற்கு எடுத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
" *நமது* *காலத்தில்* *நடைபெறும்* *மிகப்பெரிய* *திருப்பணியில்* *திருக்கோயிலைச்சார்ந்த குலத்தார்கள் அனைவரும்* *பங்கேற்று* *தங்களுக்கு* *உண்டான* *பங்களிப்பு* *தொகையினை* *கொடுத்து* *மிகவிரைவில்* *திருக்குட* *நன்னீராட்டு* *பெருவிழா*" நடைபெற உதவிட வேண்டுகிறோம்.
தோடை கண்ணந்தை காடை குல கொங்கு வேளாளர் நற்மணி மன்ற தலைவர் தோடை குல திரு.வெங்கடாசலம் அண்ணா (9894030073 )செயலாளர் கண்ணந்தை குல திரு.ராமசாமி அண்ணா (9443720455 )
மற்றும் பொருளாளர் காடை குல திரு.அர்ச்சுணன் மாமா (9442221398) சார்பில் திருப்பணி கமிட்டி இன்ஜினியர் தோடை குல குணசேகர் 9842727950/9443707950.

ஆடி அமாவாசை அபிஷேக அலங்காரம்
24/07/2025

ஆடி அமாவாசை அபிஷேக அலங்காரம்

நமது திருக்கோவில் காணியாளர்கள் மற்றும் உறவினர்களையும், பக்தர்கள் அனைவரையும் தவறாமல் பெரியநாயகி அம்மனது மாசி மக பொங்கல் ப...
09/03/2025

நமது திருக்கோவில் காணியாளர்கள் மற்றும் உறவினர்களையும், பக்தர்கள் அனைவரையும் தவறாமல் பெரியநாயகி அம்மனது மாசி மக பொங்கல் பெருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

இங்கனம்,

அறங்காவலர் குழு & தோடை கண்ணந்தை காடை குல கொங்கு வேளாளர் நற்பணி மன்றம் - பாப்பினி

மற்றும்

பாப்பினி வீரசோழபுரம் தோடை கண்ணந்தை காடை குல காணியாளர்கள்.

03/09/2024

I gained 509 followers, created 57 posts and received 27,701 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

https://youtu.be/inq52NXBlhU?feature=sharedபுனர் பாலாலய சிறப்பு நிகழ்வாக நமது அன்னை வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்...
25/08/2024

https://youtu.be/inq52NXBlhU?feature=shared

புனர் பாலாலய சிறப்பு நிகழ்வாக நமது அன்னை வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சிறப்பு காட்சி...

ஓம் ஸ்ரீ பெரியநாயகி அன்னையே போற்றி போற்றி...

அருள்மிகு பாப்பினி ஸ்ரீ பெரியநாயகி அம்மன் திருக்கோவில் புனர் பாலாலய சிறப்பு அலங்காரமாக வெள்ளி கவசம் அலங்காரத...

Address

அருள்மிகு பெரியநாயகிஅம்மன் திருக்கோயில் பாப்பினி கிராமம் காங்கேயம் திருப்பூர் மாவட்டம்
Kangayam
638701

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் பாப்பினி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் பாப்பினி:

Share

Category