22/08/2020
#எங்க_ஊரு_கருக்குப்பேட்டை
#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயிலில்
#அருள்மிகு_கற்பக_விநாயகர்
#விநாயகர்_சதுர்த்தி_ஸ்பெஷல்: பிள்ளையார் பெயர்க் காரணம்🙏🙏
விநாயகர் அவதரித்த தினத்தைத் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும், தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் பெயர்க் காரணம்: வி – இதற்கு மேல் இல்லை என்று பொருள்.
நாயகர் – தலைவர் என்று பொருள். இதற்கு மேல் பெரியவர் யாருமில்லை என்பதற்கான அர்த்தமே விநாயகர். அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்று கூறுகிறோம். மேலும், ஐங்கரன் (ஐந்து கரங்களை உடையவர்), கணபதி (கணங்களுக்கு அதிபதி) என்றெல்லாம் கூறுகிறோம்.
கணபதி பெயர்க் காரணம்: க – ஞானத்தைக் குறிக்கிறது.
ண – ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது.
பதி – தலைவன் என்று பொருள்படுகிறது. கணங்களுக்கு எல்லாம் அதிபதி என்பதே இந்த கணபதி. இவ்வாறு விநாயகரின் சகல நாமங்களும், வெவ்வேறு அர்த்தங்களோடு அவரது பெயரிலேயே மறைந்துள்ளது.
ஒரு முறை சிவபெருமான வெளியில் சென்றிருந்த போது பார்வதி தேவி நீராடச் செல்வதற்கு முன் தனக்கு காவலுக்கு யாருமில்லை என்று எண்ணினார். அப்போது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பைக் கொண்டு ஒரு உருவத்தை உருவாக்கி அதற்கு உயிரூட்டினார். அதனை தன் பிள்ளையாக பாவித்தார். அதன் பின்னர் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று பிள்ளைக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி நீராடச் சென்றார்.
அப்போது சிவபெருமான் உள்ளே வர, அவரை அனுமதிக்காததால் கோபம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சிறுவன் பார்வதியின் மகன் என்று. இதனால் அச்சமுற்ற சிவபெருமான், பார்வதி குளித்து வருவதற்கு முன்னர், தனது பூதகணங்களை அழைத்து, பூவுலகில் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து வருமாறு கட்டளையிட்டார். சிவபெருமானின் கட்டளைக்கேற்ப, பூதகணங்களும் முதலில் ஒரு யானையை பார்த்தார்கள். பின் அந்த யானையின் தலையை துண்டித்து கொண்டு சென்றார்கள். பின்பு சிவபெருமான் அந்த யானையின் தலையை அச்சிறுவனுக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார்.
அந்நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்த பார்வதி, யானை தலையுடன் கூடிய அச்சிறுவனைப் பார்த்து, இந்த பிள்ளை யார்? என்று கேட்டார். அப்படி பார்வதி கேட்ட கேள்வியை தான், சிவபெருமான் பார்வதியின் மகனுக்கு பிள்ளையார் என்ற பெயரைச் சூட்டி, குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் வந்த பெயர்கள் தான் விநாயகர், கணபதி, விக்னேஷ்வரன் போன்றவைகள். மேலும் இது நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தி அன்று தான். இதன் காரணமாக அன்று முதல் அந்த நாள் ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..🙏🙏🙏
YouTube link - https://www.youtube.com/channel/UCHInBap3iFFayH7Bc-yNVJA
Instagram link - https://instagram.com/eokpt?igshid=18mih1cetpls5