Bakthiyugam - பக்தியுகம்

Bakthiyugam - பக்தியுகம் People exploring a peaceful path to Enlightment as a way of unfolding the Inner self-through a journey of spirituality & love

மயானக்கொள்ளை உருவான  கதை மயானக்கொள்ளை மேல்மலையனூரில் மட்டுமல்லாது அங்காளம்மன் குடிகொண்டுள்ள அனைத்து ஆலயங்களிலும் நடைபெறு...
03/03/2022

மயானக்கொள்ளை உருவான கதை

மயானக்கொள்ளை மேல்மலையனூரில் மட்டுமல்லாது அங்காளம்மன் குடிகொண்டுள்ள அனைத்து ஆலயங்களிலும் நடைபெறுகிறது. இதற்கு கதை ஒன்று கூறப்படுகிறது.

ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன், திலோத்தமை என்ற தேவ மங்கையின் அழகில் மயங்கி அவளைத் துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள். பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பிரம்மனது ஒரு தலையை சிவபெருமான் வெட்டி எறிந்தார். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைக்கவே, அதனைத் தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

பிரம்மனின் தலையைக் கொய்தபோது சக்திதேவி அதைத் தடுக்காததால், கோபம் கொண்ட சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். பார்வதியும் சிவனின்றி அகோர ரூபம் கொண்டு ஆவேசமாக சுற்றி திரிந்தார்.

இறுதியில் அன்னை மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.சிவன் பிச்சையெடுக்கும் உணவனைத்தையும் அந்த பிரம்ம கபாலம் உண்டு பசியோடு சக்தியற்று அலைய வைத்தது.இறுதியில் பரமேஸ்வரி வாழ்ந்து வந்த மயான பூமிக்கு வந்து சேர்ந்தார். மகா விஷ்ணுவின் அலோசனைப்படி உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவனுக்கு உணவு சமைத்தாள்.

பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள்.முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது.மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினால். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது.ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொள்ளை உற்சவம் நடத்தப்படுகிறது.

திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும...
22/12/2021

திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

அழகரின் அபூர்வ வரலாறுஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இர...
27/04/2021

அழகரின் அபூர்வ வரலாறு

ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து “”வேண்டியதை கேள்” என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் “அழகு’. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

🙏🙏நன்றி 🙏🙏

விண்ணாம்பாறை விஷ்ணுவின் சயனக்கோலம்தொண்டூர் கிராமபுறத்தின் வயல்வெளியில் உள்ள  ஒரு பாறையில் விஷ்ணு பள்ளிகொண்ட கோலத்தில் அன...
24/04/2021

விண்ணாம்பாறை விஷ்ணுவின் சயனக்கோலம்

தொண்டூர் கிராமபுறத்தின் வயல்வெளியில் உள்ள ஒரு பாறையில் விஷ்ணு பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் இந்த ஒற்றைப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட பள்ளிகொண்ட விஷ்ணு மூன்றாம் நந்திவர்ம (கி.பி. 846–869) பல்லவன் காலத்திய கலைப்பாணி ஆகும். இந்த சிற்பத்தொகுதி இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விண்ணாம்பாறை சயனக்கோல விஷ்ணுவின் சிற்பத்தொகுதி சுமார் 20 அடி நீளமும் 10 அகலமும் கொண்ட நீள்சதுர வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் படிமம் பொதுவாக நான்கு கைகளுடன் அமைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால் இந்த விண்ணாம்பாறை பெருமாள் இரண்டு கைகளுடன் ஆயதங்கள் எதுவுமின்றிக் காணப்படுவது சிறப்பு. பெருமாளின் நாபியில் பிரம்மா இல்லை. தலைமாட்டில் ஸ்ரீதேவியும் கால்மாட்டில் பூதேவியும் காணப்படவில்லை.

அனைத்து தலங்களிலும் விஷ்ணுவின் சயனக்கோல சிற்பம் இடப்புறம் தலைவைத்து வலப்புறம் கால்நீட்டியவாறு காட்சி தருவது வழக்கம். விண்ணாம்பாறை விஷ்ணு பாறையின் வலப்புறம் தலைவைத்து இடப்புறம் கால்நீட்டியவாறு வித்தியாசமாகக் காட்சி தருகிறார். இடது பக்கமாய் ஒருக்களித்த நிலையில், கால்களை நீட்டி இடது கையை நீட்டியவாறு, இமைகளை முக்கால் பங்கு மூடிய நிலையில், விழிகள் மேலே சொருகிவாறு யோகநித்திரையில் காட்சி தருகிறார். வலக்கை மான்தலை (ம்ருஹி) முத்திரை கட்டுகிறது.

விஷ்ணு சிற்பத்தை வலப்புறம் தலைவைத்து இடப்புறம் கால்நீட்டியவாறு செதுக்குவதில் ஒரு விசித்திரமான நம்பிக்கை உள்ளது. இவ்வாறு விஷ்ணு சிற்பத்தைப் பக்கம் மாற்றிச் செதுக்கினால் போர்க்களத்தில் எதிரிக்கு துர்அதிஷ்டதைக் கொண்டுவருமாம். வலப்பக்கமாகத் தலைவைத்து இடப்புறம் கால் நீட்டியவாறு காட்சிதரும் விஷ்ணு சிற்பம் இரண்டு இடங்களில் காணப்படுகிறது. ஒன்று தொண்டூர் விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம். மற்றொன்று காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் விஷ்ணு சிற்பம்.

பெருமாள் அணிந்துள்ள உயரமான கிரீட மகுடம் கம்போடியா கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது. இந்தப் படிமம், கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கம்போடியாவின் தொடக்ககால அங்கோர்வாட் கோவில் பல்லவ வம்சத்தைப் பூர்விகமாகக்கொண்ட கம்போடிய அரசர்களால் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

விஷ்ணுவின் காதுகளில் மகரகுண்டலங்கள், கழுத்தில் பட்டையான கழுத்தணிகள், மார்பின் குறுக்கே உபவீதமாக வஸ்திர யக்ஞோபவிதம் (துணியில் முப்புரி நூல்), விலாவில் உதரபந்தம், தோள்களில் தோள்வளை, மேற்கைகளில் கேயூரம், மணிக்கட்டில் கடகவளை, வளையல்கள் ஆகிய அணிகலன்களை அணிந்துள்ளார். இடுப்பில் கீழ்ப் பாய்ச்சு முறையில் கட்டப்பட்டுள்ள பட்டு பீதாம்பரம் அலை மடிப்புகளுடன் அலங்கரிக்கின்றன. அனந்தசேஷ நாகம் விஷ்ணுவின் தலைக்கு மேல் ஏழு தலைகளுடன் படமெடுத்துக் குடை அமைத்துள்ளது.
..நன்றி...

24/04/2021

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு விமர்சையாக நடைபெற்றது பட்டாபிஷேகம்.   |   |   |
23/04/2021

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு விமர்சையாக நடைபெற்றது பட்டாபிஷேகம். | | |

21/04/2021

ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி தர்ஷன்

#ஸ்ரீரங்கம் #கோவில்

கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவியானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை இந்த வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள...
18/04/2021

கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவியானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை இந்த வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். புராண காலங்களில், கடும் தவத்தை மேற்கொள்வதன் மூலம் அசுரர்கள் கூட வரங்களைச் சுலபமாகப் பெற்று விடுவார்கள். கடும் தவத்தில் மயங்கும் அந்த மும்மூர்த்திகளும் வரத்தை அளித்து விடுவார்கள். இப்படித்தான் பாணாசுரன் எனும் அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்து ‘தன்னை யாராலும் அழிக்க முடியாது என்றும்’, ‘ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக் கூடாது’ என்றும் வரத்தினை பெற்று விட்டான். அந்த அரக்கன் நினைத்துள்ளான் ‘மென்மையான தேகத்தையும், மனதையும் கொண்ட ஒரு கன்னிப்பெண் மூலம் எப்படி மரணம் நிகழ முடியும்’ என்று இப்படி ஒரு வரத்தை வாங்கி விட்டான்.

வரத்தினை பெற்றுக்கொண்ட பாணாசுரனின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. முனிவர்களையும், தேவர்களையும் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் விஷ்ணுவோ பாணாசுரனின் மரணத்தில் இருக்கும் ‘கன்னிப் பெண்ணால் தான் மரணம்’ என்ற ரகசியத்தை அவர்களுக்குக் கூறினார்.

விஷ்ணுவின் அருகில் அமர்ந்து கொண்டிருந்த சிவபெருமான் இதற்குத் தீர்வு வழங்கினார். அந்த அசுரனை அழிப்பதற்கு, அம்பாளான சக்தி தேவியினால் தான் முடியும் என்ற ஆலோசனையைத் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கூறினார். தேவர்களும், முனிவர்களும் சக்தி தேவியை நினைத்து தவம் மேற்கொண்டனர்.

தேவர்களையும், முனிவர்களையும் அந்த அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, சக்திதேவி கன்னிப் பெண்ணாக, தென்பகுதியான குமரியில் அவதரித்தாள். இந்த பூமியில் கன்னிப் பெண்ணாகப் பிறந்த சக்திதேவி அந்த ஈசனிடம் பக்தி கொண்டு, ஈசனை மணம் முடிப்பதற்கு கடும் தவத்தை மேற்கொண்டாள்.

அந்த சமயத்தில் சிவபெருமானும் சுசீந்திரம் என்னும் இடத்தில் தாணுமாலயன் என்ற பெயர் கொண்டு வாழ்ந்து வந்தார். பூலோகத்தில் கன்னிப் பெண்ணாக அவதரித்த சக்தி தேவியின் அழகினை பார்த்து அவரை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் ஈசன்.

இதனை அறிந்த தேவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. சக்தி தேவிக்குத் திருமணம் ஆகிவிட்டால் அந்த அசுரனை எப்படி அழிப்பது என்று தான். ஆனால் முக்காலத்தையும் உணர்ந்த அந்த நாரத முனிக்கு மட்டும் இது அந்த ஈசனின் திருவிளையாடல் தான் என்பது புரிந்தது.

சக்தி தேவிக்கும், ஈசனுக்கும் நடக்கப்போகும் திருமண பேச்சானது சபைக்கு வந்தது. ஆனால் இந்தத் திருமணமானது எப்படியாவது நிற்க வேண்டும் என்பது தான் தேவர்களின் எண்ணமும், நாரதரின் எண்ணமுமாக இருந்தது. திருமணத்தை நிறுத்துவதற்கு நாரதர் கலகத்தைத் தொடங்கிவிட்டார். நாரதர் கலகம் நன்மையில் தானே போய் முடியும்.

நாரதர் சிவபெருமானைப் பார்த்து தேவர்களது சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தார் ‘சூரியன் உதயத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளையான சிவபெருமான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விடவேண்டும்’ என்பதுதான் அது. தேவியிடமும் இந்த கோரிக்கையானது கூறப்பட்டது. மாப்பிள்ளை சூரிய உதயத்திற்கு முன்பு வரவில்லை என்றால் இந்தத் திருமணம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது

திருமணம் நடைபெறும் நாள் வந்தது. சுதந்திரத்தில் இருந்து சிவபெருமான் குமரி நோக்கிப் புறப்பட்டார். விடிவதற்கு முன்பாகவே நாரதர் சேவலாக உருவம் எடுத்துக் கூவி விட்டார். சேவலின் சத்தத்தைக் கேட்ட சிவபெருமான் சூரியன் உதித்து விட்டது இனி சென்றாலும் திருமணம் நடக்காது என்று நினைத்துக் கொண்டு திரும்பவும் சுசீந்திரத்திற்க்கே சென்றுவிட்டார்.

குமரிமுனையில் திருமணத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் தேவியின் கோபம் உச்சத்தை எட்டியது. சூரியன் உதித்து விட்டார். ஆனால் இன்னும் தேவியை மணம் முடிப்பதற்காக ஈசன் வரவில்லை என்ற கோபம் தேவிக்கு அதிகமாகியது. திருமணத்திற்காகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களையும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களையும் எடுத்து கடல் மணல் பரப்பில் வீசினாள். இதனால் தான் கன்னியாகுமரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ணங்களாகக் காட்சி தருகிறது என்று கூறப்படுகிறது.

இந்த சமயம் பார்த்து பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தேவியை மணந்து கொள்வதற்காக வருகை தந்தான். தேவி இப்போது கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றாள். தனது விருப்பத்தைக் கூறிய பாணாசுரனிடம் ‘உன்னை மணப்பது எனக்கு விருப்பம் இல்லை’ என்று கூறிவிட்டாள். ஆனால் பாணாசுரன் விடவில்லை. கட்டாயப்படுத்தி சக்திதேவியிடம் மணமுடிக்க வற்புறுத்தினான்.

தேவியை நெருங்க நினைத்த பாணாசுரனால் அருகில் கூட நெருங்க முடியவில்லை. அவளது கோபம் தீப்பிழம்பு எடுத்தது ஓங்கி உயர்ந்து, வானளாவிய உருவத்தைக் கொண்ட பராசக்தி தேவி பாணாசுரனை தன் கால்களால் மிதித்து வதம் செய்தாள். தேவர்கள் அனைவரும் தேவியைப் பூக்கள் தூவி சாந்தம் அடையச் செய்தனர். தங்களைக் காப்பாற்றிய தேவிக்கு நன்றியையும் பணிவோடு தெரிவித்துக் கொண்டனர்.
கோபம் தணிந்த தேவி சாந்தி அடைந்து அன்று முதல் இன்று வரை கன்னியாகுமரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, அந்த சிவபெருமானை நினைத்துக் கொண்டு மக்களின் குறைகளை நீக்கிக் கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.

பலன்கள் :-
திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்த கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படும். காசிக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

#கன்னியாகுமரி

திருமண வரம் அருளும் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதத்தில் சேவை சாதிக்கிறார் திருமால். அப்...
16/04/2021

திருமண வரம் அருளும் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்

ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதத்தில் சேவை சாதிக்கிறார் திருமால். அப்படி ஆண்டு முழுவதும் "கல்யாண" கோலத்தில் காட்சி தரும் கோயில் தான் "திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள்" கோயில். 108 திவ்ய தேசங்களில் ஒன்று இந்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யபட்ட புண்ணிய ஷேத்திரம்.
இக்கோவிலின் இறைவனான திருமால் நித்யகல்யாண பெருமாள், லட்சுமி வராக பெருமாள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவியாக கோமளவல்லி தாயார் இருக்கிறார்.
புன்னை மரம் இக்கோவிலின் தல விருட்சமாக இருக்கிறது. புராணங்களின் படி "குனி" என்ற முனிவரும், அவரது மகளும் சொர்க்கம் செல்ல முயன்ற போது அவர்களை சந்தித்த நாரதர் குனி முனிவரின் மகளுக்கு திருமணம் ஆகாததால் அவளால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என கூறினார். மேலும் தேவலோகத்திலுள்ள முனிவர்கள் யாரேனும் குனி முனிவரின் மகளை திருமன்னம் செய்துகொண்டு அவர்கள் இருவரும் சொர்க்க லோகத்தில் வாழ உதவுமாறு அனைத்து முனிவர்களிடமும் வேண்டினார் நாரதர்.

"காலவரிஷி" என்பவர் குனி முனிவரின் மகளை திருமணம் செய்து 360 பெண்குழந்தைகளை பெற்றார். அவர்கள் அனைவரையும் நாராயணனாகிய திருமாலுக்கே திருமணம் செய்விக்க விரும்பி நெடுங்காலமாக தவமிருந்தார் ஆனாலும் திருமாலின் காட்சி கிடைக்கவில்லை. ஒரு நாள் காலவரிஷி தங்கியிருந்த குடிலுக்கு ஒரு இளைஞர் வந்தார். தான் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருப்பதாக கூறி, காலவரிஷியிடம் சில உதவிகளை கேட்டான் அந்த இளைஞன்.

இளைஞனின் முகத்தில் இருந்த தெய்வீக தேஜஸை கண்ட ரிஷி, தனது 360 பெண்களையும் அந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க தனது விருப்பத்தை தெரிவித்தார். இளைஞனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் 360 நாட்களில் 360 பெண்களை திருமணம் செய்து கொண்டார். 360 ஆம் நாள் இறுதியில் இளைஞன் வடிவில் வந்த திருமால் தனது வராகமூர்த்தி அவதாரத்தில் காலவரிஷிக்கு காட்சி தந்தார். எப்போதும் திருமண கோலத்திலேயே இருந்ததால் இவருக்கு "நித்யகல்யாண பெருமாள்" என்ற பெயர் ஏற்பட்டது.

360 பெண்களையும் ஒரே பெண்ணாக மாற்றி தனது இடது புறத்தில் நிறுத்தி அனைவருக்கும் காட்சி தந்தார். திரு என்ற மகாலட்சுமி தேவியை தன் இடது பக்கத்தில் வைத்து சேவை சாதித்ததால் இந்த தளம் "திருவிடவெந்தை" என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் திருவிடந்தை என்ற பெயர் ஏற்பட்டது. பெருமாளின் கன்னத்தில் இயற்கையாகவே ஒரு திருஷ்டிப்பொட்டு அமைந்திருக்கிறது. வராக மூர்த்தி தன் ஒரு திருவடியை பூமியின் மீது பதித்தும் மற்றொன்றை ஆதிசேஷன் மீது பதித்தும் அகிலவல்லித் தாயாரை இடது தொடையில் தாங்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தாயாரின் நாமமாகிய கோமளவல்லி என்ற பெயராலேயே இந்தத் தலம் கோவளம் என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்,.

இந்த திருவிடந்தை பெருமாள் கோவிலில் மட்டும் தான் ஓர் ஆண்டில் 365 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் எப்போதும் கல்யாண கோலத்திலேயே இருப்பதால், திருமணம் காலதாமதம் ஆகிற ஆண்கள், பெண்கள் இக்கோவிலில் வந்து வழிபட்டு பூஜைகள், பரிகாரங்கள் மேற்கொண்டு பெருமாளுக்கும் தாயாருக்கும் செய்யப்படும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசித்து வழிபட வெகு சீக்கிரத்திலேயே திருமணம் கோலத்தை தன்னை வழிபடும் திருமணம் ஆகா இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு திருமண பிராப்தியை அளிக்கிறார் என்பது இங்கு வந்து வழிபட்டு அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்காக இருக்கிறது.

மேலும் திருஷ்டி தோஷம், ராகு-கேது தோஷம், சுக்ர தோஷம் போன்றவை இத்தலத்தை தரிசிப்பவர்களுக்கு நீங்குவதாக ஐதீகம். பலி எனும் அரக்க குல அரசன் தனது "பிரம்மஹத்தி" தோஷத்தை இத்தல பெருமாளை வழிபட்டு போக்கி கொண்டான். யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இத்தலத்தில் உள்ளது. இந்தியாவிலேயே கொச்சி அரண்மனையிலும், இத்தலத்திலும் மட்டுமே அவ்வகை பல்லக்குகள் உள்ளன.

மதுரை வீரன் உண்மை வரலாறுதிருச்சி மாவட்டத்தின் ஒரு பாளையத்தை பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார் அந்த மாவட்டத்தில் ...
15/04/2021

மதுரை வீரன் உண்மை வரலாறு

திருச்சி மாவட்டத்தின் ஒரு பாளையத்தை பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார் அந்த மாவட்டத்தில் சின்னான் மற்றும் செல்லி என்ற அருந்ததிய தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த மகன் தான் வீரன் ஆம் தாய் தந்தையர் வைத்த பெயர் வெறும் வீரன் என்பது மட்டும் தான். வீரன் பெயருக்கு ஏற்றார் போல் வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குகிறான். அப்பொழுது பொம்மண்ணன் மகள் பொம்மி பூப்பெய்துகிறாள், கம்பளத்தார் வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே மந்தையில் குடிசையிட்டு அங்கு தங்க செய்கின்றனர். இப்படி வைக்கப்படும் பெண்களை இரவில் காவல் காப்பது அருந்ததியர்களே, அவ்வழக்கத்தின் படி சின்னான் வயதான காரணத்தால் உடல்நிலை ஒத்துழைக்காததாலும் வீரனை காவலுக்கு அனுப்புகிறார். அங்கு வீரனை கண்ட பொம்மியும், பொம்மியை கண்ட வீரனும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர்.

இந்த விசயம் பொம்மண்ணனுக்கு தெரிய வரும்பொழுது வீரனும் பொம்மியும் பாளையத்தை விட்டு வெளியேறுகின்றனர். பொம்மண்ணன் தனது படை வீரர்களுடன் இருவரையும் துரத்துகிறார் அப்பொழுது நடந்த சண்டையில் பொம்மண்ணன் கொல்லப்படுகிறார். அதன் பிறகு பொம்மியை அழைத்துக் கொண்டு திருச்சி செல்கிறார் திருச்சியில் அப்பொழுது விஜய ரங்க நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். அவரது படையில் வீரனாக இணைந்து தனது திறமையினால் பல பதவிகளை பிடித்து வருகிறார். இதே காலத்தில் தான் திருமலை நாயக்கர் (1623- 1659) மதுரையில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு நடக்கும் திருட்டு வழிப்பறி போன்றவைகளை அடக்க ஒரு நல்ல தளபதி வேண்டும் என்று விஜய ரங்க நாயக்கரிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையை ஏற்று விஜய ரங்கரும் வீரனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்.

பொம்மியுடன் மதுரைக்கு வந்த வீரன் தனக்கு ஒதுக்கப்பட்ட வீரர்களுடன் இணைந்து மதுரையை சுற்றி நடந்த திருட்டு வழிப்பறி கும்பல்களை அடக்குகிறார். இதைக் கண்டு மகிழ்ந்த திருமலை நாயக்கர் மதுரைவீரன் என்று பட்டம் அளித்ததாக சொல்கின்றனர். இந்த வேளையில் தான் திருமலை நாயக்கரின் 200 காமகிளத்திகளில் ஒருவரான வெள்ளையம்மாவை சந்திக்கிறார். இது அரசனின் காதுகளை சென்றடைகிறது அவர் மதுரை வீரனை மாறு கால் மாறு கை வாங்க உத்தரவிடுகிறார். கை கால் வெட்டப்பட்ட மதுரைவீரன் உயிரும் பிரிகிறது இதைக் கேளிவிப்பட்டு வந்த பொம்மியும் வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறுகின்றனர். இது தான் மதுரை வீரன் வரலாறு. இது மதுரை வீரன் குறித்த நாட்டுப்புற பாடல்களில் மட்டும் தொகுக்கப்பட்ட வரலாறு

#மதுரை #வீரன் #மதுரைவீரன்

14/04/2021

பழனி முருகன் ராஜ அலங்கார தரிசனம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல்

#முருகன் #பழனி

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bakthiyugam - பக்தியுகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category