24/12/2025
கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையால் இன்றைய நாளில் நடைபெற்ற ஊழியங்களில் கர்த்தர் ஆசிர்வதித்தார் காலை பரிசுத்த ஆராதனையிலும் மாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா கூடுகையிலும் கர்த்தர் அநேக ஜனங்களை கொண்டு வந்தார் அனேகர் விடுதலை பெற்றுக் கொண்டார்கள் கர்த்தருடைய நாமம் இந்த நாளில் மகிமைப்பட்டதற்காக ஸ்தோத்திரம் புதிய ஆத்மாக்கள் சந்திப்பதற்கு தேவன் கிருபை பாராட்டினார் இந்தக் கூட்டத்தின் வாயிலாக புதிய ஆத்துமாக்களை சந்தித்து அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் தேவன் உதவி செய்தார் தொடர்ந்து நம்முடைய ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்படும்படியாகவும் வருகிற நாட்களில் நடக்கிற எல்லா ஊழியர்களும் கர்த்தர் கிரியை செய்யும் படியாகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் கர்த்தர் தாமே நம் யாவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்