19/05/2022
திரு ஜோதி மெய்ஞான சிதம்பரம்,
மெய் குருமார்கள் காட்டிக்கொடுத்த மரணமில்லா பெருவாழ்வு, சாகா கல்வியானது திரு ஜோதி மெய் ஞான சபையிலே ஆத்ம ஜோதி களுக்கு காட்டிக் கொடுக்கப்படுகிறது.
ஞான சித்த உலகத்தை அரங்கேற்றம் செய்வதற்கான நாள் வந்தமையால் அதற்கு உண்டான கொடியேற்றமும் நடைபெறுகிறது.
கோரக்கர் சித்தர் குருநாதர் 2222 இல் ஞான சித்த உலகம் தொடங்கும் அப்பொழுது இந்த உலகம் தர்மத்தோடு நிலைகொள்ளும் என்று சந்திரரேகையில் குறிப்பிட்டிருந்தார். அதன்பொருட்டு
அருட்பெரும்ஜோதி ராமலிங்க ஞானவள்ளல் தந்தை அவர்களும் ஞான சித்தர் உலகம் தொடங்கிவிட்டது என்று கூறியிருந்தார். அவரும் ஞான கொடியை ஏற்றி வடலூரில் கருங்குழி என்னும் இடத்திலே ஞானத்தை அரங்கேற்றம் செய்து இந்த உலகெங்கும் ஒளி பெறச் செய்தார். மீண்டும் ஆதி பரம்பொருள்
ஆதிபெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையிலே, தயவொளியிலே, பச்சை மரத்திலே ஞான கொடியேற்றம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது.
இதுவரை 18 கலியுகங்கள் நடந்துள்ளது. இது பதினெட்டாவது கலியுகம். இது பிரளய காலம் என்னும் பொருள் படும் . உலகம் அழிவதற்கு அதாவது இந்த பூமியில் இருக்கக்கூடிய அனைத்து நிலைகளும் அழிவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது
என்பதால் இந்த அண்டங்களை காத்து நிற்கும் குருமார்களின் திருவடி இவ்விடத்திலிருந்து ஒளி பெற்றுக்கொண்டு, இந்த பிரபஞ்சத்தை காத்து ரட்சிக்க
ஆதி பரம்பொருளின் ,
ஆதி பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி இன் ஞான ஒளியில், இனி உத்தம ஆத்ம ஜோதி களை ஒளி பெறச் செய்து
இயற்கையை பாதுகாத்து, உயிரினங்களை பாதுகாத்து, மனிதகுலம் நல்வாழ்வு பெறுவதற்கும், மனிதகுலம் இன்புற்று வாழ தேவையான சகல ஐஸ்வரியங்களையும் ,சகல நன்மைகளையும் வழிகாட்டி ,இறவா பிறவாநிலை அதாவது
மரணமில்லா பெருவாழ்வு நிலை அடையும் வழிகாட்டி, இந்த திரு ஜோதி மெய் ஞான சிதம்பர கொடியேற்றம், அரங்கேற்றம் நடைபெற உள்ளது.
பக்தர்களும், ஞான ஒளி தேடும் ஆத்மஜோதி களும் வந்து இதில் கலந்துகொண்டு பேரொளி பெறுவீர்கள்,
, ஞானம் அடைவீர்கள்.
மே 21 சனிக்கிழமை
10 மணிக்கு
6383010626 ,6385313892,