Bethel Good news Mission

Bethel Good news Mission We are a community of God's people full of grace and holiness who gather together to glorify God. Many have been delivered of witchcraft demon possession.

Azariah Samuel, pastor of this assembly left his job in Saudi Arabia, in obedience to the call of God which was so compelling. He was born to godly parents who brought him up in the fear and knowledge of God. He grew up with a burning passion to reach people with the gospel, he was careful not to miss an opportunity in sharing the love of Jesus with individuals he met. He was well equipped for min

istry in prayer and faith through many years of walking with God, sitting under the ministry of many God's servants; he boldly stepped into full-time ministry in Erode in the year 2000 fully trusting the Lord. It is a place where Christian population is small and forms the minority group. The evangelistic work with a zeal and burden for souls with a dedication and commitment is lacking. This place needs the anguished prayers of many as thousands are perishing without the knowledge of the Savior and salvation. The name of the church "BETHEL GOOD NEWS MISSION” was given to him by the Lord himself in answer to his prayer. Particularly this ministry was started with the ambition of preaching the Gospel to the Muslims. He had been visiting unreached peoples and by the mercies of God preaching the Gospel to the poor villagers and bringing them in to salvation. We are a community of God's people full of grace and holiness who gather together to glorify God, striving to grow deeper in love with God and people, existing to impact the world with the word of God, miracles, signs and wonders through the power of the Holy Spirit.

11/12/2025

நிசேயா விசுவாச அறிக்கை:
வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமாகிய எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற, சர்வவல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். இவர் சகல உலகங்களுக்கும் உண்டாவதற்கு முன்னே பிதாவினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர். ஜோதியில் ஜோதியானவர். மெய் தேவனில் மெய் தேவனானவர்; உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவோடு ஒரே தன்மையுடையவர்; இவர் மூலமாய் சகலமும் உண்டாயின. நமக்காகவும், நம்முடைய இரட்சிப்புக்காகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார். நமக்காக பொந்தியுபிலாத்தின் காலத்தில் சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார். வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார், பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஜீவனுள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்பவும் வருவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவே இராது. கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடதொழுது ஸ்தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பேசினவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன்; இவர் பிதாவினிடத்திலிருந்தும், குமாரனிடத்திலிருந்தும் புறப்படுகிறவர்; ஒரே பரிசுத்த அப்போஸ்தல சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்பிற்காக ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோரின் உயிர்த்தெழுதலையும், வரப்போகும் உலகத்தின் ஜீவனையும் நோக்கியிருக்கிறேன். ஆமென்.

09/05/2025
Prayer for All People  1 First of all, then, I urge that requests, prayers, intercessions, and thanks be offered on beha...
14/08/2024

Prayer for All People
1 First of all, then, I urge that requests, prayers, intercessions, and thanks be offered on behalf of all people,
That it is meet to pray and give thanks for all men, and the reason why
1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
2 even for kings and all who are in authority, that we may lead a peaceful and quiet life in all godliness and dignity.
2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3 Such prayer for all is good and welcomed before God our Savior,
3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
4 since he wants all people to be saved and to come to a knowledge of the truth.
4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
5 For there is one God and one intermediary between God and humanity, Christ Jesus, himself human,
5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6 who gave himself as a ransom for all, revealing God’s purpose at his appointed time.
6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

04/06/2024

கிருபையே
போதகராக இருக்கிறது. தீத்து 2:11-13

05/03/2024

திருமதி இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களுக்கு,
அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொலி என் கவனத்துக்கு வந்தது. இந்தக் குறிப்பிட்டக் காணொலி கிறிஸ்தவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அது நேர்மறையான காரணத்துக்காக அல்ல; ஏளனத்துக்கும் நகைப்புக்கும்.
இந்தக் கேலியும் கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு.
உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும். புகழிலும், பேரிலும் மட்டுமல்ல; பணத்திலும், சொத்திலும்தான். பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு நீங்கள் அதிபதி என்பது ஊரறிந்த ரகசியம். உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை அத்தனை பேரும் எப்படிப் படாடோபமான செல்வச் செழிப்பில் திளைக்கிறவர் என்பது மறைக்கவே இயலாத உண்மை. உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு!
உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பெரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்; வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தச் செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்துவைத்தீர்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவைப் போன்ற பல தகவல்களை மேல் மட்டக் கிறிஸ்தவர் அறிவர்.
இந்தச் சூழலில் நீங்கள் "எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஓட்டலில் தங்கியிருந்தோம்" என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகஸம் செய்திருக்கிறீர்கள்!
ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய் கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவருக்கு எவ்வளவு பண வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்குத் தோணலையா?
இவ்வளவு அப்பட்டமாகப் பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்றுகூட உங்களால் சிந்திக்க முடியலையா?
எதற்காக தேவையற்ற இந்தப் பொய் நாடகம்? அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து? வேதத்திலுள்ள நல்ல செய்திகளை மட்டும் நீங்கள் பேசினால் போதும்; உங்களுடைய பொய்சாட்சிகள் வேண்டாம்!
வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்கக் கேட்கக் கொதிக்கிறது என்று பல கிறிஸ்தவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.
உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிடக் காத்திருக்கின்றனர் பலர். அது கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காக்கின்றனர்.
கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. நற்செய்தியைப் பரப்பவேண்டிய பொறுப்பிலுள்ள நீங்கள் ஏன் இப்படிப் பொய்ச்செய்தியைப் பரப்பி பணம் பறிக்க முயல்கிறீகள்?
மூத்த தினகரன் ஐயா தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள்.
இருக்கிற பணம் போதும். இதற்கு மேலும் ஏன் இப்படி வெறிபிடித்து அலைகிறீர்கள்? மக்களின் சாபத்துக்குக் கூட நீங்கள் தப்பித்து விடலாம். ஆண்டவரின் சினத்துக்கு ஆளாகிவிடாமல் கொஞ்சம் திருந்திச் செயல்படப் பாருங்கள்.
பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை!
James Vasanthan

31/10/2022

🎀 கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிராக
சீர்திருத்த கிறிஸ்தவ முன்னோடி மார்ட்டின் புத்தர் 95 சட்டங்களை 31.10.2022 அன்று நள்ளிரவு விட்டன்பர்க் தேவாலய முன்கதவில் வைத்தார் என்பதுஅனைவருக்கும் தெரியும்
ஆனால் அவை என்னவென்று தெரியாத நிலையில் அநேகன் உள்ளனர்.
இதோ அவர்களுக்காக..🎀
1️⃣.மனிதன் தினமும் செய்யும் பாவத்திற்கு தேவன் அனுதினமும் மனஸ்தாப படுகிறார்.
2️⃣.பாதிரியார்கள் பாவமன்னிப்பு அளிக்க அனுமதி இல்லை.
3️⃣.பாவமன்னிப்பு உடலை வருத்திக் கொள்வதால் பெறமுடியாது.
4️⃣.உள்ளான மனம் வருந்துதல் நம்முடைய வெளிப்படையான மாறுதலுக்கு வழி வகுக்கும்.
5️⃣.போப்பானவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இல்லை.
6️⃣.தேவன் மன்னித்தால் ஒழிய போப்பானவருக்கு மன்னிக்க அதிகாரம் இல்லை. தேவ மன்னிப்பை பற்றி அறிவிக்கவே அதிகாரம் உண்டு.
7️⃣.தன்னை தாழ்த்தி மனம் திருந்தாதவனுக்கு தேவன் பாவ மன்னிப்பை அருளுவதில்லை.
8️⃣.மரித்தவர்களுக்கு தேவ வெளிபடுத்துதல் (வேதம்) எவ்வித பயனும் இருக்காது.
9️⃣.போப் மரணம்,ஆபத்து என்று யாருக்கு தீர்ப்பளித்தாலும் தேவன் நம்மீது அன்புள்ளவராகவே இருக்கிறார்.
1️⃣0️⃣. #அறியாமையினாலே குருமார்கள் உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு கூறுகின்றனர்.
1️⃣1️⃣.உத்தரிப்பு ஸ்தலம் என்பது திருச்சபைக்கும்
அதன் சட்டத்திற்கும் எதிராக விதைக்கபட்டது.
1️⃣2️⃣.மெய் மனம்திரும்புதலை கண்டறியவே தேவன் தண்டனைகளை அனுமதித்தார்.
1️⃣3️⃣.சபை மரித்தவர்கள் என்று தீர்ப்பு கூறினாலும் அவர்கள் மரணத்தின் வாயிலாக எல்லா தீர்ப்பு களிலிருந்து விடுதலை ஆவார்கள்.
1️⃣4️⃣.தேவபக்தி அற்று வாழ்ந்தால் உடல் நலம் குறையும்போது பயம் மேலோங்குகிறது.
1️⃣5️⃣.அந்த பயமே உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று நமக்கு போதிக்கிறது வேறொன்று மில்லை.
1️⃣6️⃣.பாவமன்னிப்பின் நிச்சயம் இல்லாததால் தான் நமக்கு நரகம்,உத்தரிப்பு ஸ்தலம்,மோட்சம் என்பதை குறித்து பயம் உண்டாக்கிறது.
1️⃣7️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் ஆன்மாக்களின் துன்பங்கள் குறையும் என்பது பொய்யே.
1️⃣8️⃣.உத்தரிப்பு ஸ்தலம் என்பது வேதவசனத்தால் நிரூபிக்கபடவில்லை.
1️⃣9️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் ஒரு ஆன்மா வாழும்பட்சத்தில் நம்மை (இரட்சிக்கபட்டவர்கள்)
போல் முழு இரட்சிப்பின் நிச்சயம் அவர்கள் அடைந்ததாக நிரூபிக்கபடவில்லை.
2️⃣0️⃣.பரிபூரண மன்னிப்பு என்னும் போப்பின் வார்த்தை செல்லுபடி ஆகாது.
2️⃣1️⃣.பாவமன்னிப்பு சீட்டு என்பது ஒரு மனிதனையும் இரட்சிக்காது.மன்னிக்காது.
2️⃣2️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள மரித்த ஆத்துமாக்கள் போப்பாண்டவராலோ அவரது பூசையாலோ பாதர்களின் பூசையாலோ மன்னிக்கபட்டு நித்திய வாழ்வை அடை வதில்லை.அவர்கள் இந்த பூமியில் வாழும்போது பாவ மன்னிப்பு பெறவேண்டும்.
2️⃣3️⃣.பூரணமாக்கபட்ட(மனம்திறும்பிய)பரிசுத்தவான்களுக்கு பாவமன்னிப்பு அளிக்க நமக்கு அதிகாரம் உண்டு என்று கூறுவது.
2️⃣4️⃣.இப்படிபட்ட பொய் பாவமன்னிப்பால் அனேகர் ஏமாற்றபடுகிறார்கள்.
2️⃣5️⃣.போப்பாண்டவருக்கு உத்தரிப்பு ஸ்தலம் மீது எந்த அதிகாரமும் இல்லை.
2️⃣6️⃣.நல்லெண்ணத்தின் அடிபடையில் போப்பாண்டவர் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்களுக்காக வேண்டுதல் ஏறெடுக்கிறார். ஆனால் அந்த வேண்டுதலை கடவுள் கேட்பதில்லை.
2️⃣7️⃣.காணிக்கை பெட்டியில் பணம் விழுகிற சத்தத்தின் அடிப்படையில் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்கள் விண்ணகம் செல்வதில்லை
2️⃣8️⃣. #காணிக்கை பொருளாசையை பெருக வைக்கும்,பாவமன்னிப்பு தேவனால் அருளப்பட வேண்டும்.
2️⃣9️⃣.புனித செவரினு,புனித பாஸ்கல் உத்தரிப்பு ஸ்தலத்தில் நீண்ட காலமாக இருக்க விரும்பினார்களா ? விலை கொடுத்து விண்ணேர.அவர்கள் விரும்பினார்கள் என்பது தவறு.
3️⃣0️⃣.மனஸ்தாபம் என்பது உண்மையாது என்று எவராலும் நிச்சயமாக கூற இயலாது முழு பாவமன்னிப்பு மனஸ்தாபம் அளித்ததாக கூறவும் இயலாது.
3️⃣1️⃣.பாவமன்னிப்பு பத்திரத்தை புரிந்து கொண்டு வாங்குகிறவனை அறிவது அறிது,உண்மையான மனஸ்தாப படுகிறவனை காண்பது அறிது.
3️⃣2️⃣.இப்படிபட்ட உறுதி அளிப்பவர்கள் (மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம்)ஆக்கினைக்கே உள்ளாவார்கள்.
3️⃣3️⃣.இப்போதனைகளை(மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் )போதிக்கின்றவர்களை குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.
3️⃣4️⃣. மன்னிப்பு சீட்டு, சாத்திர மெந்துகள், பிரயா சித்தங்கள் இவை அனைத்தும் மனித ஏற்பாடுகளே.
3️⃣5️⃣. மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் என்று போதிக்கிறவர்கள் மாறுபட்ட கிறிஸ்தவர்கள்.
3️⃣6️⃣.மெய் மனஸ்தாபம் உடைய எந்த கிருஸ்தவனும் இவை (பாவமன்னிப்பு சீட்டு) இல்லாமல் பூரண மன்னிப்பை கிறிஸ்துவினால் பெற்றிட உரிமை உண்டு.
3️⃣7️⃣.இயேசுவின் மீட்பால் மட்டுமே இறந்தவர்களும் உயிரோடு உள்ளவர்களும் பாவமன்னிப்பு சீட்டு இல்லாமலே எல்லா இறையருள் பாக்கியங்கள் பெற முடியும்.
3️⃣8️⃣. இந்த உண்மையை கூறுவதால் போப்பானவர் கூறும் பாவ மன்னிப்பை கேவலப் படுத்த அல்ல. அதை விட தேவவார்த்தை முக்கியம் அல்லவா.
3️⃣9️⃣. மன்னிப்பு பத்திரங்களின் மகத்துவத்தை மெய் மனஸ் தாபத்தின் அவசியத்தையும் எந்த பண்டிதர்களாலும் (ஒரே நேரத்தில்) விளக்க முடியாது.
4️⃣0️⃣. மெய் மனஸ்தாபம் பாவத்தின் தண்டனையில் இருந்த நம்மை காப்பாற்றவும் அப் பாவத்தை வெறுக்கவும் வழிவகை செய்கிறது.
4️⃣1️⃣. மன்னிப்பு சீட்டை எதிர்க்க நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காரணம்.ஏனெனில் நற்செயல்கள் மூலம் விண் பாக்கியம் பெற முடியும் என்கிற தவறை அவர்கள் செய்திட நேரிடும்.
4️⃣2️⃣. மன்னிப்பு சீட்டு ஒருபோதும் அறசெயலுக்கு நிகராகாது நாம் மக்களுக்கு போதிக்க வேண்டும்.
4️⃣3️⃣. பக்குவமாக ஏழைகளுக்கு இறங்குவதும் தேவை பட்டவர் களுக்கு கடன் தந்து உதவுவதும் ஏற்று செயல்கள் எனவும் பணம் கொடுத்து பாவ மன்னிப்பு சீட்டு வாங்குவது தவறு என்று புரிய வைக்க வேண்டும்.
4️⃣4️⃣. பாவ மன்னிப்பு சீட்டு அடிப்படையில் எவரும் சிறப்படைவதில்லை.மாறாக அன்பின் அடிப்படையிலேயே சிறப்படைகின்றனர்.
4️⃣5️⃣. இக் கட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்யாமல் பாவமன்னிப்பு சீட்டுக்கு பணம் செலுத்து கிறவர்கள் மேல் தேவ கோபம் வரும் என நம் விசுவாசிகளுக்கு போதிக்க வேண்டும்.
4️⃣6️⃣. பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்ப நலனுக்காக சேமிக்க வேண்டுமே ஒழிய பாவமன்னிப்பு சீட்டுக்காக செலவழிக்க கூடாது என உபதேசிக்க வேண்டும்.
4️⃣7️⃣. பாவமன்னிப்பு சீட்டு வாங்குவது அவரவர் விருப்பம் அதை வாங்க யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.
4️⃣8️⃣. போப்பானவர் மக்களின் பணத்தை அல்ல அவர்களின் மெய்யான மனந் திரும்பு தலையே விரும்பவேண்டும்.
4️⃣9️⃣. பாவமன்னிப்பு சீட்டின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிக நன்மை அடைவார்கள். பாவமன்னிப்பு சீட்டை நிராகரித்து கடவுள் பயம் அற்றவர்கள் அதிக மோசத்திற்கு ஆளாவார்கள் என்று போதிக்கவேண்டும்.
5️⃣0️⃣. இபபத்திர முறை கேடுகளை போப்பரசர் அறிய நேர்ந்தால் பேதுரு ஆலயம் எரிந்து சாம்பலாகட்டும் என்பாரே அன்றி வேறு எந்த வகையிலும் ஆலயத்தை கட்ட முன்வரமாட்டார் என்று போதிக்க வேண்டும்.
5️⃣1️⃣.புனித பேதுருவின் ஆலயத்தை விற்றாவது அந்த மக்களுக்கு பணம் தந்து அவர்கள் சுறண்டபடுவதை தடுப்பது போப்பரசரின் கடமை என்று மக்கள் அறிய வேண்டும்.
5️⃣2️⃣.போப் அரசரோ அல்லது அவரது பிரதிநிதிகளே உத்தரவாதம் தந்தாலும் பாவமன்னிப்பு சீட்டு இரட்சிப்பு தறாது என்று போதிக்க வேண்டும்.
5️⃣3️⃣. பாவச் சீட்டை முன்நிறுத்தி பிரசங்கத்தை தடை செய்பவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரிகள்.
5️⃣4️⃣.பிரசங்கம் முக்கியமானது. அந்த நேரத்தை பாவமன்னிப்பு பத்திரத்தை பற்றி போதிக்க கூடாது.அப்படி செய்தால் ஆண்டவருடைய வார்த்தையை அவமதிப்பதுபோல ஆகும்.
5️⃣5️⃣.ஒருமுறை மணியடித்தால் ஒரு ஊர்வலம் ஒரு ஆராதனை என பாவமன்னிப்புக்காக செய்யபடும் பிரயாசங்கள் ஒழிந்து நூறுமுறை சுவிஷேசம் ஆராதனை என்னும் மணியோசை முழங்குவதை நாம் பிரபலபடுத்தவேண்டும் இதுவே போப் அரசரின் கருத்தாக இருக்க வேண்டும்.
5️⃣6️⃣.போப் அரசர் தானகவே பாவமன்னிப்பு தருகிறார் என்று மக்கள் புரிந்து கொள்ள வில்லை.
5️⃣7️⃣.பாவமன்னிப்பு பத்திர விற்பனையாளர்கள் விற்று தங்களுடைய பண வருவாயை பெருக்கிகொண்டுள்ளார்கள்.
5️⃣8️⃣.மன்னிப்பு சீட்டு எந்த பலனையும் அளிப்பதில்லை. இயேசுவின் சிலுவை மரணம் உயிர்தெழுதல் மனிதனுக்கு பாவமன்னிப்பை தருகிறது.
5️⃣9️⃣.புனித லாரன்ஸ் என்பவர் அக்கால கருத்துக்கு இசைய திருச்சபையின் ஏழைகளே திருச்சபையின் செல்வங்கள் என மொழிந்தார்.
6️⃣0️⃣.கிறிஸ்துவால் அருளபட்ட திறவுகோல் திருச்சபையின் செல்வம் என்று அதிகார பூர்வமாக சந்தேகமின்றி துணிந்து கூறுகிறோம்.
6️⃣1️⃣.போப் அரசரால் தீர்ப்பிடபட்ட ஆக்கிணைகளை மன்னிதிட அன்னாரின் அதிகாரமே போதுமானது.
6️⃣2️⃣.கடவுளின் மகிமை, கடவுளின் கிருபை ஆகிய வற்றிலான அதி பரிசுத்த சுவிஷேசமே மெய் செல்வம் ஆகும்.
6️⃣3️⃣.எனினும் இச்செல்வம் மனிதனின் இயல்புபடி வெறுக்கபடுகிறது.
6️⃣4️⃣.ஆனால் இச்செல்வங் களுக்கு மாறாக மன்னிப்பு பத்திரங்கள் முதல் நிலைக்கு மாற்றபட்டுள்ளது.
6️⃣5️⃣.எனவே சுவிஷேசமாகிய செல்வத்தை வலையாக பயன்படுத்தி முற்காலத்தில் செல்வந்தர்களை பிடித்தனர்.
6️⃣6️⃣.தற்போது மன்னிப்பு பத்திரத்தின் வலையால் மக்களின் செல்வத்தை வாரி கொள்கிறார்கள்.
6️⃣7️⃣.மன்னிப்பு பத்திரங்களை யெல்லாம் மகா உன்னத கிருபை என்று குதர்க்கவாதிகள் உளறுகிறார்கள்.
6️⃣8️⃣.ஆயினும் அவற்றை கடவுளின் கிருபையோடும் சிலுவையின் பக்தியோடு ஒப்பிடுகையில் அவை மிகமிக மலிவான கிருபையே ஆகும்.
6️⃣9️⃣.மன்னிப்பு பத்திர பிரச்சாரம் செய்பவர்களை வரவேற்க அத்தி யட்சர்களும்,குருக்களுக்கும் கடமை உள்ளதுதான்
7️⃣0️⃣.ஆயினும் இப்படி பிரசங்கம் பண்ண வருகிறவர்கள் தங்களுடைய சுயகதைகளை எண்ணங்களை பிரசங்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
7️⃣1️⃣.பாவமன்னிப்பு பத்திரத்தின் எதார்த்தத்தின் உண்மை தன்மைக்கு மாறாக வசனிப்பவர்கள் புறம் பார்க்கப் படனும் சபிக்கபட்டவனுமாவான்
7️⃣2️⃣.இப்படி பிரசங்கிப்பவர்கள் கொண்டுள்ள வரம்புக்கு மீறிய அதிகாரம் மற்றும் அவர்களின் பொருளாசை ஆகியவற்றை எதிர்த்து நிற்பவன் ஆசீவதிக்கபட்டவன்.
7️⃣3️⃣.பாவமன்னிப்பு பத்திர வியாபாரம் பாதிப்படையும்படி சூழ்ச்சி செய்கிறார்கள் என்று கூறி அத்தகையோருக்கு எதிராக போப் அரசர் முழங்குகிறார்.
7️⃣4️⃣.ஆனால் தூய இறையன்பு வாய்மை ஆகியவை பாதிப்பு உள்ளாகும் என்பவற்களுக்கு எதிராகத்தான் போப் அரசர் இடியென முழங்கவேண்டும்.
7️⃣5️⃣.ஆண்டவரின் தாயாருக்கு அவபெயர் வரும்வகையில் நிந்தனை செய்வது பெரும் குற்றம் அதை மன்னிக்கும் ஆற்றல் மன்னிப்பு பத்திரத்திற்கு உண்டு என்று என்னுவது பைத்திய காரதனமானது.
7️⃣6️⃣.சுலபமாக நம் பாவங்களை மன்னிப்பு பத்திரம் மன்னித் திடாது என்பது தான் உண்மை.
7️⃣7️⃣.தற்போதைய போப் அரசராக பேதுரு பதவி வகுத்தாலும் பெரிதான கிருபைகளை அவரால் அருள முடியாது என கூறுவது பேதுருக்கும் போப் அரசருக்கு எதிரான நிபந்தனையாகும்.
7️⃣8️⃣.1கொரிந்தியர் 12:28ன்படி பெரிதான ஈவுகளுக்காக சுவிஷேசம் ஆன்மீக ஆற்றல் மற்றும் குணபடுத்தும் வரங்கள் ஆகியவை போப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை தான்.
7️⃣9️⃣.போப்பரசரின் இலட்சினையிள் பொரிக்கபட்டுள்ள சிலுவை சின்னம் கிறிஸ்துவின் சிலுவை சின்னம் ஒப்பு உம்மை யுடையதே என்று சொல்வது #தெய்வ_நிந்தனையாகும்.
8️⃣0️⃣.இத்தகைய நிந்தனைகள் மக்கள் மத்தியில் பரப்பும் அத்தி யட்சர்கள் குருமார்கள் வேத விற்பனர்கள் தேவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்.
8️⃣1️⃣.தான்தோன்றிதனமான மன்னிப்பு பிரச்சார பத்திரத்தின் விளைவாக போப்பின் மீதுள்ள மதிப்பும் மரியாதைம் குறைந்து போகிறது.
8️⃣2️⃣.உதாரணமாக ஆலயத்தை கட்டும் பணிக் கென பெறப்பட்டு பணத்தால் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆன் மாக்களை போப்பரசரால் வெளியே கொண்டுவர கூடு மானால் எல்லா ஆன் மாக்களையும் ஏன் வெளியே கொண்டுவர இயலாது.
8️⃣3️⃣.மீட்கபட்டவர் களுக்காக ஜெபம் தேவையில்லை என்றால்,அது தவறு என்றால் இறந்த வருக்காக சடங்குகள் ஆண்டு இறுதி நினைவு கூறல் பூசைகள் ஏன் நிரூபிக்க படவில்லை.
8️⃣4️⃣.அவபக்தி உள்ள ஒரு ஆத்துமாவை உத்தரிப்பு ஸ்தலத்தில் பணத்தால் வெளிகொணர முடியுமாகில் நல்ல ஒரு ஆத்துமாவை அன்பின் பெயரால் உத்தரிப்பு ஸ்தலத்தில் நின்று வெளிகொணர கூடாதா?
8️⃣5️⃣.வேதவசனம் இப்போது செயல்படவில்லை என்றார் எப்படி பாவமன்னிப்பு பத்திரம் உயிர்பெற்றதும் செயலாற்றுவதுமாய் இருக்கும்.
8️⃣6️⃣.சீசரைவி பெரும் செல்வந்தரான போப் ஏன் தன் சொந்த பணத்தை செலவிட்டு ஆலயம் கட்டாமல் ஏழை பாமர விசுவாசிகளின் பணத்தை செலவிட்டு ஆலயம் கட்ட முயற்சிக்கிறார்.
8️⃣7️⃣.மெய் மனஸ்தாபத்தால் பூரண மன்னிப்பையும் பெரும் வாழ்வையும் பெற்றிடும் உரிமையாளருக்கு வேறு எதனை கொடுக்க விலைகிறார்.
8️⃣8️⃣.ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே போப் அரசரால் தரப்படுகிற மன்னிப்பும் ஆசிகளும் ஒரே நாளில் நூருமுறை தரப்படுமானால் திருச்சபைக்கு இதைவிட சிறந்த சிலாக்கியம் இருக்கமுடியாது.
8️⃣9️⃣.பண வருவாயை எதிர்பார்க்காமல் ஆத்து மாக்களின் மீட்பை போப் நாடுகிறார் என்றால் எனில் சரிநிகர் திராணி யுள்ளவர் களுக்கு மன்னிப்பு சீட்டைகளை ஏன் நிருத்திவைக்கிறார்.
9️⃣0️⃣.தனி அதிகாரத்தை பயன்படுத்தி திருச்சபைக்கு அடக்குவது கிறிஸ்தவர்களை துக்கபடுத்துவதாகும்.
9️⃣1️⃣.போப்பின் விருப்பமாகவே மன்னிப்பு பத்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே அனைத்தும் சுமூக முடிவுக்கு வரும்.
9️⃣2️⃣.சமாதானம் சமாதானம் எனக் கூறியும் சமாதானம் கொடுக்க முடியாத போலி தீர்க்கதரிகள் ஒழியட்டும்.
9️⃣3️⃣.சிலுவை சிலுவை என்று சொல்லி கிறிஸ்தவர்களின் துன்பம் ஒழிய செய்யும் மெய் தீர்க்கதரிகள் வாழட்டும்.
9️⃣4️⃣.தண்டனை மரணம் நரகம் ஆகியவற்றையே அறிந்து கிறிஸ்துவுக்கு பின் செல்ல நாம் வழிகாட்ட வேண்டும்.
9️⃣5️⃣.பல உபவத்திரவங் களோடே நாம் மோட்சத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமே தவிர போலி உத்திர வாதத்தினால் பிரவேசிக்க முடியாது என நாம் உறுதி கொள்ள வேண்டும்.
ஆண்டவராகிய கடவுளுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

Address

Https://www. Google. Co. In/maps/place/Bethel+Good+news+Mission/@11. 2999833, 77. 687969, 15z/data=, 3m1, 4b1
Erode
638009

Opening Hours

Monday 8am - 10am
Tuesday 8am - 10am
Wednesday 8am - 10am
Thursday 8am - 10am
Friday 8am - 10am
Saturday 8am - 10am
Sunday 7am - 11am

Telephone

+919843120456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bethel Good news Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Bethel Good news Mission:

Share