23/01/2025
நமசிவாய வாழ்க 🔥🌙🙏
குருவே வாழ்க 🌙
குலதெய்வமே வாழ்க 🔥
#மாசி_மகம்..!! 🔥🔥🔥
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் மக நட்சத்திர நாள் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது மிகவும் சிறப்பான நாளாகும். மாசி மக நாளானது கடலாடும் விழா என்றும், தீர்த்தமாடும் விழா என்றும் அழைக்கப்படுகிறது.
' #மகத்தில்_பிறந்தால்_ஜெகத்தை ஆளலாம்' என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை 'மாசி மகம்' என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.
#சிவன், #விஷ்ணு, #முருகனுக்கு உகந்த நாள் :🌙
மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.
உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாள் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்று தான்.
இந்நாள் முருகப்பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம் தான்.
சிவபெருமான் வருணனிற்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசி மகம்.
பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது.
எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசி மகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வதும் நன்மை தரும்.
#குலதெய்வ_வழிபாடு :🌙🙏🔥
மாசி மகத்தன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம் குலத்தைக் காக்கும், வாழ்வாங்கு வாழ வைக்கும், வம்சம் வாழையடி வாழையென தழைத்து வளரும்.
மாசி மாதம் மகம் நட்சத்திரம் மற்றும் நிறைந்த பௌர்ணமி நாளில் இல்லத்தை சுத்தமாக்கி விளக்கேற்றி, மாவிளக்கிட்டு படையலிட்டு குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
மேலும் அருகில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று சிவனையும், பெருமாளையும் மனதார வழிபட்டால் பிறவிப்பயனை அடையலாம். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் தீயசக்திகள் அண்டாமல் குலதெய்வம் நம்மைக் காத்தருளும்.
இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல தோஷங்களும் நீங்கும்.
#பித்ரு_தோஷம்_நீங்கும் :🔥
பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.
இந்த தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசி மகம். அன்றைய தினம் கும்பகோணம் மகா மக குளத்தில் பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
#மாசி_மக_விரதம் :
மாசி மகத்தன்று விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
நீராடிய பின்னர் விரதம் இருந்து சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை உணவு சாப்பிட்டும் விரதத்தை கடைபிடிக்கலாம்.
மாசி மகத்தில் புனித நீராட முடியாதவர்களும், கோயிலுக்கு செல்ல முடியாதவர்களும் மாசி மக புராணத்தை படிக்கவோ அல்லது கேட்கவோ செய்யலாம்.
அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகள் செய்தாலும் இறைவனை மனதில் நினைத்து ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும்.
#மாசி_மகத்தில்_நீராடுதல் :
மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு என எந்த நீர்நிலைகளாக இருந்தாலும் அதில் புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக ஐதீகம் உள்ளது.
அது மட்டுமின்றி மாசி மகத்தன்று புனித நீராடினால், ஏழு ஜென்ம பாவங்களையும் அடியோடு போக்கும் என்பது ஐதீகம்.
#பலன்கள் : 🔥🙏🌙
மாசி மகத்தன்று குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மாசி மக நாளில் புனித நீராடி இறைவனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.
உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் மாசி மக நாளில் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
மாசி மாதத்தில் பெண்கள் புது மாங்கல்ய சரடு கட்டிக் கொள்வது மிகவும் சிறப்பானது. 🙏🔥🌙🪷❤️