Shirdi Sai Baba Temple குருசாமி

Shirdi Sai Baba Temple குருசாமி Shirdi Sai Baba Temple

இறைவன் சாய்பாபா நாடினால் அன்னதானம் தொடர்ந்து நடைபெறும் ஒரு ரூபாய் ₹ 1 நன்கொடை கொடுத்து நீங்களும் அன்னதானத்தில் பங்கு பெறலாம் திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் .திருமூலர்.

29/04/2026

We support

*ஸ்ரீ வாராஹி மாலை பாடலை கீழே பதிவுசெய்துள்ளோம் அனைவரும் அன்னை வாராஹியை வழிபட்டு வாழ்வில்வெற்றிகளும்,வசந்தங்களும் ,வளங்கள...
27/04/2026

*ஸ்ரீ வாராஹி மாலை பாடலை கீழே பதிவுசெய்துள்ளோம் அனைவரும் அன்னை வாராஹியை வழிபட்டு
வாழ்வில்வெற்றிகளும்,வசந்தங்களும் ,வளங்களும் பெற்று வாழ வேண்டுமாய் அன்னை வாராஹியை பிரார்த்தித்து பதிவிடுகின்றோம் .நன்றி*

”Sri Varahi Malai -
ஸ்ரீ வாராஹி மாலை”

பாடியவர் - வீரமணிகண்ணன்

👇👇👇

🌺1. வசீகரணம்

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்க குரு மணி நீலம்
கை கோமேதகம் நகம் கூர்வயிரம்த
திருநகை முத்துக் கனிவாய் பவளம்
சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும்
பச்சை மாணிக்கமே

🌺2. காட்சி

தோராத வட்டம் முக்கோணம்
ஷட்கோணம் துலங்குவட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட்டது
நடுவே ஆராதனை செய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

🌺3. பகை தடுப்பு

மெய்ச்சிறத்தாற்பணியார் மனம்
காயம் மிகவெகுண்டு கைக்சிரத்
தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி
வாய்கடித்து பச்சிரத்தம் குடிப்பாளே
வாராஹி பகைஞரையே

🌺4. மயக்கு (தண்டினி தியானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி
அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு
பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை
இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா
லுலகம் நடுங்கிடவே.

🌺5. வெற்றி ஈர்ப்பு

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற்
புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும்
குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே
இரத்தத் திலகம் இடும்
தொடும்கார் மனோன்மணி
வாராஹிநீலி தொழில் இதுவே.

🌺6. உச்சாடணம் (ரோகஹரம்)

வேய்க்குலம் அன்னதிண்தோளாள்
வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு
செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு
போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவப் கொடுப்பாள்
வாராஹி என் நாரணியே.

🌺7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

நாசப் படுவர் நடுங்கப்படுவர்
நமன் கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்
இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்
என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள்
வாராஹியை வாழ்த்திலரே

🌺8. பெருவச்யம் ( திரிகால ஞானம்)

வாலை புவனை திரிபுரை
மூன்றும் இவ் வைகயத்திற்
காலையும் மாலையும் உச்சியும்
ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன்
பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.

🌺9. பகை முடிப்பு

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் வானவர்க்காச் சிரித்துப் புரம் எரித்தோன்
வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹி என்
பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி
காணும் பகைத்தவர்க்கே

🌺10. வாக்கு வெற்றி

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர்
நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ?
நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ?
அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை
யாளர்தெரு எங்குமே.

🌺11. தேவி வருகை

எங்கும் எரியக் கிரிகள்
பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண்
கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் தவறிடச்
சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள்
வாராஹி சிவசக்தியே.

🌺12. ஆத்ம பூஜை

சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன்
சத்துருவைக் குத்தி இரணக் குடரைப்
பிடுங்கிக் குலாவிநின்றே இத்திசை
எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே

🌺13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக்
கின்றவன் நிர்க்குணத்தி நஞ்சணி
கண்டத்தி நாரா யணிதனை
நம்புதற்கு வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

🌺14. மந்திரபூஜை

மதுமாமிஸம்தனைத் தின்பாள்
இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார்
அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம்
கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள்
வாராஹி என் மெய்த் தெய்வமே.

🌺15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)

ஐயும் கிலியும் எனத்தொண்டர்
போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற
விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும்
சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள்
வாராஹி மலர்க்கொடியே

🌺16. வரம் பொழிதல்

தாளும் மனமும் தலையும்
குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய்:
உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள்
வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும்
ஏந்தி வரும் துணையே !

🌺17. வாழ்த்துதல்

வருந்துணை என்று வாராஹி
என்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப்
பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம்
பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர்
உடல் வேறுபட்டே.

🌺18. நன்னீர் வழங்கல்

வேறாக்கும் நெஞ்சம் வினையும்
வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம்
ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற்
பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

🌺19. புனித நீர் அருந்துதல்

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர்
பகைஞர்தமை ஒடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம்
எல்லாம் கோடகத் திட்டு வடித்தெடுத்
தூற்றிக் குடிக்கும் எங்கள் ஆடகக்
கும்ப இணைக்கொங்கையாள்
எங்கள் அம்பிகையே
🌺20. மலர் வழிபாடு

தாமக் குழலும் குழையும் பொன்
ஒலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு
ஜெகம் அதனில் வாமக் கரள களத்தம்மை
ஆதி வாராஹிவந்து தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

🌺21. தேவி சந்நிதானம் (கர்ம மூலபந்தனம்)

ஆராகிலும் நம்க்கேவினை செய்யின்
அவர் உடலும் கூராகும் வாளுக் கிரை இடுவாள்கொன்றை வேணிஅரன் சீரார்
மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.

🌺22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

தரிப்பாள் கலப்பை என்அம்மை
வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில்
இட்டு பொரிந் ததலை நெரிப்பாள்
தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே.

🌺23. புகழ்சொற்பாமாலை (மௌனாந்த யோகம்)

ஊரா கிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு காரார் கருத்த
உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவிஉண்டே.

🌺24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில்
வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள் ஒரு
மெல்லிதன் பாதம் விரும்புகவே.

🌺25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல் வஞ்சனை பில்லி கொடி
தேவல் சூனியம் வைத்தவரை நெஞ்சம்
பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

🌺26. படைநேமி வாழ்த்து (சித்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால் கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர் நிலைபெற்ற நேமிப்
படையாள் தனைநினை யாதவரே

🌺27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப்
பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் நிந்தனை பண்ணி
மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.

🌺28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும்
தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும்
மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே

🌺29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச்
சிந்தை செய்து நீறிட் டவர்க்கு வினைவரு
மோ? நின் அடியவர்பால் மாறிட் டவர்தமை
வாள் ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி
குலதெய்வமே.

🌺30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான் அரி அயன் போற்றும்
அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையைவெட்டி எரியாய் எரித்து
விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.

🌺31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே
நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்
என் கண்கலக்கம் பார்த்திருப்பாள்
அல்லள் எங்கே என்றங்குச பாசம்
கையில் கோத்திருப்பாள் இவளே
என்னை ஆளும் குலதெய்வமே.

🌺32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல் தவம் ஆரும் மெய்யன்பர்க்
கேஇடர் சூழும் தரியலரை அவமானம்
செய்யக் கணங்களை ஏவும்அகோரி
இங்கு நலமாக வந்தெனைக் காக்கும்
திரிபுர நாயகியே.

****

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது. மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அ...
16/03/2026

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது.

மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை இங்கே படித்துப் பாருங்கள் , கண்ணீர் பெருகும்.

(1) அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

(2) அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

(3) பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

(4) பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

(5) பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

(6) பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

(7) உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஜீவ இம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடே உயர்ந்த வழிபாடாகும்.

(8) எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

(9) சாதுக்களுக்கு, பிச்சைக்காரர்களுக்கு திருவண்ணாமலையில் நாம் அளிக்கும் உணவு கோடி கோடி மடங்கு நம் குலத்துக்கு புண்ணியமாக வருகிறது.

(10) அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும். மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

(11) நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது - இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் - அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.

15/02/2026
15/02/2026

Saibaba Temple

Yes 👍 We buy ScorpioFC Finished or No FC also OKSend photos on WhatsApp 👉 82200 81955
15/02/2026

Yes 👍 We buy Scorpio
FC Finished or No FC also OK

Send photos on WhatsApp 👉 82200 81955

ADDITIONAL VEHICLE INFORMATION:ABS: YesAccidental: NoAir Conditioning: With HeaterNumber of Airbags: 2 airbagsAlloy Whee...
14/02/2026

ADDITIONAL VEHICLE INFORMATION:
ABS: Yes
Accidental: No
Air Conditioning: With Heater
Number of Airbags: 2 airbags
Alloy Wheels: Yes
Aux Compatibility: Yes
Color: White
Engine Capacity/Displacement (in Cc): 2500
Insurance Type: Comprehensive
Lock System: Remote Controlled Central
Make Month: December
Power steering: Yes
Power Windows: Front & rear
AM/FM Radio: Yes
Registration Place: TN
Finance: Yes

🏍️ உங்கள் பைக் சரியாக ஓடவில்லையா?🔧 MP AUTO WORKS – AYYALURஅனைத்து வகை Two Wheeler Repair Works✔ Engine Work✔ Electrical ...
13/02/2026

🏍️ உங்கள் பைக் சரியாக ஓடவில்லையா?

🔧 MP AUTO WORKS – AYYALUR

அனைத்து வகை Two Wheeler Repair Works
✔ Engine Work
✔ Electrical Work
✔ Oil Service
✔ Brake & Tyre Work

📍 Railway Road அருகில் – Ayyalur 624801
📲 WhatsApp: 82200 81955

🔧 Bike Problem?Come to MP Auto Works – AyyalurAll Two Wheeler Repair Works AvailableWhatsApp 82200 81955
12/02/2026

🔧 Bike Problem?
Come to MP Auto Works – Ayyalur

All Two Wheeler Repair Works Available
WhatsApp 82200 81955

Address

Gengaiyour, Ayyalur
Dindigul
624801

Alerts

Be the first to know and let us send you an email when Shirdi Sai Baba Temple குருசாமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category