Arulmigu Sri Parvathi pathrakali amman Temple

Arulmigu Sri Parvathi pathrakali amman Temple ஆரிய வைசிய கங்கை குல வெள்ளான் செட்டியார்
கம்பம் தேனி மாவட்டம்

02/04/2025

பிரபஞ்சம் என்பது காலம், இடம், மற்றும் அனைத்து உயிர்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தம். இது இயற்கை சட்டங்கள், சக்திகள், மற்றும் எத்தனை கோடிக்கணக்கான மண்டலங்களும் இணைந்து இயங்கும் ஒரு அமைப்பு.

பிரபஞ்சத்தின் இயற்கை மற்றும் அன்னதான பங்களிப்பு

பிரபஞ்சத்தின் இயற்கை ஒருங்கிணைந்ததாகும். எல்லா உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

பூமி, மழை, சூரியன் ஆகியவை உணவை வளர்க்க உதவுகின்றன. அன்னதானம் என்பது இந்த இயற்கைத் தருணத்திற்கு உதவியாக செயல்படுகிறது.

பரிவர்த்தனை விதி (Law of Karma) – நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ, அது நமக்கு திரும்பி வரும். அன்னதானம் செய்யும் நபர்களுக்கு பிரபஞ்சம் திரும்ப பல நன்மைகளை தரும்.

பகிர்வும் வளமும் – பிரபஞ்சம் ஒரு சமநிலை கொண்டதாக இருக்கிறது. ஒருவர் பகிர்ந்தால், அவர் வாழ்வில் இன்னும் அதிகமான நன்மைகள் திரும்ப வந்து சேரும்.

அன்னதான பங்களிப்பின் பரிபூரண உண்மை

அன்னம் (உணவு) என்பது உயிரின் அடிப்படை தேவையாகும் – இது அனைவரும் பெறவேண்டிய ஒரு உரிமை.

கர்மா மற்றும் தர்மம் – பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பது ஒரு உயர்ந்த தர்மமாக கருதப்படுகிறது.

அன்னதானம் என்பது ஆழ்ந்த ஆன்மிக செயல் – இது மன அமைதியையும், பிரபஞ்சத்தோடு ஒருமையாக வாழும் அனுபவத்தையும் தருகிறது.

இது பிரபஞ்சத்தின் சக்தியுடன் இணைக்கும் ஒரு வழி – எந்த ஜீவனும் தனியாக இல்லை, அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்கின்றோம்.
"அன்னதானம் ஆனந்தம்"🙏🙏🙏

09/02/2025

தினம் ஒரு திருக்குறள்:
(உலக பொதுமறை)

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்:
எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்

09/02/2025

பிரபஞ்ச ரகசியம்:நாள் :6
இல்லை என்று இங்கு எதுவும் இல்லை.
ஆகாயம் சப்த உணர்வையும், காற்று தொடு உணர்வையும், நெருப்பு உருவத்தை உணர்வதையும், நீர் சுவை உணர்வையும், மண் வாசனை உணர்வையும் குணங்களாக கொண்டன.
ஐம்புலன்களால் முடியாததை
நம் ஆத்ம உணர்வால் உணரலாம்.
ஒருவரை அவரின் எண்ணம்,செயல், முக பாவனை,விளைவு இதன் பயனால் அறியலாம். ஆத்ம உணர்வு தூய்மையான உள்ளத்தின் பிரதிபளிப்பு
ஆக அக தூய்மை,
ஆத்மாவை புதுப்பித்து இறைநிலை தருகிறது.
வருவதை உணர்த்துகிறது.
செயல்களை உருவாக்க்குகிறது
பயனை தந்து சமூகத்தை
கட்டமைக்கிறது.
பஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு.
"தண்ணீர்" இதன் புனிதம், மகத்துவம், பயன்கள், விளைவுகள்
தெரிந்தவர்கள் கருத்து பதிவிடுங்கள். உங்கள் புரிதல்
மற்றவர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஆக இருக்கும்.
"சிறுதுளி நீர் ஓடை ஆகாது
ஒரு கை ஒலி ஓசை ஆகாது
கடந்து செல்வது வாழ்க்கை
ஆகாது.
கற்பதும் கற்பிப்பதும்
புரிதலும் புனர்பித்தலும்
நடைமுறை படுத்துலும்
தான் ஆக்கபூர்வமான செயல் ஆகும்."
ஆக்கபூர்வ செயலுக்கு வித்திடுங்கள் இனிய காலை வணக்கத்துடன் 🙏

08/02/2025

தினம் ஒரு திருக்குறள்:
(உலக பொதுமறை)

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு

பொருள்:
ஒருவரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.

08/02/2025

பிரபஞ்ச ரகசியம்:நாள் :4
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”
நமக்கு வரும் நன்மையும் தீமையும் பிறர் தருவதில்லை.
நாமே ஏற்படுத்தி கொள்வது தான் இது விதி .இதை அறிந்தயாரும்
உயர்வு தாழ்வு பார்க்க மாட்டார்.
உங்கள் எண்ணங்களுக்கு சக்தி உண்டு. அவற்றை நீங்கள் முயலும் போது வெற்றி தோல்வி உண்டாகும். தோல்வி மற்றும் ஏமாற்றம் நம்மை முறை படுத்தும். நம் (செயல் )முறையை முறையாக வாழ்வில் பயன்படுத்தினாலே போதும் முன்னேறேலாம்.
ஒருவர் மீது மற்றஒருவருக்கு ஏற்படும்
கோபம், அன்பு, நட்பு, பாசம் எல்லாம் அவர் அவரின் செயலே.மனம் விட்டு பேசினால் போதும் "விட்டுகொடுத்தார் கெட்டு போவதில்லை"
தாழ்மையான பார்வை சிறிய குன்றை கூட சிகரமாக காட்டும்.

பிரபஞ்ச ரகசியம்:நாள் :5
சிந்தியுங்கள்!!!
உங்களின் நல்சிந்தனை
உங்களை சுற்றிலும் ஓர் வளையத்தை (அதிர்வலை) உருவாக்குகிறது.
இது காந்ததன்மை கொண்டது.
எப்படி புவிஈர்ப்பு விசை செயல்படுகிறது.
(மேல்நோக்கி ஏறிய படும் பொருள் கீழ் நோக்கி ஈர்க்கபடுகிறது)
உங்களுள் ஏற்படும் நல்அதிர்வலை உங்களை சுற்றியுள்ள நல்ல ஆற்றல்களை ஈர்த்து உங்களை மேன்மை படுத்தும்.
மற்றவர் மீது கொள்ளும் அன்பும் நன்றியுணர்வும் இந்த நல்சிந்தனையின் வெளிப்படே!!!
"Positive vibrations attract more positivity. The more positivity you cultivate, the greater your chances of success. A peaceful and joyful life begins with a positive mindset.
தலைக்கணம் இல்லாமல் நம் உறவுகளை மகிழ்வித்து வாழும் வாழ்கை வரம் ஆகும்.
வரம் தரும் இறை ஆசியுடன்
இனிய காலை வணக்கம்🙏🙏🙏

06/02/2025

தினம் ஒரு திருக்குறள்:
(உலக பொதுமறை)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

பொருள்:
நன்றியுணர்வு மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது

Address

Ramaya Gowder Street
Cumbum
625516

Telephone

+917338712430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Sri Parvathi pathrakali amman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arulmigu Sri Parvathi pathrakali amman Temple:

Share

Category