10/11/2023
*பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம், சிவபுர வளாகம், வட்டம்-16, நெய்வேலி-1*
*திருமந்திர வகுப்பு*
நமது ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமுறை அரங்கில், திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் இரண்டு சைவ சித்தாந்த வகுப்பும், தரும்புரம் ஆதீனம் நடத்தும் சைவ சித்தாந்த மாலை நேரக் கல்லூரியும், கலைமாமணி திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் திருமுறை இசை விளக்க வகுப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை-துறையூர் ஆதீனம் சார்பில், திருமுதுகுன்றம் ஸ்ரீகுமாரதேவர் மடம் நடத்தும் *திருமந்திர வகுப்பு* வரும் ஜனவரி 2024 முதல் தொடங்க உள்ளது.
வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அடியார்கள் முன்கூட்டியே பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.
வகுப்பு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிறன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
தேநீர், மதிய உணவு போன்றவை வகுப்பிலேயே வழங்கப்படும்.
விரிவான விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இர. தீனதயாளன்
+91 63806 94939
பரம. சேகர்
+91 7904894703