Arulmigu suyambu thandumariamman temple Coimbatore

Arulmigu suyambu thandumariamman temple Coimbatore pooja shop of arulmigu thandu mariamman temple

14/07/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

மதுரை மீனாட்சியம்மனை விடிய விடிய தரிசிக்கலாம்  |   |
12/02/2025

மதுரை மீனாட்சியம்மனை விடிய விடிய தரிசிக்கலாம்

| |

உள்ளம் மகிழவைக்கும்உருவார பொம்மை வழிபாடு!கோயம்புத்தூர் அருள் மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தினில் உருவார பொம்மைகள் வைத்து வழ...
12/02/2025

உள்ளம் மகிழவைக்கும்
உருவார பொம்மை வழிபாடு!

கோயம்புத்தூர் அருள் மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தினில்
உருவார பொம்மைகள் வைத்து வழிபாடு செய்வது தொன் மரபாக தொடர்ந்து வருகின்றது.



சுடுமண்ணால் மட்டும் செய்யப்பட்ட பொம்மைகளாக அல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு பறைசாற்றும் வழிபாடாகவே `உருவார பொம்மைகள்' பார்க்கப்படுகிறது.
மண்ணைக் குழைத்து உருவங்கள் செய்து, அதை சூளையில் இட்டு சுட்டு, சுடுமண் சிற்பங்கள் உருவாக்கும் கலை, உலகம் முழுவதும் இருக்கிறது. தமிழகத்தில் சுடுமண் சிற்பங்கள், உருவங்களாக (உருவாரங்களாக) மாறி இறை வழிபாடு சார்ந்து உள்ளது. சங்க காலம் தொட்டே சுடுமண் சிற்பங்கள் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ‘கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி மனித வாழ்வில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் உண்டாக்க முடியும்’ என்பது மனிதர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அந்த சக்திக்கு கடவுள், இயற்கை, அறிவியல் என்று ஒவ்வொருவரும் தங்கள் பார்வைக்கு தக்கபடி பெயர் சூட்டியுள்ளனர். அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களிடையே இயற்கையை வணங்கும் வழக்கம் உள்ளது.

அதன் ஒரு பகுதியாகத்தான் விளைச்சலுக்கு கை கொடுக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் திருநாள், உழவர்களுக்கு தோள் கொடுக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அத்துடன் தெய்வங்களின் வாகனங்களாக பசு, காளை, நாய், மயில், சேவல் போன்றவற்றை வைத்து அவற்றையும் வழிபட்டு வருகிறோம். அதுபோன்ற வழிபாட்டு முறை மனிதர்கள் மற்றும் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கவும் உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றின் உருவங்களை மண்ணால் செய்து கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்தும் பழக்கம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ளது. இவற்றை ‘உருவாரங்கள்’ என்பார்கள்.

உருவ வழிபாடு தோன்றிய காலந்தொட்டே சுடுமண் சிலைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடும் முறையும் வந்திருக்கக்கூடும். அந்த வகையில் கோயம்புத்தூர் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தினில்
உள்ள கருப்பராயன் உபசன்னதியில்
உருவாரங்களை வைத்து மந்திரித்து வழிபடுவது உடல் நல ஆரோக்ய அபிவிருத்தியையும் தொழில் விருத்தியையும் அளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்..

இக்கோவிலில்
ஆண் பெண் உருவாரங்கள், முகம், கால்பாதங்கள் (பாத வலிநீங்கவும் ஆரோக்யமான நடைபயணத்திற்கும்),குழந்தை உருவாரங்கள் என வாங்கி கோவிலில் வைத்து வழிபாடு செய்கிறார்கள்..
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகை தருகின்ற பக்தர்கள் உருவங்களை வைத்து உள்ளம் மகிழ வழிபாடு செய்கிறார்கள்.

உள்ளம் மகிழவைக்கும்உருவார பொம்மை வழிபாடு!கோயம்புத்தூர் அருள் மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தினில் உருவார பொம்மைகள் வைத்து வழ...
12/02/2025

உள்ளம் மகிழவைக்கும்
உருவார பொம்மை வழிபாடு!

கோயம்புத்தூர் அருள் மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தினில்
உருவார பொம்மைகள் வைத்து வழிபாடு செய்வது தொன் மரபாக தொடர்ந்து வருகின்றது.



சுடுமண்ணால் மட்டும் செய்யப்பட்ட பொம்மைகளாக அல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு பறைசாற்றும் வழிபாடாகவே `உருவார பொம்மைகள்' பார்க்கப்படுகிறது.
மண்ணைக் குழைத்து உருவங்கள் செய்து, அதை சூளையில் இட்டு சுட்டு, சுடுமண் சிற்பங்கள் உருவாக்கும் கலை, உலகம் முழுவதும் இருக்கிறது. தமிழகத்தில் சுடுமண் சிற்பங்கள், உருவங்களாக (உருவாரங்களாக) மாறி இறை வழிபாடு சார்ந்து உள்ளது. சங்க காலம் தொட்டே சுடுமண் சிற்பங்கள் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ‘கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி மனித வாழ்வில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் உண்டாக்க முடியும்’ என்பது மனிதர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அந்த சக்திக்கு கடவுள், இயற்கை, அறிவியல் என்று ஒவ்வொருவரும் தங்கள் பார்வைக்கு தக்கபடி பெயர் சூட்டியுள்ளனர். அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களிடையே இயற்கையை வணங்கும் வழக்கம் உள்ளது.

அதன் ஒரு பகுதியாகத்தான் விளைச்சலுக்கு கை கொடுக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் திருநாள், உழவர்களுக்கு தோள் கொடுக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அத்துடன் தெய்வங்களின் வாகனங்களாக பசு, காளை, நாய், மயில், சேவல் போன்றவற்றை வைத்து அவற்றையும் வழிபட்டு வருகிறோம். அதுபோன்ற வழிபாட்டு முறை மனிதர்கள் மற்றும் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கவும் உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றின் உருவங்களை மண்ணால் செய்து கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்தும் பழக்கம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ளது. இவற்றை ‘உருவாரங்கள்’ என்பார்கள்.

அந்த வகையில் உள்ளங்கைக்குள் அடங்கும் உருவங்கள் முதல், அண்ணாந்து பார்க்கச் செய்யும் பிரமாண்ட உருவங்கள் வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதுண்டு. இந்த வகையான வழிபாட்டு முறைகள் கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் தென் தமிழகப் பகுதிகளில் மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை உள்ளது. காவல் தெய்வங்களின் வாகனமான குதிரைகளுக்கு செய்யும் மரியாதையாக கருதப்படும் இந்த முறையை ‘புரவியெடுப்பு’ என்கின்றனர். தமிழகம் முழுவதும் பல கிராமங்களில், கம்பீரமாக வரிசை கட்டி நிற்கும் மண் குதிரை பொம்மைகளை காண முடியும். ‘நான் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எங்கள் தாத்தா வைத்த குதிரை சிலை’ என்று சுடுமண் உருவங் களைப் பற்றிய உரையாடல்களை இன்றும் பல கிராம கோவில்களில் கேட்க முடியும். மேலும் சில கோவில்களில் தெய்வங்களின் உருவங்கள் சுடுமண் சிற்பங்களால் செய்யப்படுவதுண்டு.

உருவ வழிபாடு தோன்றிய காலந்தொட்டே சுடுமண் சிலைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடும் முறையும் வந்திருக்கக்கூடும். அந்த வகையில் கோயம்புத்தூர் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தினில்
உள்ள கருப்பராயன் உபசன்னதியில்
உருவாரங்களை வைத்து மந்திரித்து வழிபடுவது உடல் நல ஆரோக்ய அபிவிருத்தியையும் தொழில் விருத்தியையும் அளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்..

இக்கோவிலில்
ஆண் பெண் உருவாரங்கள், முகம், கால்பாதங்கள் (பாத வலிநீங்கவும் ஆரோக்யமான நடைபயணத்திற்கும்),குழந்தை உருவாரங்கள் என வாங்கி கோவிலில் வைத்து வழிபாடு செய்கிறார்கள்..
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகை தருகின்ற பக்தர்கள் உருவங்களை வைத்து உள்ளம் மகிழ வழிபாடு செய்கிறார்கள்.
ஆண், பெண், குழந்தை, ஆடு, மாடு, நாய், குதிரை, கோழி என பல வகைப்பட்ட உருவங்களை இந்தக் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர். உருவார பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்துவதை, நோய் தீர்க்கும் மருந்தாக இந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கலாசாரமும், பண்பாடும் தொன்று தொட்டு இன்றளவும் காக்கப்பட்டு வருகிறது. சுடுமண்ணால் மட்டும் செய்யப்பட்ட பொம்மைகளாக அல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு பறைசாற்றும் வழிபாடாகவே `உருவார பொம்மைகள்' பார்க்கப்படுகிறது.

#கோயம்புத்தூர் #தண்டுமாரியம்மன்
#உருவாரவழிபாடு

விவசாய பூமியில், செழிப்புக்கு காரணமான இறைவனுக்கு, அத்தகைய பசுமை செழிப்பையே அர்ப்பணிப்பது போல, அம்மன் திருவடிகளில், சமர்ப்பிக்கும் வகையில், முளைப்பாலிகையிட்டு ஊர்வலமாக எடுத்து வருகின்றனர்.

திருவிழாவின் போது, உப்பிடுவது எதிலிருந்து தோன்றியதோ, அதிலேயே கரைவது என்பதை வலியுறுத்தும் தத்துவமேயாகும்.

வேண்டுதலுக்கு ஏற்ப உருவார மண் பொம்மைகளை அர்ப்பணித்து, வேண்டிய வரம் கிடைக்கவும், வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், மனதார வழிபாடு செய்கின்றனர்.

அருள் மிகு தண்டுமாரிஅம்மன் கோவிலில் அமைந்துள்ள கன்னி மூல கணபதி மற்றும். மகாலக்ஷ்மி அம்மன் உபசன்னதி ஆலயங்களுக்கு மகா கும்...
08/02/2025

அருள் மிகு தண்டுமாரிஅம்மன் கோவிலில் அமைந்துள்ள கன்னி மூல கணபதி மற்றும். மகாலக்ஷ்மி அம்மன் உபசன்னதி ஆலயங்களுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது..
பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள பொது அழைப்பு விடுக்கின்றோம்.

அனைவருக்கும் வணக்கம்.கோயம்புத்தூர் அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் இன்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட சே...
24/01/2025

அனைவருக்கும் வணக்கம்.
கோயம்புத்தூர் அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் இன்று காலை 11 மணிக்கு
அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட சேலைகள் ஏலத்தில் தரப்படுகின்றன. ஏலம் கோரி சேலைகளை பெற்று கொள்ள வருமாறு பக்தர்களுக்கு அறிவிப்புக்கள் கொடுக்கப்படுகின்றது..

அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் மாரியம்மனை வழிபடும் பக்தகோடிகள் உபசன்னதியினில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனை வழிபடுவ...
16/08/2024

அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் மாரியம்மனை வழிபடும் பக்தகோடிகள் உபசன்னதியினில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனை வழிபடுவது மிகுந்த நலம் பயக்கும்.

பக்தர்கள் செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் கடன் நோய் தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்

எதிரிகள் தொல்லை குறையும்..

🌺குலதெய்வம் அறிவியல் உண்மை 🌿அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வ...
27/07/2024

🌺குலதெய்வம் அறிவியல் உண்மை

🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் 🙏வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”

குலதெய்வம்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா…..?

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

செவ்வரளி பூக்களும் சம்மங்கி மாலையும் அம்மனை அலங்கரிக்க  அதிகாலையிலேயே தவம் கிடக்கின்றன..
23/07/2024

செவ்வரளி பூக்களும் சம்மங்கி மாலையும் அம்மனை அலங்கரிக்க அதிகாலையிலேயே தவம் கிடக்கின்றன..

நாட்டார் தெய்வங்களின் வரலாற்றைச் சொல்லும் - Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Customகோட்டைகளின் வரலாற்ற...
09/07/2024

நாட்டார் தெய்வங்களின் வரலாற்றைச் சொல்லும் - Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom

கோட்டைகளின் வரலாற்றைச் சொல்லும் - Forts of Tamil Nadu: A Walk-Through

உடன் இணைந்து குழுமம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்கள், அறிவுப் பெட்டகங்கள்!



-

𝗜 𝗼𝘃𝗲𝗿𝗵𝗲𝗮𝗿𝗱 𝘀𝗼𝗺𝗲𝗼𝗻𝗲 𝘀𝗮𝘆, "𝗬𝗼𝘂 𝗰𝗮𝗻𝗻𝗼𝘁 𝗵𝗲𝗮𝗹 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝘀𝗮𝗺𝗲 𝗲𝗻𝘃𝗶𝗿𝗼𝗻𝗺𝗲𝗻𝘁 𝘁𝗵𝗮𝘁 𝗺𝗮𝗱𝗲 𝘆𝗼𝘂 𝘀𝗶𝗰𝗸," 𝗮𝗻𝗱 𝘁𝗵𝗮𝘁'𝘀 𝗽𝗿𝗼𝗯𝗮𝗯𝗹𝘆 𝘀𝗼𝗺𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗯...
09/07/2024

𝗜 𝗼𝘃𝗲𝗿𝗵𝗲𝗮𝗿𝗱 𝘀𝗼𝗺𝗲𝗼𝗻𝗲 𝘀𝗮𝘆, "𝗬𝗼𝘂 𝗰𝗮𝗻𝗻𝗼𝘁 𝗵𝗲𝗮𝗹 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝘀𝗮𝗺𝗲 𝗲𝗻𝘃𝗶𝗿𝗼𝗻𝗺𝗲𝗻𝘁 𝘁𝗵𝗮𝘁 𝗺𝗮𝗱𝗲 𝘆𝗼𝘂 𝘀𝗶𝗰𝗸," 𝗮𝗻𝗱 𝘁𝗵𝗮𝘁'𝘀 𝗽𝗿𝗼𝗯𝗮𝗯𝗹𝘆 𝘀𝗼𝗺𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗯𝗲𝘀𝘁 𝗮𝗱𝘃𝗶𝗰𝗲 𝗜’𝘃𝗲 𝗵𝗲𝗮𝗿𝗱 𝗶𝗻 𝗮 𝘄𝗵𝗶𝗹𝗲. -𝗡𝗶𝗸𝗶𝗴𝗮𝗶𝗹𝘂

Address

Avinashi Salai, Uppilipalayam
Coimbatore
641015

Opening Hours

Monday 6am - 1pm
4pm - 9pm
Tuesday 6am - 1pm
4pm - 9pm
Wednesday 6am - 1pm
4pm - 9pm
Thursday 6am - 1pm
4pm - 9pm
Friday 6am - 1pm
4pm - 9pm
Saturday 6am - 1pm
4pm - 9pm
Sunday 6am - 1pm
4pm - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu suyambu thandumariamman temple Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share