விசுவாசமும் ஜெபமும் இவ்வூழியத்தின் மூலதனமாகும். ஜெபம் இவ்வூழியத்தின் முதுகெலும்பாயிருக்கிறது. ஜெபமில்லையேல் ஜெயமில்லை! நேயர்களும், விசவாசப்பங்காளர்களும் ஏனைய சபை விசுவாசிகளும் கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும், மின் அஞ்சல் (e-mail) வாயிலாகவும் எமக்குத் தெரிவிக்கும் விண்ணப்பங்களுக்காக விண்ணப்பம் செய்கிறோம். எமது ஜெப ஊழியத்தை கீழ்க்கண்டவாறு செய்கிறோம்.
1. தினமும் காலையில் ஜெப வேளையில்
குழுவாக மற்றவர்களுடைய தேவைகளுக்காகவும் ஊக்கமாக ஜெபிக்கிறோம்.
2. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு மாலையில் 4.00 மணிக்கு நடைபெறும் ஜெபக்கூட்டத்திலும் நேயர்களின் தேவைகளுக்காக விண்ணப்பம் பண்ணுகிறோம்.
இவ்வாறு ஜெபத்தில் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து நிறைவேற்றும் இவ்வூழியத்தின் மூலம் தேவன் மகத்தான காரியங்களை செய்து வருகிறார். உங்கள் ஜெபக்குறிப்புகளை கீழ்கண்ட விண்ணப்பத்தில்
(in English) மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம்.