12/01/2018
சுவாமி விவேகானந்தர் பிறந்ததினம் மற்றும் இளைஞர் தினம் சிறப்பு கட்டுரை...
என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்.?.
1. இன்றைய இந்துமதம் சுவாமி விவேகானந்தரின் படைப்பு. துண்டு துண்டாக பிரிந்தும் முரண்பட்டும் கிடந்த பல்வேறு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து இன்றைய இந்து மதத்தை அவர் தந்துள்ளார். பண்டைய சாஸ்திரங்களையும் கருத்துக்களையும் இன்றைய சிந்தனைப் போக்கில் அவர் நமக்கு வார்த்து அளித்தார்...
2. துறவியரை சமுதய சேவையில் ஈடுபடச்செய்து இந்துத்துறவு நெறிக்கு ஒரு புதிய, நவீன பரிமாணத்தை அளித்தார்...
3. முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுவாமி விவேகானந்தருக்கு உண்டு. ஏழைகளுக்காக அழுத முதல் தீர்க்கதரிசி அவர். ஏழைகளுக்காக பேசிய முதல் இறையுணர்வாளர் அவர். நாடு குடிசையில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் அந்தோ அவர்களுக்காக யாரும் எதையும் எப்போதும் செய்ததில்லை என்று கூறினார். இந்த மணி, சாமரம் போன்ற (கோவில் வழிபாடுகளை) எல்லாவற்றையும் கங்கையில் எறிந்துவிட்டு, வாழும் கடவுளை, மனித உருவில் காண்கின்ற கடவுளை வழிபடுங்கள். மனித உருவிலுள்ள ஒவ்வொருவரும் எங்கும் நிறைந்த அதே இறைவனே, அவர்களை வழிபடுங்கள் என்றார்...
4. இந்தியாவை முன்னேற்ற சமுதாய சீர்திருத்தம் தான் ஒரே வழி என்று நினைத்திருந்த காலத்தில், இந்தியாவின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் உயர்சாதி மக்கள், தாழ்ந்த சாதி மக்களை புறக்கணித்ததே காரணம் என்று முழங்கிய முதல் மனிதர் அவர்...
5. இந்தியா முழுவதும் யாத்திரை சென்றதன் விளைவாக ஏழைகளை முன்னேற்றுவதற்கு, அவர்களை விழிப்புறச்செய்வதற்கு பரந்த கல்வித்திட்டத்தை வகுத்தார். அதற்காக பணம் பெற வெளிநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். (ஆனால் அவரது காலத்தில் இது நடக்கவில்லை, வெளிநாட்டினர் இந்திய ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை)...
6. ராமகிருஷ்ணமிஷன் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம், ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்தார்...
7. மக்களுக்கு செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு என்ற சேவை தர்மத்தை உருவாக்கினார். மக்களுக்கு தொண்டாற்றுவதன் மூலம் இறைநிலையை அடைய முடியும் என்று போதித்தார்...
8. கடல் கடந்து சென்று இந்து மதத்தை பரப்ப கூடாது என்ற விதியை உடைத்து, இந்து மதத்தை அனைத்து நாடுகளிலும் சென்று பரப்பினார். வெளிறாட்டினர் இதன் மூலம் இந்து மதமே, தத்துவத்திலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் உயர்ந்த சமயம் என்பதை ஏற்றுக்கொள்ளச்செய்தார்...
9. மேலை நாடுகளுக்குச் சென்று, நமது ஆன்மீக பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் அங்கே அறியச்செய்தபோது இந்தியர்களின் ஆழ்மனத்தை சுவாமிஜி தட்டி எழுப்பினார். நீங்கள் அடிமைகள், நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், உங்களுக்கு எந்த பாரம்பரியமும் இல்லை, எல்லாம் நாங்கள் வந்தபிறகே உங்களுக்கு தந்தோம். எனவே நீங்கள் எங்களுக்கு கைகட்டி சேவகம் செய்யுங்கள் என்று வெள்ளையர்கள் கூறியதைக்கேட்டு இந்தியர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலம் அது. நாங்கள் எதற்கும் உதவாதவர்கள், எங்கள் புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் கற்பனைகள் என்றே படித்த இளைஞர்கள் நினைத்தார்கள். இந்தியாவின் பெருமையை, அதன் ஆன்மீப் பாரம்பரியத்தை சுவாமிஜி மேலை நாடுகளில் எடுத்துக் கூறியபோது வியப்பில் ஆழ்ந்தது மேலைநாடு மட்டுமல்ல, இந்தியாவும் தான். நாம் உண்மையிலேயே இவ்வளவு பெருமைவாய்ந்தவர்களா.?.
உலகிற்கே ஆன்மீகத்தை போதிக்கும் குருவாக விளக்க நம்மிடம் தகுதி இருக்கிறதா.?.
நமது மத்தில் ஆழ்ந்த விஞ்ஞானம் இருக்கிறதா.?.
நமது மதம் உலகத்திலேயே இவ்வளவு பெருமை வாய்ந்ததா.?.
என்று இந்தியர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்...
10. சுவாமிஜி மட்டும் இல்லாதிருந்தால், இந்தியாவில் இந்துமதம் இருந்திருக்காது. அது மட்டுமல்ல இந்தியாவையே இணைத்து வந்த இந்துமதம் இல்லாமல் போனால் இந்தியாவே இருந்திருக்காது. நாம் பல்வேறு சிறுசிறு நாடுகளாக பிரிந்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருப்போம்...
11. இந்தியாவின் குடிசைவாழ் மக்கள், வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்களின் காலடியிலும், கிறிஸ்தவர்களின் காலடியிலும், அது மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களே ஏற்படுத்திய சாதி கொடுமையினாலும் மிதிபட்டு, நாம் இவ்வாறு மிதிபட்டு சாவதற்கே பிறந்திருக்கிறோம் என்று வாழ்ந்து வந்த காலத்தில், அவர்களின் தனித்துவத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் சமஅந்தஸ்துடன் வாழவேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார். அதற்காக அவர் வகுத்த திட்டம்தான், ஒவ்வொரு கிராமத்திலும் இலவசபள்ளிகளை ஏற்படுத்துவது. அந்த காலத்தில் குடிசைமக்கள் சிறுவர்கள் முதல், ஆண்கள், பெண்கள் என அனைவரும் முதுகொடிய வேலை செய்து கால்வயிறு உணவை பெற்றார்கள். ஆகவே இவர்களுக்கு கல்விசாலைகளை ஏற்படுத்தினாலும், இவர்களால் வந்து படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார். ஆகவே இவர்கள் கல்வி சாலைக்கு வரவேண்டியதில்லை. கல்வி இவர்களை தேடி இவர்களின் குடிசைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதையே அவர் தமது சீடர்களுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதினார்...
சுயநலமற்ற ஆண்களையும் பெண்களையும் நூற்றுக்கணக்கில் ஒன்று சேருங்கள். அவர்களை ஏழைகள் வாழும் குடிசைகளுக்கு அனுப்புங்கள். அவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு வந்த பிறகு அவர்களுக்கு கல்வி கற்பியுங்கள்...
அதுவும் எப்படிப்பட்ட கல்வி.?.
அரசியல், வரலாறு, புவியியல், மதம், சுயதொழில் போன்றவை...
இவ்வாறு கல்வி கற்பதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற சுயமரியாதை வரும்...
12. அதேபோல் பெண்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே உள்ள அதிகப்படியான வேறுபாட்டை கண்டு வேதனைப்பட்டார். ஒவ்வொரு மனிதனும் இறைவன் இருக்கிறார். அவர் ஆணிலும், பெண்ணிலும் சமமாகவே இருக்கிறார். அப்படி இருக்கும் போது பெண்களை இவ்வாறு அடிமைப்படுத்தி வைப்பது நியாயமா.?. என்று கேட்டார். பெண்களுக்கு தனியாக பள்ளிகளை ஆரம்பிக்க விரும்பினார்...
எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படவில்லையோ அந்த நாடு விரைவில் அழிந்துவிடும் என்று கூறினார்...
சுவாமி விவேகானந்தரின் எதிர்கால திட்டம் இது தான்.!.
வேதாந்த கருத்துக்களை கற்று தேர்ந்த, ஆயிரக்கணக்கான ஆண்களும், ஆயிரக்கணக்கான பெண்களும் காட்டுத்தீயைப்போல் இமயத்திலிருந்து குமரிமுனைவரையிலும், உலகம் முழுவதிலும் பரவவேண்டும்...
இது குழந்தை விளையாட்டல், அதற்கு நேரமும் இல்லை. குழந்தை விளையாட்டிற்காக வந்திருப்பவர்கள் விரைவில் வெளியேறட்டும், இல்லாவிட்டால் அவர்களுக்கு பேராபத்து நிகழ்வது உறுதி...
உங்களுள் யாரெல்லாம் சற்று மூளை உள்ளவர்களோ, அவர்களின் பாதங்களில் நான் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஒன்று கேட்டுக்கொள்கிறேன் தீப்பொறியாக பரவுங்கள். எங்கும் நிறைந்த இந்த கடவுளின் இந்த வழிபாட்டை பிரச்சாரம் செய்யுங்கள். இது நமது நாட்டில் இதுவரை பிரச்சாரம் செய்ப்படவில்லை. கிராமம் கிராமமாக சென்று, வீடுவீடாக சென்று இந்த கருத்துக்களைப் பரப்புங்கள்...
= என்றும் உங்கள் நட்பை விரும்பும் =
▂ ▃ ▅ ▆ ▇ █ PvS █ ▇ ▆ ▅ ▃ ▂