27/04/2026
#வாலை தாய் அருள் இல்லாமல் யாரும் சித்தர் ஆக முடியாது. பொதுவாக சித்தர்களை பற்றி நிறைய பொய்யான கருத்துகளை பதிவிடுகின்றனர்.
#சித்தர்கள் யாரும் 300 வருடம் 500 வருடம் தவநெறியில் உள்ளார்கள் என்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் இந்த உடல் ஓர் அளவுக்குதான் சக்தியை தாங்க முடியும். யுகங்களாக வாழும் ஒரே மாமுனி சித்தர் #அகத்தியர் மட்டுமே ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து அந்த உடலினுள் 80 வயது வரைக்கும் தான் இருப்பார் பின் வேறொரு உடலுக்குள் மாறி விடுவார் இதுவே அவர் பல யுகங்களாக வாழ்கின்றார். அந்த ஒவ்வொரும் தனித்தனி பெயர் பெற்று ஜீவ சமாதி அடைவார்கள். இந்த உலகத்தை காக்கும் வேலையை அவர் ஈசனின் கட்டளைக்கிணங்க செய்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் #தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளார். #கொங்கணர் அகத்தியரின் சிஷ்யர் அவரை பற்றி பார்ப்போம். இவர் போகரின் சிஷ்யர் கிடையாது. இவர் போகரிடமும் பல கலைகளை கற்றார். கேரள மாநிலம் கொங்கண் பிரதேசத்தில் புளிஞர் குடியில் கொங்கணச் சித்தர் பிறந்தார். கொங்கணர் சிறந்த முருகன் மற்றும் அம்பிகை பக்தர். முருகனை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். ( ) பில்லி சூனியத்தில் கைதேர்ந்த சித்தர் கொங்கணர். இவர் எப்பொழுதும் அடர்ந்த காடுகளில் தான் இருப்பார். இவர் அகத்தியரிடம் நிறைய பயிற்சி மேற்கொண்டு சித்து விளையாட்டுகளில் கைதேர்ந்தவர் அதை வைத்து பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளை வேரோடு அழிப்பதில் வல்லவர். இவரை நாள்தோறும் வணங்கி வர நம் குடும்பத்தை சீர்குலைக்கும் தீயசக்திகளிடம் இருந்து நம்மை காத்தருள்வார். #திருப்பூர் மாவட்டம் #ஊதியூர் மலையில் கொங்கண சித்தர் தவபீடம் உள்ளது. கொங்கணச் சித்தர் தங்கியிருந்த இடங்களில் குறிப்பிடத்தக்கவை வையப்பமலை, அலவாய்மலை, சங்ககிரிஆகியவையாகும்.
இவருக்குக் கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் ஒரே ஆன்மா ஆனால் வெவ்வேறானவர்கள்.
கதை தொகுப்பு:
கொங்கணர் இளமையில் கொங்கு நாட்டின் இளவரசர். ஊதியூர் மலைக் காடுகளில் வேட்டையாடினார். பின்னர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து யோக தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கைப் பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று.
அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து ஒரு மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார். அந்த இல்லத்தரசி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்தவரைக் கொங்கணர் சினத்துடன் விழித்துப் பார்த்தார்.
உடனே, அவ்வம்மையார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார்.கற்பின் திறத்தால் வந்த ஞானத்தை அறிந்த கொங்கணவர் நாணமுற்று,தன்னுடைய சினத்தை வெல்லவேண்டிய உண்மையை அறிந்து மிகவும் தீவிரமாகத் தவவாழ்வில் கவனம் செலுத்தலானார். பின் பாலாம்பிகையை வணங்கத்தொடங்கி " #வாலைக்கும்மி" என்ற பாடலையும் பாடி அவளின் பேரருளைப் பெற்றார்.