16/12/2021
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரன்
சுவாமிகள்ஸ்லோகம்,,,
தமிழாக்கம்.
இந்த பிண்டமும் அண்டமும் ஆனபிரம்மாண்டத்தில் விளையாடுகிறன்,,, பகவான் பிரம்மாண்டத்தில் விளையாடுகிறான்.
அந்த ஹம்சம் நான்,, அந்த அம்சம் நான்,,, அந்த அம்சம் நான்,,, அது நானே என்று விளையாடுகிறன்.
நான் பரமாத்மா,,, முழுவதும் நிரம்பியவன்,,, பிரம்மம் நானே என்று விளையாடுகிறான்.
மெய், கண், செவி, நாக்கு, மூக்கு இவைகளாயும் உள்ள பிரம்மாண்டத்தில் விளையாடுகிறான்.
ஒலி, உணர்வு, சுவை முதலிய இந்தரிய உணர்வுகளை உடையதும். சாத்வீகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களுடைய தோழமை கொண்ட பிரம்மாண்டத்தில் விளையாடுகிறான்.
புத்தி, மனம், சித்தம், அகங்காரம் இவற்றின் மயமானதும், மண் நீர், தீ, வான், காலம், இவற்றின் மயமானதும் ஆன பிரம்மாண்டத்தில் விளையாடுகிறான்.
உருத்திரன், பிரமன், விஷ்ணு இவர்களுக்கு ஆதி கர்த்தாவான பரமஹம்ச ரூபங் கொண்டு விளையாடுகிறான்.
பரம்ஹம்ஸரூபேண விஹர்தா
ப்ரஹ்ம விஷ்ணு ருத் ராதி க கர்தா.
இறையே குருவே சரணம், சரணம், சரணம்....