15/12/2025
ஆழ்ந்த உண்மையான பக்தி.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஏழை ஒருவன், தினமும் கீரைகளைப் பறிக்க காட்டுக்கு போகும் வழியில்,
ஒரு குடிலில் முனிவர் ஒருவர்,
பெருமாள் விக்கிரகத்தை வைத்து, துளசி இலையால் பூஜைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டே போவான்.
ஒரு நாள் , கீரைகளைப் பறிக்கும் போது,
அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான்.
அப்போது அவனுக்கு, அந்த முனிவர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகத்துக்கு வந்தது.
உடனே , இந்த துளசியை பறித்துச் சென்று அந்த முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாகக் கொடுப்போமே!' என்று எண்ணியபடி செடியில் இருந்து துளசியையும் சேர்த்துப் பறித்து,
கீரைக் கட்டோடு ஒன்றாகப் போட்டு, தலை மீது வைத்துக் கொண்டு முனிவரின் இல்லம் நோக்கி நடந்தான்.
ஆனால், அவன் பறித்துப் போட்ட கீரைக் கட்டில், ஒரு சிறு கரு நாகமும் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.
முனிவரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி.
முனிவர் ஏழையைப் பார்த்தார்.
அதேசமயம், அவன் பின்னே, அருவமாய் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார்.
ஞான திருஷ்டியில் , அந்த ஏழையின் பின்னே நிழல் போல் நிற்பது ராகு பகவான் என்பது தெரிந்தது.
முனிவர் உடனே ஏழையிடம்,
"அப்பா! உன் தலையில் உள்ள கீரைக் கட்டை அப்படியே வைத்திரு,
ஒரு ஐந்து நிமிஷம் அதைக் கீழே இறக்க வேண்டாம்.
இதோ வந்து விடுகிறேன்!'' என்று கூறி விட்டு, குடிலின் பின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார்.
""ராகுவே! எதற்காக இந்த ஏழையைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன காரணம் என்று நான் அறியலாமா?'' என்று கேட்டார்.
அதற்கு ராகு "சுவாமி! இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு
கரு நாக உருவெடுத்து தீண்ட வேண்டும் என்பது, இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி.
ஆனால் , இவன் என்றும் இல்லாத அதிசயமாக, இன்று பகவானின் பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால், இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் என்றார்.
முனிவருக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது.
""ராகுவே! அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா?'' என்றார்.
""சுவாமி! தங்கள் புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தால்,
அவனது சர்ப்பதோஷம் நீங்கப் பெறுவான். அதனால், நான் அவனைத் தீண்டாமல் சென்று விடுவேன்!'' என்றார்.
முனிவரும் , ஏழைக்குத் தன் ஆராதனை பலனை தாரை வார்த்துக் கொடுக்க,
ராகு பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து, மறைந்து போனார்.
அப்பொழுது கீரைக் கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது.
முனிவர் அந்த ஏழையிடம் வந்து, ""அப்பா! இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும், சரியா?'' என்றார்.
ஏழைக்கு, மிகுந்த மகிழ்ச்சி.!!
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
வைகுந்த வாசன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம்
“ஆழ்ந்த பக்தியே! “
பக்தியோடு சிறு துளசி இலையைக் கொடுத்தாலும், அதைப் பரவசமாய் அவன் ஏற்பான்.
🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹
ஸ்ரீகிருஷ்ண சைதன்ய ஜெகத்பந்து பால்ராஜ் சுவாமிகளே நின் திருவடிகள் சரணம்.💖🙏🏻
ஓம் ஸ்ரீமன் நாராயணாய நமஹ..💖🙏🏻
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.💖🙏🏻
🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷