18/08/2026
ஸ்ரீ சொரிமுத்தய்யனார் குறித்து, பக்த ஸ்ரேஷ்டர் இயற்றி ஸமர்ப்பணம் செய்த முக்தார்யாஷ்டகம்:
*ஸ்ரீ முக்தார்யாஷ்டகம்*
*பாபநாஶ வனாவாஸம்ʼ பா⁴ண-தீர்தா²ஸ்பத³ம்ʼ விபு⁴ம்*
*ஸர்வாபீ³ஷ்ட-ப்ரதா³தாரம்ʼ முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் .. 1..*
பாபநாசம் வனத்தின் நடுவே இருப்பவரும், பாண தீர்த்த பகுதியை தன்னுடைய ப்ரியமான இடமாகக் கொண்டவரும், பக்தர்கள் விரும்புபவற்றையெல்லாம் அளிப்பவருமான முத்தைய்யனை வணங்குகிறேன்!
*மலயபர்வத -கூடஸ்த²ம்ʼ மஹாலிங்க ஸமீபகம்*
*மங்களோபாத்த-வபுஷம்ʼ முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 2*
மலய பர்வதம் எனும் பொதிகை மலையில் வசிப்பவரும், மஹாலிங்கஸ்வாமியை அருகே உடையவரும், மங்களமே உருவான வடிவத்தில் விளங்குபவருமான முத்தையனை வணங்குகிறேன்
*மூலாதா⁴ரநிலயஸ்தம் கலௌ பா³ஷண தை³வதம்*
*வஸுத³ம் வரத³ம் தே³வம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 3*
மூலாதார நிலையத்தில் விளங்குபவரும், கலியுகத்தில் பேசும் தெய்வமாக இருப்பவரும்,
ஐஸ்வர்யங்களையும் கேட்ட வரங்களையும் கொடுப்பவருமான முத்தையனை வணங்குகிறேன்.
*ஶுபா⁴ஷாடே³ ஹ்யமாவாஸ்யாம் பக்தாக³ஸ்த்ய வரப்ரத³ம்*
*கல்பத்ரு மூல ஸம்தீ³ப்தம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 4*
சுபமான ஆடி மாதம் அமாவாசை நாளில் பக்தரான அகத்தியருக்கு
அருள் செய்தவரும், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பக வ்ருக்ஷத்தின் கீழ் ஜ்வலிப்பவருமான முத்தய்யனை வணங்குகிறேன்
*இந்த்³ராதி³தே³வதாவ்ருʼந்தை³ர் இஷ்ட காமப்ரபூர்த்தயே*
*ஸ்வர்ண வர்ஷாபி⁴ஷிக்தம் தம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 5*
இந்திரன் முதலான தேவர்கள் அனைவரின் விருப்பங்களை பூர்த்தி செய்து, அதனால் மகிழ்ந்த
தேவர்களால் தங்க மழையால் அபிஷேகம் செய்யப்பட்டவருமான (பொன் சொரி) முத்தையனை வணங்குகிறேன்
*ஶ்ருங்க²லபூ⁴தநாதா²தி ஸர்வபூ⁴த க³ணாவ்ருதம்*
*ஸர்வாஶ்சர்யமயம்ʼ தே³வம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 6*
சங்கிலி பூதத்தார் முதலான கோடி பரிவார பூதகணங்கள் சூழ விளங்குபரும், ஆச்சரியமான லீலைகள் நடத்துபவருமான முத்தையனை வணங்குகிறேன்.
*ராஜராஜம் மிதாசாரம்ʼ தீர்தாதி³ப வரப்ரத³ம் .*
*ரேவதம் அச்வமாரூடம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 7*
அரசருக்கு எல்லாம் அரசராக விளங்குபவரும்,
எண்ணமுடியாத லீலைகளை நிகழ்த்துபவரும், தீர்த்தபதி ராஜாவுக்கு அருளியவரும்,
ரேவதன் என்ற பெயருடையவரும் குதிரை வாகனம் ஏறி வருபவருமான முத்தையனை வணங்குகிறேன்.
*பூ⁴தபா³தா⁴ ரோக³தாப ஸர்வ க்லேஶாதி³ நாஶனம்*
*பு⁴த³பாமர ஸேவ்யம் தம் முக்தார்யேஶம்ʼ நமாம்யஹம் 8*
பூதங்களால் ஏற்படும் கஷ்டங்களையும், நோய்களையும்,
மனக்கவலையையும், எல்லாவிதமான துக்கத்தையும் அழிப்பவரும்,
பண்டிதரும் பாமரரும் பக்தியோடு ஆராதிக்கும் மூர்த்தியான முத்தையனை வணங்குகிறேன்.
*முக்தார்யாஷ்டகம் ஸ்தோத்ரம்ʼ தா³ஸாரவிந்த³ நிர்மிதம்*
*ஸர்வ தாப ஹரம் சைவ ஶாஸ்த்ரு ப⁴க்தி ப்ரத³ம் ஶுப⁴ம்*
சொரிமுத்தையனான சாஸ்தாவைக் குறித்து பக்தியோடு தாஸன் அரவிந்தனால் எழுதப்பட்ட இந்த முக்தார்யாஷ்டகம் எனும் துதி, எல்லா விதமான கஷ்டங்களையும் நீக்கும்; சாஸ்தாவின் மேல் விசேஷமான பக்தியை கொடுக்கும்; படிக்கும் பக்தர்களுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகும்!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா! சொரிமுத்தய்யனே சரணம் ஐயப்பா!