Kalyana Sastha Samajam

Kalyana Sastha Samajam Swamiye Saranam Ayyappa. This is the official page of Kalyana Sastha Samajam, located at chromepet.

 #ஸ்ரீபூர்ணாதேவி_த்யாந_ஸ்லோகம் :த்விநேத்ராம் த்விபுஜாம் ஸ்யாமாம்கரண்ட மகுடாந்விதாம்வரதோத்பல ஸம்யுக்தாம் ஸாஸ்த்ருதக்ஷஸ்த்...
24/05/2026

#ஸ்ரீபூர்ணாதேவி_த்யாந_ஸ்லோகம் :

த்விநேத்ராம் த்விபுஜாம் ஸ்யாமாம்
கரண்ட மகுடாந்விதாம்

வரதோத்பல ஸம்யுக்தாம் ஸாஸ்த்ரு
தக்ஷஸ்த்திதாம் ஸுபாம்

கிஞ்ஜித் குஞ்ஜித தக்ஷாங்க்ரீம்
ஸர்வாபரண பூஷிதாம்

த்யாயேத் பூர்ணாம் மஹாதேவீம்
ஸாஸ்த்ருபத்நீம் குணோஜ்வலாம்.

( இரு திருக்கண்கள் இரு திருக்கரங்கள் உடையவளும் கரிய நிறத்தவளும்
கரண்டம் என்ற மகுடம் அணிந்தவளும்

வரத முத்திரை நீலோத்பல மலர் தாங்கியவளும் அய்யனாரின் வலது பக்கத்தில் உறைபவளும் நன்மைகள் தருபவளும்

வலது காலை சற்று மடித்து வைத்துக் கொண்டிருப்பவளும் அனைத்து அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டவளும்

நற்குண ஒளி வீசுபவளும் அய்யனாரின் பத்தினியும் பூர்ணா என்ற பெயர் உடைய மஹாதேவியை தியானிக்கிறேன் )

#ஸ்ரீபூர்ணாம்பாள்_காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ஸாஸ்த்ரு பத்ந்யை ச தீமஹி
தன்னோ பூர்ணா ப்ரசோதயாத்

#ஸ்ரீமஹாசாஸ்தா_த்யாந_ஸ்லோகம் :

பூர்ணா புஷ்கலயோ: பதிம்
ஸிவஸுதம் தண்டாஸி ஸூலாப்ஜயுக்

ஸக்ரேஷ்வாஸ ஸராபயேஷ்ட
குலிஸாந் ஹஸ்தைர் வஹந் ஸாதரம்

நாநாரத்ந விஸித்ரிதாஸந
கதம் கல்யாணஸித்தி ப்ரதம்

வீராதி ப்ரமுகை: ஸுஸேவித
பதம் ஸாஸ்தாரமீட்யம் பஜே.

( பூர்ணா புஷ்களா தேவியர்களுக்கு பதி ஆனவரும் சிவபெருமானின் புதல்வரும்

தண்டம் ; கத்தி ; சூலம் ; சங்கு ; சக்ரம் ; வில் ; அம்பு ; குலிசம் இவைகளோடு அபய வரதத்தை திருக்கரங்களில் ஏந்தி இருப்பவரும்

பல வகை இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவரும் கல்யாண சித்தியை அளிப்பவரும்

வீரன் முதலான பரிவார தேவதைகளால் வணங்கத்தக்க திருப்பாத கமலங்களை உடையவரும் ஆன அய்யனாரை வணங்குகிறேன் )

#ஸ்ரீமஹாசாஸ்தா_காயத்ரீ :

ஓம் கிராமபாலாய வித்மஹே
க்லேஸநாஸாய தீமஹி
தன்னோ ஸாஸ்த்ரு ப்ரசோதயாத்

#ஸ்ரீபுஷ்கலாதேவி_த்யாந_ஸ்லோகம் :

த்விநேத்ராம் த்விபுஜாம் பீதாம்
க்ரீட மகுடோஜ்வலாம்

பாசஹஸ்தாம் மநோக்ஞாங்கீம்
ஸர்வாபரண பூஷிதாம்

ஈஷத் குஞ்ஜித வாமாங்க்ரீம்
ஸர்வாலங்கார ஸோபிதாம்

ஸாஸ்த்ரு வாமஸ்திதாம் தேவீம்
வந்தேஹம் புஷ்கலாம் ஸுபாம்.

( இரு திருக்கண்கள் இரு திருக்கரங்கள் உடையவளும் மஞ்சள் நிறத்தவளும்
கிரீடம் அணிந்திருப்பவளும்

பாசம் ஏந்திய கரத்தை உடையவளும்
மனம் கவரும் திருமேனி கொண்டவளும்
அனைத்து அணிகலன்களாலும் அலங்கரிக்கப் பட்டவளும்

இடது காலை சற்று மடித்து வைத்துக் கொண்டிருப்பவளும் அனைத்து அலங்காரங்களால் ஒளி வீசுபவளும்

அய்யனாரின் இடது பக்கத்தில் வீற்றிருப்பவளும் நலன்கள் அருள்பவளும் ஆன புஷ்களா என்ற பெயர் உடைய மஹாதேவியை தியானிக்கிறேன் )

#ஸ்ரீபுஷ்கலாம்பாள்_காயத்ரீ :

ஓம் பத்மஹஸ்தாயை ச வித்மஹே
பாக்யப்ரதாயை ச தீமஹி
தன்னோ புஷ்கலா ப்ரசோதயாத்

கணேஸம் நைர்ருதே வாயௌமஞ்சாம்பாம் ச ப்ரபூஜயேத்பைரவௌ த்வஸிதாங்கஞ்சபூர்வே வாமே ச வாபுரம்( கன்னிமூலையும் மகா கணபதியும்வாயு தி...
23/05/2026

கணேஸம் நைர்ருதே வாயௌ
மஞ்சாம்பாம் ச ப்ரபூஜயேத்
பைரவௌ த்வஸிதாங்கஞ்ச
பூர்வே வாமே ச வாபுரம்

( கன்னிமூலையும் மகா கணபதியும்
வாயு திசையில் மாளிகைபுரத்தம்மனும்
பகவானுக்கு முன் இரு கடுவர்களும் கருப்பனும்
இடப்புறத்தில் வாபூரனும் இருக்கிறார்கள் )

அயல் தேசத்தவர்களின் பக்தி அச்சன் கோவிலை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அச்சன் கோவில் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அலு...
13/05/2026

அயல் தேசத்தவர்களின் பக்தி

அச்சன் கோவிலை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

அச்சன் கோவில் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அலுவலர்
ஸ்ரீ கார்யம் ஆவார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அச்சன் கோயிலில் ஸ்ரீ காரியமாக இருந்தவர் தர்ம சாஸ்தா மீது அளவற்ற பக்தியோடு
அவரை நினைத்தவாறே பணி செய்வார்.

அச்சன்கோவில் வனப்பகுதியில் இருந்து அதீதமான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு காணாமல் போய்க்கொண்டே இருந்தது.

ஆங்கிலேய அதிகாரிகள் காணாமல் போன மரங்களின் விபரங்களை
ஸ்ரீ கார்யத்திடம் கேட்டார்கள்.

என்ன விபரம் கொடுப்பது என்று புரியாது அவர் திகைத்தார்.

கோவிலேயே அதிக நேரம் தினம் இருந்து இறைவனையே நினைத்து நினைத்து வேலையில் கவனமின்மை ஆனதால் யார் வெட்டினர் என தெரியாமல் போனது.

சரியான பதில் தராத காரணத்தால் நீதிமன்றதுக்கு வந்து வழக்கை சந்திக்குமாறு அதிகாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார்.

ஒரு தவறும் செய்யாத தன் மேல் வீண் பழி வந்ததே என்று மன வருத்தமுற்றார்
ஸ்ரீ கார்யம்.

திருநெல்வேலி நீதிமன்றதுக்கு செல்ல சத்திரத்தில் காத்திருந்தார்.

தர்ம சாஸ்தா கோவிலின் திருவிழா நடைபெற்று வந்த காலம் அது.

உன்னை நினைத்து நினைத்து வாழ்ந்த நான் கஷ்டத்தோடு இங்கே,
உனக்கு விழா ஓர் கேடா

என சொல்லி வெற்றிலை எச்சிலை துப்பினார்.

அன்றிரவு தர்ம சாஸ்தா அவர் கனவில் வந்து

‘‘நாளை நீதிமன்றத்தில்
நீதிபதி
மரங்கள் வெட்டியது யார்? என்று கேட்டால் எல்லாம் மணிகண்டனுக்கு தெரியும்’’ என்று மட்டும் சொல் என்றார்.

மறுநாள் கோர்ட்டில் ஆங்கிலேய நீதிபதி இவரிடம் கேள்விகள் கேட்க, இவரும் "எல்லாம் தெரிந்தவன் மணிகண்டன் தான் அவன் வந்து சாட்சி சொல்லுவான்’’ என்றார்.

அதை கேட்ட நீதிபதி மணிகண்டனை அழைக்க உத்தரவிடுகிறார்.

நீதிமன்ற ஊழியர் ‘‘மணிகண்டன்! மணிகண்டன்! மணிகண்டன்! என மும்முறை அழைத்தார்

பின்னர் நீதிபதி சாட்சிக் கூண்டில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் யாரோடு பேசுகிறார் என அங்கே இருந்த
அனைவரின்
கண்களுக்கு புலப்படவில்லை.

நீதிபதி தொடர்ந்து சாட்சி கூண்டில் இருந்தவரிடம்
பேசிக்கொண்டே இருந்தார்.

பினனர்

ஸ்ரீகார்யத்தை நோக்கி ‘‘ மணிகண்டன் அளித்த கணக்குகளின்படி நீ நிரபராதி. உன் மேல் தவறில்லை’’ என தீர்ப்பளித்தார்.

இந்த நிகழ்வைக்கண்டு நீதிமன்றத்திலிருந்த அனைவரும்
ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன ஆனது
என பேசிக்கொண்டனர்.

என்ன நடந்தது. யாரிடம் பேசினார் இந்த நீதிபதி.

ஸ்ரீ கார்யம் நிரபராதி என ஏன் நீதிபதி கூறினார்.

புரியாத புதிராக இருந்தது அங்கிருந்தவர்களுக்கு.

தீர்ப்பு வந்தவுடன்
ஸ்ரீ கார்யம் சாஸ்தா மீது கொண்ட பக்தியின் மேலீட்டால் மயங்கி விழுந்தார்.

தீர்ப்பு முடிந்து நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார்.

வழக்கறிஞர்கள் நடந்தது குறித்து கேட்டனர்.
சிலர் கேள்வி எழுப்பினர்.

எங்கள் கண்களுக்கு தெரியாத மனிதரிடம் பேசினீர்கள் என்றனர்.

நீதிபதி சாட்சி சொல்ல மணிகண்டன் என்பவர் வந்தார்.

அவர் கூறிய சாட்சிகளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார்.

வந்தவர் சாதாரண மனிதன் அல்ல, அச்சன் கோவில் அரசன் அந்த தர்ம சாஸ்தா என்று பலரும் பதில் கூறினார்கள்.

அச்சன் கோவில் வந்தார் ஆங்கிலேய நீதிபதி.

கோவில் கொடிமரத்தை நெருங்கியதும் கர்ப்பகிரகம் தென்பட்டது. ‘‘மூலஸ்தானத்தை பார்த்தார் நீதிபதி. அவருக்கு கோர்ட்டிற்கு வந்த கோலத்தில் சாஸ்தா காட்சி கொடுத்தார். உடனே, வந்தது இவர் தான். இவர் தான் என உணர்ச்சி பூர்வமாக கத்தினார். சாஸ்தாவிடம் சரண் புகுந்தார் அந்த ஆங்கிலேய நீதிபதி.

இந்த ஆலயம் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் தாலுகாவில் அச்சன் கோவில் உள்ளது.

 #காடந்தேத்தி ஆதீனமழைய  #ஐயனார் திருக்கோயில், தலைஞாயிறு 🌷 ஆதியில்  #மஹா_சாஸ்தா காடந்தேத்தி தலத்தில் ஓர் வில்வ மரத்தடியில...
09/05/2026

#காடந்தேத்தி ஆதீனமழைய #ஐயனார் திருக்கோயில், தலைஞாயிறு

🌷 ஆதியில் #மஹா_சாஸ்தா காடந்தேத்தி தலத்தில் ஓர் வில்வ மரத்தடியில் #சுயம்பு மூர்த்தியாக தோன்றினார். அதனை அறிந்த சத்திய பூரண மஹரிஷி இத் தலத்தை அடைந்து சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய பகவானுக்கு #ஆதிநாதன் என்று திருநாமமிட்டு ஆலயத்தை நிர்மாணித்து வழிபட்டார். பிற்காலத்தில் #பிரம்மா, மஹாசாஸ்தாவிற்கும், பிரபாவதி தேவியாருக்கும் திருமகனாக அவதரித்தார். ஆதிநாதன் என்ற திருநாமத்தினை தவிர ஆதீனமழையார், ஆதீனமுடையார், அவிமுக்தேஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், திருமணவாளமுடையார் என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.

🌷 தர்மரட்சகராகிய சத்தியக மூர்த்தி அசுர ராஜனாகிய வஜ்ரமாலியை கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் ஒரு தடாகத்தை ஏற்படுத்தி ஐயனாரப்பனை பூஜித்து நற்பேறு பெற்றார். அவர் உருவாக்கிய சத்தியக தீர்த்தம் என்ற தடாகத்தில் நீராடி பகவானை ஆராதிப்பவர்கள் பெறும் புண்ணியப் பலனை அளவிட்டுக் கூற இயலாது. #சனீஸ்வர_பகவான் இத்தலத்தில் உறையும் ஹரிஹரபுத்ரனை பெரும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து கிரக பதவி அடைந்தார். சனீஸ்வரனது அசாத்தியமான பக்தியில் மயங்கிய ஹரிஹரபுத்ரர் அவரது தினமான சனிக்கிழ மையையே தனக்கு விருப்பமான தினமாகக் கொண்டுள்ளார்.

🌷 அத்தினத்தில் தனது சந்நதி முன் எள் தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர் களுடைய அனைத்து தடைகளையும் நீக்குகிறார். சகலவித செல்வங்களையும் சுகங்களையும் வாரி வழங்குகிறார். #புதன் மூர்த்தியும் இத்தலத்தில் உறையும் பகவானை ஆராதித்து கிரக பதவியைப் பெற்றார். அவரது தினமான புதன் கிழமைகளில் ஹரிஹரபுத்ரரை ஆராதிப்பவர்கள் திவ்யமான ஞானம், நிர்வாகத்திறன், மன அமைதி ஆகியவற்றை பெற்று மகிழ்கின்றனர்.
மஹாசாஸ்தாவின் ஜென்ம நட்சத்திரமாகிய உத்திர நட்சத்திர தினங்களில் பகவானுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்து ஆராதனை செய்கிறார்கள்.

🌷 #லாடமூர்த்தி என்ற பரம பக்தனுக்கு மஹாசாஸ்தா தனது திருமணக் கோலங்களை காட்டியருளினார். அரிச்சந்திரன், #அகத்தியர் போன்றவர்கள் இத்த லத்தில் பகவானை ஆராதித்து மகிழ்ந்திருக்கிறார்கள். விதி வசத்தால் அரசுரிமையிழந்த வீரசேனன் என்ற #சோழ_மன்னன் ஐயனை ஆராதித்து அதனை மீண்டும் பெற்றதுடன் பகவான் அருளால் இப்பூமி முழுவதையும் வென்று ஏகராஜனாக அரசாட்சி செய்தான்; இத்தலத்தையே தனது தலைநகராகக் கொண்டதால், இத்தலம் #ஏகராஜபுரம் எனவும் ஏகக்ஷத்திரியபுரம் என வும் பெயர் பெற்று விளங்கலாயிற்று.

🌷 ஒரு சமயம் ஈரேழு உலகங்களையும் கட்டி ஆண்ட #காடன் என்ற கொடிய அசுரேந்திரன் பகவான் மகாசாஸ்தாவோடு போரிட்டபோது பகவானது திருச் சாட்டையினால் தூக்கியெறியப்பட்டான். இத்தலத்தில் வந்து விழுந்து இந்தப் புண்ணியத் தலத்தில் அவரது கணங்களின் தலைவனானான். காடன் மனம் திருந்திய தலம் என்பதால், காடன்திருந்தி என்று பெயர் பெற்ற இந்த ஊர், இன்றைக்குக் காடந்தேத்தி என அழைக்கப்படுகிறது.

🌷 ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் பெரியாச்சி அம்மன், கருணையே வடிவானவள். பெண்கள் சாஸ்தாவையும், பெரியாச்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை. மேலும், பெண்களுக்கான உடல் பிரச்னைகள் யாவும் நீங்கும்.

🌷 அரிச்சந்திர மகாராஜா, பிள்ளை வரம் வேண்டிப் பலன் பெற்ற திருத்தலமும் இதுவே! எனவேதான், இங்கே உள்ள நதிக்கு, அரிச்சந்திரா நதி என்ற பெயர் அமைந்ததாம். அதேபோல், வீரசேனன் எனும் மன்னனுக்கு, இழந்த பதவியையும் ஆட்சியையும் தந்தருளினாராம் ஐயனார். ஆகவே, இங்கு வந்து பிரார்த்தித்தால், பிள்ளை வரம் கிடைக்கும்; இழந்ததையெல்லாம் திரும்பப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

🌷 மேலும் பரிவார தெய்வங்களாக மதுரை வீரன், தூண்டில்காரன், முனீஸ்வரர், போன்ற பல கிராம தெய்வங்களும், குதிரை, யானை, காவல்காரன் உடன் நாய் போன்ற பல சுதை சிற்பங்களும் அமைந்துள்ளது.

🌷 காடந்தேத்தி ஐயனார் கோயில் சிவாச்சார்யர்கள், சபரிமலையில் நிகழும் முக்கிய விழாக்களில் இன்றைக்கும் பங்கெடுப்பது வழக்கம். அதேபோல், சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் துவங்குகின்றனர். பங்குனி உத்திரப் பெருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி ஞாயிற்றுக் கிழமையில்,ஸ்ரீபூர்ணா ஸ்ரீபுஷ்கலா சமேத சாஸ்தாவுக்குத் திருக் கல்யாண வைபவமும் சிறப்புற நடைபெறுகிறது.

🌷 துஷ்ட சக்திகளுக்கு ஆட்பட்டுத் தவிப்பவர்கள், மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து மனுவாக எழுதிப்போட்டு வேண்டிக்கொண்டால், விரைவில் குணமாகும். பொருட்கள் களவு போயிருந்தால், ஐயனாரிடம் வந்து முறையிட்டால் போதும்... காணாமல் போன பொருள் சீக்கிரமே திரும்பக் கிடைத்துவிடுமாம்.

🌷 இத்திருக்கோயில் திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆலங்குடியில் இருந்து தலைஞாயிறு செல்லும் வழியில் அமைந்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்த ஊர்.

🌷 இத்தலதின் அருகில் 7km தொலைவில் #எட்டுக்குடி முருகன் கோயிலும் அமைந்துள்ளது, எட்டுக்குடி வரும் அன்பர்கள் இங்கும் வந்து தர்ம சாஸ்தாவின் அருளை பெறுங்கள் நன்றி.

தகவலுக்கு நன்றி: நாகை பா.சுபாஷ்

வருடம் தோறும்‌ நம் கல்யாண சாஸ்தா சமாஜம் சார்பில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி பானக, நீர் மோர் வினியோகம் இன்று ஹஸ்தினாபுரம் ப...
01/05/2026

வருடம் தோறும்‌ நம் கல்யாண சாஸ்தா சமாஜம் சார்பில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி பானக, நீர் மோர் வினியோகம் இன்று ஹஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் நம் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தங்கள் கைகளால்‌ பரிமாறினார்கள். இந்த நல்ல கைங்கர்யத்திற்கு பலர் பணமும், பொருளுமாக உதவினார்கள். அவர்கள் பரிவார சஹிதம் பல்லாண்டு வாழ்ந்து தேச சேவையும், இறை சேவையும் செய்து வர எல்லாம் வல்ல இறைவன் பூர்ணா புஷ்களாம்பா சமேத ஸ்ரீ கல்யாண சாஸ்தாவை ப்ரார்த்தனை செய்து கொள்கிறோம்

சரணம் ஐயப்பா

-கல்யாண சாஸ்தா சமாஜம்,
நெமிலிச்சேரி, சென்னை 44.
9566292206/9840857634

வருடம் தோறும்‌ நம் கல்யாண சாஸ்தா சமாஜத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி பூஜையில் குங்குமார்ச்சனையும், பானக பூஜையும் தாண்டி ...
01/05/2026

வருடம் தோறும்‌ நம் கல்யாண சாஸ்தா சமாஜத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி பூஜையில் குங்குமார்ச்சனையும், பானக பூஜையும் தாண்டி இந்த வருடம் பூச்சொரிதலாகவும் ஏற்றுக்கொண்ட ஐயன்.

-கல்யாண சாஸ்தா சமாஜம்,
நெமிலிச்சேரி, சென்னை 44.
9566292206/9840857634

உதகும்ப தானம் என்பது என்ன?வெண்கலம், பித்தளை, தங்கம், வெள்ளி அல்லது மண்ணில் ஆன ஒரு கலயத்தில் சுத்தமான பானகமும், மற்றொரு க...
30/04/2026

உதகும்ப தானம் என்பது என்ன?

வெண்கலம், பித்தளை, தங்கம், வெள்ளி அல்லது மண்ணில் ஆன ஒரு கலயத்தில் சுத்தமான பானகமும், மற்றொரு கலயத்தில் நீர் மோரும், பூரணமாக நிரப்பி அதனுடன் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், வஸ்திரம், அவரவர் வசதிக்கேற்ப தக்ஷிணை சேர்த்து தானம் கொடுத்தால், அவர்களின் ஆசைகள் விரைவில் நிறைவேறுவது மட்டுமல்லாது, தகுந்த வாழ்க்கைத் துணையை நாடுபவர்கள், குழந்தைப் பேறு பெற விரும்புபவர்கள், பரம்பரையாக நிலவும் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட வழி தேடுபவர்கள், பட்ட கடன் தீர்க்க முடியாது போனவர்கள் சித்ரா பௌர்ணமியன்று இந்த தானத்தைச் செய்வது நன்மை பயக்கும்.

சென்னை 44, நெமிலிச்சேரி கல்யாண சாஸ்தா சமாஜத்தில் ஐயனருளால் இந்த வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அக்ஷய மஹாலக்ஷ்மி குங்கும அர்ச்சனை, உதகும்ப தானம், பொதுமக்களுக்கு ஹஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகில் பானகம் நீர் மோர் வினியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரும்பும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசிக்கலாம், ஐயனருள் பெறலாம்.

சர்வ மங்கள தாயகனே சரணம் ஐயப்பா

Saranam Ayyappa!

As per the divine will, we are ordained to conduct Akshaya Mahalakshmi Kumkumarchanai on Chithirai Pournami at Kalyana Sastha Samajam Nemilicherry, Chennai-44.

Date : 01 May 2026.

The pooja would start at 7am with Sahasranama Parayanam and Archanai followed by Udha Kumbha Dhanam and Panagam, Neer more distribution at Chennai 64, Hastinapuram Bus terminus.

Devotees can mail us Name, Nakshatram, and address to [email protected] or through WhatsApp to 9566292206 to include in the Puja Sankalpam and send the prasadam accordingly.

Pl make your presence and invoke the blessings of Lord Sri Kalyana Sastha.

Saranam Ayyappa

For further details:
Thiruvaiyaru V Ghanesh
Founder, Managing Trustee - Kalyana Sastha Samajam
WhatsApp 9566292206

சரணம் ஐயப்பா!

குருவருளும் திருவருளும் சேர, நமது பூர்ணா புஷ்களா சமேத ஶ்ரீ கல்யாண சாஸ்தா சமாஜத்தில் சித்ரா பௌர்ணமி திருநாளன்று அக்ஷய மஹாலக்ஷ்மி சஹஸ்ரநாம குங்குமார்ச்சனை சென்னை நெமிலிச்சேரி க்ஷேத்திரத்தில் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாள் : 01 மே 2026.

காலை 7மணிக்கு சஹஸ்ரநாம பாராயணம் & அர்ச்சனை தொடங்கி , அதை தொடர்ந்து உத கும்ப தானம் அளித்து சென்னை 64, அஸ்தினாபுரம் பஸ் நிலையம் அருகில் பானகம் நீர் மோர் வினியோகம் நடைபெறும்.

விருப்பமுள்ள பக்தர்கள், தங்கள் பெயர், நக்ஷத்திரம், முகவரி ஆகியவற்றை [email protected] என்ற ஈ-மெயில் முகவரி அல்லது 9566292206 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பும் பட்சத்தில், பூஜை சங்கல்பத்தில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளவும், பிரசாதமும் அனுப்பவும் ஏதுவாக இருக்கும்.

அவசியம் கலந்து கொண்டு ஐயனருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு:
திருவையாறு V.கணேஷ், :
நிறுவணர், நிர்வாக அறங்காவலர்,
கல்யாண சாஸ்தா‌ சமாஜம்,
வாட்ஸ் அப்: 9566292206

சரணம் ஐயப்பா!

உதகும்ப தானம் என்பது என்ன?வெண்கலம், பித்தளை, தங்கம், வெள்ளி அல்லது மண்ணில் ஆன ஒரு பாத்திரத்தில் சுத்தமான பானகமும், மற்றொ...
23/04/2026

உதகும்ப தானம் என்பது என்ன?

வெண்கலம், பித்தளை, தங்கம், வெள்ளி அல்லது மண்ணில் ஆன ஒரு பாத்திரத்தில் சுத்தமான பானகமும், மற்றொரு பாத்திரத்தில் நீர் மோரும், பூரணமாக நிரப்பி அதனுடன் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், வஸ்திரம், அவரவர் வசதிக்கேற்ப சிறிய அளவில் தக்ஷிணை சேர்த்து தானம் கொடுத்தால், அவர்களின் ஆசைகள் விரைவில் நிறைவேறுவது மட்டுமல்லாது, தகுந்த வாழ்க்கைத் துணையை நாடுபவர்கள், குழந்தைப் பேறு பெற விரும்புபவர்கள், பரம்பரையாக நிலவும் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட வழி தேடுபவர்கள், பட்ட கடன் தீர்க்க முடியாது போனவர்கள் அட்சய திருதியையன்று இந்த தானத்தைச் செய்வது நன்மை பயக்கும்.

சரணம் ஐயப்பா

சென்னை 44, நெமிலிச்சேரி கல்யாண சாஸ்தா சமாஜத்தில் ஐயனருளால் இந்த வருடமும் அக்ஷய மஹாலக்ஷ்மி குங்கும அர்ச்சனை, உதகும்ப தானம், பொதுமக்களுக்கு ஹஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகில் பானகம் நீர் மோர் வினியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரும்பும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசிக்கலாம், ஐயனருள் பெறலாம்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள், 9566292206 எனும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், மற்றும் தங்கள் கோத்திரம், பெயர், நக்ஷத்திரம் , வீட்டு முகவரி ஆகியவற்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினால் பிரசாதம் அனுப்ப ஏதுவாக இருக்கும்

சர்வ மங்கள தாயகனே சரணம் ஐயப்பா

Saranam Ayyappa!

As per the divine will, we are ordained to conduct Akshaya Mahalakshmi Kumkumarchanai on Chithirai Pournami at Kalyana Sastha Samajam Nemilicherry, Chennai-44.

Date : 01 May 2026.

The pooja would start at 7am with Sahasranama Parayanam and Archanai followed by Udha Kumbha Dhanam and Panagam, Neer more distribution at Chennai 64, Hastinapuram Bus terminus.

Devotees can mail us Name, Nakshatram, and address to [email protected] or through WhatsApp to 9566292206 to include in the Puja Sankalpam and send the prasadam accordingly.

Pl make your presence and invoke the blessings of Lord Sri Kalyana Sastha.

Saranam Ayyappa

For further details:
Thiruvaiyaru V Ghanesh
Founder, Managing Trustee - Kalyana Sastha Samajam
WhatsApp 9566292206

சரணம் ஐயப்பா!

குருவருளும் திருவருளும் சேர, நமது பூர்ணா புஷ்களா சமேத ஶ்ரீ கல்யாண சாஸ்தா சமாஜத்தில் சித்ரா பௌர்ணமி திருநாளன்று அக்ஷய மஹாலக்ஷ்மி சஹஸ்ரநாம குங்குமார்ச்சனை சென்னை நெமிலிச்சேரி க்ஷேத்திரத்தில் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாள் : 01 மே 2026.

காலை 7மணிக்கு சஹஸ்ரநாம பாராயணம் & அர்ச்சனை தொடங்கி , அதை தொடர்ந்து உத கும்ப தானம் அளித்து சென்னை 64, அஸ்தினாபுரம் பஸ் நிலையம் அருகில் பானகம் நீர் மோர் வினியோகம் நடைபெறும்.

விருப்பமுள்ள பக்தர்கள், தங்கள் பெயர், நக்ஷத்திரம், முகவரி ஆகியவற்றை [email protected] என்ற ஈ-மெயில் முகவரி அல்லது 9566292206 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பும் பட்சத்தில், பூஜை சங்கல்பத்தில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளவும், பிரசாதமும் அனுப்பவும் ஏதுவாக இருக்கும்.

அவசியம் கலந்து கொண்டு ஐயனருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு:
திருவையாறு V.கணேஷ், :
நிறுவணர், நிர்வாக அறங்காவலர்,
கல்யாண சாஸ்தா‌ சமாஜம்,
வாட்ஸ் அப்: 9566292206

சரணம் ஐயப்பா!

ஸ்ரீநடுக்காவுடையார் தர்மசாஸ்தா. 10வது குறுக்குத் தெரு,சாந்திநகர், பாளையங்கோட்டை. திருநெல்வேலி 627002. இந்தக் கோயில் திரு...
23/04/2026

ஸ்ரீநடுக்காவுடையார் தர்மசாஸ்தா. 10வது குறுக்குத் தெரு,சாந்திநகர், பாளையங்கோட்டை. திருநெல்வேலி 627002.

இந்தக் கோயில் திருநெல்வேலி நகரத்தின் கிழக்குப் பகுதியான பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் டிரெயின் வசதி உள்ளது. தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் பஸ் வசதியும் உள்ளது. சாஸ்தா, பூர்ணா. புஷ்கலா சமேதராக, கையில் பூவை ஏந்திக் கொண்டு, அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். மூவரும் ஒரே பீடத்தில் சிலாரூபமாக, கிழக்கு நோக்கி உள்ளனர். கோயிலின் கருவறை யானைகள் தாங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம், சுற்று மண்டபம், வெளி மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறைக்குள் சிவலிங்கம் உள்ளது. இவருக்கு பிரதோஷம் தோறும் பூஜை உண்டு. வெளிமண்டபத்தில் தனி மேடையில் நவக்கிரகங்களைத் தரிசிக்கலாம்.

சுற்று மண்டபத்தில், சன்னிதியை நோக்கிக் கொண்டு இரண்டு குதிரைச் சிலைகளையும், ஒரு யானைச் சிலையையும் காணலாம். பிரகாரத்தில் தேவியருடன் கூடிய சாஸ்தாவின் உற்சவ மூர்த்தி காட்சி கொடுக்கிறார். கோயிலுக்கு வெளியே வடக்கில் கிணறும், அரசு - வேம்பும், பிள்ளையார், நாகர்களும் உள்ளனர். கோபுரம் உள்ளது. சுற்றுச் சுவரும், உள்ளே செல்ல இரண்டு கேட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சாஸ்தாவிற்கு கோயிலுக்குள்ளும், வெளியிலும் நிறைய பரிவார தெய்வங்கள் உள்ளனர். அவர்கள் கருப்பசாமி, சாம்பமூர்த்தி, சிவலிங்கப் பெருமாள், சுடலை, தடிவீரன். நவகன்னியர், படவேட்டராயன், பிரம்மசக்தி, பிரம்மராச்சியம்மன், பேச்சியம்மன்,மாடன், யக்ஷிணி அம்மன், ருத்ரமாடன்முதலியோர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்,காலை 8.00 முதல் 11.30 வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை. மண்டல காலத்தில் சிறப்பு பூஜைகளும், பங்குனி உத்திரத்தன்று உற்சவமும் கொண்டாடப்படுகிறது 2000 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சாஸ்தாவுக்கு சண்பகாரண்ய சாஸ்தா, மத்யாரண்யேஸ்வர சாஸ்தா என்ற பெயர்களும் உண்டு. பழைய காலத்தில் சண்பகக் காடாக இருந்த இடத்தில் தவம் புரிந்துவந்த முனிவர்களுக்குத் தொல்லை அளித்த சங்குகர்ணன் முதலிய அரக்கர்களை அழித்த சாஸ்தா, முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே நித்ய வாசம் செய்கிறார். இந்த வரலாறு ஸ்காந்தமஹா புராணத்தில் மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

தரிசனம் மற்றும் பூஜைகளுக்கு தொடர்பு கொள்ளவும் கோயில் 0462/2542112. மேலாளர் ராமகிருஷ்ணன் 9944169803.

இந்த க்ஷேத்திரத்தின் மூர்த்திக்கு நடுக்காவுடையார் சாஸ்தா, சண்பகாரண்ய சாஸ்தா என்ற பெயர்கள் உள்ளன. இவைகள் முறையே ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமத்தில் வரும் ஓம் தாருமண்டல மத்யகாய நம: (927) மற்றும் ஓம் சண்பகப்ரியாய நம: (961) என்ற திருப்பெயர்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றன.

Address

Link Street
Chromepet
600044

Telephone

+919566292206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalyana Sastha Samajam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kalyana Sastha Samajam:

Share