Be the first to know and let us send you an email when Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Place Of Worship
Send a message to Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம்:
07.07.1905 இல் 'சைவ சித்தாந்த மகா சமாஜம்' என்ற பெயரில் திருப்பாதிரிப்புலியூர் தவத்திரு ஞானியார் சுவாமிகளின் முயற்சியால் தோற்றுவிக்கப் பெற்றது.; 11.12.1915 இல் அரசாங்கத் பதிவுச் சட்டப்படி பதிவு செய்யப் பெற்றது;
சமாஜத்தின் பதிவு எண் S-6-1915-16. சமாஜத்தின் பொதுக்குழுவின் முடுவுப்படி 1982 ஆம் ஆண்டு சைவ சித்தாந்தப் பெருமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சைவ மரபினில் சமூகத்தில் இருக்கின்ற மக்களை தெளிவாக பண்புகளோடு இயக்குவதும் , அனுபவம் என்று வரும் பொழுது அதை வழங்குவதும் என்கிற உரிமையை பெற்ற ஒரே நிறுவனம். மடங்களை தாண்டி சைவ சித்தாந்தத்தை அறிவு ரீதியாக வளர்ப்பதற்கு ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் ஞானியார் சுவாமிகள்.
பணி:
சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் மூலமாகச் ‘சித்தாந்தம்’ என்ற மாத இதழ் 1928 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளி வருகிறது. ஆய்வரங்குகள், சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள் எனப் பல வகையிலும் தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சித்தாந்த கொள்கை பரப்பில் செயலாற்றி வருகின்றது.
நோக்கம்:
சைவ சித்தாந்தம் என்ற கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வது என்பது இரண்டு நிலைப்பாடுகளில் நிறைவேற்றப்பட வேண்டியது
1. கொள்கையை ஒருநெறிப்படுத்துதல்
2. சைவ சித்தாந்தம்/சைவ சமயம் என்பதைத் தெளிவுடன் மக்களிடம் கொண்டு செலுத்துதல்
மக்களோடு சைவம் பழக வேண்டும், மக்கள் வாழ்வியலோடு கொள்கை இணைய வேண்டும். தேடல் உள்ள தலைமுறைக்கு! சித்தாந்த அடிப்படைகள் படிப்பினைகள் ஆக வேண்டும். அது தொடர்ந்து தமிழ்நாட்டில் தமிழரெல்லாம் சித்தாந்தம் அடிப்படைகள் தெரிந்து தெளிந்தவர் ஆதல் வேண்டும். அடுத்த தலைமுறை சித்தாந்தம் சைவமாக உலகறிய உழைக்க வேண்டும். இந்த நோக்கத்தில் வினைக்கு விடை கொடுத்து வாழ்வோம்.வாருங்கள் உத்தமர்களே !