கிறிஸ்துவின் சபை

கிறிஸ்துவின் சபை Jesus coming soon. நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்.
எரே.1:5

26/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 25.05.2026. "நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.” *2 கொரிந்தியர் 4:8,9.* பிரியமானவர்களே, கடினமான சூழ்நிலைகளில் இருக்கிறீர்களோ? இந்த கடினமான காலங்கள்; நம்மை உருவாக்கும், நம்மை விசுவாசத்தில் பெருகச் செய்யும், நாம் தேவப்பிரசன்னத்தை உணர செய்கிறது, நம்மை சாட்சியாய் மாறப் பண்ணுகிறது, கர்த்தரின் வாக்குத்தத்தங்களை நம்பப்பண்ணும்படி செய்கிறது!

24/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 24.05.2026. "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” *ஏசாயா 60:22.* பிரியமானவர்களே, நீங்கள் சிறியவர், ஒன்றுமில்லை என்று ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள். தேவன் நிச்சயமாக உங்களை மேன்மைப்படுத்துவார், அவருடைய நேரத்திற்காகப் பொறுமையுடன் காத்திருங்கள்!

23/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 23.05.2026. "நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.” *சங்கீதம் 91:2.* பிரியமானவர்களே, கர்த்தர் நமது பாதுகாப்பான அரண். கர்த்தர், உங்களைத் தாக்கும் ஆபத்துகள் மற்றும் பிரச்சனைகளுக்கு எதிராகத் தீவிரமாகக் காக்கும் ஒரு வலிமையான கோட்டைச் சுவரைப் போன்றவர். அவரை நம்புவது என்பது, அவர் நம்பகமானவர் என்றும் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் அறிந்து, உங்கள் கவலையை விட்டுவிடத் தேர்ந்தெடுப்பதாகும்!

22/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 22.05.2026. "யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.” *யோபு 42:10.* பிரியமானவர்களே, யோபு தன் சொந்த வேதனையின் மத்தியிலும் மற்றவர்களுக்காக ஜெபித்தபோது, ​​கர்த்தர் அவனைச் சீரமைத்து, அவனை இரட்டிப்பாக ஆசீர்வதித்தார். விசுவாசம், மன்னிப்பு மற்றும் கர்த்தர் மீதான நம்பிக்கை ஆகியவை எப்போதும் அவருடைய சரியான நேரத்தில் சீரமைப்பிற்கு வழிவகுக்கும். கர்த்தர் ஒவ்வொரு இழப்பையும் சரிசெய்து, நமது துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து ஜெபிப்போம்!

22/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 21.05.2026. "வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்". *சங்கீதம் 121:2.* பிரியமானவர்களே, வானத்தையும், பூமியையயும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து நமக்கு ஆசிர்வாதங்களும், நன்மைகளும் வருகிறது. அதை எந்த மனிதராலும் தடைபண்ண முடியாது. ஆகையால் விசுவாசத்துடன் பொறுமையாய் காத்திருந்து பெற்றுக்கொள்ளுங்கள்!

22/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 20.05.2026. “இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.” *யோசுவா 14:10.* பிரியமானவர்களே, கர்த்தர் மோசேயின் மூலம் கொடுத்த வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்காக, காலேப் 45 ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்தார். காலேபின் வாழ்க்கையில், அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் வரை, கர்த்தர் அவனது உயிரைப் பாதுகாத்து, அந்தச் சுதந்தரத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவனுக்குப் பெலனையும் கொடுத்தார். அதேபோல, அவர் உங்கள் வாழ்க்கையிலும் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். அது தாமதமானாலும், கர்த்தரிடமிருந்து வருவது நிச்சயமாகவே சிறப்பானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும்!

20/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 19.05.2026. “அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம், நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.” *எண்ணாகமம் 13:30.* பிரியமானவர்களே, மாபெரும் பிரச்சனைகளையோ மனிதர்களையோ கண்டு சோர்வடையாதீர்கள்; ஏனெனில், விசுவாசம் இருக்கும் இடத்தில் சிறிதும் அச்சம் இல்லை. கர்த்தருடைய வார்த்தையில் நம்பிக்கை வைத்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்! நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள்!

18/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 18.05.2026. “தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்குமுன்பாக ஓடிப்போவார்கள்.” *சங்கீதம் 68:1.* பிரியமானவர்களே, நம்முடைய தேவன் எழுந்தருளுவார். கர்த்தர் நம்மேல் மனதுருகும்படி, நம்மை நன்மைகளினால் மகிழ்விக்க, எழுந்தருளுவார், நமக்கு விரோதமாக சீறுகிறவர்களை அடங்கப்பண்ண, நாம் சுகமாயிருக்கும்படி, நம்மேல் சம்பூரண மழையைப் பெய்யப்பண்ண எழுந்தருளுகிறார்!

17/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 17.05.2026. “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன், இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.” *ஏசாயா 42:16.* பிரியமானவர்களே, ஒரு மனிதன் பார்வையற்றோரைத் தனக்குத் தெரியாத வழியில் வழிநடத்துவது போல, கர்த்தர் இப்போது நீங்கள் காண முடியாத ஒரு வழியில் உங்களை வழிநடத்துகிறார். அவர் இப்போது என்ன செய்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அவர் உங்களைக் கைவிட்டதில்லை என்பதை விரைவில் புரிந்துகொள்வீர்கள்!

16/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 16.05.2026. “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” *எரேமியா 29:11.* பிரியமானவர்களே, கர்த்தர் மீதான நமது நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்க வேண்டும், ஏனெனில், கர்த்தரின் திட்டங்கள் எப்போதும் நம்முடையதை விட மேலானவை!

16/05/2026

*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 15.05.2026. “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர், நெருக்கப்படுகிறகாலங்களில் அவரே தஞ்சமானவர்.” *சங்கீதம் 9:9.* பிரியமானவர்களே, இவ்வுலகில் நாம் சோர்வுற்று, ஒடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நாம் நம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, ​​அவரே நமக்கு அடைக்கலமாகி, நம்மை விடுவிக்கிறார்!

Address

Ponneri
Chennai
601204

Telephone

+916382997769

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிறிஸ்துவின் சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share