இருளை நீக்கிய ஜகத்குரு

  • Home
  • India
  • Chennai
  • இருளை நீக்கிய ஜகத்குரு

இருளை நீக்கிய ஜகத்குரு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இருளை நீக்கிய ஜகத்குரு, Religious organisation, Chennai.

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் முகப்பில் இருக்கிற பிள்ளையார் கோவிலை அகற்றினால் தான் மற்ற மதத்தினர் துணி வாங்க வருவார்கள் என ச...
01/11/2024

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் முகப்பில் இருக்கிற பிள்ளையார் கோவிலை அகற்றினால் தான் மற்ற மதத்தினர் துணி வாங்க வருவார்கள் என சாதரணமாகவும், மிரட்டலாகவும் கூறிய பின்னரும்...
எங்களுக்கு... காசை விட கடவுள் பெரிது... கோடியை விட கோவில் பெரிது என பிள்ளையார் கோவிலை அகற்ற மறுத்த நீங்க உண்மையிலேயே #சரவணா #ஸ்டோர் #உரிமையாளர் ஒரு மிக பெரிய லெஜண்ட் தான்....

வெளிநாடு வாழ் நம் சமூகத்தினருக்கு மட்டும்...தீபாவளி மற்றும் அமாவாஶ்யை இரண்டும் ஒரே நாளில் வருவதால் முதலில் அதிகாலை 3.30 ...
30/10/2024

வெளிநாடு வாழ் நம் சமூகத்தினருக்கு மட்டும்...

தீபாவளி மற்றும் அமாவாஶ்யை இரண்டும் ஒரே நாளில் வருவதால் முதலில் அதிகாலை 3.30 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் தலையில் எண்ணை வைத்து வெந்நீரில் ஸ்நானம் பண்ண வேண்டும். புத்தாடை அணிந்து கொண்டு தீபாவளி லேகியம் சாப்பிட வேண்டும். வேறு உப்பு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. பிறகு 9 மணிக்கு மேல் மீண்டும் ஸ்நானம் செய்து விட்டு மடி வஸ்த்ரம் [புத்தாடை கூடாது] கட்டிக் கொண்டு அமாவாஶ்யை தர்ஶ ஶ்ரார்த்தம் [தர்ப்பணம்] அனுஷ்டிக்கவும்.

ராம் ராம்... தீபாவளிக்கு வஸ்திரம் வழங்கும் வேலை இருந்ததால் முகநூலில் சிலருக்கு உடனடியாக பதில் அளிக்க முடியாமல் போனது. இர...
28/10/2024

ராம் ராம்... தீபாவளிக்கு வஸ்திரம் வழங்கும் வேலை இருந்ததால் முகநூலில் சிலருக்கு உடனடியாக பதில் அளிக்க முடியாமல் போனது. இருப்பினும் சிலருக்கு சில பதில்களை தந்தேன். தனியாக ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன் நேரம் இல்லை. இப்போது தான் நேரம் கிடைத்தது.

வேணு கோபாலசங்கரன் அண்ணா கடந்த பத்து மணி நேரத்திற்கு முன் முகநூலில் உள்ள மூன்று பேர்களை பெயரை போட்டு ஒரு பதிவு செய்துள்ளார். ஒன்று கபால கிருஷ்ணன், இரண்டு வெங்கடேசன், மூன்று அடியேன்... நாங்கள் சிருங்கேரிக்கு சாதகமாக பேசுவது போல பதிவிட்டிருந்தார்... கீழே தெளிவாக அடியேன் பதிவிடுகிறேன்....

கடந்த ஒரு வார காலமாக முகநூலில் சிருங்கேரி ஆச்சார்யா காஞ்புரத்திற்க்கு வருகை தருவதாகவும், காமாக்ஷியை தரிசிக்க போவதையும் அடியேன் ஒரு நான்கு பதிவுகள் பதிவு செய்திருந்தேன். அதுவும் அடியேனின் சொந்த பதிவு இல்லை. யாரோ பதிவு செய்ததை அடியேன் பதிவு செய்தேன்.

அடியேன் செய்த பதிவிற்காக சிலர் அடியேனை குரு துரோகி என்றும், சிருங்கேரியிடம் அடியேன் விலை போனதாகவும் பலரும் பல விதமாக அம்புகளை எறிந்தனர். குறிப்பாக வேணுகோபால் சங்கரன் அண்ணா உச்சத்திற்கே சென்று விட்டார். அது மட்டுமா? நட்பில் இருந்தும் விலக்கிக் கொண்டார். விலகுவது, இருப்பது அவரவர்களின் சொந்த விருப்பம். ஆனால் ஒரு ஆச்சார்யர் வருவதை பதிவிட்டதற்கு இவர்களுக்கு இவ்வளவு வன்மம் தேவை இல்லை.

சரி விஷயத்திற்கு வருகிறேன்... அடியேன் குரு துரோகி என்றால் கீழே உள்ள பத்திரிக்கையை ஒரு முறைக்கு பத்து முறை அடியேனிடம் சீரியவர்கள் இந்த பத்திரிக்கைக்கு என்ன பதில் தருவார்கள்? ராஜ கீழ்பாக்கத்தில் மஹா ஸ்வாமி வித்தியா மந்திர் பள்ளிக்கு பாம்பே சங்கர் அண்ணா பத்திரிக்கை அடித்து சிருங்கேரி மகா சன்னிதானம் விதுசேகர பாரதி தீர்த்த ஸ்வாமிகளை வருகின்ற நவம்பர் நான்காம் தேதி பள்ளிக்கு அழைத்துள்ளார். சிருங்கேரி பெரியவாளும் அங்கே செல்ல இருக்கிறார்கள். என்னிடம் சீரியவர்கள் பாம்பே சங்கர் அண்ணாவிடம் சீர முடியுமா?

அடியேனை அவரது பக்கத்தில் நேற்று முதல் இரண்டு பதிவுகளை பதிவிட்டுள்ளார் வேணு கோபலன் சங்கரன் அண்ணா அதேபோல இவரை இதே வேணு கோபாலன் அண்ணா குரு துரோகி என்று தனது பக்கத்தில் பதிவிடுவாரா? நிச்சயம் மாட்டார். பணம், பதவி என்று இருப்பவர்களிடம் எதையும் வாய் திறந்து பேச மாட்டார்கள்.

ஒரு சாதாரண பதிவிற்காக மிக பெரிய வார்த்தை அம்புகளை வீசுகிறார்கள். காலம் அப்படிப்பட்டது என்று நாம் தான் இவர்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒரு சன்யாசி வருவதை பதிவிட்டதற்க்காக அடியேனை இவர்கள் ஏசுகிறார்கள். பரவாயில்லை அடியேன் கடந்து செல்கிறேன். கடைசியாக ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாக சொல்கிறேன் அடியேனுக்கு ஒரே ஒரு குருநாதர் தான்... அது அடகயேனை ஆட்கொண்ட ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மட்டுமே. இருக்கும் வரையிலும் சரி இறந்த பின்னும் சரி எனது குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மட்டுமே.

காசுக்காகவோ, பதவி, அந்தஸ்துக்காகவோ, பெயருக்காகவோ கட்சி மாறும் ஈன பிறவி அல்ல அடியேன். அடியேன் பல முறை சொல்லி உள்ளேன் எத்தனை கோடி சம்பாதித்தாலும், எத்தனை கோடி பெயர் எடுத்தாலும் நம்முடன் வரப்போவது நாம் செய்யும் பாவ, புண்ணியம் மட்டுமே. துரோகத்தில் மிக பெரிய துரோகம் குரு துரோகம் மட்டுமே. அதற்கு பிராயசித்தமே கிடையாது. அது அடியேனுக்கு நன்றாக தெரியும். மற்றவர்களுக்கு? அம்புட்டு தான் ஜோலி முடிந்தது....

புரிந்தவர்கள் பிஸ்தா.......

சிருங்கேரி மஹா சன்னிதானம் விதுசேகர பாரதி தீர்த்த ஸ்வாமிகள்காஞ்சி காமாக்ஷியை தரிசித்து ஜகத்துக்கே குருவான ஆதிசங்கரர் சன்ன...
27/10/2024

சிருங்கேரி மஹா சன்னிதானம் விதுசேகர பாரதி தீர்த்த ஸ்வாமிகள்
காஞ்சி காமாக்ஷியை தரிசித்து ஜகத்துக்கே குருவான ஆதிசங்கரர் சன்னதியையும் தரிசனம் செய்தார். சரித்திர சாதனையை படைத்தார்....

23/10/2024

பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும் போது அரியாமையினால் செய்துவரும் அனாச்சாரங்கள்.

1. ஸ்நானம் செய்யாது போகுதல்.

2. துவைத்து உலர்த்தாத வேஷ்டி தரித்துக் கொண்டு போகுதல்.

3. தலையில் வஸ்திரம் தரித்துக் கொண்டு போகுதல்.

4. வீட்டிலும் வெளியிலும் சண்டையிட்டுக் கொண்டு போகுதல்.

5. மேல் வேஷ்டி போட்டுக் கொண்டும், போர்த்திக் கொண்டும் போகுதல்.

6. உடுப்புகள் மாட்டிக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் போகுதல்.

7. பாதரக்ஷையை போட்டுக் கொண்டு போகுதல்.

8. வெற்றிலை, பாக்கு போட்டுக் கொண்டு ஆலயங்களிலும் திரு வீதிகளிலும் படிக்கட்டுகளிலும் எச்சல் துப்புதலும்.

9. ஆலயங்களில் மலஜலங்கழித்தல், மூக்குச்சிந்தி அசிங்கப் படுத்துதலும்.

10. சிவனடியார்களை வெறுத்துப் பேசுதலும்.

11. அனாவசியமான வீண் வார்த்தைகள் பேசிக்கொண்டு போகுதல்.

12. காமப்பற்று வைத்துப் போகுதல்.

13. ஆலயங்களில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து இருப் பதும், படுத்து உறங்குவதும்

14. ஸ்வாமியின் பலி பீடத்திற்கு குறுக்கே போவதும் இடையில் காலை நீட்டி நமஸ்காரம் பண்ணுவதும்.

15.ஸ்வாமி விக்ரஹத்தை தொடுதல் கூடாது.

இந்த குற்றங்களைச் செய்தவர்களை நரஹத்தில் தண்டிக்கப்படு மென்று அநேக ஆகம புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

குளிக்கப் போய் சேறு பூசிக் கொள்வது போல ஸ்வாமி தரிசனமாகிய புண்ணியத்திற்கு போய் பாவத்தை தேடிக் கொள்ளாது பக்தர்கள் மனப்பூர்வமாக கிரமப்படி ஸ்வாமியை தரிசனம் செய்து சுகக்ஷேமத்துடன் வாழ்ந்து வரும் படி வேண்டுகிறோம்.

N.K. M ஷரீப், பழநி....

22/10/2024

கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா? நமது தமிழ் மூதாட்டி ஔவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருப்பதை தெரிந்து கொள்வோம்...

1. பார்க்காத பயிரும் கெடும்.
2. பாசத்தினால் பிள்ளை கெடும்.
3. கேளாத கடனும் கெடும்.
4. கேட்கும் போது உறவு கெடும்.
5. தேடாத செல்வம் கெடும்.
6. தெகிட்டினால் விருந்து கெடும்.
7. ஓதாத கல்வி கெடும்.
8. ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
9. சேராத உறவும் கெடும்.
10. சிற்றின்பன் பெயரும் கெடும்.
11. நாடாத நட்பும் கெடும்.
12. நயமில்லா சொல்லும் கெடும்.
13. கண்டிக்காத பிள்ளை கெடும்.
14. கடன் பட்டால் வாழ்வு கெடும்.
15. பிரிவால் இன்பம் கெடும்.
16. பணத்தால் அமைதி கெடும்.
17. சினமிகுந்தால் அறமும் கெடும்.
18. சிந்திக்காத செயலும் கெடும்.
19. சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20. சுயமில்லா வேலை கெடும்.
21. மோகித்தால் முறைமை கெடும்.
22. முறையற்ற உறவும் கெடும்.
23. அச்சத்தால் வீரம் கெடும்,
24. அறியாமையால் முடிவு கெடும்.
25. உழுவாத நிலமும் கெடும்.
26. உழைக்காத உடலும் கெடும்.
27. இறைக்காத கிணறும் கெடும்.
28. இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.
29. இல்லாலில்லா வம்சம் கெடும்.
30. இரக்கமில்லா மனிதம் கெடும்
31. தோகையினால் துறவு கெடும்.
32. துணையில்லா வாழ்வு கெடும்.
33. ஓய்வில்லா முதுமை கெடும்.
34. ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35. அளவில்லா ஆசை கெடும்.
36. அச்சப்படும் கோழை கெடும்.
37. இலக்கில்லா பயணம் கெடும்.
38. இச்சையினால் உள்ளம் கெடும்.
39. உண்மையில்லா காதல் கெடும்.
40. உணர்வில்லாத இனமும் கெடும்.
41. செல்வம் போனால் சிறப்பு கெடும்.
42. சொல் பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43. தூண்டாத திரியும் கெடும்.
44. தூற்றிப் பேசும் உரையும் கெடும்.
45. காய்க்காத மரமும் கெடும்.
46. காடழிந்தால் மழையும் கெடும்.
47. குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48. குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
49. வசிக்காத வீடும் கெடும்.
50. வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
51. குளிக்காத மேனி கெடும்.
52. குளிர்ந்து போனால் உணவு கெடும்.
53. பொய்யான அழகும் கெடும்.
54. பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55. துடிப்பில்லா இளமை கெடும்.
56. துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57. தூங்காத இரவு கெடும்.
58. தூங்கினால் பகலும் கெடும்.
59. கவனமில்லா செயலும் கெடும்.
60. கருத்தில்லா எழுத்தும் கெடும்.

இந்த 60 ஐயும் அறிந்து கொண்டால்? நமது வாழ்க்கை கெடவே கெடாது.

மகாபாரத போரில் மடிந்த கர்ணன் சொர்க்க லோகத்திற்கு சென்றான். பொதுவாக சொர்க்கம் சென்றவர்களுக்குபசிக்கவே செய்யாதாம்.அப்படி இ...
21/10/2024

மகாபாரத போரில் மடிந்த கர்ணன் சொர்க்க லோகத்திற்கு சென்றான். பொதுவாக சொர்க்கம் சென்றவர்களுக்கு
பசிக்கவே செய்யாதாம்.

அப்படி இருக்க நமக்கு மட்டும் ஏன் இப்படி பசி எடுக்கிறது? பசியின் இந்த கொடுமையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! இதற்கு காரணம் என்ன? என்று கர்ணன்
யோசித்துக் கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் நாரதர் அங்கு வரவே, நாரதரை அழைத்து எனக்கு இப்படி ஏன் அகோர பசி எடுத்துக் கொண்டிருக்கிறது? என்னால் பசியை தாங்க முடியவில்லை! சொர்க்கத்தில் பசிக்காது என்பது தானே நியதி! அப்படி இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நாரதரே என்று கேட்டான்.

அதற்கு நாரதர், நீ பூலோகத்தில் இருக்கும் பொழுது செய்யாத தானமே இல்லை ஆனால் அன்னதானத்தை செய்ய மறந்து விட்டாய்.!

நீ ஒருவருக்கும் அன்னத்தை தானமாக கொடுத்தது இல்லை, அதனால் தான் சொர்க்க லோகத்தில் உனக்கு பசி எடுக்கிறது என்றார் நாரதர். அன்னதானம் செய்யாததன் பலனை தான் இப்போது நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறினார்.

இதன் காரணத்தை நாரதரிடமே கேட்டான், நீ தெரிந்தோ தெரியாமலோ. அன்னதான கூடம் எங்கே இருக்கிறது? என்று ஒருவர் கேட்டதற்கு, உன் ஆள்காட்டி விரலை நீட்டி வழியை காண்பித்தாய்.

சரி அதற்கு இப்போது நான் என்ன பரிகாரம். செய்வது? என்று கர்ணன் கேட்க நாரதர் உன் வலக்கை ஆள்காட்டி விரலை எடுத்து வாயில் வைத்துக் கொள் பசிக்காது என்று கூறி விட்டார்.

அதனால் தான் உன்னுடைய ஆள்காட்டி விரல் மட்டும் அன்னதான பலனை பெற்றது. எனவே அதை நீ வாயில் வைக்கும் பொழுது பசிக்காமல் இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்.

அதே போல கர்ணன் வாயில் ஆள்காட்டி விரலை வைத்ததும் பசி தீர்ந்தது. ஆனால் ஆள்காட்டி விரலை வாயில் இருந்து எடுத்ததும் மீண்டும் பசித்தது.

அன்னத்திலிருந்து தான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் சக்தியுற்று கிடக்கின்றன.

உண்மையிலேயே ஒரு மனிதன் செய்ய வேண்டிய முக்கியமான தானம் அன்னதானம். ஏனென்றால் நம்மிடம் தானம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை என்றாலும், கண்டிப்பாக அன்னம் இருக்கும் எனவே அன்னத்திற்கு எல்லா மனிதனாலும் தானம் செய்யக்கூடிய ஒரு சிறப்பம்சமும் உண்டு.

எனவே இயன்றவரை ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அதிக அளவு அன்னதானத்தை செய்ய வேண்டும்.

"உதவி செய்தலை உணவிலிருந்து துவங்குங்கள்"

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....56. ஸ்ரீ சர்வஜ்ஞ சதாசிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....ஐம்பத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி....
19/10/2024

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

56. ஸ்ரீ சர்வஜ்ஞ சதாசிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

ஐம்பத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி. 1524 - 1539]

ஸ்ரீ சர்வஜ்ஞ சதா சிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், வட பெண்ணாற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ''சித்ருதசிக் கண்ணா'' என்பவரின் மகனாக பிறந்தார். இவர் இராமநாதபுரம் மன்னரான சேதுபதி மரபினருக்குக் குருவாக விளங்கியவர்.

ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் திருமரபினர் ஸித்தி எய்திய விபரங்களைக் கூறும் புண்யஸ்லோக மஞ்சரி, ஸ்வஸ்த்ம நிரூபணம் என்ற நூல்களை இயற்றி உள்ளார்.

இவர் காலத்தில் 03-05-1528 விரோதி வருடம், வைகாசி மாதம் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் "உதயம் பாக்கம்" என்ற கிராமத்தை ஸ்ரீமத் ஆசார்யாளுக்கு அர்ப்பணம் செய்ததாக செப்பேடு கூறுகின்றது.

அந்த செப்பேடு பூஜ்ய ஸ்ரீ ஆசார்யரைப் புகழ்ந்து போற்றுகிறது.

இவர் கி.பி. 1539 ஆம் ஆண்டு, விளம்பி வருடம், சித்திரை மாதம், வளர்பிறை அஷ்டமி திதி அன்று ராமேஸ்வரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 15 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.

18/10/2024

அண்ணா ஐப்பசி பிறந்து விட்டது. துலா ஸ்நானம் போகலாமா? Siva Kumar Ramanathan Spr Krishnan Iyer

சிருங்கேரி ஜகத்குரு அனந்த ஸ்ரீ விபூஷித ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்ரீ சந்நிதானம் ஸ்ரீ சங்கராச்சார்யாள் அவர்கள் காஞ்சிபுரம் விஜ...
17/10/2024

சிருங்கேரி ஜகத்குரு அனந்த ஸ்ரீ விபூஷித ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்ரீ சந்நிதானம் ஸ்ரீ சங்கராச்சார்யாள் அவர்கள் காஞ்சிபுரம் விஜய யாத்திரை பத்திரிக்கை....

Address

Chennai
600044

Alerts

Be the first to know and let us send you an email when இருளை நீக்கிய ஜகத்குரு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to இருளை நீக்கிய ஜகத்குரு:

Share